Jump to content

மதுரையில் வெறிச்சோடிய அழகிரி முகாம்: அமைதிப் பேரணி ஏற்பாடுகளில் சுணக்கம்


Recommended Posts

மதுரையில் வெறிச்சோடிய அழகிரி முகாம்: அமைதிப் பேரணி ஏற்பாடுகளில் சுணக்கம்

 

 
99f54abfP1478772mrjpg

மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது மதுரையில் உள்ள தனது வீடு அருகே சிலருடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி.படம்: எஸ்.ஜேம்ஸ்

சென்னையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மதுரையில் உள்ள மு.க.அழகிரியின் வீடு வெறிச் சோடிக் காணப்பட்டது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து வதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.

 

சென்னையில் திமுக தலைவ ராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதேநேரம், மதுரையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியில் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். வெளியூர்களில் இருந்து ஆதர வாளர்கள் சிலர் மட்டுமே வந்திருந் ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் கூறியதா வது: அழகிரி எதிர்பார்த்தவாறு திமுகவின் தற்போதைய நிர்வாகி கள் உட்பட முக்கியமானோர் யாரும் வரவில்லை. சென்னை பேரணி குறித்து அழகிரியிடம் கட்சியினர் உறுதி அளிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். திட்டமிட்டவாறு வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வரு வார்களா?, அழைத்து வரக் கூடியவர்கள் யாராக இருப்பார் கள்?, அவர்களின் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளை யார் செய்வது? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் பலரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

அழகிரி தரப்பிலோ, அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பிலோ செலவுத் தொகை வழங்குவது குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. ஏற்பாடு களில் உள்ள தேக்கநிலை அழகிரிக்கு தெரியுமா என்றே தெரியவில்லை. இன்னும் 3 நாட்களில், செப். முதல் தேதிக்கு பிறகே ஏற்பாடுகள் தொடர்பான உண்மை நிலை தெரியவரும் என்றனர்.

ஆர்வம் காட்டாத அழகிரி

திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. பொதுக்குழு தொடங்கிய சிறிது நேரத்தில் காலை 10.30 மணியளவில் மதுரையில் அழகிரி வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு பந்தலில் காத்திருந்த ஆதரவாளர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். பொதுக்குழு வின் எந்த நிகழ்வையும் டிவியில் பார்ப்பதற்குக்கூட அழகிரி ஆர்வம் காட்டவில்லை. ஸ்டாலின் பேசி முடித்து பொதுக்குழு கலைந்த பிறகே, பிற்பகல் 2 மணியளவில் அழகிரி மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24806570.ece

Link to comment
Share on other sites

செய்தியாளர்களை விரட்டியடித்த அழகிரியின் ஆதரவாளர்கள்: அமைதிப்பேரணி என்ன ஆகும்?

1535530253-749.jpg
 
 
 
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியின் வீட்டில் ஆதரவாளர்கள் வரும் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தனது வீட்டின் முன்னே செய்தி சேகரிக்க நின்றிருந்த செய்தியாளர்களை விரட்டினர்.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ள அழகிரி, இந்த பேரணி மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றால் பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற எண்ணம் கூட இல்லாம செய்தியாளர்களை விரட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 
1535530347-1914.jpg
மேலும் அமைதிப்பேரணி குறித்த ஆலோசனையில் அழகிரி ஈடுபட்டிருக்கும்போது பத்துக்கும் குறைவான ஆதரவாளர்களே இருந்தனர் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் அமைதிப்பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பாளர்கள் என்று அழகிரி கூறியது எந்த அளவுக்கு சாத்தியம்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/azhagiri-supporters-says-get-out-to-press-reporters-118082900028_1.html

 

Link to comment
Share on other sites

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்! ஆனால்... அழகிரி வைக்கும் கோரிக்கை

 

'தி.மு.க-வில் என்னை இணைத்துக்கொள்ளத் தயார் என்றால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தயார்' என்று மு.க.அழகிரி அதிரடியாகக் கூறினார்.

அழகிரி

சென்னையில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ள அமைதிப் பேரணி தொடர்பாக 7-வது நாளாகத் தனது ஆதரவாளர்களுடன் மதுரை டி.வி.எஸ் காலனி வீட்டில் மு.க.அழகிரி ஆலோசனை  நடத்தி வருகிறார். அதிக அளவு தொண்டர்கள் வரவில்லை. முக்கிய நிர்வாகிகள் ஆதரவில்லை என்று சர்ச்சைகள் கிளம்பியது. இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ``நடைபெறவுள்ள அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் குறையாத எண்ணிக்கையில் தொண்டர்கள் பங்கேற்பர். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் எங்களுக்குப் பெரிதாக எந்த நெருக்கடியும் தரவில்லை.

தி.மு.க-வுடன் இணைவதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இதற்கு யார் தடையாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எங்களை இணைத்துக்கொள்ளத் தயார் என்றால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள நாங்களும் தயார். தி.மு.க-வின் பொதுக்குழுவிலுள்ள 1,500 பேர் மட்டுமே தி.மு.க அல்ல. உண்மையின் பக்கமே தொண்டர்கள் அனைவரும் உள்ளனர் என்பதை நினைவுகொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

https://www.vikatan.com/news/tamilnadu/135442-azhagiri-ready-to-accept-stalin-as-dmk-head.html

Link to comment
Share on other sites

ஸ்டாலினை ஏற்கிறேன் : மனம் மாறிய அழகிரி : பின்னணி என்ன?

Alagiri
 
 
திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்கிறேன் என அழகிரி கூறிய விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
அழகிரியை திமுகவில் சேர்த்துக்கொள்ளும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. எனவே, தன்னுடைய பலத்தை காட்டும் வகையில், திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.
 
அதற்காக, திமுகவில் ஸ்டாலினை பிடிக்காதவர்களையும், அவரால் ஓரங்கப்பட்டவர்களையும் தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பல வருடங்களாக கட்சியில் இருந்தும் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரி தரப்பு குறிவைத்துள்ளது.
 
இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின் தற்போது திமுகவில் ஓரங்கட்டப்பட்ட பலரையும் வரவழைத்து அவர்களுக்கு பதவி கொடுத்து வருகிறாராம். ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை அழகிரி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதவி பெறாதவர்கள் கூட அழகிரி தொடர்பு கொள்ளும் போது ‘ உங்க மேல மரியாதை இருக்கு.. ஆனா அதுக்காக தளபதிக்கு எதிரா எங்களால செயல்பட முடியாது. கடைசி வரைக்கும் திமுக தொண்டர்களாக இருந்து விட்டு போகிறோம். மன்னித்து விடுங்கள்’ எனக்கூறி போனை கட் செய்து விடுகிறார்களாம். இது அழகிரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த்தியது.
1534319055-5724.jpg

 
அதுபோக, செப் 5ம் தேதி நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள அறிவுநிதி, மற்றும் ஸ்டாலினின் சகோதரி செல்வி உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களை அழகிரி அழைத்தாரம். ஆனால், நீங்களும், ஸ்டாலின் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டோம். ஆனால், அது நடக்கவில்லை. நீங்கள் நடத்தும் பேரணியில் நாங்கள் கலந்து கொண்டால் ஸ்டாலின் வருத்தப்படுவார். அவரை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. குடும்ப விழா என்றால் அழையுங்கள். உடனே வருகிறோம். ஆனால், உங்களுக்கும், ஸ்டாலினுக்கும் இடையேயான அரசியலில் எங்களை இழுக்காதீர்கள் எனக்கூறி விட்டார்களாம்.
 
இப்படி அனைவரும் நழுவியதால் அழகிரி கலக்கம் அடைந்துள்ளார். அதனால்தான், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நான் திமுகவில் இணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், ஸ்டாலின் அதை விரும்பவில்லை. என்னை திமுகவில் இணைத்துக்கொண்டால் அவரை தலைவராக ஏற்க தயாராக இருக்கிறேன்” என அவர் இறங்கி வந்தார் எனக்கூறப்படுகிறது. 

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/reason-for-algari-mind-change-118083100013_1.html

Link to comment
Share on other sites

நான் தலைவர் கருணாநிதியின் மகன்; சொன்னதைச் செய்வேன்: அழகிரி பதில்

 

 
newPic1624jpgjpg

மு.க.அழகிரி: கோப்புப்படம்

நான் தலைவர் கருணாநிதியின் மகன். சொன்னதைச் செய்வேன் என்று மு.க.அழகிரி பதில் அளித்துள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என அழகிரி அறிவித்துள்ளார். தான் நடத்தும் பேரணியால் திமுகவுக்கு நிச்சயம் ஆபத்து இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

 

அதனையடுத்து தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் அழகிரி கடந்த மாதம் 30-ம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கட்சியில் மீண்டும் இணைய தனக்கோ தன் மகன் தயாநிதி அழகிரிக்கோ கட்சியில் எந்தப் பதவியும் தரத் தேவையில்லை'' என்றார்.

மேலும், ''உண்மையான கட்சித் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அமைதிப் பேரணிக்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்'' என்றும் அழகிரி கூறினார்.

இந்நிலையில் இன்று மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்லத்தில் அமைதிப் பேரணி குறித்து அழகிரி தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு அழகிரியிடம் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அழகிரி, நான் தலைவர் கருணாநிதியின் மகன். சொன்னதைச் செய்வேன் என்றார்.

ஸ்டாலினை தலைவராக ஏற்கத் தயார் எனக் கூறியும் திமுகவில் சேர உங்களுக்கு அழைப்பு வரவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கருத்து கூற விரும்பவில்லை என அழகிரி பதில் அளித்தார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24847336.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி

103261820ed6a198c-ebb5-4a64-a35e-db14fa5

இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

தினத்தந்தி: அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி

"தி.மு.க.வின் உண்மையான அடித்தட்டு தொண்டர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால்தான் இந்த பேரணியை நடத்துவதாகவும், இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். 5-ந்தேதி நடக்கும் அமைதி பேரணி தங்கள் பலத்தை காட்டும் பேரணி அல்ல. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாகவே அது இருக்கும்" என்று ஹலோ எப்.எம். பேட்டி ஒன்றில் துரை தயாநிதி அழகிரி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

"தி.மு.க.வில் தன்னை சேர்த்துக்கொள்ளும்படி அழகிரி தனது குடும்பத்தினரிடம் பேச்சு நடத்தவில்லையா? என கேட்டபோது, கருணாநிதி இருந்தபோது அவரிடம் மட்டும் பேசியதாகவும், மற்ற யாரிடமும் தனது தந்தை தொடர்பு கொண்டதில்லை எனவும் துரை தயாநிதி கூறினார்.

தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக சேர்ந்து அதனை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பதே தங்களது ஆசை என கூறிய அவர் இதற்கு சித்தப்பாவிடம்(மு.க.ஸ்டாலின்) இருந்து சாதகமான பதில் வரும் என தெரிவித்தார்" என்கிறது தினத்தந்தி.

அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் என அவர் கூறியதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

https://tamil.thehindu.com/bbc-tamil/article24846752.ece

Link to comment
Share on other sites

”அமைதிப் பேரணியில் ஆரவாரம் வேண்டாம்” -அறிக்கை மூலம் அழகிரி வேண்டுகோள்

 

அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள வரும் உடன்பிறப்புகள் எவ்வித ஆரவார, ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அழகிரி அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அழகிரி

கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், கட்சியில் சேர்க்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும் தன் பலத்தைக் காட்டும் வகையிலும் சென்னையில் வரும் 5ம் தேதி பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டு வருகிறார் அழகிரி. இது தொடர்பாக தொடர்ந்து அவர் ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நான் தலைவரின் பிள்ளை. சொன்னதைச் செய்வேன். சென்னை அமைதிப் பேரணியில் ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தலைவர் கருணாநிதியின் 30 -ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு எனது தலைமையில் மாபெரும் அமைதிப் பேரணி வரும் 5 -ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணசிலை அருகே உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளோம். 

 

 

அழகிரி

இதில் பங்கேற்கவுள்ள உடன்பிறப்புகள் காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகே திரண்டிட வேண்டுகிறேன்.  அமைதிப் பேரணியில் எவ்வித ஆரவார, ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறு தராமலும், நடந்து கொள்ள வேண்டும். சென்னை நகருக்குக் காலை 8 மணிக்குள் வந்து சேரும் வகையில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பேரணியில் கலந்துகொள்ள வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ளப் பாசத்துடன் வேண்டுகிறேன்”  எனத் தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/india/135742-alagiri-requested-his-supporters-to-stay-cal-during-rally.html

Link to comment
Share on other sites

ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை:  சென்னையில் மு.க.அழகிரி தகவல்

 
a71255ecP1491343mrjpg

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தனது முடிவை நாளை அறிவிப்பதாக தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்து 30 நாட்கள் ஆவதையொட்டி, சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி 5-ம் தேதி (நாளை) அமைதி பேரணி நடத்தக்கவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.

 

இதை முன்னிட்டு மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் பல்வேறு கட்டமாக ஆலோசனை நடத்தி வந்தார். பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், அழகிரி நேற்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:

சென்னையில் நீங்கள் நடத்த உள்ள அமைதி பேரணியில் எத்தனை பேர் கலந்துகொள் வார்கள்?

நான் ஏற்கெனவே சொன்னது போல, ஒரு லட்சத்துக்கும் அதிக மானோர் கலந்துகொள்வார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பீர்களா?

தற்போது அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை.

திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலை வராக ஏற்கத் தயார் என்று கூறினீர்கள். அதற்கான அறிகுறி கள் தெரியவில்லையே?

செய்தியாளர்களை 5-ம் தேதி (நாளை) சந்திக்கிறேன். அப்போது என் முடிவை அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24860667.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

1 லட்சம் பேர்; போலீஸ் சிக்னல்; நீக்கப்பட்ட நிர்வாகி! - ஸ்டாலின் முடிவால் கடுகடுத்த அழகிரி

 
 

இந்தக் கட்சி நம்முடையது. தலைவருக்காகத்தான் அனைத்தையும் செய்கிறோம். இதை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?' எனக் கேள்வி எழுப்பினார் அழகிரி.

1 லட்சம் பேர்; போலீஸ் சிக்னல்; நீக்கப்பட்ட நிர்வாகி! - ஸ்டாலின் முடிவால் கடுகடுத்த அழகிரி
 

மு.க.அழகிரியை விமான நிலையத்தில் சந்தித்துப் பேசிய வேளச்சேரி பகுதிக் கழக தி.மு.க நிர்வாகி, கட்சியை விட்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ' இந்தக் கட்சியைக் காப்பாற்றத்தான் நான் உழைக்கிறேன். என்னை வந்து பார்த்ததுக்கே நடவடிக்கை எடுக்கிறார்களா?' என ஆதரவாளர்களிடம் கொந்தளித்திருக்கிறார் அழகிரி. 

சென்னை அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி சமாதி வரையில், நாளை அமைதிப் பேரணியை நடத்த இருக்கிறார் மு.க.அழகிரி. இந்தப் பேரணியில் ஒரு லட்சம் பேர் வரையில் பங்கேற்க இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்காக போலீஸ் அனுமதியையும் வாங்கிவிட்டனர். இந்த நிலையில், அழகிரியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேளச்சேரி பகுதிக் கழக தி.மு.க நிர்வாகி ரவியைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார் பொதுச் செயலாளர் அன்பழகன். இது அழகிரி தரப்பினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. 

மு.க.ஸ்டாலின்அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். `` மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதற்காக மிகவும் கீழே இறங்கிப் போய் பேட்டி அளித்தார் அழகிரி. ` கட்சியில் சேர்த்தால் அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்' என்றார். இருப்பினும், ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இன்று வேளச்சேரி பகுதிக் கழக நிர்வாகி ஒருவர் நீக்கப்பட்ட தகவலைக் கேட்டு இன்னும் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார். அவர் எங்களிடம் பேசும்போது, ` நம்மை வந்து ஒரு நிர்வாகி பார்த்ததுக்கே கட்சியை விட்டு நீக்குகிறார். இவர் (ஸ்டாலின்) எப்படி நம்மைக் கட்சியில் சேர்க்க நினைப்பார். அவர் மாறப் போவதில்லை. இந்தத் தொண்டர்களைக் காப்பாற்றத்தான் நான் இருக்கிறேன். நாளை பேரணி முடிந்ததும் மற்ற விஷயங்களை முடிவு செய்கிறேன். இந்தக் கட்சி நம்முடையது. தலைவருக்காகத்தான் அனைத்தையும் செய்கிறோம். இதை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?' எனக் கேள்வி எழுப்பினார். அவரை நாங்கள் சமாதானப்படுத்தினோம். 

 

 

இதன்பிறகு, தனியார் ஓட்டலில் தங்கியிருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார் அழகிரி. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது 50 வாகனங்கள் வர இருக்கின்றன. கோவையில் இருந்து மட்டும் 100 வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு வருகின்றனர். மதுரையில் இருந்து 500 வாகனங்கள் கிளம்புகின்றன. இதற்கான செலவுகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நபர்களே செய்கின்றனர். கல்யாண மண்டபம், தனியார் ஓட்டல்கள் என அனைத்தையும் முன்னரே புக்கிங் செய்துவிட்டோம். காவல்துறையிலும் எந்த எதிர்ப்பும் இல்லை. ' நாளை எந்த நிகழ்ச்சிகளும் இல்லாததால், பேரணியை நடத்துவதில் சிரமம் இல்லை' என அவர்கள் கூறிவிட்டனர். இந்தப் பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உறுதியாகக் கலந்துகொள்வார்கள். நாளை பத்து மணிக்குத் தொடங்கும் பேரணி 12 மணிக்கு நிறைவடையும். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவிக்க இருக்கிறார் அழகிரி" என்றார் விரிவாக. 

 

 

`` அழகிரி நடத்தப் போகும் பேரணியை தி.மு.க நிர்வாகிகள் சிலரும் குடும்ப உறுப்பினர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். பேரணிக்குக் கிடைக்கப் போகும் வரவேற்பைப் பொறுத்து, அவர்களில் சிலர் மனமாற்றம் அடையவும் வாய்ப்பிருக்கிறது" என விவரித்த முக்கிய நிர்வாகி ஒருவர், ``அழகிரியோடு எந்தவிதத் தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின். இதில் கட்சிப் பதவி கேட்டு ஏமாற்றம் அடைந்த நிர்வாகிகளும் குடும்ப ஆள்களும் அழகிரியின் ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதன்மூலம், ஸ்டாலினிடம் பதவி வாங்கிவிட முடியும் எனவும் நம்புகின்றனர். `பேரணி முடியட்டும். அதன்பிறகு முடிவெடுப்போம்' என அவர்கள் விவாதம் நடத்தியுள்ளனர். பேரணி குறித்த விவரங்களையும் அறிவாலய நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர்" என்றார் நிதானமாக. 

https://www.vikatan.com/news/tamilnadu/135889-dmks-decision-irritates-azhagiri-to-the-core.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.