Jump to content

பாடகர் செந்தூரன் அழகையாவின் உள்ளக்குமுறல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் செந்தூரன. அழகையாவின் ஆதங்கம் சரியானதே.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், தமிழகத்தின் திரையுலகம் புலம் பெயர் தமிழர்களின் பணத்தைக் குறிவைத்து நீண்ட வருடங்கள் ஆகி இருப்பது புரியும்.

தமிழகத் தொலைக்காட்சிகள், சினிமா... என்ற மாயைகளுக்குள் இருந்து மீள முடியாத நிலையிலேயே புலம் பெயர் தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். அதிலும்  கனடா, இலண்டன் தமிழர்கள் கொஞ்சம் தீவிரம். பொத்தம் பொதுவாக சொல்வதாயின் ஆங்கிலம் பேசும் நாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களே இந்த மாயைகளுக்குள் அதிகம் உழலுகிறார்கள்.

ஒருபக்கம் ஆன்மீகம், மறுபக்கம் சினிமா, தொலைக்காட்சிகள் என்று  புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து   தாயக விடுதலை, போரில் ஏற்பட்ட வலிகள், தாயகத்தின் தேவைகள் எல்லாம், இன்று அந்நியப்பட்டுப் போய் விட்டன.

‘கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும் ஆத்தாதவன் செயல்என்று  சொல்லி, எங்களது மூத்தவர்கள் அன்று எங்களை கலைகளின் பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் பலன் இப்பொழுது தெரிகிறது.

சிங்களப் பொலீஸார் தமிழர் பகுதிகளில் விடுமுறைக்கு வந்தவர்கள் போல் உல்லாசமாக உலாவந்து கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. (இப்பொழுது என்னவாம்? என்று கேட்டு விடாதீர்கள்அந்தக் காலகட்டத்தில் ஏதாவது செய்ய வேண்டும் போல அவர்களுக்கு உறுத்தினால் சைக்கிளில் டபுள் போகிறவர்களையும், இரவில் லைற் இல்லாமல் சைக்கிள் ஓட்டுபவர்களையும் பிடித்துக் கொள்வார்கள். அநேகமாக அப்படி மாட்டுப்படுபவர்கள் சினிமா இரண்டாம் காட்சி பார்த்து விட்டு வருபவர்களாகவே இருப்பார்கள்.

அப்படியான நிகழ்வுகளை வைத்து முன்பு சிரித்திரன் இதழில் வந்த ஒரு நகைச்சுவை.

இரவில் ஒருவர் சைக்கிளில்லைற்இல்லாமல் பயணிக்கும் போது பொலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்

பொலீஸ் : லைற்றில்லாமல் பயணிக்கிறது?

நம்மாள் : இண்டைக்கு பெளர்ணமி நாள். நிலா வெளிச்சம்தான் எல்லா இடமும் பரவி இருக்கே. எதுக்கு சைக்கிளுக்கு எக்ஸ்ரா லைற்றெண்டு கழட்டி வைச்சிட்டன்.

பொலீஸ் : எல்லா இடமும்தானே காத்து இருக்குபின்ன எதுக்கு எக்ஸ்ராவா சைக்கிளுக்கு காத்து?

சைக்கிளில் இருந்து பொலீஸ்காரர் வால்வ் ரியூப்பை கழட்டி எடுத்து விடுகிறார்.

தமிழ்நாட்டில் இருந்து வந்த மதுரை முத்துவின் நிகழ்ச்சி ஒன்று  நியூசிலாந்தில் நடந்திருந்தது. அதை  இணையத்தில் பார்க்க முடிந்தது. அவரது நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் மேற் குறிப்பிட்ட நகைச்சுவையும் இடம் பெற்றிருந்தது. எங்களது நகைச்சுவையை எங்களுக்கே சொல்லி பணம் பார்க்க அவரிடம் திறமை இருக்கிறது.

எங்களிடம் என்னதான் இருக்கிறது?

 

                                              

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kavi arunasalam said:

...

எங்களிடம் என்னதான் இருக்கிறது?                                            

திறமை இருக்கிறது, தமிழ் பற்றுதல் இருக்கிறது.. sgentil.gif

ஆனால் அதைவிட சற்று தலைக்கனமும், அலட்சியமும், ஒற்றுமையின்மையும் இருப்பதால், ஆறடி ஏறினால் பத்தடி சறுக்குகிறது..! vil-modeste.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

திறமை இருக்கிறது, தமிழ் பற்றுதல் இருக்கிறது..

திறமையும், தமிழ்பற்றும் இருந்தால் மட்டும் போதுமா ராசவன்னியன்?

போட்டி, பொறாமை, தலைக்கனம், ஒற்றுமையின்மை என்று தென்னிந்தியக் கலைஞர்களிடமும்  நிறைய இருக்கின்றன.

ஆனால் இதை எலாவற்றையும் விட ஏதோ ஒன்று எங்களிடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kavi arunasalam said:

...தென்னிந்தியக் கலைஞர்களிடமும்  நிறைய இருக்கின்றன.

ஆனால் இதை எலாவற்றையும் விட ஏதோ ஒன்று எங்களிடம் இல்லை.

அது யாருங்க தென்னிந்திய கலைஞர்கள்..? சிரஞ்சீவி, வெங்கடேஷ்..??

ஒருவேளை உங்களுக்கென்று ஒரு பரந்தவெளி, ஊக்குவிற்கும் ரசிகர்கள் இல்லையோ என்னவோ..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனிகாந், அர்ஜுன், விசால்,ஆர்யா,அதர்வா, நயன்தாரா, லக்சுமி மேனன், பிரகாஷ்ராஜ்.....

கொஞ்சம் எனது இளமைக்காலத்துக்குப் போனால்

எம்ஜிஆர், நம்பியார், கல்யாணக்குமார், சி.எல்.ஆனந்தன், சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, ராஜசுலோசனா, அஞ்சலிதேவி, பண்டாரிபாய், மீனாகுமாரி, பானுமதி, சௌகார ஜானகி, ல  லலிதா, பத்மினி, ராகினி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavi arunasalam said:

...

எம்ஜிஆர், நம்பியார், கல்யாணக்குமார், சி.எல்.ஆனந்தன், சாவித்திரி, தேவிகா, சரோஜாதேவி, ராஜசுலோசனா, அஞ்சலிதேவி, பண்டாரிபாய், மீனாகுமாரி, பானுமதி, சௌகார ஜானகி, ல  லலிதா, பத்மினி, ராகினி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா.......

என்ன சார், 'ரொம்ப பழசா' இருக்கீங்களே..? :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இவர் சொல்ற்து உண்மை என்டாலும்,இவர் தன்னை பாடவிடவில்லை என்ட கவலையில் தான் இந்த குற்றாச்சாட்டை வைக்கிறார் என்னும் போது சிரிப்பாகவும்? இருக்குது....உண்மையில் நல்லாப் பாடக் கூடியவர்கள் புலம் பெயர் நாட்டில் இருக்கினம் தான்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2018 at 12:06 PM, ரதி said:

 உண்மையில் நல்லாப் பாடக் கூடியவர்கள் புலம் பெயர் நாட்டில் இருக்கினம் தான்

அட எங்கண்ட அம்மானோட பாட்டையும் கேளுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/29/2018 at 7:44 PM, Kavi arunasalam said:

 

அப்படியான நிகழ்வுகளை வைத்து முன்பு சிரித்திரன் இதழில் வந்த ஒரு நகைச்சுவை.

இரவில் ஒருவர் சைக்கிளில்லைற்இல்லாமல் பயணிக்கும் போது பொலீஸிடம் மாட்டிக் கொள்கிறார்

பொலீஸ் : லைற்றில்லாமல் பயணிக்கிறது?

நம்மாள் : இண்டைக்கு பெளர்ணமி நாள். நிலா வெளிச்சம்தான் எல்லா இடமும் பரவி இருக்கே. எதுக்கு சைக்கிளுக்கு எக்ஸ்ரா லைற்றெண்டு கழட்டி வைச்சிட்டன்.

பொலீஸ் : எல்லா இடமும்தானே காத்து இருக்குபின்ன எதுக்கு எக்ஸ்ராவா சைக்கிளுக்கு காத்து?

சைக்கிளில் இருந்து பொலீஸ்காரர் வால்வ் ரியூப்பை கழட்டி எடுத்து விடுகிறார்.                                              

அப்படி இல்லையையா அந்த உரையாடல்.

தமிழ் தெரியாத சிங்கள பொலீஸ்காரர்; அடேய்ங், ஸ்ரொப்...ஸ்ரொப்... நைற் ரைம்.... லைற் இல்லே... சைக்கிள் போறதிங்...

நம்மாளு; றாலாமி அய்யா, பல்ப் சுட்டுட்டுது, ஊரெல்லாம் நல்ல நிலவு.... அதால தான்...

பொலீஸ்காரர்; அடேய்ங், ஊரெல்லாம்  நல்லே காத்தே.... ரயரில எதுக்க...

காத்தை திறந்து விட்டவாறே.... நெலவில சைக்கிள உறுட்டீட்டு யண்ட..(போ)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அட எங்கண்ட அம்மானோட பாட்டையும் கேளுங்கோவன்.

அட்ரா....அட்ரா...அட்ரா........

அடிடா சக்கையெண்டானாம்  அம்மன் கோயில் புக்கையெண்டானாம்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.