Jump to content

சதோச வளாகத்தில் இது வரை 126 மனித எச்சங்கள் மீட்பு


Recommended Posts

சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு

 

 
 

மன்னார் 'சதோச' வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமையுடன் 58 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

IMG_8542.JPG

குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை பகலுடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு சுமார்  440 ற்கும் மேற்ப்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

IMG_8554.JPG

தொடர்ச்சியாக அப்புறப்படுத்தப்படும் மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு சில நட்களாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் என்பதால் குறித்த வளாகத்தின் முன் பகுதியானது முழுவதும் தார்ப்பால் இட்டு மூடப்பட்டுள்ளது.

IMG_8559.JPG

தற்போது வளாகத்தின் மைய பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்க்கப்பட்டு வருகின்றது.

மழை பெய்யும் பட்சத்தில் குறித்த வளாகமானது முழுமையாக மூடப்படும்  நிலை ஏற்படும் என தெரியவருகின்றது.

http://www.virakesari.lk/article/39207

Link to comment
Share on other sites

 

மன்னாரில் இது வரை 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன (வீடியோ )

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டிடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமை(27) 58ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை மதியத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து இன்று வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு 440ற்கும் மேற்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதி மன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அப்புறப்படுத்தப்படும் மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.இந்த நிலையில் கடந்த ஒரு சில நட்களாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் என்பதால் குறித்த வளாகத்தின் முன் பகுதியானது முழுவதும் தரப்பால் இடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

தற்போது வளாகத்தின் மைய பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்;கப்பட்டு வருகின்றது. மழை பெய்யும் பட்சத்தில் குறித்த வளாகமானது முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிய வருகின்றது.

IMG_8548.jpg?resize=800%2C451

IMG_8544.jpg?resize=800%2C450IMG_8553.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/92963/

Link to comment
Share on other sites

மன்னார் புதைகுழி – குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா இராணுவம்

 

brigadier-sumith-atapattu-300x200.jpgமன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக சிறிலங்கா இராணுவம் மீது யாரும் குற்றம்சாட்டவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சதொச வளாகத்தில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து எலும்புக்கூடுகளையும் மனித உடல் எச்சங்களையும் மீட்கின்ற பணிகள் சுமார் இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உள்ளிட்ட 90இற்கும் அதிகமான எலும்புக்கூடுகள் இந்தப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எனினும் கொல்லப்பட்டவர்கள் யார் என்றோ, இவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதோ இன்னமும் தெரியவில்லை.

எலும்புக்கூடுகள் அடங்கிய புதைகுழியில், ஆட்களை அடையாளம் காணக் கூடிய உடைகள் உள்ளிட்ட வேறு எந்த தடயப்பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலங்களுடன் சிறிலங்கா படையினர் தொடர்புபடவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இராணுவத்துக்கும் இந்தப் புதைகுழிக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாருமே சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்டவுமில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/08/27/news/32566

Link to comment
Share on other sites

மன்னார் புதைகுழியின் மர்மம் வெளிச்சத்திற்குவருமா?

 

 
 

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற பகுதியில் காணப்படும் பாரிய புதைகுழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட உடல்களை  அடையாளம் காணும் நடவடிக்கையில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையின் வடமேற்கு நகரமான மன்னாரில் இதுவரை 100ற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய மனித புதைகுழியிது.

26 வருடகால யுத்தத்தின் போது  ஒரு இலட்ச்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இவ்வருட ஆரம்பத்தில் புதிய கட்டிடமொன்றிற்காக நிலத்தை அகழும் பணிகள் இடம்பெற்றவேளை மனிதஎலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றம் குறிப்பிட்ட பகுதியை முற்றாக அகழுமாறு உத்தரவிட்டது.

இந்த முழு பகுதியையும் இரண்டாக பிரிக்கலாம் ஒரு பகுதியில் ஒழுங்கான விதத்தில் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன,மற்றைய பகுதியில்  ஒழுங்கற்ற விதத்தில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை காணமுடிகின்றது என்கிறார் இப்பகுதியில் பணிகளை மேற்கொண்டுள்ள நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் ராஜ் சோமதேவ.

somadeva.jpg

இவர் களனி பல்கலைகழகத்தை சேர்ந்த தடயவியல்  தொல்பொருள் ஆய்வாளர்.

இன்னமும் அகழவேண்டிய பகுதிகள் உள்ளன இதன் காரணமாக மேலும் பல எலும்புக்கூடுகள் மீட்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தனது குழுவினர் மீட்ட மனித எச்சங்களில் ஆறு சிறுவர்கள் உடையவை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமிழர்கள் அதிகமாக வாழும் மன்னாரில் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டவர்கள் யார்? இவர்களை யார் எப்போது கொலை செய்தார்கள் என்பது மர்மமான விடயமாக காணப்படுகின்றது.

ஆதாரங்களை எவரும் சிதைப்பதை தடுக்கும் விதத்தில் உள்ளுர் காவல்துறையினர் அந்த பகுதிக்கு பாதுகாப்பு அளித்துள்ள நிலையில் உள்ளுர் நிபுணர்கள் மண்டையோடுகளையும் எலும்புகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

மனித எச்சங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத விதத்தில் அவர்கள் தங்கள் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.

கொல்லப்பட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய விதத்தில் ஆடைகளோ வேறு பொருட்களோ இதுவரை மனித புதைகுழியலிருந்து மீட்கப்படவில்லை.

 

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது மன்னார் நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அதேவேளை தமிழ் கிளர்ச்சிக்காரர்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

புதைகுழிக்குள் உடல்கள் காணப்படும் விதம் குறித்து நிபுணர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

உடல்கள் காணப்படும் விதம் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் அது முற்றிலும் குழப்பமானதாக காணப்படுகின்றது இரண்டு அடுக்குகளில் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்கின்றார் சோமதேவ.

மனித எச்சங்களை மீட்டதும்,அவர்கள் அதனை நீதிமன்றத்திடம் சேர்க்கின்றனர், அகழ்வுப்பணிகள் முற்றாக முடிவடைந்ததும்; அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்.

புதைகுழிக்குள் மீட்கப்பட்டவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை பேராசிரியர் சோமதேவவும் அவரது குழுவினரும் இன்னமும் உறுதிசெய்யவில்லை.

இதுவரையில் எவர்மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின் பின்னர் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகேதீஸ்வரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்குள் 94 மனித எச்சங்கள் காணப்பட்டன.

2014 இல் இவை மீட்கப்பட்ட போதிலும் இன்று வரை அவை குறித்த தெளிவான விபரங்கள் முடிவுகள் எவையும் வெளியாகவில்லை.

இலங்கை படையினரும் தமிழ்பிரிவினைவாதிகளும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அரசாங்கம் பொதுமக்கள் கொல்ல்ப்பட்டமை காணாமல்போனமைக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பில்லை என தெரிவித்து வருகின்றது.

இதேவேளை இலங்கையின் காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் மன்னார் புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளிற்கான நிதியின் ஒரு பகுதியை வழங்குகின்றது.

மன்னார் புதைகுழி குறித்து முழுமையான விசாரணை அவசியம் என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்

காணாமல்போனோரை கண்டுபிடிக்க முயல்வதும்  அவர்கள் எந்த சூழலில் காணாமல்போனார்கள் என்பதை  உறவினர்களுக்கு தெரிவிப்பதுமே தங்கள் அலுவலகத்தின் முக்கிய பணி என்கின்றார் பீரிஸ்

காணாமல்போனோரை தேடும் பணிகளின் ஒரு பகுதியாக பாரிய மனித புதைகுழிகளை தேடும் நடவடிக்கை அமைகின்றது எனவும் தெரிவிக்கும் அவர்  மனித புதைகுழிகளுக்குள் காணாமல்போனவர்கள் உள்ளனரா என்பதை ஆராய்வதும் தங்கள் பணி என்கிறார்.

கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாக  இந்த புதைகுழி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனதில் எழுந்துள்ளது.

மன்னாரில் மோதல்காலத்தில் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி செல்லமுயன்ற வேளை பல தமிழர்கள் காணாமல்போனார்கள் என்கிறார் மன்னார் மறைமாவட்டத்தின் குருமுதல்வர்  விக்டர் சூசை தெரிவிக்கின்றார்.

மோதல்களின் போது இந்தியாவிற்கு படகுகளில் தப்பி செல்ல முயன்ற பல தமிழர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல்போனார்கள் என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.

மன்னார் புதைகுழிகள் அகழப்பட்ட ஆரம்ப நாட்களில் அந்த பகுதிக்கு சென்றதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அவர்கள் சிறுவர்களின் எலும்புக்கூடுகளை கூட கண்டுபிடித்துள்ளனர் என்பதை அறிகின்றோம்,இவர்கள் யார் எவ்வாறு இவர்கள் மரணத்தை தழுவினார்கள் என்பதை நாங்கள் கண்டறியவேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை புதைகுழியில் காணப்படும் உடல்களுக்கும் படையினருக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதை இராணுவம் நிராகரிக்கின்றது.

நிச்சயமாக இந்த புதைகுழிக்கும் படையினருக்கும் இடையில் எந்த தொடர்புமில்லை,இதுவரை எவரும் அந்த குற்றச்சாட்டுகளை சுமத்தவுமில்லை என்கின்றார் இராணுவபேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து

எனினும் இலங்கை அரசாங்கம் தனது கடந்த காலங்களை உரிய விதத்தில் அணுக விரும்பினால் மனித புதைகுழிகளை விசாரணை செய்வதன் மூலம் காணாமல்போனவர்கள் குறித்த விவகாரத்திற்கு  நேர்மையான தீர்வை காண முயலவேண்டும் என தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் தெரிவிக்கின்றனர்

mannar_grave6.jpg

நன்றி- பிபிசி

 

தமிழில் - வீரகேசரி இணையம்.

http://www.virakesari.lk/article/39300

Link to comment
Share on other sites

மன்னாரில் 59 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்;கப்பட்டு வருகின்ற நிலையில் 59 ஆவது தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை போராசிரியர் தலைமையில் இடம் பெற்ற இந்த அகழ்வு பணியில் தற்போது வரை சுமார் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.அவற்றில் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக காணப்படும் 7 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று இடம் பெற்ற போதும் குறித்த மனித எச்சங்களுக்கு கீழேயும் , மேலேயும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

தற்போது வரை குறித்த வளாகத்திலேயே மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப் படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.குறித்த மனித புதை குழி தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான உயர் மட்;ட கலந்துரையாடல் இவ்வார இறுதிக்குள் இடம் பெறவுள்ளதாக தெரிய வருகின்றது.

IMG_8769.jpg?resize=800%2C450IMG_8770.jpg?resize=800%2C450IMG_8771.jpg?resize=800%2C450IMG_8780.jpg?resize=800%2C450IMG_8781.jpg?resize=800%2C450IMG_8782.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/93119/

Link to comment
Share on other sites

மன்னாரில் 111 மனித எலும்புக்கூடுகள்!

 

skeletons-720x450.jpg

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு நடவடிக்கையில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கையில் குறித்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் ஏழு மனித எலும்புக்கூடுகள் குழந்தைகளினுடையதென தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் பல உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்று (வியாழக்கிழமை) 61ஆவது நாளாகவும் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

விசேட சட்டவைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோர் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் சதொச வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டட வேலைக்காக மண்ணை அகழ்ந்த போது மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவ்விவகாரம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, நீதவான் உத்தரவிற்கமைய கடந்த மே மாதம் முதல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

காலநிலை சீர்கேடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக குறித்த பகுதியின் 27 சதவீதமான பிரதேசமே தற்போது வரை அகழப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மன்னாரில்-111-மனித-எலும்புக/

Link to comment
Share on other sites

மன்னாரில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 114 எலும்புக்கூடுகளில் 12 சிறுவர்களினுடையது

 

 
 

மன்னாரில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 114 எலும்புக்கூடுகளில் 12 சிறுவர்களினுடையது

மன்னார் ச.தொ.ச கட்டட தொகுதி புதைகுழியில் தொடர்ந்தும் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 114 எலும்புக்கூடுகளில் 12 சிறுவர்களினுடையது என்று நீதிமன்ற மருத்துவ அதிகாரி எஸ். ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த எலும்புக்கூடுகள் தொடர்ந்து அறையப்பட்டு வருவதாகவும், இவற்றின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக கலிபோர்னியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மன்னார் நீதிபதி பிரபாகரனின் அறிவுறுத்தலில் அகழ்வாராய்ச்சி மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் குழு ஒன்று சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

http://www.samakalam.com/செய்திகள்/மன்னாரில்-இதுவரை-கண்டுபி/

Link to comment
Share on other sites

ஆடைகளின்றி மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் மன்னார் மக்கள் மத்தியில் அச்சம்

 

 
 

 

மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

IMG_9079.jpg

மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் அகழ்வு பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இன்று 62 ஆவது தடவையாக குறித்த வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

IMG_9070.jpg

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இதுவரை குறித்த வளாகத்தில் 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன..

மேலதிகமாக காணப்படும் 14 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள்  இடம்பெறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.

ஆனாலும் இதுவரை 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டாலும் 97 மனித எச்சங்கள் மீட்கப்பட்டாலும் குறித்த வளாகத்தில் இருந்து மீட்க்கப்பட்ட தடைய பொருட்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

IMG_9061.jpg

இது வரை வட்ட வடிவிலான உலோகப்பொருட்கள் மாலை போன்ற ஒரு சில தடைய பொருட்களே மீட்கப்பட்டுள்ளன.

இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை  அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும் இது வரை  துணிகளோ அல்லது ஆடைகளுடன் சம்மந்தப்பட்ட எந்த விதமான தடைய பொருட்களும் கிடைக்கவில்லை என்பது சந்தோகத்திற்குறியதாக காணப்படுகின்றது.

சடலங்களாக புதைக்கப்பட்ட போது ஆடையில் காணப்படும் தடையப்பொருட்கள் எவையும் கண்டு பிடிக்கப்படாத நிலையில்  புதைக்கப்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்களாம்? என மக்கள் மத்தியில் சந்தோகம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39651

Link to comment
Share on other sites

மன்னாரில் தொடரும் மர்மம்!- மனித புதைக்குழிக்குள் இருந்து வெட்டு தழும்புடன் மண்டை ஓடு

 

photo-5-720x450.jpg

மன்னாரில் தொடர்ந்து 66ஆவது நாளாக மனித எச்சங்களின் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருந்து வெட்டு தழுப்புகளுடனான மண்டை ஓடொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித புதைக்குழி பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ள நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சமானது இச்சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன.

குறித்த மண்டையோட்டில் காணப்படும் வெட்டு தழும்பானது பிரோத பரிசோதனையின் போது ஏற்பட்டதா? அல்லது கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதா போன்ற பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்துள்ளது.

மன்னார் சதொச வளாகத்தில் தொடர்சியாக இன்று (வியாழக்கிழமை) 66ஆவது நாளாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை குறித்த வளாகத்திலிருந்து 120 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 114 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

photo-2.jpg

http://athavannews.com/மன்னாரில்-தொடரும்-மர்மம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து சமூக..மண் மக்கள் நலம் சார் அமைப்புக்கள் சர்வதேச ஊடகங்களைக் கூட்டி ஒரு கவனயீர்ப்பை உருவாக்க வேண்டும்.  வெளிநாட்டு தூதுவர்கள் மனித உரிமை அமைப்புப் பிரதிநிதிகளுக்கும்.. இந்த இடத்திற்கு விஜயம் செய்து கண்காணித்துச் செல்ல கோர வேண்டும். ஐநா மனித உரிமை பேரவையில்.. இது குறித்த ஆவணம் முறையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு மாகாண சபை இதனை முன்னெடுக்க வேண்டும்.

இப்படியே விட்டால்.. இதுவும்.. நீதி இன்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டு விடும். செம்மணி போல. 

Link to comment
Share on other sites

மன்னாரில் தொடர்ச்சியாக கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக அகழ்வு பணிகள், மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தும் பணிகள் மற்றும் அப்புறபடுத்தும் பணிகள் என பல்வேறு கட்டமாக தொடர்ச்சியாக ; இடம் பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று புதன் கிழமை (12) 69 ஆவது தடவையாக விசேட சட்டவைத்திய அதிகாரியின் தலைமையில் ; இடம் பெற்று வருகின்றது.

இன்றைய நிலவரப்படி 126 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாத அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணி இடம் பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

அத்துடன் குறித்த புதை குழிப் பகுதியானது மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_9230.jpg?resize=800%2C450IMG_9242.jpg?resize=800%2C450IMG_9243.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/95354/

Link to comment
Share on other sites

இலங்கை: மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்

தொடர்சியாக சந்தேகத்துக்குரிய மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இன்று வியாழக்கிழமை 70வது தடவையாக குறிப்பிட்ட வளாகத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன.

சிறப்பு சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான மூத்த பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினர் இணைந்து அகழ்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அகழ்வுப் பணிகளுக்கு ஏற்ப தற்போதைய நிலையில் நூற்றுக்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மீட்கப்படாமல் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

கண்டு பிடிக்கப்படும் மனித எச்சங்கள்

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் மழை மற்றும் வேகமான காற்று காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் குறிப்பிட்ட மனித புதைக்குழி பகுதிக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு பகுதி பாலித்தீன் தாளால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, மன்னார் பகுதி வீடு ஒன்றில் கொட்டியபோது அதில் மனித எச்சங்கள் இருந்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இலங்கைஇலங்கை

அதன் பின்னர் மன்னார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மே மாதம் 28 ஆம் தேதி முதல் முறையாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45511119

Link to comment
Share on other sites

மன்னர் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு – கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_9254.jpg?resize=800%2C450

 

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் பபடுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி இடம் தொடர்ந்தும் பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம்? என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

குறித்த மனித எலும்புக்கூடு கை , கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்படதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை.

-எனினும் இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் புதைக்கப்பட்ட நிலை மூலமாக குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத விடயமாக காணப்பட்டாலும் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே தெரிய வரும்.

இன்று வெள்ளிக்கிழமை(14) 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_9245.jpg?resize=800%2C450  IMG_9255.jpg?resize=800%2C4501536894932849_IMG_9251.jpg?resize=800%2C

http://globaltamilnews.net/2018/95568/

Link to comment
Share on other sites

தமிழர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடுகள்!!

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

 

https://www.tamilwin.com/community/01/193358?ref=home-feed

Link to comment
Share on other sites

மன்னாரில் கொத்துக் கொத்தாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு-அச்சத்தில் மக்கள்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_9453.jpg?resize=800%2C450

 

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றது. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் தலைமையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்பக்கூடுகள் அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வூசெய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை ( 17 ) மீண்டும் 72 ஆவது வது தடவையாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்களாம்? என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளப் படுத்தப்பட்டிருந்தது.

குறித்த மனித எலும்புக்கூடு அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய (17) அகழ்வு பணியின் போதும் அதே போன்று கை கால்கள் கட்டப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம்? என சந்தேகத்தை ஏற்படுத்த கூடிய மூன்றுக்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வெளிவரும் மனித எச்சங்கள் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் கொடுரமாக காணப்படுகின்றது.

மீட்கப்படும் மனித எச்சங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் கொத்து கொத்தாக புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் அகழ்வு பணிகளின்போதும் மேலும் மனித எச்சங்கள் மீட்கப்படலாம் என தெரிகின்றது
எனவே அகழ்வு பணிகளை விரைவு படுத்தும் வகையில் இன்றைய அகழ்வு பணியின் போது மேலதிகமாக சட்ட வைத்திய அதிகாரி மற்றும் உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 IMG_9456.jpg?resize=800%2C450IMG_9458.jpg?resize=800%2C450IMG_9464.jpg?resize=800%2C450

http://globaltamilnews.net/2018/96028/

Link to comment
Share on other sites

மன்னார் சதொச வளாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கருத்து

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (19) புதன் கிழமை 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்று இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்று ஊடகவியலாளர்களுக்கு காலை 11 மணியளவில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவித்தார்.
மன்னார் ‘சதொச’ வளாகத்தில் இன்று புதன் கிழமையுடன்(19) 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது எனவும் குறித்த வளாகத்தில் இருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 136 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதெனவும் அவற்றில் மீட்கப்பட்ட 130 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அகழ்வு பணிகள் இடம் பெறும் தினங்களில் காலை 10.30 மணி தொடக்கம் 11.30 மணி வரைக்கும், மாலை 3.30 மணி தொடக்கம் 4.30 மணி வரைக்கும் ஊடகவியலாளர்கள் அகழ்வு பணி இடம் பெறும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும்.

-ஒவ்வெரு புதன் கிழமையும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் வாராந்த பதிவுகள் ஊடகங்களுக்கு கருத்தாக வழங்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

DSC_0037.jpg?resize=800%2C534DSC_0043.jpg?resize=800%2C534DSC_0067.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/96250/

Link to comment
Share on other sites

இலங்கை மன்னார் மனித புதைகுழி: "எவ்வளவு நீளம் செல்லும் என்பது தெரியாது"

இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் தோண்டப்படும் மனித புதைகுழி எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதைத் தன்னால் கூற முடியாது என தோண்டும் பணிகளை முன்னெடுத்து செல்லும் சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கை

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. 74ஆவது முறையாக இன்று (19) புதன்கிழமையும் அகழ்வுப் பணிகள் நடந்தன. இதுவரை 136 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் மனித எலும்பு கூடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது. களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான மூத்த பேராசிரியர் ராஜ் சோம தேவாவுடன் அவரின் குழுவினரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அகழ்வுப் பணிகளைத் துரிதப்படுத்த மேலதிகமாக உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

சமிந்த ராஜபக்ச Image captionசமிந்த ராஜபக்ச

மன்னார் மனித புதைகள் குழி குறித்து சமிந்த ராஜபக்சவுடன் பிபிசி தமிழ் பேசியது.

கை,கால்கள் கட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உண்மை உள்ளதா?

''கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாக யார் சொன்னது, அல்லது எதனடிப்படையில் ஊடகங்களில் இந்தத் தகவல்கள் வெளியாகின என்பது எனக்குத் தெரியாது.

இதற்கு எவ்வித சான்றும் இல்லை. ஊடகங்கள் தமக்குத் தேவையானதை பிரசுரிக்கின்றன. எனினும், உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். இதன் உண்மைத் தன்மையை நான் ஊடகங்களுக்குக் கூறத் தயாராக இருக்கிறேன். இதில் எதனையும் மறைக்கும் தேவை இல்லை. புதன்கிழமைகளில் ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக வந்து பார்வையிட முடியும். மீட்கப்படும் எலும்பு கூடுகளின் புகைப்படங்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தமது கருத்துக்களைக் கூற முடியும். அதனை நிறுத்த முடியாது. எனினும், இதன் தலைமை விசாரணையாளராக, நானே இறுதி அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த அறிக்கையில் முழுமையான விவரங்களை துல்லியமான தகவல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, கைகள், கட்டப்பட்டிருந்ததாகவோ, ஊடகங்களில் வெளியிடப்படும் சந்தேகங்களுக்கோ இந்த சந்தர்ப்பத்தில் என்னால் பதிலளிக்க முடியாது.''

இலங்கை

இந்தப் பணி எந்த நிலையில் இருக்கிறது? விசாரணைக்கு வெளிநாட்டு உதவி பெறப்பட்டுள்ளதா?

''எலும்புக் கூடுகளை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இதில் முக்கியமான பகுதிகளை அடையாளப்படுத்தி சேகரித்து வருகிறோம். இவற்றை மிகவும் வெளிப்படையாக செய்து வருகிறோம். நீதிமன்ற நீதவான் முன்னிலையில்தான் இந்தப் பணி நடக்கிறது. நீதிபதியும் குறிப்பெடுத்து வருகிறார். மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாகவே, ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தோண்டும் பணிகள் நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன''.

''இவற்றை சோதனை செய்ய நீண்ட நாட்கள் தேவைப்படும். அதில் ஒருசில சோதனைகளை இப்போதே ஆரம்பிக்க யோசித்துள்ளோம். இதில் ஒரு பரிசோதனையை வெளிநாட்டில் செய்ய உத்தேசித்துள்ளோம். அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட, நிபுணத்துவம்வாய்ந்த நிறுவனமொன்றில் இதனை நடத்த யோசித்தோம். இந்த யோசனையை நீதிமன்றத்தில் முன்வைத்தோம். இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் மாதிரிகளை புளோரிடாவிற்கு அனுப்பிவைப்போம்.''

மனித எலும்புகள் தோண்டப்படும் இடம் எவ்வாறு தோற்றமளிக்கிறது?

மனிதப் புதைகுழியைப் போல் இருக்கிறதா? மயான பூமியைப் போல இருக்கிறதா?

''மக்களின் சம்பிரதாயபூர்வ, மத அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்யும்போது அதில் ஒரு ஒழுங்குமுறை இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக ஒருபோதும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த இடத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்களில் இவற்றை உங்களால் அவதானிக்க முடியும்.''

இலங்கை

''மயான பூமியில் உடல்கள் புதைக்கப்படுவதைப் போன்ற அமைப்பிலும் ஒரு இடம் இருக்கிறது. ஒழுங்கற்ற முறையில், ஒன்றன் மேல் ஒன்றாக புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் இருப்பதையும் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பகுதி குறித்தே அதிக கவனம் செலுத்துகிறோம்.''

ஒழுங்கற்ற விதத்தில் எலும்புக் கூடுகள் காணப்படுவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்திருக்கிறதா?

''இந்த புதைகுழி மன்னாரில் இருக்கிறது. இலங்கையில் மன்னார் என்பது அதிக பிரச்சினைகள் இருந்த இடம். இதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. இதனைப் பார்க்கும் ஒருவருக்கு அவரது கருத்தைக் கூற முடியும். எனினும், தலைமை விசாரணையாளராக ஆய்வுகள் முடிந்த பின்னரே எனது இறுதி முடிவைக் கூற முடியும். இவற்றை நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லை. வேறு எந்த சான்றுகளும் இல்லை''.

''எனவே இதன் பின்னணி என்ன? என்ன நடந்தது என்பது குறித்து? தேடியறிய வேண்டும். இவற்றுக்கு விடை காண்பதே எனக்குள்ள பொறுப்பு. இதற்குத் தேவையான அனைத்து விசாரணைகளையும் நான் முன்னெடுப்பேன். முழுமையான விசாரணையின் பின்னர் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.'' என்றார்.

இலங்கை

இந்த விசாரணைகளை முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

''அதனைக் கூற முடியாது. இந்த புதைகுழியின் ஒரு எல்லையை மட்டுமே அடையாளம் கண்டுள்ளோம். இது எவ்வளவு தூரம் விரிந்துள்ளது என்பதை எம்மால் இன்னும் கண்டறிய முடியவில்லை. தோண்டும் பணிகள் மட்டுமே தற்போது முன்னெடுக்கப்படுகிறன. மிகவும் கவனமாக இந்தப் பணியை செய்கிறோம். சில நேரம் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு எலும்புக்கூடுகளை மட்டுமே எடுக்கக் கூடியதாக இருக்கிறது.''

''காரணம், இவற்றை சிறுசிறு துண்டுகளாக சேகரிக்க வேண்டியிருக்கிறது. இவற்றை விஞ்ஞானபூர்வமாகவே செய்துவருகிறோம். இன்னும் நிறைய எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்க வேண்டியுள்ளது. எவ்வளவு தூரம் இது நீண்டு செல்கிறது என்பது எனக்கே தெரியாது. எனவே, தோண்டும் பணிகள் எப்போது நிறைவுக்கு வரும் என்பதைக் கூற முடியாது. முதலில் தோண்டும் பணிகள் நிறைவடைய வேண்டும். அதன்பின்னரே ஆய்வுகளையும், சோதனைகளையும் நடத்தி இறுதி முடிவுக்கு வர முடியும்'' என்றார்.

இலங்கை

மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் நடக்கும் தினங்களில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் செய்தியாளர்கள் அகழ்வு பணி நடக்கும் வளாக்ததிற்குள் சென்று தமது கடமையை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை தோறும் காலை 10.30 மணி முதல் 11 மணி வரையில் தகவல்களும், வாராந்த அறிக்கையும் ஊடகங்களுக்கு வழங்கப்படும் என தலைமை விசாரணையாளரான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-45576226

Link to comment
Share on other sites

மன்னார் அகழ்வுப் பணிகள் 75ஆவது நாளாகவும் நீடிப்பு!

 

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று 75ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன.

மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், அகழ்வுப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் இன்றைய தினம் மேலதிக பணியாளர்கள் அகழ்வுப் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதுவரைக்கும் குறித்த வளாகத்தில் இருந்து 136 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 130 மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மவட்ட நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மன்னார்-அகழ்வுப்-பணிகள்-75/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை தொடர்பில் சரியான சர்வதேசக் கவனம் செலுத்தப்பட்டு சர்வதேச நீதி நியாயங்களின் கீழ் இவை விசாரிக்கப்படாது விடின்.. எம்பிலிப்பிட்டிய மனிதப் படுகுழிகள் போல இவையும் கால வெள்ளத்தில்.. படம் காட்டிக் காட்டியே கரையச் செய்யப்படும். இந்த எலும்புக்கூடுகளுக்குப் பின்னால் உள்ள அநியாயங்களுக்கு நீதி நியாயம் என்பது அப்படியே சாகடிக்கப்பட்டு அவையும் புதைக்கப்பட்டு விடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.