Jump to content

ரிலாக்ஸ்


Recommended Posts

வாசலில் பெரிதாக A.M.Agrawal என்று போர்டு இருந்த  வீட்டுக் கதவைத் தட்ட நினைத்து, எதிர்வீட்டு பெல்லை அழுத்திவிட்டேன். கடுப்புடன் கதவைத் திறந்த பெண்மணியின் தீப்பொறி பறக்க நோக்கி, படார் எனக் கதவை அறைந்து சார்த்திவிட்டார் . 

”நல்லநாளிலேயே அந்தம்மா அதிகம் பேசாது. அதுவும் அகர்வால் வீடுன்னு கேட்டீன்னா” என்றார் முகேஷ் அகர்வால் சிரித்துக்கொண்டே. “ எங்களுக்குள்ள கொஞ்சம் ஆகாது.அத விடு. எப்படி இருக்கே? பாத்து பன்னெண்டு வருஷம் இருக்குமா? 2004ல இடார்ஸில பாத்தது இல்லையா?”

முகேஷ் அகர்வால் ரிடையர்டு ஆகி பல வருடங்கள் இருக்கும். அரசு நிறுவனம் என்றால் சோம்பேறிகளாக , லஞ்சம் வாங்குபவர்களாகவே இருப்பார்கள் என்ற முத்திரைகளை உடைத்தவர். 

“மூத்தவன் வீடு இது. ரெண்டாவது பையன் போப்பால்ல இருக்கான். சொந்தக் கம்பெனி. 10 கிளைகள். ஆட்டோ ஸ்பேர்ஸ், அக்ஸெஸரிஸ்” 

அவனா? வியப்பாக இருந்தது. 

2004ல் அகர்வால் வீட்டிற்குப் போயிருந்தேன். குவாட்டர்ஸ். பெரிய வீடு. 
“  இவன் மூத்தவன் . அஜய் . பி.ஈ படிக்கறான்.”  ஒல்லியான அந்தப்பையன் ’ஹலோ அங்கிள்’ என்றான் தீனமான குரலில். “ கொஞ்சம் ஷை டைப். படிப்புல கெட்டிக்காரன். ப்ளஸ்டூவுல கோல்டு மெடல். கம்ப்யூட்டர் படிக்கறான்.” அகர்வாலின் வார்த்தைகளில் பெருமை வழிந்தது.

“என்ன பண்ணப்போற?” என்றேன். 

“ஐ.ஐ.எம். சேரணும் அங்கிள். CATக்கு படிச்சிட்டிருக்கேன்” அவன் சொல்லிக்கொண்டிரூக்கையில் உள்ளே நுழைந்தவனைப் பார்த்த முகேஷின் முகம் இறுகியது. “எங்க போய்ட்டு வர்றே?” என்றார் 

ஆறடி உயரமும் பருமனுமாக இருந்த அந்த இளைஞன் “ ஜிம்” என்றபடி உள்ளே  சென்றான்.  கைகள் , பளு தூக்கி நன்கு புடைத்திருந்தன.

“இவன் ரெண்டாவது. ராகேஷ். உருப்படியில்ல. உடம்பை வளர்த்துவைச்சிருக்கான். எப்பக் கேளுங்க. மராத்தான் ஓடணும், ஜிம்ல் எக்ஸர்ஸைஸ் பண்ணனும்னே சொல்லிட்டிருக்கான். போன மாசம் மும்பை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் ஓட்டத்துல.. ஆறாயிரம் ரூபாய் செலவு.  தின்னு உடம்பை வளத்தா போதுமா? ஒரு வேலை செய்யணும்னு தோணல . என்ன செய்யப்போகுதோ?” 

என்ன சொல்வதென்று தெரியாமல் அசட்டுப் புன்னகையுடன் டீயைப் பருகினேன். 

“  இந்த கல்லூரிகளெல்லாம் படிப்பை மட்டும் சொல்லிக்கொடுத்தாப் போறும்னு நினைக்கறேன், சுதாகர்.. வேண்டாத விளையாட்டு, பிஸிகல் எஜுகேஷன், ஸ்போர்ட்ஸ், மராத்தான்... என்ன ப்ர்யோஜனம்? அஜய் பாருங்க. ஒரு நிமிசம் வீணாகக் மாட்டான். படீப்பு படிப்பு...அது முன்னேறும்.” 

“சார்” என்றேன் சமாதானமாக்க முயன்று “ உடற் பயிற்சி , வலுவைக் கூட்டும். மராத்தன் என்பது சும்மா ஓடற் விசயமில்ல, அது மன உறுதி சம்பப்பட்டது என்று சொல்லிக்கேட்டிருக்கேன். பாருங்க, இவனும் நல்லா வருவான்”

“என்னமோ சொல்றீங்க. விடுங்க” என்றார் விரக்தியாக. 

அந்த ராகேஷ் இப்போது கோடிகளின் அதிபதி.. 

முகேஷ் தொடர்ந்தார் “ அஜய்க்கு ஐ.ஐ.எம் கிடைக்கல. மனமுடைஞ்சு போய், டிப்ரெஷன்ல போயிட்டான். அப்புறம் குணமாக்கி, நல்ல காலேஜ்லதான் எம்.பி.ஏ பண்ணான். ஐ.ஐ.எம் கைவிட்டுப் போனதுல, நம்பிக்கை போயிருச்சு. சென்னை கம்பெனி ஒண்ணுல விற்பனைத்துறையில வேலை கிடைச்சது. சென்னை பழக கஷ்டமாயிருச்சுன்னு வேலைய விட்டுட்டு வந்துட்டான். அப்புறம் வேலைகிடைக்க கஷ்டமாயிருச்சு. ஏதோ இங்க ஒரு கம்பெனியில மார்க்கெட்டிங்ல மேனேஜரா இருக்கான். பெருசா ஒண்ணுமில்ல. 
ராகேஷ் “ என் ப்ரெண்டோட சேந்து கடை வக்கறேன். கடனா ரெண்டு லட்சம் கொடுங்க”ன்னான். கொடுத்தேன். ஒடிஞ்சு போச்சு. அவன் வீட்டுக்கு வரலை. ஸாகர்ல ஒரு ரூம்ல  தங்கிட்டிருந்தான். கஷ்டப்பட்டு இன்னொரு கடை போட்டு, டெல்லி போயி, எதோ டீலர்ஷிப் வாங்கி, நாலு வருசத்துல கடையை ஒழுங்கா வச்சி, இப்ப ஒரு எட்டு வருஷமா நல்லா வளந்துட்டான். அவந்தான் இங்க வீட்டுக்கு பணம் கொடுத்து உதவறான். இவன் சம்பாத்தியம் அவ்வளவா இல்ல” 

முகேஷ் சற்று நிறுத்தினார் “ எதுக்குச் சொல்றேன்.. நாம ஒண்ணு நினைக்கறோம். தெய்வம் ஒண்ணு நினைக்குது”

ராகேஷின் உடற்பயிற்சியும், மன உறுதியும் தன்னம்பிக்கையுமே அவன் வளர்ச்சிக்குக் காரணம் என்பது ஏனோ தெரியாமற் போய்விட்டது, அவருக்கு. கால் வலிக்க ஓடுவதில் “இன்னும் கொஞ்ச தூரம், இன்னும் கொஞ்ச தூரம்” என்று தன்னை வலுப்படுத்து, உற்சாகமூட்டி ஓடும் மராத்தான், கடை ஒடிந்த நிலையில், அவனை ரெண்டுங்கெட்டான் ஊரான சாகரில் தங்கி , கடினமாக உழைக்க வைத்தது என்பதும்,
அஜயின் ஏட்டுச் சுரைக்காய் அறிவு, பூஞ்சையான மனது வாழ்வின் யதார்த்தங்களைச் சந்திக்கத் தைரியத்தை அளிக்கவில்லை என்பதும் அவருக்குப் புரியவில்லை.

பெரிய கம்பெனிகளில் தலைமை அதிகாரிகள் வினோதமாக வாழ்வில் ரிஸ்க்கான, அட்ரினலின் ஊறவைக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவதையும், வலிக்க வலிக்க ‘இன்னும் ஒரு பத்து” என்று புஷ் அப் எடுப்பதையும், உடல் வலியைத் தாண்டி வெற்றி இலக்கை எட்ட வெறியுடன் இருப்பதையும் அவர், பாவம், புரிந்துகொள்ளவில்லை. 

உடல் நோகாமல் சிறு வெற்றிகள் கிடைக்காது, பெரும் வெற்றிகளுக்குச் சிறு வெற்றிகளே ஆதாரம் என்பதைக் குழந்தைகள் தானாகப் புரிந்துகொள்வது துர்லபம். போட்டிகள் மிக முக்கியமானவை என்பதும் போட்டியில் தோல்விகளே வெற்றிகளை அதன்பின் காட்டித்தருமென்பதும் வீடுகளிலும்,பள்ளிகளிலும் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. பெற்றோர்களுக்கே தெரிவதில்லை.  

சொல்ல நினைத்தேன்...
“ தெய்வம் , தான் நினைச்சதை நம்ம மூளைக்குச் சொல்லுது. நாமதான் கேக்க மாட்டேங்கறோம்”

 

சுதாகர் கஸ்தூரி முகநூல் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.