Jump to content

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்


Recommended Posts

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஒரு வேலையை தள்ளிபோடுவதா அல்லது உடனடியாக செய்து முடிப்பதா என்பது உங்களது மூளை எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் உடனடியாக செய்வதையும் அல்லது தொடர்ந்து பலமுறை வேண்டுமென்றே தள்ளிபோடுவதையும் நமது மூளையிலுள்ள இரண்டு பகுதிகள் தீர்மானிக்கின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

264 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு மற்றும் மூளைகளின் ஸ்கேன்களை கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு விடயத்தை உடனே முடிப்பதும், தள்ளிப்போடுவதும் ஒருவரது நேர மேலாண்மையைவிட உணர்ச்சியை கட்டுப்படுத்துவதை பொறுத்து அமைவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரிய துப்பு

ஒருவரது உணர்ச்சி மற்றும் ஊக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ளும் மூளையிலுள்ள அமிக்டாலா என்னும் பாதாம் கொட்டை வடிவிலான பகுதி பெரியதாக உள்ளவர்களே வேலையை தள்ளிப்போடுவது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற அமைப்பை பெற்றுள்ளவர்களின் அமிக்டாலாவுக்கும், மூளையின் மற்றொரு பகுதியான டொர்சல் அன்டெரியர் சிங்குலேட் கோர்டேஸுக்கும் (டிஏசிசி) இடையிலான பிணைப்பு சரியாக இருக்காததும் மற்றொரு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்

அமிக்டாலா அளிக்கும் தகவல்களை பெறும் டிஏசிசிதான் உடல் எவ்விதமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. ஒருவரது உணர்ச்சி, கவனச்சிதறலை தடுப்பதன் மூலம் அந்த நபரை சரியான பாதையில் வைத்திருக்க இது உதவுகிறது.

"பெரிய அமிக்டாலாவைக் கொண்ட நபர்கள் ஒரு நடவடிக்கையின் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி அதிகம் ஆர்வமாக இருப்பதுடன், ஒரு விடயத்தை செய்வதற்கு தயங்குவதுடன், அதை கிடப்பில் போடுகிறார்கள்" என்று கூறுகிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான ருஹ்ர் பல்கலைக்கழக பேராசிரியர் எர்ஹன் ஜின்க்.

ஒரு வேலையை திறனுடன் உடனடியாக செய்து முடிப்பவர்களை விட, அதை தள்ளிப்போடுபவர்களின் மூளையிலுள்ள அமிக்டாலா - டிஏசிசி இடையிலான பிணைப்பு மோசமாக உள்ளதே காரணமே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையை கட்டுப்படுத்துங்கள்

இதுகுறித்து கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கும் கனடாவின் ஒட்டாவாவிலுள்ள கார்லெட்டோன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டிம் பிய்ச்சில், ஒரு விடயத்தை உடனே முடிப்பதும், தள்ளிப்போடுவதும் ஒருவரது நேர மேலாண்மையைவிட உணர்ச்சியை கட்டுப்படுத்துவதை பொறுத்து அமைவதாக நம்புகிறார்.

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்படத்தின் காப்புரிமைISTOCK

"இந்த ஆராய்ச்சி மூளை உணர்ச்சி மையங்கள் ஒரு நபரின் சுய கட்டுப்பாட்டு திறனை எப்படி மூழ்கடிக்கிறது என்பதை காட்டுகிறது" என்று அவர் கூறுகிறார்.

முறையான தியானம் மற்றும் கட்டுப்பாடுகளின் மூலம் அமிக்டாலா அளவை குறைத்து, அமிக்டாலா - டிஏசிசி இடையிலான பிணைப்பை உறுதியாக்குவது சாத்தியமானது என்பதை இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

வேலையை தள்ளிப்போடுபவர்களுக்கான குறிப்புகள்

நம்மை நாமே ஊக்கப்படுத்தும் வழிகளை பின்பற்றுவதன் மூலம் தினசரி வாழ்க்கையில் மாற்றத்தை காண முடியுமென்று கூறுகிறார்.

அவரது சில குறிப்புகள்:

உங்களுக்குள்ள வேலை ஒன்றிற்கு குறிப்பிட்ட காலக்கெடு இல்லையென்றால், அதை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யவேண்டிய விடயங்களை அப்படியே எழுதாமல், சிறுசிறு வேலைகளாக பிரித்து குறித்துக்கொள்ளுங்கள். இது வேலைகளை குழப்பமின்றி, எளிதாக மேற்கொள்வதற்கு உதவும்.

எதற்கெடுத்தாலும் வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? - காரணம் இதுதான்படத்தின் காப்புரிமைISTOCK

உங்களது அலைபேசி/ கணினியில் வரும் அறிவிப்புகளை (நோட்டிபிகேஷன்) ரத்து செய்துவிடுவதன் மூலம் தேவையற்ற கவனச்சிதறல்களை தவிர்க்க முடியும்.

"பிஸியாக" இருப்பது நாம் செய்ய தவிர்க்கும் காரியத்தை செய்வதைவிட எளிமையானது. எதற்கெடுத்தாலும் உங்களுக்கு நேரமில்லை என்று கூறுவதை விடுத்து, உங்களுக்கு இருக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்துகிறீர்களா என்பது குறித்து சுய ஆய்வொன்றை மேற்கொள்ளுங்களேன்!

https://www.bbc.com/tamil/science-45316544

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.