Jump to content

உடல் எடையை பாதிக்கும் 5 விஷயங்கள்


Recommended Posts

உடல் எடையை பாதிக்கும் 5 விஷயங்கள்

உடல் பருமன் பிரச்சனையுடன் போராடுவதற்கு அசாத்திய மனோதிடம் தேவை என்பது நம்மில் பலரின் கருத்து. ஆனால் மருத்துவ ஆய்வுகள் வேறு மாதிரியாக கூறுகின்றன. உங்கள் உடல் எடையை பாதிக்கும் ஐந்து விஷயங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

இருவர்

1) குடல் நுண்ணுயிரிகள்

கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்கள். இதில் ஒருவர் மற்றொருவரை விட கூடுதலாக 41 கிலோ எடை கொண்டவர். பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் இவ்விருவரின் உடல் எடையை கடந்த 25 ஆண்டுகளாக கண்காணித்து வருகிறார். பிரிட்டனில் இரட்டையர்கள் குறித்து நடந்து வரும் ஆய்வின் கீழ் அவர் இப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவ்விருவரின் எடை வித்தியாசத்திற்கு அவரவர் குடலில் உள்ள மைக்ரோபுகள் எனப்படும் நுண்ணுயிரிகளே காரணம் என்கிறார் ஸ்பெக்டர்.

ஒவ்வொரு முறை நீங்கள் உண்ணும்போதும் உங்களுக்காக மட்டும் உண்பதில்லை. உங்கள் குடலினுள் உள்ள பல லட்சம் கோடி நுண்ணுயிரிகளுக்கும் நீங்கள் உணவளிக்கிறீர்கள் என்கிறார் ஸ்பெக்டர்.

இரட்டையர் இருவரின் மலத்திலிருந்து மிகச்சிறிதளவு மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. இதில் இருவரில் ஒல்லியாக இருக்க கூடிய கில்லியனின் குடலில் பல விதமான நுண்ணுயிரிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் ஜாக்கியின் குடலில் சில வகை நுண்ணுயிரிகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

இதே போன்ற நிலை 5 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது

குடல் நுண்ணுயிரிபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY

பல்வகையான ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அதிகரிக்கும்போது குடலில் பல்வகை நுண்ணுயிரிகளின் அளவும் அதிகரிக்கும்.

பிரிட்டானியர்கள் தற்போது தாங்கள் உண்ணும் நார்ச் சத்து உணவில் பாதியை மட்டுமே உண்ண வேண்டும் என எச்சரிக்கிறார் பேராசிரியர் ஸ்பெக்டர்.

நார்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்கள்

முழு தானியங்கள்

பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகை சார்ந்த பழங்கள்

ப்ரக்கோலி, கேரட் போன்ற காய்கறிகள்

பீன்ஸ்

பருப்பு வகைகள்

பாதாம் போன்ற கொட்டை வகைகள்

2) ஜீன் லாட்டரி

சிலர் விடாமுயற்சியுடன் தினந்தோறும் உடற் பயிற்சிகளை செய்துவந்தாலும் அவர்கள் உடல் பருமன் குறைவதில்லை. ஆனால் சிலர் மிக குறைவான உடற்பயிற்சியிலேயே பருமனை கட்டுக்குள் வைக்கின்றனர்.

நமது உடல் எடை என்பதில் 40 - 70% வரை நமது மரபணு சார்ந்து தீர்மானிக்கப்படுவது என்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். உண்மையில் உடல் பருமன் என்பதை லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் சார்ந்த சமாச்சாரமாகத்தான் பார்க்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் சதாஃப் ஃபரூக்கி.

உடல் எடையை முடிவு செய்வதில் மரபணுக்களே பெரும் பங்கு வகிக்கின்றன என தெளிவாக தெரிந்துவிட்டது என்கிறார் ஃபரூக்கி. குறிப்பிட்ட சில மரபணுக்களில் நேரும் பிழைகளே உடல் பருமனுக்கு காரணமாகின்றன என்கிறார் அவர்.

ஒருவர் எவ்வளவு என்கிறார்...எவ்வகை உணவை விரும்பி உண்கின்றார் என்பதையெல்லாம் அவரவர் மரபணுக்களே முடிவு செய்கின்றன. உண்ட உணவின் சத்துகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும். மரபணுக்களே முடிவு செய்கின்றன. இரவில் உணவு உண்பது தாமதமானால் உடல் பருமன் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார் மருத்துவர் ஜேம்ஸ் பிரவுன். இரவில் உடல் உழைப்பு குறைவு என்ற பொதுவான கருத்து இருந்தாலும் அது உண்மையல்ல என்கிறார் பிரவுன். உடலுக்குள் உள்ள உயிரியல் கடிகாரம்தான் இதற்கு காரணம் என்கிறார் பிரவுன்.

இரவை விட பகல் நேரத்தில்தான் உணவின் சத்துகளை சிறப்பாக கையாளும் வகையில் நமது உடல் அமைப்பு இருப்பதாக கூறுகிறார் மருத்துவர் பிரவுன்.

ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் ஒருவர் பிழையுள்ள MC4R மரபணுவை கொண்டிருக்கின்றன. இந்த மரபணுதான் பசி உணர்வு...உணவு உண்ணும் அளவு உள்ளிட்டவற்றை மூளை வழியாக கட்டுப்படுத்துகின்றன.

எனவே இந்த மரபணுவில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் அதிக பசி ஏற்படுவதுடன் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளையும் உண்ணத் தூண்டுகிறது.

மரபணு பிரச்னையை பொறுத்தவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர் ஃபரூக்கி. ஆனால் உணவுக்கட்டுப்பாடு, உடற் பயிற்சி மூலம் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என அறிய இது உதவும் என்கிறார் ஃபரூக்கி.

3) என்ன நேரம் இது...

காலை உணவை அரசன் போல உண்ணுங்கள்...மதிய உணவை ஒரு முதலாளி போல உண்ணுங்கள்...இரவு உணவை ஒரு பரம ஏழை போல் உண்ணுங்கள் என ஒரு பழமொழி உண்டு. ஆனால் நீங்கள் நினைப்பது போன்ற அர்த்தம் இதற்கு இல்லை.

உடல் பருமன் பிரச்னை நிபுணரான மருத்துவர் ஜேம்ஸ் பிரவுன், ஒவ்வொரு நாள் இரவும் நாம் தாமதமாக உண்ணும்போது உடல்பருமனுக்கான வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இரவில் நம் செயல்பாடுகள் குறைவென்பதுதான் இதற்கு காரணம் என பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் நமது உடலுக்குள் இயங்கிவரும் கடிகாரம்தான் இதற்கு காரணம் என்கிறார் பிரவுன்.

"இரவு நேரத்தை விட பகல் நேரத்தி்ல் நமது உடலுக்கு உணவின் சத்துக்களை கிரகிக்கும் திறன் அதிகம்" என்கிறார் பிரவுன்.

பிரெட்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதன் காரணமாகத்தான் பணி நேரம் மாறிக்கொண்டே இருப்பவர்கள் உடல் எடையை கட்டுப்படுத்த சிரமப்பட வேண்டியுள்ளது என்கிறார் பிரவுன்.

இரவு நேரங்களில் ஜீரணத்திறன் குறைவாக இருப்பதால் கொழுப்பு சத்து மிக்க உணவுகளை மாலை 7 மணிக்கு முன் உண்பது நல்லது. இது உடல் எடை குறைக்கும் முயற்சிக்கு உதவும் என்கிறார் மருத்துவர் பிரவுன்.

கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இரவு உணவு நேரம் மாலை ஐந்து மணியிலிருந்து மாலை ஏழு மணிக்கு மெல்ல மாறிவிட்டது...அதனால் உடல் பருமன் பிரச்னையும் அதிகரித்துவிட்டது என்கிறார் பிரவுன்.

தற்கால பணி நேரங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை உடல் பருமன் பிரச்னை அதிகரிக்க காரணமாகின்றன.

காலை உணவை தவிர்ப்பது அல்லது டோஸ்ட் போன்று மிக குறைவாக உட்கொள்வது என்பது கூடவேகூடாது என்கிறார் பிரவுன்.

இதற்கு பதில் புரதம் நிறைந்த சிறிது கொழுப்பும் கொண்ட உணவுகள் அதாவது முட்டை கொண்ட முழு தானிய டோஸ்ட் என்பது சரியான, வெகுநேரத்திற்கு தாங்க கூடிய உணவாக இருக்கும் என்கிறார் பிரவுன். இதே போல மதிய உணவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் இரவு உணவு குறைவாக இருக்க வேண்டுமென்றும் கூறுகிறார் பிரவுன்.

4) உங்கள் மூளையை தந்திரமாக பயன்படுத்துங்கள்...

பிரிட்டன் மக்கள் தாங்கள் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் அக்கறை குறைவானவர்களாக இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் சத்து கிரகிக்கும் திறன் 30-50% குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

மனித நடத்தைகள் குறித்து ஆராயும் அறிவியல் நிபுணர் ஹ்யூகோ ஹார்ப்பர் இதற்கு ஒரு யோசனை தருகிறார். கலோரிகளை கணக்கிட்டுக்கொண்டு இருப்பதற்கு பதில் உணவு உண்ணும் முறையை மாற்ற சில ஆலோசனைகளை இவர் தருகிறார்.

உணவுக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதியை விட ஆர்வத்தை தூண்டக்கூடிய உணவுகளை பார்வைக்கு அப்பால் வைப்பது பலன் தரும் என்கிறார் ஹார்ப்பர்.

நாய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதாவது ஆரோக்கிய கேட்டை தருகின்ற உணவுகளை சமையலறையிலிருந்து தூக்கிப் போட்டுவிட்டு நலம் தரும் உணவுகளை...பழ வகைகளை வைக்கலாம் என்கிறார் ஹார்ப்பர். டிவி பார்த்துக்கொண்டு முழு பாக்கெட் பிஸ்கெட்டை சாப்பிடுவதற்கு பதில் எவ்வளவு சாப்பிடவேண்டும் என திட்டமிட்டு அவ்வளவு பிஸ்கெட்டுகளை சாப்பிடுவதே சரியாக இருக்கும் என்று ஆரோசனை கூறுகிறார் ஹார்ப்பர்.

விரும்பிய எல்லா உணவுகளையும் விழுங்கிக்கொண்டே இருப்பதற்கு பதில் அதில் எது குறைந்த கலோரி கொண்டது என பார்த்து உண்பது சிறந்தது என்கிறார் ஹார்ப்பர்.

சர்க்கரை அளவு குறைந்த, ஆரோக்கியம் காக்கும் நோக்கிலான மென்பானங்கள் தற்போது சந்தைகளுக்கு வந்துள்ளன... அவற்றை அருந்துவதும் சிறந்தது என்கிறார் ஹார்ப்பர்.

உண்ணும் உணவின் அளவையும் சற்றே குறைத்துக் கொள்ளலாம் என்கிறார் இவர்.

5) ஹார்மோன்கள்

உடல் பருமன் பிரச்னைக்கு தீர்வு காண தற்போது அறுவை சிகிச்சைகளும் நடக்கின்றன. இவை இரைப்பையின் அளவை மட்டும் குறைப்பதில்லை. அவை உற்பத்தி செய்யும் ஹார்மோனின் அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

நாம் எவ்வளவு உண்ண விரும்புகிறோம் என்பதை நமது ஹார்மோன்களே தீர்மானிக்கின்றன. இது _Bariatric அறுவை சிகிச்சை மூலம் தெரியவந்தது. இந்த அறுவை சிகிச்சைதான் உடல் பருமன் பிரச்னைக்கு இருப்பதிலேயே சிறந்த தீர்வாக உள்ளது.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

இது வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வை அளித்து பசியை குறைக்கிறது. வயிற்றின் அளவை 90% வரை குறைக்க வேண்டியிருப்பதால் இது பெரிய அறுவை சிகிச்சை ஆகும். ஆனால் இதிலும் சில தடைக்கற்கள் உள்ளன. BMI எனப்படும் உடல் பருமன் - உயரம் விகிதாச்சாரம் குறைந்தது 35க்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அறிவை சிகிச்சை செய்யக்கூடியதாகும்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், Baeiatric அறுவை சிகிச்சைக்குப்பின் குடலில் தோன்றும் பசி உணர்வை குறைக்கும் ஹார்மோன்களை வைத்து புதிய அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் 3 விதமான ஹார்மோன்களின் கலவையை நோயாளிகளுக்கு ஊசி மூலம் தினசரி ஒரு முறை வீதம் வீதம் 4 வாரங்களுக்கு போட்டு வருகின்றனர்.

இந்த ஊசியை கேட்டுக்கொண்டவர்களுக்கு குறைவான பசி ஏற்படுவதாக கூறுகின்றனர்...இதனால் அவர்கள் 28 நாட்களில் 2 முதல் 8 கிலோ வரை எடை குறைந்துவிட்டனர் என்கிறார் மருத்துவர் ட்ரிஸியா டான்.

இந்த மருந்து பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுவிட்டால் நோயாளிகள் ஆரோக்கியமான எடை அளவை தொடும் வரை அதை தர மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-45201876

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
    • 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,  வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.