Jump to content

தமிழர் சமூக வாழ்வு கிபி 250 - கிபி 600 வரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...

தமிழகத்தின் கி.பி.250 முதல் கி.பி.600 வரையிலான நூற்றாண்டுகளை களப்பிரர்களின் காலம் என்றும், இருண்ட காலம் என்றும் பெருவாரியான 'செல்வாக்கு மிகுந்த' வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை துரைசாமிப்பிள்ளை என பலரும் அவர்களை கொடியவர்கள் என்றும் சூறையாடியவர்கள் என்றும் சாடி உள்ளனர். கே.கே. பிள்ளை தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்ட தனது 'தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்' எனும் நூலில் "தமிழகத்தில் இவர்களால் ஏற்பட்ட குழப்பமும் இழப்பும் அளவிறந்தன. இவர்கள் கொடுங்கோலர்கள், கலியரசர்கள்" என கொட்டித் தீர்க்கிறார்.

போதுமான, நம்பகமான தரவுகள் ஏதுமற்ற பின்சங்க காலத்தில், இலக்கியங்களைத் தவிர்த்துப் பா்த்தால் பற்றிக்கொள்ள எந்த ஆதரவும் இல்லாததாலேயே இருண்டகாலம் எனும் இத்தகு சொல்லாடலானது தொடர்ந்து இருந்து வருகிறது.

வேள்விக்குடி செப்பேடு பதிப்பிக்கப்பட்ட பின்பும் கூட அது குறித்து எதிர்மறையாக பொருள் கொள்ளப்பட்டதே அன்றி சரியான அர்த்தத்தில் அது வெளிக்கொணரப் படவில்லை.

இருண்டகாலம், இருண்ட குலம், சூரையாடும் கூட்டம் என பலவாறாக கருத்து சொல்லப்பட்ட அந்தக் காலத்தைக் குறித்துதான் 1975 ம் ஆண்டு, பெரும் வரலாற்று ஆய்வாளரான மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் 'களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' எனும்  பெருமைமிகுந்த நூலை எழுதினார். அவர் தனது நூலின் முன்னுரையில் "களப்பிரரின் இருண்டகாலம் இந்நூலினால் 'விடியற்காலம்' ஆகிறது" என பொருள்படச் சொன்னார்.

கிடைத்த சொர்ப்ப வரலாற்றுத் தகவல்களையும் பதினெண் கீழ்கணக்கு நூல்களையும் மிகுந்த கவனத்தோடு ஆய்வு செய்து கூர்மையான சில மதிப்பீடுகளை அவர் முன்வைக்கிறார். அவையாவன..

  1. களப்பிரர்கள் தமிழர் அல்லர்.
  2. அவர்கள் திராவிட இனத்தவரே குறிப்பாக கன்னடர்.

3.இவர்களது காலத்தில் சமணமும் பௌத்தமும் தழைத்தோங்கி வளர்ந்தன.சைவம் உள்ளிட்ட  சிலமதங்கள் ஔிமங்கியே காணப்பட்டன.

  1. களப்பிரரின் படையெடுப்பு, வெற்றிக்கு காரணம் சமூக தேக்கநிலை, பேரரசு அற்ற நிலை. எனக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

மேற்படி அறிஞரின் நூல் வெளிவந்த(1975) பிற்பாடு குறிப்பட்ட இந்தக் காலம் குறித்து பல ஆய்வாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். பல முனைவர் பட்ட ஆய்வுகளும் இந்த காலம் குறித்து தயாரிக்கப்பட்டன.

இந்த நூல் வெளிவந்த பின்னால் அவர்கூறிய 'விடியற்காலம்' என்பதற்கு  பின்னால் உள்ள சில துணிபுகளும், ஐயங்களும் பல ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இத்தகு கவனத்தின் ஒருபகுதியாக அந்தக் காலத்தை ஒரு 'பொற்காலம்' எனும் அளவுக்கு சில ஆய்வுகள் உயர்த்திக் கொண்டு போயின. வேள்விக்குடி செப்பேட்டை மையமாகவைத்து  கருத்து சொல்லவந்த பலரும், களப்பிரர்கள் ஏதோ சமண, பௌத்த மதங்களை வரித்துக்கொண்டவர்கள்  என்பதுபோலவும், திட்டமிட்டு அவர்கள் பிராமணர்களையும், அவர்கள் அனுபவித்துவந்த தேவதானங்களையும் ஒடுக்கினார்கள் என்பதுபோலவும் எண்ணி அவர்கள் சாதிய படிநிலைகளுக்கு பெருத்த அடி கொடுத்தார்கள் என்று உணர்ச்சி பூர்வமாக முடிவு செய்தனர். "காலம் பறையர் என்பதே களப்பிரர்கள் என மருவியது ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரையினர்தான்" சில அறிவுஜீவிகள்  கொண்டாடுவதும், ஆளாளுக்கு நாங்களே களப்பிரர் என உரிமை கோருவதாகவுமே இங்கே வரலாற்று ஆய்வுகள் முன்வைக்கப் படுகின்றன.

உண்மையில் களப்பிரர்கள் சைவம் உள்ளிட்ட பிற மதங்களை வதைத்தவர்கள் என்றோ, அவர்களின் சடங்கு முறைகளை தடைசெய்தனர் என்றோ மயிலை சீனி வேங்கடசாமியாகட்டும், பர்ட்டன் ஸ்டெய்னாகட்டும் யாருமே குறிப்பிடவில்லை.

"களப்பிரர், வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்றுசெப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன்காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணர்க்குப் பகைவர் அல்லர். அவர்கள் பிராமணர்களுக்கு தானம் கொடுத்ததை 'அகலிடமும் அமலரும்' எனத் தொடங்கும் பாடல்  சுட்டுகிறது" எனக் குறிப்பிடுகிறார் வேங்கடசாமி. அவரின் ஆய்வுகளுக்கு  பிறகு கண்டு பிடிக்கப்பட்ட பூலாங்குறிச்சி கல்வெட்டுகளும் களப்பிரர்கள் பிராமணர்களுக்கு நிலக்கொடை அளித்து ஆதரித்து உள்ளதை குறிப்பிடுகிறது.

இதேபோல், களப்பிரரின் ஆட்சி வீழ்ந்தது குறித்தும் கூட ஆய்வாளர்களிடம் இருந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவர்களுக்கு 'நாட்டில் அரசியல் ஆதரவு இல்லை' என வேங்கடசாமி கூற, 'புதிய நிலப்பிரபுகளின் எழுச்சி' அவர்களை பலகீனப்படுத்தியதாக பேரா. சிவதம்பி எழுதுகிறார். பர்ட்டன் ஸ்டெய்னோ 'பிரதான உற்பத்தி சக்தியான விவசாய அமைப்புமுறையோடு அவர்கள் ஒன்று கலக்காமல் போனதே அவர்களின் விழ்ச்சிக்கு காரணம்' என குறிப்பிடுகிறார். அறிஞர் போ.வேல்சாமியும் கூட மேற்படி ஸ்டெய்னின் கருத்தை தனது பொற்காலங்களும், இருண்டகாலங்களும் கட்டுரையில் வழியுறுத்துகிறார்.

தொகுப்பாக, களப்பரரின் காலம் இருண்டகாலம் என மொழியப்பட்டதற்கான காரணம், அவர்களின்  வரலாற்றுத் தடயங்கள் பிற்காலத்தில் வந்தவர்களால் துடைத்து அழிக்கப்பட்டதற்கான காரணம், சமண பௌத்த செல்வாக்குகளே அன்றி களப்பிரர்களின் சாதி சமத்துவத்துக்கான செயல்பாடுகள் இல்லை. குறிப்பாக சொல்வதானால் இதில் அவர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. நிலைமை இவ்வாறு இருக்க களப்பிரர்களை சாதி சமத்துவப் போராளிகள் என்பதும், பார்ப்பனர்களின் எதிரிகள் என்பதும் வரலாற்றை திரிக்கும் மோசமான முன்னுதாரணங்களாகும்.

                     2

நமது இந்தப் புரிதலில் இருந்தே இந்த மேற்கண்ட நூலை நாம் அனுகுகிறோம். சங்கம் மருவிய காலத்தில் இருந்து  தொடங்குகின்ற முனைவர் ஆலால சுந்தரத்தின் இந்த ஆய்வானது,  சங்ககால மற்றும் பதினெண்கீழ்கணக்கு  நூல்களிலும், பிற்பாடான பக்தி பணுவல்களிலும்  ஆழமாக வேர்பரப்பி, ஒரு பெரும் விருட்சமாக நம் கண்முன்னே நிற்கிறது. அதேசமயம் கிடைக்கின்ற ஒருசில தொல்லியல் தகவல்களையும் பண்டைய  இலக்கியங்களின் ஔியில் அலசி சரியான வரலாற்றை கட்டமைக்க முயலுகிறது.

பொதுவாக தரவுகளை உள்வாங்கி ஊகித்து வலாற்றைச் சொல்வது என்பது ஒருவகை. இலக்கியங்களையும் தொல்லியல் தரவுகளையும் திரட்டி ஒருமாலைபோல் நமக்கு வரலாற்றை உய்த்தறிய பின்னித்தருவது இரண்டாவது வகை. இரண்டாவது வகையை நூல் கையாளுகிறது. இதில் ஆய்வாளரின் உழைப்பு நம்மை நெகிழ்வுகொள்ளச் செய்கிறது.

சங்ககால சமூகத்துக்கும், பின் சங்ககாலத்துக்கும் இடையில் இருந்த உறவையும், முரண்பாடுகளையும் நுணுக்கமாகச் சொல்லும் இந்த ஆய்வு,  சுவாரஸ்யமான சில தகவல்களை நமக்குத் தருகிறது. அரசனையும், வீரத்தையும் புகழ்ந்துபேசிய சங்ககால இலக்கியங்களுக்கு மாற்றாக அற நெறிகளையும், அரசனது கடமைகளை வழியுறுத்துவதையும் ஒப்பிட்டு இத்தகு வேறுபாடுகளின் காரணங்குறித்து ஆழமாக நூல் பேசுகிறது. பின்சங்க காலத்து  இலக்கியங்களின் முக்கியக் கூறாக மத சகிப்புத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஒருபுறம் சமண, பௌத்தத்தின் முன்னணி பாத்திரங்களை விவரிக்கும் நூல், மறுபுறம் பார்பனர்களின் செல்வாக்கையும், வணிகர்களின் அபரிமிதமான வளர்ச்சியையும் (கிரீடம் தவிர மன்னனுக்கு உரித்தான  அனைத்தையும் வைத்துக்ககொள்ள வணிகனுக்கு அதிகாரம் இருந்தது. படை உட்பட..) குறிப்பிடுகிறார். அதேபோல் வேளாளர்களில் தோன்றிய 'உழுவித்துண்போர்' எனப்படும் புதிய வர்க்கப் பிரிவையும் விளக்குகிறார்.  குறிப்பாக தமிழகத்தில் வருணாசிரம முறை நீடிக்கவில்லை என்பதை தகுந்த ஆதாரங்களோடு சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வொரு சாதிகளுக்குமான பணிகளை வேறுபடுத்தி அவற்றின் மூலம் அவைகளின் சமூக அந்தஸ்தை நுணுக்கமாக ஆராய்கிறார்.

நிலக் கொடைகள் இருந்ததையும், நிலத்தில் தனியுடைமை இருந்ததையும் சுட்டிக்காட்டும் நூலானது நிலம் தொடர்பான எந்த முடிவுகளிலும் அரசனே இறுதியானவன் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

பிற்காலத்தில் சைவத்தின் எழுச்சியை கூடுதலான வார்த்தைகளில் சொல்லும் ஆய்வு, சைவத்தில் தொடக்ககாலங்களில் மேலோங்கியிருந்த சாதி சமத்துவ கருத்துகளையும் சுட்டிக்காட்டுகிறது. ஆதி சைவர்களான  சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரைப்பற்றி குறிப்பிடும்போது, இருவரும் "பெருமளவிலான பிராமணர்களல்லாத தமிழ் மக்களின் துணையின்றி சமண பௌத்தக் கட்டுக்களை களையமுடியாது" என்கின்றனர் என்றும், சைவ நாயன்மார்களில் 63 பேர்களில் 16 பேர் அந்தனர், 6 பேர் வணிகர், 13 பேர் வேளாளர்கள், 10 பேர் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கிறது. ஆனால்  சைவர்களின் நோக்கம் நிறைவடைந்தவுடன் (சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு ஒழிக்கப்பட்டவுடன்) அது தமது சாதி சமத்துவ கருத்தை கைவிட்டது என சரியாகவே குறிப்பிடுகிறது.

பல்லவர்கள் கி.பி.250 வாக்கில் காஞ்சியை கைப்பற்றியதாக குறிப்பிடும் நூல், பல்லவர்களுக்கும் களப்பிரர்களுக்கும் இடையிலான உறவு குறித்தோ, இருவர் பிரதேசங்களின் எல்லைகள் குறித்தோ எதையும் சொல்லாமல் விடுவது என்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. மேலும் சைவ, வைணவ பிரிவுகளின் உருவாக்கம் குறித்தும், முரண்பாடுகளுக்கான அடிப்படை அம்சங்கள் குறித்தும் கூடுதலாக சொல்லியிருக்க வேண்டும். என்றாலும் கிடைக்கின்ற சொற்ப தரவுகளை வைத்துக்கொண்டு இதையெல்லாம் துள்ளியமாக எதிர்பார்ப்பது பேராசைதான்.

என்றாலும் நிச்சயம்  பலவகையிலும் நமது புரிதலை செழுமை படுத்திக் கொள்வதற்கான முக்கியமான நூல் இது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

முனைவர். இர. ஆலால சுந்தரத்தின் முனைவர் பட்ட ஆய்வேடு இது. 1990ல் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை சமர்ப்பித்த அவர் 1995 ம் ஆண்டில் தனது ஆங்கில முதல் பதிப்பை (Tamil social life,c.250to 700 AD) வெளியிட்டார். இந்த நூல் சமீபத்தில்தான் (2016 ல்தான்) முதல் முறையாக தமிழில் வெளிவந்துள்ளது.

பண்டைய தமிழக வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் பலரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய முக்கியமான நூல் இது என்றால் அது மிகையில்லை.‌‌

- பாவெல் இன்பன், தருமபுரி

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/35402-250-600

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.