Jump to content

முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்

வெளிநாட்டினைச் சேர்ந்த ஒன்பது  பேர் 2000 தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக் கொலைகள்  தொடர்பான துணிவான ஆய்வுகளை மேற்கொண்டு ”Ende der Aufklärung: Die offene Wunde NSU”  ( தமிழில் சுமாராக இப்படிச் சொல்லலாம்: ‘முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்’) என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார் ஜெர்மனிய ஊடகவியலாளர் துமிலன் செல்வகுமரன் அவர்கள். அவரது இந் நூலை முன்வைத்து இடம்பெற்ற வானொலி நேர்காணலில் புதிய சந்தேகங்களையும், புதிய தகவல்களையும் தருவதோடல்லாமல் தனது தேடலின் போது பெற்ற அனுபவங்களையும் குறிப்பிடுகின்றார்.

https://www.swr.de/swraktuell/baden-wuerttemberg/heilbronn/Journalist-aus-Schwaebisch-Hall-Buchvorstellung-Ende-der-Aufklaerung-die-offene-Wunde-NSU,av-o1047841-100.html

7_D133624-_A766-4929-89_DD-_CB106_C64_D3

விடயம்:

வெளிநாட்டினைச் சேர்ந்த ஒன்பது சிறிய கடைவியாபாரிகள் (8 பேர் துருக்கியர் மற்றும் ஒருவர் கிறீக் நாட்டவர்) ஜெர்மனியின் பல பெரு நகரங்களில் 2000 தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக் கொலைகள் நடந்த காலப்பகுதியில் புலன்விசாரணை என்கிற பெயரில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை பொலிசாரும் மற்றும் அரச சட்ட நிறுவனங்களும் வறுத்தெடுதார்கள். பாதிக்கப்பட்டவர்களையே,   அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதால், அவர்கள் மீது சந்தேகித்து அவர்களே சூத்திரதாரிகளாகவும் குற்றவாளிகளாவும் இருக்கலாம் என்ற இவ்விட்டதுப் பொதுப்புத்தியின் படியே விசாரணைகள் நடைபெற்றன. இக் கொலைகளுக்குப் பின்னால் நிறவாதம், இனவாதம், வெளிநாட்டார் எதிர்ப்பு, இஸ்லாம் மதவெறுப்பு போன்றவை ஒன்றோ பலவோ இருக்கலாம் என்ற சிறு சந்தேகம் கூட எழுந்துவிடாமல் திட்டமிட்டுப் பார்த்துக் கொண்டன புலன்விசாரணைக் கட்டமைப்புக்கள். பரபரப்பு வெகுஜன ஊடகங்களோ இக் கொலைகளையிட்டு செய்திகளை வெளியிட்டபோது கொல்லபட்டவர்கள் பாரிய குற்றங்கள் புரியும் குற்றவளிக் கும்பல்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்ற சிந்தனையே வருமாறு தம் செய்திகளைப் பரப்பினர்

இன்னும் சொல்லப்போனால் இக் கொலைகளை மலினப்படுத்தினார்கள். உதாரணமாக Dönermord. ( தொனர் கேபாப் என்பது துருக்கி மக்களின் உணவு. அந்த உணவு விற்கப்படும் சாலையோரச் சிறு கடைவியாபாரிகளே அனேகர்.)  

சுமார் 5 வருடங்களின் பின்னரே இக் கொலைகளுக்குப் பின்னால் புதிய நாசிப் பயங்கரவாத அமைப்புக்கள் இருப்பது வெளியானது. அதுமட்டுமல்லாது இக் கொலைகளைச் செய்த NSU ( National Socialist Underground) என்ற அமைப்பின் உறுப்பினர்கள் அல்லது கொலையாளிகள் மத்திய மற்றும் மாநில அரச உளவுக் கட்டமைப்புகளிடமிருந்து  ”இரகசியத் தகவல் தருபவர்கள்என்ற உளவாளிகள் பதவிக்காகச் சம்பளமும் பெற்றுக் கொண்டுள்ளனர். ஒரு பெண் பொலிஸ் அதிகாரியும் கொல்லப்பட்டார்

இவையெல்லாம் வெளியில் கசியவே இந் நபர்கள் பற்றிய கோப்புக்கள் மேற்படி நிறுவனங்களில் இருந்து காணாமல் போயின. ஆக மொத்தத்தில் வங்கிக் கொள்ளையொன்றின்போது தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்லப்படும் இரண்டு நபர்களும் மற்றும் கைது செய்யப்பட ஒரு பெண்ணுமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று அந்தப் பெண்ணுக்கான ஆயுட் சிறைத்தண்டனையுடனும் மற்றும் இருவருக்கான சில ஆண்டுகள் சிறைத் தீர்ப்புடனும்   வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டன. பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனங்கள் இக்கொலைகள் பற்றி எதுவரையான தகவல்களை முற்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டனர், இனவாதம், வெளிநாட்டார் எதிர்ப்பு போன்றவற்றின் பின்னணியில் பல ஆண்டு காலம் விசாரணைகள் நடைபெறாமல் இருந்தமைக்கு இவற்றின் பங்களிப்பு என்ன?     பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஏன் சுடப்பட்டார்போன்றவற்றுக்கு விடைகிடைக்கப்போவதில்லைஜெர்மன் பொலிஸ், இராணுவம், மற்றும் பாதுகாப்பு அமைச்சு நிறுவனங்களில் பணியாற்றுவோர் பலரது  புதிய நாசி அமைப்புக்களுடனான தொடர்புகள்  வெளிவருவதே இல்லை

https://www.amazon.de/Ende-Aufklärung-Die-offene-Wunde-ebook/dp/B07DXM63GF/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1534925831&sr=1-1&keywords=ende+der+aufklärung.+die+offene+wunde+nsu

- சுசீந்திரன் நடராஜா

 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.