Jump to content

வடக்கின் சில பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்?


Recommended Posts

வடக்கின் சில பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்?

 

Sri_Lanka_northern_province-720x450.jpg

நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த சீன கப்பல் தொடர்பாக அதன் எச்சங்களையும் சான்றுகளையும் மீட்கும் பணிகளானது யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இதனை இலங்கை மத்திய கலாச்சார நிதியமும் சீன அரசாங்கமும் இணைந்து முன்னெடுத்து வருவதாக தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தின் கரையோர பகுதிகளான ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கரையோர பகுதிகளிலும் சீனாவின் பண்டைய கால எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அதனை மீட்பதற்காகவே இவ்வாறு சீனாவிற்கு அப் பகுதிகளை வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

சுமார் ஜந்து வருடங்களுக்கு இவ்வாறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக இலங்கை அரசுடன் சீன அரசு ஒப்பந்தமொன்றை செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதிலும் அவ்வாறு தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதாயின் சீனப் பல்கலைகழகமோ அல்லது சீன தொல்லியல் திணைக்களமோ நேரடியாக இலங்கை தொல்லியல் திணைக்களத்துடன் அல்லது பல்கலைகழகத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் இவ்வாறு வடக்கின் கரையோர பகுதிகளை, குறிப்பிட்ட கால ஆண்டிற்கு தொல்லியல் ஆய்விகளை மேற்கொள்வதற்கு வழங்குவதானது இந்தியாவிற்கு எதிரான பாதுகாப்பு சார்ந்த விடயங்களுக்கான சீனாவின் செயற்பாடக அமையலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/வடக்கின்-சில-பகுதிகளை-சீ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ள வடலியள் பனங்கந்துகள் எல்லாம் துலைஞ்சுது.....பனங்கிழங்குக்கு பாத்தி கிண்டுறமாதிரி உள்ள இடமெல்லாம் கிண்டி கிளறப்போறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வடிவா கிண்டுங்கோ,

அடியில கிடந்து  நாலு மிதிவெடி ,மூஞ்சைக்கு நேர  வெடிச்சுதெண்டால் அடுத்த ஐம்பது வருஷத்துக்கு சப்பட்டையள் யாழ்ப்பாணத்த நினைச்சும் பார்க்கமாட்டாங்கள்.

இலங்கையில் யார் ஆதிக்கம் அதிகம் என்ற இந்திய சீன சண்டையில் ஏறக்குறைய சீனா ஜெயித்துவிட்டதென்றே சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

 

அடியில கிடந்து  நாலு மிதிவெடி ,மூஞ்சைக்கு நேர  வெடிச்சுதெண்டால் அடுத்த ஐம்பது வருஷத்துக்கு சப்பட்டையள் யாழ்ப்பாணத்த நினைச்சும் பார்க்கமாட்டாங்கள்.

 

அவங்கள் உலக வல்லரசுக்கு தண்ணி காட்டுறவங்கள் இந்த நாலு மிதிவெடி கதை  எங்களை மட்டும் குசிபடுத்தும்  .

உண்மையிலே சைனாவுக்கு வடக்கில் கால் ஊன்றுவதில்எந்த பலனும் இல்லையென்றாலும் சொரிலங்கன் அரசியல்வாதிகள் சைனா வந்துவிடும் எனும் மாயையை தோற்றுவிக்கின்றன அப்பத்தான் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து டபுள் உதவியை பெறலாம் எனும் கபட நோக்கமே அன்றி வேறில்லை .

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

அவங்கள் உலக வல்லரசுக்கு தண்ணி காட்டுறவங்கள் இந்த நாலு மிதிவெடி கதை  எங்களை மட்டும் குசிபடுத்தும்  .

உண்மையிலே சைனாவுக்கு வடக்கில் கால் ஊன்றுவதில்எந்த பலனும் இல்லையென்றாலும் சொரிலங்கன் அரசியல்வாதிகள் சைனா வந்துவிடும் எனும் மாயையை தோற்றுவிக்கின்றன அப்பத்தான் இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து டபுள் உதவியை பெறலாம் எனும் கபட நோக்கமே அன்றி வேறில்லை .

உலக வல்லரசா....???? யார் அது அமெரிக்காவா....??? யார் சொன்னது அமெரிக்கா-பிரித்தானியா வல்லரசு காலம் எல்லம் மலையேறிவிட்டது  இப்ப பழைய தாதா போய் புது தாதா வந்திட்டார் ரஸ்ஸியா-சீனா கூட்டணி தான் இபோதைய  வல்லரசு.

சிரியாவில் அமெரிக்காகாரன் ஒன்றையும் அசைக்க முடியவில்லை.

பூட்டின் ஒரு சிறந்த தலைவன் தான் வங்குரொத்தில் இருந்த ரஸ்ஸியாவை ஸ்திரமாக்கி, அமெரிக்க பிரிட்டன் கிடுக்கு பிடியை உடைத்து ஒரு புதிய அரசியல் அச்சை உருவாக்கியது அவரது சாதனை

Link to comment
Share on other sites

  • 3 months later...
On 8/20/2018 at 8:48 AM, Dash said:

வங்குரொத்தில் இருந்த ரஸ்ஸியாவை ஸ்திரமாக்கி, அமெரிக்க பிரிட்டன் கிடுக்கு பிடியை உடைத்து ஒரு புதிய அரசியல் அச்சை உருவாக்கியது அவரது சாதனை

உண்மை தான்!
ஆனாலும் அதனால் தமிழர்களுக்கு எள்ளளவு பயனும் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

உண்மை தான்!
ஆனாலும் அதனால் தமிழர்களுக்கு எள்ளளவு பயனும் கிடைக்கவில்லை.

எங்கடை உலகு டெல்லி மட்டும்தான் அவர்கள் எறியும் எலும்பு துண்டுகளுக்கு மட்டுமே நாங்கள் வால் ஆட்டுவம் அமெரிக்கனோ பிரிட்டனோ எந்த அதிகாரி போய் எங்கடை அரசியல்வாதிகளை சந்தித்தால் கடைசியில் மறக்காமல் சொல்லப்படும் வாக்கியம் எங்களிடம் சொல்லியதை டெல்லிக்கும் தெரியபடுத்துங்கள் என்பது .

தங்கடை நாட்டு தமிழ் மக்களையே அடிமையினும் கேவலமான பார்வை கொண்ட டெல்லி அரசு  மதிப்பது இல்லை இதுக்குள்ளை எங்களுக்கு விடிவு பெற்று தருவினம் என்பது பகல் கனவு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இனி சைனிஸ் பாசையும் பேசுவம்:unsure:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.