Jump to content

ஐரோப்பிய உதைபந்தாட்ட போட்டி செய்திகள் பருவகாலம் 2018/ 2019


Recommended Posts

ரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்! ஐரோப்பிய கால்பந்து அப்டேட்

 

கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார்.

ரொனால்டோவின் விசித்திர அசிஸ்ட், எம்பாப்பேவின் ஆதிக்கம்! ஐரோப்பிய கால்பந்து அப்டேட்
 

ரோப்பிய கால்பந்தின் டாப் 5 தொடர்கள் அனைத்தும் இப்போது பரபரப்பாகிவிட்டன. பிரீமியர் லீக், லா லிகா தொடர்கள் பழையபடி சூடுபிடிக்க, புண்டஸ்லிகா தொடரும் இந்த வாரம் தொடங்கிவிட்டது. பார்சிலோனா, யுவன்டஸ், பி.எஸ்.ஜி, பேயர்ன் மூனிச் என 4 சாம்பியன்களும் இந்த வாரம் வெற்றி பெற, பிரீமியர் லீக் சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி அதிர்ச்சி டிரா கண்டது. பிரீமியர் லீக் (இங்கிலாந்து), லா லிகா (ஸ்பெய்ன்), சீரி - ஏ (இத்தாலி), புண்டஸ்லிகா (ஜெர்மனி), லீக் 1 (ஃபிரான்ஸ்) தொடர்களின் சம்மரி...

மான்செஸ்டர் சிட்டி - வோல்ஸ்பெர்க்

பிரீமியர் லீக் (இங்கிலாந்து)

 

 

பிரீமியர் லீக் எப்போதும்போல் இப்போதே ஆச்சர்யங்களை அடுக்கத் தொடங்கிவிட்டது. அட்டகாசமான 2017/18 சீசனுக்குப் பிறகு அதே உத்வேகத்தில் களமிறங்கிய நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி, இரண்டு அசத்தல் வெற்றிகளுக்குப் பிறகு இந்த வாரம் ஓர் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த சீசன் ப்ரமோட் ஆன வோல்ஸ்பெர்க் அணியுடன் மோதிய சிட்டி, எதிரணியின் அரணை உடைக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ டி ப்ருய்னே காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது பின்னடைவாக அமைந்துவிட்டது. ஒருகட்டத்தில் 1-0 என பின்னிலையில் இருந்த அந்த அணி, டிஃபண்டர் ஆய்மரிக் லபோர்ட் போட்ட அசத்தல் ஹெட்டரால் டிரா செய்தது. 

மற்ற முன்னணி க்ளப்களான லிவர்பூல், செல்சீ தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தன. அந்த இரண்டு அணிகளும்கூட பலம் குறைந்த எதிரணிகளுக்கு எதிராக கொஞ்சம் தடுமாறவே செய்தன. லிவர்பூல் அணி முகம்மது சலா அடித்த ஒற்றை கோலின் உதவியால் ப்ரிட்டன் அண்ட் ஹோவால்பியான் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. கடந்த சீசன் வரை மிக மோசமான டிஃபன்ஸ் கொண்டிருந்த லிவர்பூல் இந்த சீசனில் இதுவரை ஒரு கோல்கூட விடவில்லை! செல்சீ 2-1 என்ற கோல் கணக்கில் நியூ கேசில் யுனைடட் அணியைப் போராடி வென்றது. 

வாட்ஃபோர்ட்

பிரீமியர் லீகின் இன்னொரு ஆச்சர்யம் வாட்ஃபோர்ட்! கடந்த சீசனில் 14-ம் இடம் பிடித்திருந்த வாட்ஃபோர்ட் அணி, இந்த முறை 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று மிகச் சிறப்பாக இந்த சீசனைத் தொடங்கியுள்ளது. கிறிஸ்டல் பேல்ஸ் அணியுடனான போட்டியில் 2-1 என வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் அமர்ந்துள்ளது. மற்றொரு முன்னணி அணியான அர்செனல் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. புதிய பயிற்சியாளர் யுனாய் எமரி தலைமையில் ஆரம்பத்தில் சொதப்பியவர்கள், அவர்களைவிட மோசமாக விளையாடிய வெஸ்ட் ஹாம் யுனைடட் அணியை 3-1 என வீழ்த்தினர். இந்த வாரத்தின் மிகப்பெரிய போட்டியான மான்செஸ்டர் யுனைடட் vs டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஆட்டம் செவ்வாய் அதிகாலை நடக்கவுள்ளது.

லா லிகா (ஸ்பெய்ன்)

கிறிஸ்டியானா ரொனால்டோ வெளியேறியிருந்தாலும், ரியல் மாட்ரிட் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலில் மறைந்து கிடந்த கேரத் பேல், இப்போது வேற லெவல் ஆட்டம் காட்டுகிறார். அதேபோல் அவர்களின் இள ரத்தங்கள் அஸேன்சியோ, இஸ்கோ இருவரும் மிகச் சிறப்பாக 'Post - Ronaldo' சீசனுக்கு பங்களிக்கின்றனர். பென்சிமா 2 கோல்களும், ரமோஸ், பேல் இருவரும் தலா 1 கோல் அடிக்க மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது. 

கேரத் பேல்

ரியல் வலோலாய்ட் அணியுடன் மோதிய நடப்பு லா லிகா சாம்பியன் பார்சிலோனா 1-0 என போராடி வென்றது. மெஸ்ஸி, சுவார்ஸ், டெம்பளே, ரகிடிச், கொடினியோ என முழு பலத்துடன் களமிறங்கியபோதும் எதிரணியின் டிஃபன்ஸை அவர்களால் உடைக்க முடியவில்லை. 57-வது நிமிடத்தில் ஓஸ்மான் டெம்பளே அடித்த கோல் அந்த அணியி வெற்றி பெறச் செய்தது. மற்றொரு முன்னணி அணியான அத்லெடிகோ மாட்ரிட் 1-0 என ரியல் வலோசேனோ அணியை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட், பார்சிலோனா இரண்டு அணிகளும் 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் ரியல் மாட்ரிட் அணி முதலிடத்தில் இருக்கிறது. 

சீரி - ஏ (இத்தாலி)

யுவன்டஸ் அணிக்காக விசித்திரமான முறையில் அசிஸ்ட் செய்து கணக்கைத் தொடங்கியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. வலது விங்கில் இருந்த கோல் போஸ்ட் நோக்கி கிராஸ் வர, அதை கோலாக்க விரைந்தார் சி.ஆர்.7. லேஸியோ கோல்கீப்பரின் கையில் பட்டுவிட, அவரக்கு சரியாக சிக்காமல் காலின் பின்புறம் பட்டு பந்து எழும்பியது. அதை மாண்ட்சுகிச் கோலாக்கினார். யுவன்டஸ் அணிக்காக தன் இரண்டாவது போட்டியில் ஆடும் ரொனால்டோ, கோலுக்கு செய்த முதல் பங்களிப்பு இது. அதற்கு முன்பு மிரேலம் ஜேனிக் கோலடிக்க, 2-0 என வெற்றி பெற்றது யுவன்டஸ்.

ரொனால்டோ

நெபோலி அணியின் புதிய பயிற்சியாளராகப் பதவியேற்றுள்ள கார்லோ ஆன்சலோட்டி, தான் முன்பு பயிற்சியாளராக இருந்த ஏ.சி.மிலன் அணிக்கு எதிரான 'எமோஷனல்' ஆட்டத்தில் தன் அணியை வெற்றி பெறவைத்தார். இந்த ஆட்டத்தில் நெபோலி 3-2 என வெற்றி பெற்றது. நெபோலி அணியின் ஜீலின்ஸ்கி இரண்டு கோல்கள் அடித்தார். டொரினோ, இன்டர் மிலன் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என டிரா ஆனது. ஃபியோரன்டினா அணி சீவோவை 6-1 எனப் போட்டுத் தள்ளியது. அந்த அணியின் ஆறு வீரர்கள் தலா 1 கோல் அடித்தனர்.

புண்டஸ்லிகா (ஜெர்மனி)

ஜெர்மனியின் புண்டஸ்லிகா தொடர் சனிக்கிழமை ஆரவாரத்தோடு தொடங்கியது. நடப்பு சாம்பியன் பேயர்ன் மூனிச்,  ஹோஃபன்ஹேம் அணியை 3-1 என வீழ்த்தி,புதிய பயிற்சியாளர் நிகோ கோவக் தலைமையிலான சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது. உலகக் கோப்பையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை மறந்து, ஜெர்மனியின் முன்னணி வீரர்கள் புத்துணர்ச்சியோடு சீசனைத் தொடங்கினார்கள். அந்த அணியின் முதல் கோலை தாமஸ் முல்லர் அடித்தார். ராபர்ட் லெவண்டோஸ்கி, அயன் ராபன் ஆகியோரும் தங்கள் கோல் கணக்கைத் தொடங்கினர். 

ரியூஸ்

பேயர்ன் மூனிச் அணியைவிட ஒரு கோல் அதிகமாக அடித்ததால், கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடம் பிடித்தது பொருஷியா டார்ட்மண்ட். ஆர்.பி.லீப்சிக் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 4-1 என வெற்றி பெற்றது. ஜீன் கெவின் அகஸ்டின் முதல் நிமிடத்திலேயே கோலடித்து டார்ட்மண்ட் அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், அதன்பிறகு சுதாரித்து ஆடிய 'பி.வி.பி' அணியினர் முதல் பாதியிலேயே 3 கோல்கள் திருப்பினர். இரண்டாவது பாதியில் ஆட்டம் விருவிருப்பாக இருந்தாலும் லீப்சிக் அணியால் பதில் கோல் போட முடியவில்லை. ஆட்டம் முடியும் நேரத்தில் டார்ட்மண்ட் கேப்டன் ரியூஸ் கோலடித்து அணியின் கணக்கைக் கூட்டினார். 

லீக் - 1 (ஃபிரான்ஸ்)

பி.எஸ்.ஜி அணியின் ஆதிக்கம் லீக் - 1 தொடரில் கொஞ்சமும் குறையவில்லை. தாமஸ் டக்கல் தலைமையில் அந்த அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கவானி, நெய்மர், எம்பாப்பே அடங்கிய முன்களத்தை எந்த அணியாலும் சமாளிக்க முடியவில்லை. சனிக்கிழமை ஏங்கர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலும் இவர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. மூன்று பேருமே ஆளுக்கொரு கோல் அடித்து பி.எஸ்.ஜி அணியை வெற்றிபெறவைத்தனர். உலகக் கோப்பை நாயகன் கிலியன் எம்பாப்பே இதுவரை 3 கோல்கள் அடித்துள்ளார். 

நெய்மர், எம்பாப்பே, கவானி

கடந்த சீசனில் 11-வது இடம் பெற்றிருந்த டிஜோன் அணி இந்த முறை பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. நைஸ் அணியை 4-0 எனத் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஜூலியஸ் கீட்டா இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 2016/17 சீசனின் சாம்பியன் மொனாகோ, பார்டியாக்ஸ் அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. 

https://www.vikatan.com/news/sports/135238-updates-of-europes-top-five-football-leagues.html

Link to comment
Share on other sites

பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் வென்றன
 

image_7c113a78c0.jpg

ஸ்பானிய லா லிகா தொடரில், பார்சிலோனா, அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வென்றன.

றியல் வல்லடோலிட் அணியின் மைதானத்தில் இன்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றிருந்தது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை உஸ்மான் டெம்பிலி பெற்றிருந்தார்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றிருந்தது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனி கிறீஸ்மன் பெற்றிருந்தார்.

 
 
பிறைட்டனை வென்றது லிவர்பூல்
 

image_ae505ff565.jpg

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியுடனான போட்டியில் லிவர்பூல் வென்றிருந்தது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் 23ஆவது நிமிடத்தில், சாடியோ மனேயிடமிருந்து பெற்ற பந்தை மொஹமட் சாலா கோலாக்கியதோடு இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் அணியை லிவர்பூல் வென்றிருந்தது.

மொஹமட் சாலா பெற்ற கோல் தவிர, சாடியோ மனேயின் உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியில் சென்றிருந்ததுடன், றொபேர்ட்டோ பெர்மினோவின் உதையை பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் கோல் காப்பாளர் மற் றயன் தடுத்திருந்ததுடன், ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் பிறீ கிக் கோல் கம்பத்தில் முட்டியமை உள்ளிட்ட கோல் பெறும் வாய்ப்புகளை லிவர்பூல் கொண்டிருந்தது.

இதேவேளை, வோல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான மன்சஸ்டர் சிற்றி சமநிலையில் முடித்துக் கொண்டிருந்தது. மன்சஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை அய்மரிக் லபோர்ட்டே பெற்றிருந்ததுடன், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரரேர்ஸ் அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை விலி போலி பெற்றிருந்தார். விலி போலி பெற்ற கோலானது, ஜோவா மோட்டின்யோவின் பிறீ கிக் அவரது கையில் பட்டே கோலாகியிருந்தபோதும் அதை மத்தியஸ்தர் கண்டியிருக்கவில்லை.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக, நாச்சோ மொன்றியல், டனி வெல்பக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. வெஸ்ட் ஹாம் யுனைட்டட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ அர்னோவிச் பெற்றிருந்தார்.

குறித்த போட்டிக்கான குழாமில் மெசுட் ஏஸில் இடம்பெற்றிருக்காத நிலையில், விளையாடும் ஆரம்ப 11 பேர் அணியில் இல்லாததைக் கண்ணுற்ற அவர் மாற்று வீரராக இடம்பெற்றமையைத் தொடர்ந்து முகாமையாளர் உனய் எம்ரேயுடன் முரண்பட்ட பின்னரே குழாமில் இடம்பெறவில்லை என்பதை மறுத்துள்ள எம்ரே, அவருக்கு உபாதையெனக் கூறியுள்ளார்.

 
 
ஜுவன்டஸ், நாப்போலி வென்றன
 

image_47db7bcee9.jpg

இத்தாலிய சீரி ஏ தொடரில் இடம்பெற்ற போட்டிகளில் ஜுவன்டஸும் நாப்போலியும் வென்றுள்ளன.

தமது மைதானத்தில், நேற்று இடம்பெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவன்டஸ் வென்றிருந்தது. ஜுவன்டஸ் சார்பாக, மிரலம் பிஜானிக், மரியோ மண்டூஸிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றிருந்தது. நாப்போலி சார்பாக, பியோத்தர் ஜினீஸ்கி இரண்டு கோல்களையும் ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் ஒரு கோலையும் பெற்றனர். ஏ.சி மிலன் சார்பாக, ஜாகோமோ பொனவெந்துரா, டாவிடே கலாப்ரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

கால்பந்து போட்டியின் பாதிநேரம் அமைதிக்காத்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்

genoa-fans-696x391.jpg Image courtesy - BBC
 

இத்தாலியில் நடைபெற்று வரும் சீரி ஏ கால்பந்தாட்ட தொடரில் ஜியனோ மற்றும் எம்பொலி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியை பார்வையிட்ட பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் 43 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து போட்டிகளை பொருத்தவரையில், ஒவ்வொரு நிமிடமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய விளையாட்டு என்பது அனைவரும் அறிந்த விடயம். அதுவும் இத்தாலியில் நடைபெறும் சீரி கால்பந்தாட்ட தொடரானது, இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் மற்றும் ஸ்பெயினில் நடைபெறும் லா லீகா போன்ற மிகப்பெரிய தொடர்களுடன் சம பலம் பொருந்திய தொடராகும்.

இப்படியான ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய தொடரொன்றில் ரசிகர்கள் அமைதியாக இருப்பதென்பது, அதுவும் போட்டியின் கிட்டத்தட்ட பாதி நேரம் (43 நிமிடங்கள்) அமைதியாக இருப்பதென்பது நினைத்தும் கூட பார்க்கமுடியாத வழக்கத்துக்கு மாறான செயல்தான்.

இதற்கான காரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (21) இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பிராதான வழிகளை இணைக்கும் மொராண்டி பாலத்தின் அதிகமான பகுதி, அந்நாட்டில் பெய்துவந்த கடும் மழையின் காரணமாக உடைந்து விழுந்தது. இந்த அனர்த்தத்தில் பாலத்தில் சென்ற வாகனங்கள் குடைசாய்ந்ததுடன், 43 பேர் உயரிழந்திருந்தனர். அதுமாத்திரமின்றி பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

 

 

இந்த நிலையில் உயிரிழந்த 43 பேரையும் நினைவு கூறும் வகையில் ஒருவருக்கு ஒரு நிமிடம் என்ற அடிப்படையில், ரசிகர்கள் 43 நிமிட மௌன அஞ்சலியை செலுத்தியுள்ளனர். ஜியனோவில் நடைபெற்ற இந்த போட்டியில், சொந்த அணி கோலடித்த போதிலும் ரசிகர்கள் எந்த ஆரவாரத்தையும் வெளிக்காட்டவில்லை என்பது சிறப்பம்சமாகும்.

போட்டியின் 6ஆவது மற்றும் 18ஆவது நிமிடங்களில் சொந்த அணியான ஜியனோ, இரண்டு கோல்களை அடித்தது. எனினும் ரசிகர்கள் எவரும் இதற்கான மகிழச்சியை வெளிப்படுத்தவில்லை. போட்டியின் 43 நிமிடங்கள் நிறைவடைந்த பின்னரே ரசிகர்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். குறித்த நேரத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மைதானத்திலிருந்த திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ஜியனோ அணி, எம்பொலி அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, இந்த பருவகாலத்தின் முதலாவது வெற்றியை சுவைத்தது.

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இரண்டாம் வார வெற்றியையும் பதிவு செய்த பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகள்

2018-08-27-696x464.jpg
 

லா லிகா கால்பந்து சுற்றுப் போட்டிகளின் இரண்டாம் வார நிறைவில் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் தொடராக பெற்ற வெற்றிகளின் மூலம் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. எதிரணியினரின் அரங்கில் நடைபெற்ற இவ்வார போட்டியில் இரு அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ரியல் வெலாடோலிட் எதிர் பார்சிலோனா

ரியல் வெலாடோலிட் அணியின் அரங்கமான ஸ்டாடியோ ஜோஸே ஸோரில்லா அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

 

போட்டியை ஆரம்பித்த பார்சிலோனா அணி முதல் 5 ஆம் நிமிடத்திலே எதிரணிக்கு சவால் விடுத்தது. இதன்போது ஓஸ்மானே டேம்பளே கோலை நோக்கி உதைந்த பந்து கோல் கம்பங்களிற்கு மேலால் சென்றது.

அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கெதிராக ரியல் வெலாடோலிட் அணி பல முயற்சிகளை எடுத்த போதும் பார்சிலோனா அணியின் கோல் காப்பாளரான டெர் ஸ்டேர்ஐன் அவற்றை சிறப்பாக தடுத்தாடினார்.

தொடர்ந்து போட்டியை ஆக்கிரமித்த பார்சிலோனா அணிக்கு 42 ஆம் நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக் வாய்ப்பின் போது லியொனல் மெஸ்ஸி உதைந்த பந்து கோலுக்கு அருகாமையால் சென்றது. இதனால், இரு அணிகளும் எந்த வித கோல்களும் பெறாத நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி: ரியல் வெலாடோலிட் 0 – 0 பார்சிலோனா

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 12 நிமிடங்களின் பின்னர் பார்சிலோனா அணியின் முன்களத்தில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினால் அவ்வணிக்கு ஒஸ்மானே டேம்பளே மூலம் முதல் கோல் பெறப்பட்டது.

 

 

போட்டியை சமப்படுத்த முயன்ற ரியல் வெலாடோலிட் அணியினர் சிறந்த பந்து பரிமாற்றங்களை எதிரணியின் எல்லையில் நிகழ்த்திய போதும் அவை சிறப்பாக பார்சிலோனா அணியினரால் தடுத்தாடப்பட்டன. போட்டியின் 76 ஆம் நிமிடத்தில் ரியல் வெலாடோலிட் அணியினருக்கு கோலிற்கான சிறந்த வாய்ப்பு ஓன்று கிட்டிய போதும் கோல் நிலையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை.

இறுதியாக பார்சிலோனா அணியினர் பெற்ற ஒரு கோலின் மூலம் ரியல் வெலாடோலிட் அணி போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

முழு நேரம் ரியல் வெலாடோலிட் 0 –  1பார்சிலோனா

ஜிரோனா எதிர் ரியல் மட்ரிட்

கடந்த பருவகால இறுதியில் ஜிரோனா அணியின் அரங்கில் இரு அணிகளும் சந்தித்த இறுதிப் போட்டியில் ரியல் மட்ரிட் அணி தோல்வியுற்ற நிலையில் இப்பருவகாலத்திற்கான லா லிகா சுற்றுப் போட்டியின் ஆரம்பத்திலே மீண்டும் இவர்கள் பலப்பரீட்சை நடாத்தினர்.

ரியல் மட்ரிட் அணியின் மத்திய களத்தில் நிலவிய முறையற்ற பந்து பரிமாற்றத்தின் பின்னர் ஜிரோனா அணியின் முன்கள வீரரான பொர்ஹா கார்ஸியா மூலம் அவ்வணிக்கான முதல் கோல் போட்டியின் 16 ஆம் நிமிடத்தில் பெறப்பட்டது.

ரியல் மட்ரிட் அணியினர் சற்று போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் எதிரணி வீரர்கள் விடும் தவறை பயன்படுத்தி ஜிரோனா அணியினர் ரியல் மட்ரிட் அணிக்கு சவால் விடுக்கும் வண்ணம் விளையாட ஆரம்பித்தனர். எனினும், அவற்றை ரியல் மட்ரிட் அணியின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் சிறப்பாக தடுத்தாடினார்.

 

ஆட்டத்தின் 39ஆம் நிமிடத்தில் ரியல் மட்ரிட் அணியினருக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பின் போது அணித் தலைவர் ஸர்ஜியோ ராமோஸ் மூலம் ஒரு கோல் பெறப்பட்டது. அத்துடன் போட்டி சமனுற்ற நிலையில் முதல் பாதி நிறைவுற்றது.

முதல் பாதி ஜிரோனா 1 – 1 ரியல் மட்ரிட்

இரண்டாம் பாதி ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களுக்குள் கிடைக்கப் பெற்ற பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்தி ரியல் மட்ரிட் அணியின் முன்கள வீரரான கரீம் பென்ஸிமா அவ்வணியை போட்டியில் முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து இஸ்கோ மற்றும் க்ரேத் பேலுக்கு இடையில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தினால் போட்டியின் 59 ஆம் நிமிடத்தில் க்ரேத் பேல் மூலம் மூன்றாவது கோலும் மட்ரிட் அணிக்கு பெறப்பட்டது.

தொடராக இரண்டு கோல்கள் பெறப்பட்ட நிலையிலும் சளைக்காது பல முயற்சிகளை எதிரணியின் எல்லையில் இருந்து ஜிரோனா அணி வீரர்கள் மேற்கொண்டனர். எனினும், கெய்லர் நவாஸின் வேகமான பந்துத் தடுப்பாட்டத்தை தாண்டி எந்த வித கோலையும் அவ்வணி வீரர்களால் பெற முடியவில்லை.

நிறைவில் கரீம் பென்ஸமா மூலம் பெறப்பட்ட நான்காவது கோலின் காரணமாக ஜிரோனா அணி ரியல் மட்ரிட் அணியிடம் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

முழு நேரம் ஜிரோனா 1 – 4 ரியல் மட்ரிட்

மேலும் சில போட்டி முடிவுகள்

கெடாவெய் 2 – 2 ஏய்பர்   

லெகனேஸ் 2 – 2 ரியல் ஸொஸிடட்

அலவெஸ் 0 – 0 ரியல் பெடிஸ்

அட். மட்ரிட் 1 – 0 ராயோ வெலக்கேனோ

ஸ்பான்யோல் 2 – 0 வெலன்ஸியா

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ரொனால்டோவின் ‘பைசிகல் கிக்’ ஐரோப்பாவின் சிறந்த கோலாக தெரிவு

Ronaldo-6-696x391.jpg
 

போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது தற்போதைய கழகமான ஜுவண்டஸுக்கு எதிராக ரியல் மெட்ரிட் சார்பில் அதிர்ச்சியூட்டும் வகையில் தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகல் கிக்’ ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) பருவத்தின் சிறந்த கோலாக வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

 

டியூரினில் நடைபெற்ற கடந்த பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் முதல் கட்ட காலிறுதிப் போட்டியிலேயே ரொனால்டோ அந்த அபார கோலை போட்டார். இதன்மூலம் பருவத்தின் சிறந்த கோலுக்கான போட்டியில் 11 பரிந்துரைகளில் இருந்து முன்னாள் ரியல் மெட்ரிட் வீரர் ரொனால்டோவின் கோல் தேர்வாகியுள்ளது.  

‘எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். அந்த தருணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், குறிப்பாக அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் கொண்டாட்டத்தை மறக்க மாட்டேன்’ என்று 33 வயதான ரொனால்டோ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  

சிறந்த கோலுக்காக மொத்தம் 346,915 வாக்குகள் பதிவாகி இருப்பதோடு இதில் ரொனால்டோ மாத்திரம் கிட்டத்தட்ட 200,000 வாக்குகளை வென்றுள்ளார்.  

அந்த சம்பியன்ஸ் லீக் போட்டியில், ரொனால்டோவின் கோலால் இத்தாலி சம்பியன் அணியான ஜுவண்டஸுக்கு எதிராக, ரியல் மெட்ரிட் ஏற்கனவே முன்னிலை பெற்றிருந்தபோதே 64 ஆவது நிமிடத்தில் டானி கர்வஜால் பரிமாற்றிய பந்தைக் கொண்டு ரொனால்டோ அந்த கோலை புகுத்தினார்.

 

இதனை தனது கால்பந்து வாழ்வில் சிறந்த கோல் என்று ரொனால்டோ குறிப்பிட்டிருந்தார். ரொனால்டோவின் கோல்கள் மூலம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் ரியல் மெட்ரிட் வெற்றி பெற்றது. கடந்த பருவத்தின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கில் ஸ்பெயினின் ரியெல் மெட்ரிட் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் சம்பியனானது.

அந்த அபார கோலுக்கு எதிர்வினையாற்றிய ரசிகர்கள் குறித்து ரொனால்டோ குறிப்பிடும்போது, ”ஜுவண்டஸ் ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்” என்றார். இது 100 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கடந்த மாதம் ஜுவண்டஸுக்குச் செல்ல முக்கிய காரணமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

ஐந்து முறை பல்லோன் டி ஓர் விருதை வென்றிருக்கும் ரொனால்டோ சம்பியன்ஸ் லீக்கில் 120 கோல்களை பெற்று அதிக கோல்களை பெற்றவராகவும் சாதனை படைத்துள்ளார்.  

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

லா லிகா- பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வெற்றி

 
அ-அ+

லா லிகாவில் பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் 4-1 என சிடி லெகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. #LaLiga #Benzema

 
 
 
 
லா லிகா- பென்சிமா, காரேத் பேலே ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வெற்றி
 
லா லிகா கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட். சிடி லெகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 4-1 என ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் காரேத் பேலே முதல் கோலை பதிவு செய்தார். 24-வது நிமிடத்தில் லெகன்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதைப் பயன்படுத்தி லெகன்ஸ் அணியின் கர்லில்லோ கோல் அடித்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

201809021917582860_1_romos-s._L_styvpf.jpg

2-வது பாதி நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென்சிமா 48 மற்றும் 61-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். 66-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி செர்ஜியோ ரமோஸ் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 4-1 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் ரியல் மாட்ரிட் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளிலும் 10 கோல்கள் அடித்துள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/02191758/1188434/La-Liga-Bezema-gareth-bale-goals-Real-Madrid-Won.vpf

 

 

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்- செல்சி, மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி

 
அ-அ+

இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் இன்றைய வார ஆட்டங்களில் செல்சி மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன. #EPL2018 #Chelsea #MachesterCity

 
 
 
 
இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்- செல்சி, மான்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி
செல்சி வீரர் ஈடன் ஹசார்டு
இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் நேற்று பல ஆட்டங்கள் நடைபெற்றன. ஒன்றில் செல்சி - பவுர்ன்மவுத் அணிகள் மோதின. இதில் செல்சி அணி 2-0 என வெற்றி பெற்றது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதி நேரத்தில் செல்சி அணி அசத்தியது. அந்த அணியின் பெட்ரோ 72-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் ஈடன் ஹசார்டு 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் செல்சி 2-0 என வெற்றி பெற்றது.

201809021852575430_1_sterling-s._L_styvpf.jpg
மான்செஸ்டர் சிட்டி வீரர்  ஸ்டெர்லிங் பந்தை கடத்தும் காட்சி

மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - நியூகேஸ்டில் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் முதல் கோலை பதிவு செய்தார். 30-வது நிமிடத்தில் நியூகேஸ்டில் அணியின் எட்லின் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.

2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்யூரோ ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என வெற்றி பெற்றது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/09/02185257/1188430/English-Premier-League-chelsea-manchester-city-won.vpf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி

Untitled-1-185-696x464.jpg
 

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது வாரத்திற்கான போட்டிகள் சனிக்கிழமை (15) நடைபெற்றன. ஒருவார இடைவெளிக்கு பின்னர் ஆரம்பமான பிரீமியர் லீக் போட்டிகளில் லிவர்பூல் மற்றும் செல்சி அணிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து கொண்டதோடு, மன்செஸ்டர் யுனைடெட், மன்செஸ்டர் சிட்டி மற்றும் நியூகாஸில் அணிகளும் வெற்றியீட்டிக் கொண்டன.

  • லிவர்பூல் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர்

போட்டியின் கடைசி நிமிடங்கள் வரை முன்னிலை பெற்று 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் டொட்டன்ஹாம் அணியை வீழ்த்திய லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக் போட்டியில் இதுவரை 100 வீத வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

லவர்பூல் அணி 1990க்கு பின்னரே முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்துகொண்டுள்ளது.

கடந்த பருவத்தில் டொட்டன்ஹாமிடம் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் லண்டன், வொம்ப்லே அரங்கில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் முதல் லிவர்பூல் அணி வேகம் காட்ட ஆரம்பித்தது.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் ஜியோர்ஜினியோ விஜ்லண்டும் பிரிமீயர் லீக்கில் வெளி மைதானத்தில் தனது முதல் கோலை புகுத்த லிவர்பூல் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதி ஆரம்பித்த விரைவிலேயே 54 ஆவது நிமிடத்தில் ரொபர்டோ பிர்மிலோ, லிவர்பூலுக்காக 2ஆவது கோலையும் புகுத்தினார்.  

போட்டி முடியும் நேரத்தில் எரிக் லமேலா கீழ் இடது மூலையில் கடினமான இடத்தில் இருந்து தனது இடது காலால் உதைத்து பந்தை வலைக்குள் செலுத்தினார். இதன்மூலம் டொட்டன்ஹாம் கோல் ஒன்றை பெற்றபோதும் லிவர்பூலின் வெற்றியை தவிர்க்க முடியவில்லை.        

இதன்படி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்திருக்கும் டொட்டன்ஹாம் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளது.   

  • செல்சி எதிர் காடிப் சிட்டி

பெல்ஜியத்தின் நட்சத்திர வீரரான ஈடன் ஹசார்டின் ஹட்ரிக் கோல் மூலம் காடிப் சிட்டிக்கு எதிரான போட்டியின் 4-1 என வெற்றியீட்டிய செல்சி பிரீமியர் லீக் பருவத்தில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று கோல் வித்தியாசத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.

ஸ்டான்போர்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சோல் பம்பா உயரப் பாய்ந்து பந்தை வலைக்குள் தட்டிவிட காடிப் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. எனினும் ஹாசார்ட் முதல் பாதியில் இரு பதில் கோல்கள் திருப்ப செல்சி ஆதிக்கம் செலுத்தியது.

காடிப் சிட்டியின் இரு பின்கள வீரர்களை முறியடித்து 37ஆவது நிமிடத்தில் தாழ்வாக உதைத்து முதல் கோலை பெற்ற ஹசார்ட் தொடர்ந்து 44ஆவது நிமிடத்தில் நெருங்கிய தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.

வில்லியனை பெனால்டி எல்லைக்குள் பம்பா கீழே வீழ்த்த 81 ஆவது நிமிடத்தில் ஹசார்ட் நிதானமான பெனால்டி உதை மூலம் ஹட்ரிக் கோலை பெற்றார். தொடர்ந்து வில்லியன் 83 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் செல்சி அணி பிரீமியர் லீக்கில் கோல் வித்தியாசத்தில் முதலிடத்திற்கு முன்னேற உதவியது.  

இதனால் லிவர்பூல் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இரு அணிகளும் தலா 15 புள்ளிகளை பெற்றுள்ளன.

  • மன்செஸ்டர் சிட்டி எதிர் புல்ஹாம்

நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் புல்ஹாமுக்கு எதிராக உறுதியான வெற்றி ஒன்றை பெற்று இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

எடிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் சிட்டி அணிக்கு திரும்பிய ஜெர்மனியின் லெரோய் சேன் இரண்டு நிமிடங்களுக்குள்ளே நெருங்கிய இடைவெளியில் பந்தை வலைக்குள் செலுத்தினார்.  

இதனால் ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்ட புல்ஹாம் 21 ஆவது நிமிடத்தில் எதிரணிக்கு மற்றொரு கோலை விட்டுக் கொடுத்தது. டேவிட் சில்வா வேகமாக உதைத்து சிட்டி அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.

ரஹிம் ஸ்டார்லிங் 47ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று மன்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.

  • நியூகாஸில் யுனைடெட் எதிர் ஆர்சனல்

மத்தியகள வீரர் கிரனிட் ஷன்காவின் அபார பிரீ கிக் மற்றும் மெசுட் ஒசிலின் கோலின் மூலம் ஆர்சனல் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் நியூகாசிலை வீழ்த்தியது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பெனால்டி எல்லையின் விளிம்பில் நியூகாஸிலின் பெட்ரிகோ பெர்னாண்டஸ் எதிரணி வீரர் பீர்ரே எம்ரிக் அபமயங்கை கீழே வீழ்த்தினார். இதனால் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை கொண்டு ஷங்கா மேல் வலது மூலையில் இருந்து உதைத்து அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்றார்.     

49ஆவது நிமிடத்தில் முதல் கோல் பெறப்பட்டு ஒன்பது நிமிடங்களின் பின் ஒசில் ஆர்சனல் அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

மேலதிக வீரராக வந்த நியூகாஸிலின் சியரான் கிளார்க் பெர்னாண்டஸ் பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றியபோதும் அந்த அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. நியூகாஸில் இம்முறை பருவத்தில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் சந்திக்கும் நான்பாவது தோல்வி இதுவாகும்.   

  • மன்செஸ்டர் யுனைடெட் எதிர் வட்போர்ட்

இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து பெற்ற கோல்கள் மூலம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மன்செஸ்டர் யுனைடெட், வட்போர்ட்டின் தொடர் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

இதில் இரண்டாவது தவறிழைத்த யுனைடெட் அணியின் நெமன்ஜா மடிக் மேலதிக நேரத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் 35ஆவது நிமிடத்தில் ஆஷ்லி யங் உதைத்த பந்தை எதிரணி கோல் கம்பத்திற்கு மிக நெருங்கிய தூரத்தில் நெஞ்சால் கட்டுப்படுத்தி கோலாக மாற்றினார் ரமாலு லுகாகு. தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கிறிஸ் ஸ்மல்லிங் யுனைடெட் அணிக்கு மற்றொரு கோலை பெற்று அந்த அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற உதவினார்.   

வட்போர்ட் அணிக்காக 65ஆவது நிமிடத்தில் அன்ட்ரே கிரே கோல் ஒன்றை பெற்றபோதும் அந்த அணி இம்முறை பிரீமியர் லீக்கில் முதல் தோல்வியை சந்தித்தது.

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

லா லிகா: வென்றது பார்சிலோனா
 

image_47de459c81.jpg

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், றியல் சொஸைடட் அணியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ், உஸ்மான் டெம்பிலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, றியல் சொஸைடட் சார்பாகப் பெறப்பட்ட கோலை அரிட்ஸ் எலுஸ்டான்டோ பெற்றார்.

இதேவேளை, அத்லெட்டிக் பில்பாவோ அணியின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணிக்கும் றியல் மட்ரிட் அணிக்குமிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/லா-லிகா-வென்றது-பார்சிலோனா/44-221896

இன்டர் தோற்றது; நாப்போலி வென்றது
 
 

image_532b8994dc.jpg

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இன்டர் மிலன் தோற்றிருந்த நிலையில், நாப்போலி வென்றது.

தமது மைதானத்தில் இடம்பெற்ற பர்மா அணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் தோற்றிருந்தது. இப்போட்டியில் பர்மா அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை, இன்டர் மிலன் அணியால் கடனாக வழங்கப்பட்டிருந்த பெடெரிக்கோ டிமார்கோ பெற்றார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இடம்பெற்ற பியொன்ரென்டினா அணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ இன்சீனியா பெற்றார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இன்டர்-தோற்றது-நாப்போலி-வென்றது/44-221895

 
 
புண்டெலிஸ்கா: வென்றது பெயார்ண் மியூனிச்
 

image_f6f7401bc6.jpg

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற பெயார் லெவர்குஸன் அணிக்கெதிரான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பெயார்ண் மியூனிச் வென்றது.

பெயார்ண் மியூனிச் சார்பாக, கொரென்டின் டொலிஸோ, ஆர்ஜன் ரொபின், ஜேம்ஸ் றொட்றிகாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, பெயார் லெவர்குஸன் சார்பாகப் பெறப்பட்ட கோலை வென்டெல் பெற்றிருந்தார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/புண்டெலிஸ்கா-வென்றது-பெயார்ண்-மியூனிச்/44-221894

Link to comment
Share on other sites

லிவர்பூல் அணிக்கு அடுத்தடுத்து 6ஆவது வெற்றி

 

 

EPL-696x460.jpg
 

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் முக்கிய நான்கு போட்டிகள் சனிக்கிழமை (22) நடைபெற்றன. இதில் லிவர்பூல் அணி இந்த பருவத்தில் தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பெற்று புதிய சாதனை படைத்தது. தவிர, மன்செஸ்டர் சிட்டி, டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணிகள் வெற்றியீட்டியதோடு மன்செஸ்டர் யுனைடெட் மற்றும் வொல்வ்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை பெற்றது.

 

 

லிவர்பூல் எதிர் சௌதம்ப்டன்

முஹமட் சலாஹ் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் பெற்ற முதல் பிரீமியர் லீக் கோலின் உதவியோடு சௌதம்ப்டன் அணிக்கு எதிரான போட்டியை லிவர்பூல் அணி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக்கில் இதுவரை அடிய ஆறு போட்டிகளிலும் வென்று முதல் இடத்தை பெற்றுள்ளது. அந்த அணி கடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாகவே தொடரின் முதல் ஆறு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் சௌதம்ப்டன் வீரர் வெஸ்லி ஹோட்த் பெற்ற ஓன் கோல் மூலமே லிவர்பூல் அணி முன்னிலை பெற்றது. ஷெர்டன் ஷகிரி உதைத்த பந்து ஷேன் லோங்கின் மீது பட்டு ஹோட்த்திடம் சென்றபோதே அது அவருக்கு துரதிருஷ்ட கோலாக மாறியது.

எனினும் 11 நிமிடங்கள் கழித்து அலெக்சாண்டர் ஆர்னோல் அடித்த கோனர் கிக்கை உயரப்பாய்ந்து தலையால் முட்டி கோலாக மாற்றினார் ஜோவேல் மடிப். இதன்மூலம் 2-0 என முன்னிலை பெற்ற லிவர்பூல் அணி முதல் பாதி முடிவதற்குள்ளேயே வெற்றியை உறுதி செய்யும் வகையில் மற்றொரு கோலை போட்டது.  

கடந்த இரண்டு லீக் போட்டிகளிலும் கோல் பெறத் தவறிய லவர்பூலின் எகிப்து முன்கள வீரர் முஹமட் சலாஹ் முதல் பாதியின் மேலதிக நேரத்தில் ஷகிரி உதைத்த பிரீ கிக் கம்பத்தில் பட்டு வெளியே வரும்போது வேகமாக ஓடிச் சென்று வலைக்குள் புகுத்தினார். இந்த பருவகாலத்தில் இது சலாஹ்வின் மூன்றாவது கோலாக இருந்தது.

மன்செஸ்டர் சிட்டி எதிர் காடிப் சிட்டி

ஆர்ஜன்டீனாவின் செர்கியோ அகுவேரா மன்செஸ்டர் சிட்டிக்காக தனது 300ஆவது போட்டியில் ஆரம்ப கோலை புகுத்தி அந்த அணி காடிப் சிட்டிக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார்.

 

 

காடிப் சிட்டி அரங்கில் நடைபெற்ற போட்டியில் நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிட்டி 32ஆவது நிமிடத்தில் கோல் பெற ஆரம்பித்து அடுத்த 12 நிமிடங்களுக்குள் மூன்று கோல்களை பெற்றதோடு இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோல்களை இலகுவாக நுழைத்தது.  

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் லியோன் அணியிடம் அதிர்ச்சி தோல்வி ஒன்றை சந்தித்த நிலையில் இந்த வெற்றி மன்செஸ்டர் சிட்டியின் மீள் வருகையாக இருந்தது.

இந்நிலையில் பெர்னார்டோ சில்வா பரிமாற்றிய பந்தை நெருக்கமான தூரத்தில் வைத்து வலைக்குள் உதைத்து மன்செஸ்டர் சிட்டிக்காக அகுவேரா தனது 205 ஆவது கோலை புகுத்தினார். மூன்று நிமிடங்கள் கழித்து சில்வா தலையால் முட்டி தானும் ஒரு கோலை போட்டார்.

இந்நிலையில் இல்காய் குண்டோகன் மன்செஸ்டர் சிட்டிக்காக 44 ஆவது நிமிடத்தில் மற்றொரு அபார கோலை போட்டார்.

நடப்புச் சம்பியனின் கோல் மழையால் திக்குமுக்காடிப் போன காடிப் சிட்டி இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தடுமாற்றம் கண்டது.

இந்த பருவகாலத்தில் 78.45 மில்லியன் டொலருக்கு லெய்சஸ்டர் அணியில் இருந்து ஒப்பந்தமான ரியாத் மஹ்ரஸ் மன்செஸ்டர் அணிக்காக இரண்டாவது பாதியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வலைக்குள் புகுத்தினார்.   

இதுவரை நடைபெற்ற ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்று ஒன்றை சமன் செய்த மன்செஸ்டர் சிட்டி புள்ளிப்பட்டியலில் லிவர்பூலை (18) விடவம் இரண்டு புள்ளிகள் குறைவாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் காடிப் சிட்டி அணி எந்த போட்டியிலும் வெற்றி பெறாமல் 19ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்செஸ்டர் யுனைடெட் எதிர் வொல்வர்ஹம்டன் வொண்டரர்ஸ்

வொல்வ்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என சமன் செய்த மன்செஸ்டர் யுனைடெட் அணி பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை விடவும் எட்டுப் புள்ளிகள் பின்தள்ளப்பட்டு ஏமாற்றம் அடைந்துள்ளது.

பிரீமியர் லீக் தொடரில் இதுவரை அணிகள் ஆறு போட்டிகளில் ஆடியிருக்கும் நிலையில் மன்செஸ்டர் யுனைடெட் அணி ஆறாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டு ஏற்கனவே முன்னிலை வகிக்கும் விலர்பூல் மற்றும் மன்செஸ்டர் சிட்டி அணிகளை நெருங்குவதில் தடுமாற்றம் கண்டுள்ளது.  

 

 

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் பிரெட் பெற்ற கோல் மூலம் மன்செஸ்டர் யுனைடெட் முதல் பாதியில் கோல் பெற்றபோதும் இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே வொல்வ்ஸ் பதில் கோல் திருப்பி  போட்டியை சமன் செய்தது. போர்த்துக்கல் வீரர் ஜோஸ் மாடின்ஹோ அந்த கோலை புகுத்தினார்.

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் பிரைட்டன் மற்றும் ஹோவ் அல்பியோன்

தொடர்ச்சியாக பெற்ற மூன்று தோல்விகளுக்கு முடிவுகட்டிய டொட்டன்ஹாம் அணி பிரைட்டனுடனான பிரீமியர் லீக் போட்டியில் 2-1 என வெற்றி பெற்றது.

கிழக்கு எசெக்ஸில் கடும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் டொட்டன்ஹாமின் பல கோல் முயற்சிகளும் ஆரம்பத்தில் விணாயின. எனினும் 42 ஆவது நிமிடத்தில் ஹரி கேனின் பெனால்டி உதை மூலம் டொட்டன்ஹாம் முதல் கோலை போட்டது. எதிரணி வீரர் கிளன் முர்ரேவின் கையில் பந்து பட்டதை அடுத்தே டொட்டன்ஹாமுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் மேலதிக வீரராக வந்த எரிக் லமேலா 12 யார்ட் தூரத்தில் இருந்து டானி ரோஸ் வழங்கிய பந்தை கோலாக மாற்றினார். போட்டி முடியும் நேரத்தில் அன்தோனியோ நொகார்ட் பிரைட்டன் அணிக்காக ஒரு கோலை பெற்றபோதும் அது அந்த அணியின் தோல்வியை தவிர்க்க போதுமாக இருக்கவில்லை.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

செல்சியின் தொடர் வெற்றிக்கு முடிவுகட்டிய வெஸ்ட் ஹாம்

Football-6-696x460.jpg
 

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றன. இதில் செல்சி அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்ததோடு, எவர்டனுடனான போட்டியில் ஆர்சனல் வெற்றியீட்டியது.

செல்சி எதிர் வெஸ்ட் ஹாம் யுனைடெட்

லண்டன் அரங்கில் நடைபெற்ற வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியுடனான போட்டி கோல்கள் எதுவும் இன்றி சமநிலை பெற்றதை அடுத்து இம்முறை பிரீமியர் லீக்கில் செல்சி அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்ததோடு முதல் முறை அவ்வணி வெற்றிக்கான புள்ளிகளை இழந்தது.

 

 

முதல் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற செல்சி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூலை பின்தள்ள இரண்டு கோல்கள் தேவைப்படும் நிலையிலேயே வெஸ்ட் ஹாம் கழகத்தை எதிர்கொண்டது.

எனினும், போட்டியில் ஆதிக்கம் செலுத்திய செல்சியின் கோல் ஒன்றை பெறும் வாய்ப்பு கடைசிவரை கைகூடவில்லை.

சொந்த மைதானத்தில் ஆடிய வெஸ்ட் ஹாம்மின் மைக்கல் அன்டோனியோ இரண்டு கோல் வாய்ப்புகளை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.  

எனினும் இடைவேளைக்கு முன் கோல் பெறும் பொன்னான வாய்ப்பு ஒன்றை செல்சி தவறவிட்டது. வில்லியன் சாதுரியமாக உதைத்த பந்தை நிகோலோ கான்டே தலையால் முட்டியபோது அது வெளியே பறந்தது.     

முதல் பாதி: செல்சி 0 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடெட்

போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து இழுபறி நீடித்தது. செல்சியின் பதில் வீரராக வந்த அல்வாரோ மொராடஸ் வலையை நோக்கி உதைத்த பந்து வெஸ்ட் ஹாம் கோல்காப்பளர் லூகாஸ் பபியன்ஸ்கியின் முகத்தில் பட்டு தடைப்பட்டது. தொடர்ந்து ரோஸ் பார்க்லே கோலை நோக்கி உதைத்த பந்தையும் பபியன்ஸ்கி தடுத்தார்.     

போட்டியின் 70 வீதத்திற்கு அதிகமான நேரம் செல்சி வீரர்களின் கால்களிலேயே பந்து சுழன்றபோதும் இரண்டாவது பாதியிலும் எந்த கோலும் விழவில்லை.

 

 

வெஸ்ட் ஹாம் இதுவரை ஆடிய ஆறு பிரீமியர் லீக் போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றி பெற்று 17 ஆவது இடத்தில் உள்ளது. எனினும் அந்த அணி கடந்த வாரம் எவர்டன் உடனான போட்டியில் வென்றது நல்ல முன்னேற்றத்தை காட்டியுள்ளது.

மறுபுறம் வரும் சனிக்கிழமை (29) லிவர்பூல் அணியை எதிர்கொள்ளவிருக்கும் செல்சி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.        

முழு நேரம்: செல்சி 0 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடெட்


ஆர்சனல் எதிர் எவர்டன்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் மூன்று நிமிட இடைவேளையில் பெற்ற இரண்டு கோல்கள் மூலம் எவர்டன் கழகத்தை வீழ்த்திய ஆர்சனல் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்க முன்னேற்றம் கண்டது.

1996 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் முதல் முறை ஆர்சனலை வீழ்த்தும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய எவர்டன் ஆரம்பத்தில் கோல் வாய்ப்புகளை உருவாக்க கடுமையாக போராடியது.  

எவர்டன் முன்கள வீரர்களான ரிசார்லிசன் மற்றும் டொமினிக் கல்வெர்ட் லுவிஸ் பல வேகமான உதைகளை விட்டபோதும் ஆர்சனல் கோல்காப்பாளர் பெடிர் செச்சை தாண்டி வலைக்குள் செலுத்துவது கடிமான இருந்தது.  

 

 

மறுபுறம் ஆர்சனல் அணி முதல் பாதியின் பெரும்பாலான நேரம் பந்தை தம் வசம் வைத்திருந்தபோதும் நெருங்கிய கோல் வாய்ப்பொன்றை பெற தடுமாற்றம் கண்டது.

முதல் பாதி: ஆர்சனல் 0 – 0 எவர்டன்

போட்டியின் 56 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் நாட்டின் முன்கள வீரர் அலெக்சான்ட்ரே லுகசெட் பெனால்டி எல்லைக்குள் இருந்து லாவகமாக உதைத்த பந்து வளைந்து சென்று கோலாக மாறியது. இதன்மூலம் போட்டியில் முன்னிலை பெற்ற ஆர்சனல் அடுத்த மூன்று நிமிடத்தில் இரண்டாவது கோலையும் போட்டது. அவுபமயாங் பெரிதாக நெருக்கடி இன்றி அந்த கோலை புகுத்தினார்.  

இந்த வெற்றியுடன் ஆர்சனல் அணி 12 புள்ளிகளுடன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி முதலிடத்தில் உள்ள லிவர்பூலை விடவும் 6 புள்ளிகள் குறைவாக உள்ளது.     

முழு நேரம்: ஆர்சனல் 2 – 0 எவர்டன்

http://www.thepapare.com

 
 
 
 
வென்றது ஜுவென்டஸ்
 

image_c014181a17.jpg

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், புரோஸினோனே கழகத்தின் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் ஜுவென்டஸ் வென்றது.

இப்போட்டியில் 72 சதவீதமான நேரம் ஜுவென்டஸே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் போட்டி முடிவடைய 9 நிமிடங்கள் இருக்கையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற கோலின் மூலமே முன்னிலை பெற்ற ஜுவென்டஸ் போட்டியின் இறுதி நிமிடங்களில் பெடெரிக்கோ பேர்னார்ட்டெஸ்கி பெற்ற கோலோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, டொரினோ அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி அணி வென்றது. நாப்போலி சார்பாக, லொரென்ஸோ இன்சீனியா இரண்டு கோல்களையும் சிமோனே வெர்டி ஒரு கோலையும் பெற்றதோடு, டொரினோ சார்பாகப் பெறப்பட்ட அன்ட்ரியா பெலோட்டி பெற்றிருந்தார்.

இந்நிலையில், பொலொக்னா அணியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் றோமா தோல்வியைத் தளுவியது. பொலொக்னா சார்பாக, பெடெரிக்கோ மட்டியெல்லோ, பெடெரிக்கோ சன்டன்டர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற ஜெனோவா அணியுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது. லேஸியோ சார்பாக, சிரோ இம்மொபைல் இரண்டு கோல்களையும் பிலிப்பி கைசெடோ, சேர்ஜெய் மிலின்கோவிக்-சவிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். ஜெனோவா சார்பாகப் பெறப்பட்ட கோலை கிர்ய்ஸ்டொவ் பியடெக் பெற்றார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அட்லாண்டா அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் சமநிலையில் முடித்துக் கொண்டது. ஏ.சி மிலன் சார்பாக, கொன்ஸலோ ஹியூகைன், ஜியகோமோ பொனவெந்துரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் அட்லாண்டா சார்பாக, அலெஜான்ட்ரோ கோமிஸ், எமிலியானோ றிகோனி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/வென்றது-ஜுவென்டஸ்/44-222525

 
 
சமநிலையில் பார்சிலோனா, ஜிரோனா போட்டி
 

image_a8529dae91.jpg

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை தமது மைதானத்தில் நடைபெற்ற ஜிரோனா அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா சமநிலையில் முடித்திருந்தது.

பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி, ஜெராட் பிகே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், ஜிரோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியன் ஸ்டுவனி பெற்றிருந்தார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/சமநிலையில்-பார்சிலோனா-ஜிரோனா-போட்டி/44-222524

 
 
 
புண்டெலிஸ்கா தொடர்: வென்றது பெயார்ண்
 

image_a62a9358e8.jpg

ஜேர்மனிய புண்டெலிஸ்கா தொடரில், எவ்,சி ஷால்கே 04 அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வனியுடனான போட்டியில் பெயார்ண் மியூனிச் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பெயார்ண் மியூனிச் சார்பாக, ஜேம்ஸ் றொட்றிகாஸ், றொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், 1899 ஹொபென்ஹெய்ம், பொரூசியா டொட்டமுண்ட் அணிகளுக்கிடையே 1899 ஹொபென்ஹெய்ம் அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/புண்டெலிஸ்கா-தொடர்-வென்றது-பெயார்ண்/44-222425

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.