Jump to content

உயிர்காத்த தமிழ் மாணவன்


Recommended Posts

இம் மாணவனின் ஆத்மா சாந்தி அடையட்டும். நல்ல உள்ளங்களை கொண்டவர்களால் இன்னும் மனிதம் வாழ்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

32100158_153414061460034_r.jpg

இலங்கை வம்சாவளிச் சிறுவன் ஒருவன் கனடாவில் நீரில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் காப்பாற்றும் முயற்சியில் வீர மரணமடைந்தார்.
 
கைல் ஹாவர்டு முத்துலிங்கம் (16) Wexford Collegiate பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றவர்.
 
ஒண்டாரியோ ஏரியில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தாயையும், மகனையும் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தவர்களில் கைல் முத்துலிங்கமும் ஒருவர்.
 
தொடர்ந்து வந்த மீட்புக்குழுவினர் மொத்தம் ஐந்து பேரை மீட்டனர். அவர்களில் கைல் முத்துலிங்கமும் ஒருவர்.
 
Flag at half mast at Wexford Collegiate. Right now Kyle Muthulingam’s classmates are inside sharing memories/hugs. They say he was their everyday hero who cheered them up and made them laugh. He’s being called a hero in death too. Jumping in the water to help a mother and son. pic.twitter.com/NWKOjeXyZy
 
— Ali Chiasson (@Ali_Chiasson) August 15, 2018
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த தாயும் மகனும் உயிருடன் மீட்கப்பட்டு விட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துலிங்கம் பின்னர் உயிரிழந்தார்.
 
மிகவும் இரக்க குணம் படைத்தவர் என பள்ளியில் அனைவராலும் புகழப்படும் கைல் முத்துலிங்கத்தின் மரணம் அவர் பயின்ற பள்ளியிலும் அவரது குடும்பத்தாரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
கைல் முத்துலிங்கம் பயின்ற பள்ளியில் கனடா கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கைல் முத்துலிங்கத்தின் ஒன்று விட்ட சகோதரிகளான அபிநயா (16) மற்றும் அஸ்வியா லிங்கம் (15) ஆகியோர் தங்கள் துக்கத்தின் மத்தியிலும் தங்கள் சகோதரனைக் குறித்து புகழ்ந்துரைத்துள்ளனர்.
 
இந்த நாடு என் சகோதரனை ஒரு ஹீரோவாக அறிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, ஏனென்றால் அவன் உண்மையிலேயே ஒரு ஹீரோதான் என்று கூறுகிறார் அபிநயா.
 
தாங்கள் இருவரும் இரட்டையர்கள் போலவே வளர்ந்ததாகவும், சேர்ந்து கால் பந்து விளையாடியதாகவும் தெரிவிக்கும் அபிநயாவும் கைல் முத்துலிங்கம் படித்த அதே பள்ளியில் படித்தவர்தான்.
 
நடனம் ஆடுவதும் பாடல் பாடுவதும் கைல் முத்துலிங்கத்திற்கு மிகவும் பிடிக்கும் என்று கூறும் அவர்கள், கலைகளில் சாதனை படைப்பதற்காகத்தான் அவர் இந்த பள்ளியில் சேர்ந்தார் என்கிறார்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.....

வீரமரணம் புரியல்ல .....அதை போட்ட இணையத்தளம் jaffnamuslim .com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.