Jump to content

``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா?!" இது சீமான் வைரல் புருடாக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 
``பீலா விடுறதக்கூட உயர்வா விட்டோமா இல்லையா?!
 

மூக வலைதளங்களில் பகிரப்படும் காணொலிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைகளிலும், பேட்டிகளிலும் பேசியவைதான் சமீபமாக அதிகம் பகிரப்படுகின்றன.. 

சீமான் பேசியதில் சமீபத்திய வைரல்ஸ் இவை..

'பிரபாகரன் இருந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் ஒரு சிங்களன் உயிரோடு இருந்திருக்க மாட்டான்'

``நான் ஒருநாள் கோவிச்சுட்டு இருந்தேன். சிவாஜி ஐயா வந்தாரு. 'என்னடா ராஜா உன் பிரச்னை'ன்னு கேட்டாரு. 'என்ன எழுதிக் கொடுத்தாலும் கிழிச்சுப் போடுறாங்க'ன்னு சொன்னேன். 'உனக்கு என்ன தோணுதோ அதை என்கிட்டே சொல்லிடு. நான் 'டேக்'ல பேசி விட்டுடுறேன். பேசிட்டு ஓகேவா'ன்னு கேப்பாரு. 'நானும் ஓகே'ன்னு சொல்லுவேன்."

``நாற்பதாயிரம் டன் அரிசியைச் சுமந்து நடுக்கடலில் வந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியக் கப்பலை வழியில் நிறுத்தி விட்டுட்டுப் போகச் சொன்னார் பிரபாகரன். உடனே அவர்கள் போனார்கள். அந்தக் கப்பலைத்தான் எனக்கு சுட்டுப் பழகிக்கக் கொடுத்தார்." 

``விசா வாங்குவதற்காக அமெரிக்கத் தூதரகம் போனோம். ஆயிரக்கணக்கானோர் வரிசையில நின்னுட்டு இருந்தாங்க. கூட வந்த மச்சினன் தங்கர்பச்சான் இவனுக்கு இந்தம்மா விசா கொடுக்காதுன்னு நினைச்சாரு. டை கட்டிட்டு இருந்தவன் எல்லாம் என்னையே பாக்குறான். அந்த வெள்ளைக்கார அம்மாகிட்ட போனேன். என்னுடைய புகைப்படங்கள், வாங்குன பரிசுகள் மற்ற ஆவணங்கள் எல்லாம் அவங்ககிட்ட கொடுத்துட்டு அந்தம்மாகிட்ட வணக்கம்னு சொன்னேன். எதுவுமே கேக்கல வாங்கி வெச்சுட்டு 'ஹாப்பி ஜர்னி'ன்னு சொல்லிடுச்சு!" 

``ஏ.கே 74 ரகத் துப்பாக்கியை நானும் எங்க அண்ணனும் சுட்டுப் பயிற்சி எடுக்கும்போது, 'அண்ணே.. இது ரஷ்யாவுக்கு அப்புறம் வேற எங்க இருக்கு'ன்னு கேட்டேன். 'நம்மகிட்டதான் இருக்கு. இந்தியாவுல இல்ல'ன்னு சொன்னாரு. 'அப்போ இந்தியாவிலேயே ஏ.கே 74ல சுட்டது நான்தானா'ன்னு கேட்டேன். 'ஆமா, அதைப் போய் எல்லார்க்கும் சொல்லு சொல்லுங்கிறாரு!" 

சீமான்

``நம்மகிட்ட குதிரைப்படை இல்ல. யானைப்படைதான். ஒரு கப்பல்ல அறுபதாயிரம் யானைகளை ஏத்திக்கிட்டு போயிருக்கான். போயி போர்லாம் போடலை. அவ்வளவு யானைகளையும் வரிசையா நிறுத்தி இருக்கான். பார்த்த உடனே எதிரி விழுந்துக் கும்புட்டான். நான் சண்டைக்கு வரல. நீ என்ன சொல்றயோ கேக்கறேன்னுட்டான்!" 

``தமிழ்நாடு கிரிக்கெட் அணியை உருவாக்குவேன். 'இந்திய அணி உலகக்கோப்பை விளையாடப்போவதற்கு முன்பு என்னுடைய தமிழ்நாட்டு அணியை வென்றுவிட்டுத்தான் போகணும்'னு சவால் விடுவேன்" 

``ஆமை ஓட்டை மல்லாக்கத் திருப்பிப்போட்டு ஒரு ஆள் பயணம் போவதைப் பார்த்தேன். இருபத்தெட்டு கிலோ ஆமைக்கறியை அண்ணன் பிரபாகரன் எனக்குக் கொடுத்தார்." 

``சிற்பிகளுக்கு மாலை இடையூறாக இருக்குன்னு மாலையை இப்படிப் போட்டு வடிச்சான். ரொம்பநேரம் அந்த வேலையை செய்யும்போது உடல்சூட்டுலேயும், வெயில் வெப்பத்துலேயும் பூ வாடி உதிர்ந்துட்டு வெறும் நூல் மட்டும் அவன் முதுகுல இருந்தது. அந்த நூலுக்கு பேர்ல பூ உதிர்ந்திருந்துச்சு அதனாலே அது பேர் பூணூல்!"

``ஸ்பீச் எங்க இருந்து வருது. என் பேச்சுக்கு முன்னாடி ஒரு எஸ் போட்டா ஸ்பீச் ஆகுது. 'உடன்'க்கூட ஒரு 'எஸ்' போட்டா 'சடன்', 
'தாக்கு' அதை அப்படியே 'ஏ' போட்டு அட்டாக்கு" 

``அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். கட்டாயப் பாடமாக இந்தியை ஆக்காமல் பஞ்சாபியை ஆக்குவோம். அன்பு உடன்பிறப்புகளுக்காக சீக்கிய மொழியை நாம் படிப்போம்." 

`` 'சீமான் சயனைடு கட்டுவாரா'ன்னு கேக்குறாங்க. நானே சயனைடு தானடா!" 

``பீலா விடுறோம்னே வெச்சுக்கோ. பீலா விடுறத கூட உயர்வா விட்டோமா இல்லையா!"

விகடனுக்கு
நன்றி
நன்றி
நன்றி

https://www.vikatan.com/news/politics/135490-seeman-and-his-viral-comment.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் தமிழ்த்தேசியத்தின்பாலான உறுதியென்பதைச் சிதைக்கும் எண்ணம் ஒருவருக்கு வருகிறதென்றால், நிச்சயம் அவர் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர் என்பதுதான் எனது கருத்து.

இன்று சீமானை விமர்சிக்கும் விகடன் குழுமமாக இருக்கட்டும், தினமலர் ஆக இருக்கட்டும், ஹிந்துவாக இருக்கட்டும், இவர்கள் எல்லோருமே திராவிடக் கொள்கை ஆரம்பித்த காலத்திலிருந்தே இன்றுவரைக்கும் தமிழ்த் தேசியம் பேசும் அனைவருக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறார்கள். 

இதற்கு முக்கியமான காரணமாக அமைவது அப்பத்திரிக்கை நிறுவனங்களை ஆளும் அல்லது வழிநடத்துகின்றவர்கள் தமிழ்த்தேசியக் கொள்கைக்கெதிரான பிராமணர்களாக இருப்பது ஆகும்.

தமிழ்த்தேசியத்தின் ஒரு அங்கமான ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போரட்டத்தினை எதிர்ப்பதென்னும் இவர்களின் போக்கு இந்த அடிப்படையேலே பார்க்கப்படுதல் அவசியம்.

ஹிந்துவை ஆரம்பித்த சுப்ரமணிய ஐய்யராக இருக்கட்டும், விகடன் குழுமத்தை ஆரம்பித்த புத்தலூர் வைத்தியநாதர் ஐய்யராக இருக்கட்டும், தினமலரை ஆரம்பித்த ராமசுப்பைய்யராக இருக்கட்டும், துக்ளக்கினை ஆரம்பித்த சோ ராமசாமியாக இருக்கட்டும், ஹிந்துவில் தமிழின விஷம் கக்கிய  ராம் மாணிக்கலிங்கம், பார்த்தசாரதி, பத்மநாபன் ஆகிய எல்லோருமே பிராமணர்கள்தான்.இவர்களைவிடவும், இன்றும் 2009 இனக்கொலைக்காக மகிந்தவைப் பாராட்டி கெளரவிக்க முன்னிற்கும் சுப்ரமணியசுவாமி கூட பிராமணர்தான். 

ஆக, இவர்களின் விமர்சனங்கள் இப்படித்தான் இருக்குமென்பது ஆச்சரியமல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவெறிக்கும் தேசிய உணர்வுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

நாஸிகள் போன்று தேசிய வெறிகொண்டவர்கள் மற்றைய இனங்களின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள். சீமான் இந்தவகையில் உள்ளதை அவர் பேச்சுக்கள் காட்டுகின்றன.

தேசிய உணர்வுகொண்டவர்கள் தமது தேசியத்தின் மீது பெருவிருப்பும் பெருமையும் கொண்டவர்கள்.அதே நேரத்தில் பிற இனங்களின் தேசிய உணர்வுகளையும் மதிப்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

 

இன்று சீமானை விமர்சிக்கும் விகடன் குழுமமாக இருக்கட்டும், தினமலர் ஆக இருக்கட்டும், ஹிந்துவாக இருக்கட்டும், இவர்கள் எல்லோருமே திராவிடக் கொள்கை ஆரம்பித்த காலத்திலிருந்தே இன்றுவரைக்கும் தமிழ்த் தேசியம் பேசும் அனைவருக்கு எதிராகவும் செயற்பட்டு வருகிறார்கள். 

 

தினமலர்,ஹிந்து,துக்ளக்கைவிடுங்கள் காலம் காலமாக எங்களை பற்றி  எமது போராட்டம்பற்றி அவதூறு பரப்புவதற்கே அவதாரம் எடுத்தவர்கள்.

ஆனால் விகடனை அவர்கள் வரிசையில் நீங்கள் சேர்த்தது விகடன் எமது போராட்டத்துக்கு வழங்கிய தன்னால் முடிந்த பங்களிப்பை நாம் கொச்சைபடுத்துவது போலாகும்.

ராஜீவ் கொலையின் பின்னர் தமிழகத்தில் யாருமே ஈழபோராட்டம்பற்றி அதிகம் பேசாதிருந்த நிலையில் விடுதலைபுலிகளுக்கு ஆதரவான கருத்து கணிப்பை முதலில் செய்தது விகடன், இன்றுவரை தலைவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரின் தியாகம்,கடந்துவந்த பாதைகள், ஒழுக்கம் நேர்மைபற்றி ஒரு வருஷம்கூட தவறாமல் செய்தி வெளியிடுவது விகடன்.

ஒவ்வொரு மாவீரர்நாளின்போதும் ஈழதமிழரின் தியாகங்கள்பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.

விகடன் முள்ளிவாய்க்கால் பேரவலம்பற்றி இன்றுவரை பேசுகிறது...

அவர்கள் வியாபார நோக்கத்தில் இதை செய்கிறார்கள் என்று நம்மவர்கள்  சிலர் கருதினாலும், அதன் வாசகர்களாயிருக்கும் பலகோடி தமிழக மக்களுக்கு எம்மை கொண்டு செல்கிறார்கள் என்பதையே நாம் உற்று நோக்கவேண்டும்.

இது சீமானுக்கு எதிரான செய்தியை விகடன் அனுமதித்ததால் அது தொடர்பாக பகிரும் கருத்தல்ல.

எமது தேசியத்திற்கு எதிராக செயற்படும் தமிழக பத்திரிகைகளுடன் நீங்கள் விகடனையும் சேர்த்ததற்கு மட்டுமே சொல்லப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், ஜேர்மனின் நாசிகளை சீமானுடன் நீங்கள் ஒப்பிடுவது என்னைப்பொறுத்தவரை சரியாகப் படவில்லை. ஆனால், உங்கள் கருத்தில் ஓரளவிற்கு உண்மையும் இல்லாமல் இல்லை.

ஜேர்மனிய நாசிகளுக்கெதிராக திட்டமிட்ட இனக்கொலையொன்று பல்வேறு நாடுகளின் துணையுடன் நடைபெறவில்லை. வேறுமனே "யூதர்கள் சுரண்டுகிறார்கள்" என்கிற போலியான கோஷத்தையும், ஜேர்மபிய ஆரியர்கள் மட்டுமே இவ்வுளகில் வாழத் தகுதியான இனம், மற்றையவர்கள் தகுதியற்றவர்கள் என்கிற தூய ஆரிய ஆதிக்க வெறியையும் கொண்டே அவர்களின் இன  வெறி அமைந்த்கிருந்தது. 

ஆனால், சீமானின் கோபமும் ஆவேசமும் நியாயமானது. திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு இனத்திற்காக நீதிகேட்பது. தமிழன் தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருந்தால் ஈழத்தில் இன்வக்ஷிப்பு நடந்திருக்காதே என்கிற ஆதங்கத்தில் எழுவது. இதை எப்படி நாசிகளுடன் ஒப்பிட்டீர்கள் என்றுதான் தெரியவில்லை.

ஜேர்மனிய நாசிகளுடன் ஒப்பிடக்கூடிய இன்னொரு இனம் இருக்கிறது. அதற்கு ஆரியச் சிங்களம் என்று பெயர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ragunathan said:

கிருபன், ஜேர்மனின் நாசிகளை சீமானுடன் நீங்கள் ஒப்பிடுவது என்னைப்பொறுத்தவரை சரியாகப் படவில்லை. ஆனால், உங்கள் கருத்தில் ஓரளவிற்கு உண்மையும் இல்லாமல் இல்லை.

நாஸி ஜேர்மனியர்கள் யூதர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. சிங்கள இனவாதிகளும் தமிழர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தியலோடு இனவெறியை உமிழ்வதால் அவர்களும் இனவெறியர்கள்தான்.

சீமானின் அடையாளம் தமிழ் தேசியம், விடுதலைப்புலிகள் எனும் இரண்டு புள்ளிகளுக்கிடையில் தான் இருக்கிறது. ஆனால் அவரது தேசியக் கூச்சல் பிற இனங்கள் மீது வெறுப்பாக உமிழப்படும்போது அது தேசிய வெறியை அவர் கட்சிக்காரர்களிடமும் ஆதரவாளர்களிடமும் உருவாக்குகின்றது. இந்த வெறி பிற இனங்களை கீழ்மை செய்யும்போது தேசியவாதி பாஸிஸவாதியாக மாறுவதைக் காணலாம். சிங்கள இனத்தால் அடக்கியொடுக்கப்பட்டும் புலிகள் சிங்கள மக்கள்மீது வெறுப்பை உமிழ்ந்து பிரச்சாரம் செய்யவில்லை என்ற வித்தியாசத்தையும் பார்க்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இனவெறியனாகவோ தேசிய வெறியனாகவோ வேற என்னவாகவோ இருந்திட்டுப்போகட்டும் இதனால் எமக்கு என்ன பிரச்சனை. சீமான் இன்னமும் சொல்லத்தக்கமாதிரி பெரிய செல்வாக்கான ஆளாக வளரவில்லை சிலவேளை அப்படி ஒரு செல்வாக்கான அரசியல்வாதியாக அவர் வளர்ந்தால் இதே பத்திரிகைகள் அந்தமாதிரி எழுதும் ஜெயலலிதா கருனாநிதி மேலும்பல அரசியல்வாதிகள் சசிகலா ஆகியோர் அப்பட்டமாக ஊழல் செய்தவர்கள் என அனைவருக்கும் தெரியும் ஏன் அனைத்துப்பத்திரிகைக்கும் தெரியும் ஆனால் கேட்டுப்பாருங்கள் அவரைப்பற்றி ஓரிடத்திலாவது புகழாத பத்திரிகைகள் எதுவும் இல்லை. தொலைக்காட்சியில் அவர்களைச்சொல்லி பெருமிதப்படுபவர்களை இப்பொதுசன ஊடகங்கள் குளோசப்பில் காட்டி எங்களையும் அழவைக்கிறதுதானே. 

சீமானுக்காக நாம் ஏன் குத்தி முறியவேண்டும் அது தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சனை மட்டுமே 

தமிழ்நாட்டில் கடவுள் நினைத்தாலும் ஈழத்தமிழர்க்கான ஆதரவு நிலைப்பாட்டி எவராலும் முன்னெடுத்துச்செல்லமுடியாது. 

எமது பெயரையும் தலைவர் பெயரையும் சொல்லி நிறையப்பேர் நிறையவே சாதித்துவிட்டார்கள் பாவம் அந்தாளையும் விடுங்கோவன்

வைகோவைப்பாருங்கள் அந்தாள் பாவம் இப்போ ஸ்டாலினை முதல்வர் ஆக்கிறன் எனப்புறப்பட்டிருக்கிறார். அதோடு ஒப்பிடுகையில் சீமான் தேவலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாஸி ஜேர்மனியர்கள் யூதர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. சிங்கள இனவாதிகளும் தமிழர்களை அடக்கப்படவேண்டியவர்கள் என்ற கருத்தியலோடு இனவெறியை உமிழ்வதால் அவர்களும் இனவெறியர்கள்தான்.

சீமானின் அடையாளம் தமிழ் தேசியம், விடுதலைப்புலிகள் எனும் இரண்டு புள்ளிகளுக்கிடையில் தான் இருக்கிறது. ஆனால் அவரது தேசியக் கூச்சல் பிற இனங்கள் மீது வெறுப்பாக உமிழப்படும்போது அது தேசிய வெறியை அவர் கட்சிக்காரர்களிடமும் ஆதரவாளர்களிடமும் உருவாக்குகின்றது. இந்த வெறி பிற இனங்களை கீழ்மை செய்யும்போது தேசியவாதி பாஸிஸவாதியாக மாறுவதைக் காணலாம். சிங்கள இனத்தால் அடக்கியொடுக்கப்பட்டும் புலிகள் சிங்கள மக்கள்மீது வெறுப்பை உமிழ்ந்து பிரச்சாரம் செய்யவில்லை என்ற வித்தியாசத்தையும் பார்க்கவேண்டும்.

 

சீமானை, எங்கே கொண்டு போய் ஒப்பிட்டு வைக்கிறீர்கள் என்பது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்று போல தெரிகிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்த கிற்லர், சிங்கள அரசியல்வாதிகள் இனவாதம் பேசுவதே அபாயகரமான விடயம்.

இரு நூறு ஆண்டுகள் இருந்த வெள்ளையனே வெளியேறு என்பது இனவெறியா அல்லது சுதந்திரப் போராட்டமா? 

அது சுதந்திரப் போராட்டமாயின், இதுவும் அப்படிதானே. படங்களில் நடித்து தமிழர் அல்லாதோர், ஆட்சிக்கு வரமுடியமாயின், டப்பிங் தமிழ் பேசும் ஜேம்ஸ் பாண்டும் வரலாமே நாளை.

திராவிடம் என்ற உன்னதமான கருத்தியலின் சிதைவு, கருணாநிதியுடன் ஆரம்பித்தது.

வருமானவரி பிரிவினர், இருபத்தியொரு கோடி லஞ்சம் பெற்ற ஆதாரமுள்ளது  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியும் அவர் அமைச்சரவையில் தொடர்கிறாறென்றால் ஊழல் எவ்வளவு தூரம் ஸ்தாபனப் படுத்தப்பட்டுள்ளது திராவிட கட்சிகளினுள் என தெரிகிறது.

ஆரம்பத்தில் சீமான் தெலுங்கர் ஆள்வதா, மலையாளி ஆள்வதா என்றார். இப்போது அவ்வாறு நேரடியாக சொல்லாமல் தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என்கிறார்.

அண்டைய மாநிலங்களில் தமிழர் ஆளவே முடியாது என்ற நிலை இருக்கும் வரை, சீமானின் நிலைப்பாடு தவறானதல்ல என்பதே எனது பார்வை.

வேறு இனத்தவருக்கு வீடுகளை, காணிகளை விற்காதீர்கள், அவர்களிடம் பொருள் வாங்காதீர்கள், அவர்களை அடித்து விரட்டுங்கள் என்பதே ஆபத்தானது.

பாம்பையும், பாப்பானையும் கண்டால், பார்பானை முதலில் அடி என்று சொன்னது திராவிடம்... அது ஆபத்தான இனவெறுப்பன்றி வேறென்ன?

புலிகள் சிங்களவர் மீது இனத்துவேசமாக பேசவில்லை என்கிறீர்கள். இது அப்பாவித்தனமானது.

முஸ்லீம் மக்களை யாழில் இருந்து வெளியனுப்பியது, சமாதான பேச்சிடையே கெப்பற்றிக்கொல்லாவயில் பஸ் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தியது தான் புலிகள் விடுதலை போரட்ட அமைப்பு என்ற நிலைப்பாட்டை தகர்த்தது என்பதை ஏற்பீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இனியொருவில் இருந்து..

http://inioru.com/anti-social-nazist-seeman/

“சீமான் தனது வழிகாட்டிகளில் ஒருவராக உலகின் அதிபயங்கரக் கொலையாளி ஹிட்லரின் படத்தை தனது திருச்சி மாநாட்டில் அறிவித்தார். இன்று ஜேர்மனியில் நிறவாதிகள் கூட ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அவமானப் படும் நிலையில் சீமான் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள சீமான் கோமாளிகள் ஹிட்லரை தனது வழிகாட்டியாக அறிவித்துள்ளனர்.

தவிர. ஹிட்லரின் நாஸிப் படைகள் வணக்கம் செலுத்தும் முறையில் மேடையில் நின்று வணக்கம் தெரிவித்து மாநாட்டை ஆரம்பித்தனர். இதையெல்லாம் காவல் துறை கண்ணாரப் பார்த்துக்கொண்டிருந்தது.”

 

 

hitlersalute.jpg

 

விகடன் பேட்டியில் சீமானின் சமாளிப்பு..

https://www.vikatan.com/news/tamilnadu/47596.html

 

திருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்?

''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா? மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''

'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்?

''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால்,  பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

 இனியொருவில் இருந்து..

http://inioru.com/anti-social-nazist-seeman/

“சீமான் தனது வழிகாட்டிகளில் ஒருவராக உலகின் அதிபயங்கரக் கொலையாளி ஹிட்லரின் படத்தை தனது திருச்சி மாநாட்டில் அறிவித்தார். இன்று ஜேர்மனியில் நிறவாதிகள் கூட ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அவமானப் படும் நிலையில் சீமான் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள சீமான் கோமாளிகள் ஹிட்லரை தனது வழிகாட்டியாக அறிவித்துள்ளனர்.

தவிர. ஹிட்லரின் நாஸிப் படைகள் வணக்கம் செலுத்தும் முறையில் மேடையில் நின்று வணக்கம் தெரிவித்து மாநாட்டை ஆரம்பித்தனர். இதையெல்லாம் காவல் துறை கண்ணாரப் பார்த்துக்கொண்டிருந்தது.”

 

 

hitlersalute.jpg

 

விகடன் பேட்டியில் சீமானின் சமாளிப்பு..

https://www.vikatan.com/news/tamilnadu/47596.html

 

திருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்?

''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா? மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''

'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்?

''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால்,  பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''
 

ஆரம்ப ஆர்வக்கோளாறுகள் பல இப்போது திருத்தப்பட்டுள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது.. வெள்ளையனே வெளியேறுன்னு.. கோசம் போடலாம்.. அது நிறவெறி ஆகாது.

ஹிந்தி எரிப்போம்.. அழிப்போம் என்று.. மொழிவெறி காட்டலாம்..  அது திராவிடக் கூலிக் கும்பல்களின்.. மொழிவெறி ஆகாது.

தனித் தமிழ்நாடு.. திராவிடருக்கு கேட்கலாம்.. அது.. பிரதேசவெறி ஆகாது.

கன்னடன்.. கர்நாடவை ஆளலாம்.. மலையாளி.. கேரளாவை ஆளலாம்.. தெலுங்கன்.. ஆந்திராவை ஆளலாம்.. குஜராத்தி குஜராத்தை ஆளலாம்.. சிங்களன் சொறீலங்காவை ஆளலாம்.. ஜேர்மனி.. ஜேர்மனை ஆளலாம்... அதெல்லாம் எந்த வெறியும் இல்லை.. திராவிடக் கும்பலுக்கு..

ஆனால்.. தமிழ் நாட்டை.. தமிழீழத்தை தமிழன் ஆளனும் என்பது தான் திராவிடக் கூலிகளும்.. அவர் தம் திராவிடக் குஞ்சுகளுக்கும்.. வெறியாத் தெரியுது.

இத்தனை ஆயிரம் ஈழத்தமிழரைக் கொல்ல சிங்களவனுக்கு.. ஆயுதமும்.. பயிற்சியும் வழங்கிய ஹிந்தியன் நல்லவன்.. பாகிஸ்தானி நல்லவன்.. இஸ்ரேலிய யூதன் நல்லவன்... அமெரிக்கன் நல்லவன்..

ஆனால்.. தமிழர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாத ஹிட்லர் மகா கொடியவன். போங்கையா.. நீங்களும்.. உங்கட தத்துவங்களும். 

ஹிட்லர் மகா கொடியவராக இருக்கலாம்.. ஏன் அமெரிக்கன் அளவுக்கு அணுகுண்டு போடும் அளவுக்கு கொடியவராக இருக்கவில்லை.

ஹிட்லர் தன் மக்கள் நாடு என்று நல்ல சில கொள்கைகளையும் கொண்டிருந்தார்.. அதை இனங்காண்பது தவறல்ல.. அணுகுண்டு வீசிய அமெரிக்காவை ஜனநாயக நாடுன்னு இன்றும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை விட. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் செய்த அட்டூளியங்களில் ஒரு வீதத்தைக்கூட ஹிட்லர் செய்யவில்லை என்பதே உண்மை.
அதே நேரம் யூதர்கள் ஜேர்மனியில் நடந்த நடத்தைகளினால் தான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏன் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிந்திக்கவில்லையென்பது கவலைக்குரிய விடயம்.

உலகப்போரில்  ஜேர்மனியை அழிக்க முனந்தவர்கள் யாரென்று சிந்தித்தால் அடிப்படை அரசியலின் சித்தார்ந்தம் புரியும்.

வட அமெரிக்காவில்  வசித்த செவ்விந்தியர் மீது பிரிட்டிஷ்  மேலாதிக்கம் செய்யாத கொடுமைகளையா ஹிட்லர் செய்தார்?

கருத்து எனும் போர்வையில் வரலாறுகளையும் உண்மைகளையும் தவற விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கருத்து எனும் போர்வையில் வரலாறுகளையும் உண்மைகளையும் தவற விடாதீர்கள்.

உண்மை வரலாறுகளை தெரிந்தால் இப்படி  கருத்து இடுவார்களா ?

Link to comment
Share on other sites

பிற இனத்தவர்கள் தமிழ் நாட்டு மக்களின் மேல் சம்பல் அரைக்கும் போது 60 வருடத்துக்கு பிறகாவது ஒருவர் அவர்களை தோலுரித்து காட்டுவதற்கு பெயர் நாசி அல்லது அதற்கு மேலாகவும் இருக்கலாம்.கடைசி தமிழ் நாட்டு மக்கள்  தாங்கள் எங்கு இருக்கிறோம் என புரிந்தாலே போதுமானது.

கர்நாடகத்தவர்கள் கர்நாடகத்தை ஆள்கிறார்கள். தெலுங்கர்கள் தெலுங்கு தேசத்தை ஆள்கிறார்கள்.மலையாளிகள் மலையாளத்தை ஆள்கிறார்கள். தமிழர்கள் தம்மை ஆளவேண்டும் என கேட்பது எப்படி தேசிய வெறியாகும் என விளங்கவில்லை.ஏனைய மானிலத்தவர்கள் தமிழர்களுக்கு கிடைக்கும் அத்தனை சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம் என்று கூறுவது தேசிய வெறியா?? விளக்கம் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் செய்த அட்டூளியங்களில் ஒரு வீதத்தைக்கூட ஹிட்லர் செய்யவில்லை என்பதேண்மை.
அதே நேரம் யூதர்கள் ஜேர்மனியில் நடந்த நடத்தைகளினால் தான் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏன் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் சிந்திக்கவில்லையென்பது கவலைக்குரிய விடயம்.

 உலகப்போரில்  ஜேர்மனியை அழிக்க முனந்தவர்கள் யாரென்று சிந்தித்தால் அடிப்படை அரசியலின் சித்தார்ந்தம் புரியும்.

 

ஜேர்மனியில் வசிக்கும் கு.சா. ஐயாவுக்கு கட்டாயம் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுத்திருப்பார்கள். ஆனால் ஹிட்லர் மேல் இருக்கும் கவர்ச்சியால் 6 மில்லியன் யூதர்களைக் கொடூரமாகக் கொன்றது ஒரு வீதமாகத் தெரிகின்றது. இந்தக் கணக்கின்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 600 மில்லியன் மக்களை காலனியாதிக்கத்தில் கொன்றிருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

இதற்கு கனடாவிசிட் புகழ் டொக்டர்ஷாலினி முகநூலில்  எழுதின இன்றைய பதிவு ஒன்றையும் அதற்கு கிடைத்த குறிப்பிட்ட எதிர்வினைகளையும் இணைத்தல் நன்று அவர்களின் சீமான் பற்றிய பார்வை எப்படிஇருக்கிறது என அறியலாம் 

 

இது டாக்டர் ஷாலினியின் பதிவு 

 

சீமான் என்றொரு ஆசாமி இருக்கிறார், சினிமாக்காரர், சினிமா உலகில் ஒரு கட்டபஞ்சாயத்துக்காரர், அவர் அரசியலில் ஒரு also ran என்பது வரை தான் எனக்கு தெரியும்.
நான் கனடா சென்று வந்த போது அங்கு பல ஈழதமிழர்கள் போரின் விபரீதத்தை பற்றி என்னிடம் சொன்னார்கள். பலர் போர் அநாவசியமானது என்பது பற்றியும், அவர்களுக்கு தலைவன் யார், அவர் மீதுள்ள அதிருப்திகள் என்ன என்பது பற்றியும் சொன்னார்கள்.
இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்ல வேண்டும்?
அவர்களுக்குள் இது பற்றி பேச சுதந்திரம் இல்லை, போருக்கு எதிராக பேசினால் இனதுரோகி என்று முத்திரை குத்தி, அப்படியே ஒதுக்கி விடுவது, இழிவு படுத்துவது, வாழ்க்கையை கஷ்டமாக்கிவிடுவது மாதிரியான பழிவாங்கும் நடவடிக்கைகளில் பெரும்பாலோர் ஈடுபடுவதால், தங்களுக்குள் புலம்ப வழி இல்லை. என்னை மாதிரி வெளியாள், அதுவும் மருத்துவர் என்பதால் என்னிடம் புலம்பினார்களோ என்னவோ......
Slice of life மாதிரியான பகிர்வுகள், சமூக மாற்றத்திற்கு தேவையான விவாத கருத்துக்கள் என்றால் நான் அவற்றை முகநூலில் எழுதுவது வழக்கம், அது போலவே கனடிய கருத்துக்களை நான் தொகுத்து எழுதிவிட- பெரிய எதிர்ப்பு சுனாமி கிளம்பியது. 
யதார்த்தமாக நான் எழுதியதை இவ்வளவு தீவிரவாதமாய் அணுக முடியுமா என்று எனக்கே புரியாத நிலை. அப்போது ஒரு நலன் விரும்பி என்னிடம் பேசினார், “மேடம் சீமானை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
உண்மையில் சீமான் எனும் அந்த மனிதனை பற்றி அப்போது எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. கொஞ்சம் கோமாளித்தனம்+போலி வீரம் உமிழும் ஒரு காமடி பீஸ் என்றே நான் நினைத்திருந்தேன்
ஆனால் அவர் சொன்னார், “அவர் தான் தமிழ்நாட்டின் எதிர்கால முதல்வர்”
நான் சிரித்தேன், “தமிழ்நாட்டு மக்களை பெம்பளத்தான்னு நினைக்காதீங்க சார்”
“உங்களுக்கு தெரியுது, ஆனா இங்க எல்லாரும் அவர் தான் தமிழர்களின் எதிர்காலம்னே நினைக்கிறாங்க....”
“அட பாவமே உங்க ஊர்ல அத்தனை பேரும் அவ்வளவு பெம்பளத்தானா?!”
அதன் பிறகு நான் மிஸ்டர் சீமானை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். தமிழ்நாட்டின் தலைவர் எனும் பிரதிநிதித்துவம் பெறும் பிரத்தியேக சிறப்பு ஏதாவது அவரிடம் உண்டா என்று திறந்த மனதுடனே நான் அவரை அணுகுகிறேன்.
ஆனால் - ஒரு புரொடியூசரிடம் தன் அசட்டு கதையை மிகுந்த narcissismத்தோடு தானே ரசித்து ரசித்து வளர்த்துக்கொண்டே போகும் ஒரு மொக்கை புதுமுக டைரக்டர் போலவே எனக்கு தேன்றுகிறார்.
இவரை போய் மாவீரன், மஹானுபாவன்,  எழுச்சிதமிழன், எதிர்கால தமிழர்தலைவன் என்றெல்லாம் எவரும் நினைத்தால்.... very poor prognosis தான் போங்கள்!!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் சாலினி ஒரு மணோதத்துவ நிபுணர் அவர் எல்லாவற்றையும் அதனூடே பார்ப்பார்  ஆனால் சாதாரண வாக்காளன் பிளஸ் மனிதன் அரிசி பொங்கப்பானை அண்டா குண்டா பிரியாணி குக்கர் சாராயம் இந்த இழவுகளையெல்லாம் ஓட்டுப்போடுவதற்காக எதிர்பார்க்கிறான் எண்டு சொன்னால் சாலின் என்னைப் பெம்பளத்தான் எனக்கூறுவார்.

தமிழ் நாட்டில் யார் ஆண்டாலும் இந்த புறியாணிபொட்டலத்துக்கு ஓட்டுப்போடுபவர்களுக்குக் கவலை இல்லை ஆகவே அவர்கள் பொட்டலத்துக்குத் தொடர்ந்து ஓட்டுப்போடுவார்கள் இல்லாதுவிட்டால் சென்னையில் கூப்பிடு தூரத்திலிருக்கும் ஆர்கே நகரில் தினகரன் வென்றிருக்க வாய்ப்பே இல்லை காரணம் அரசியலில் அடிமட்டச் சாராய புறியாணிப்பொட்டலத் தொண்டர்கள து எதிர்பார்ப்பெல்லாத்தையும் தவிடுபொடியாக்கி தினகரன் வென்றிருக்கிறர், இதைவிடக்கேவலம் ஆர் கே நகர் ஜெயலலிதாவின் தொகுது சென்னைக்கு அருகிலுள்ள அந்த முதல்வர் தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் எதுவுமில்லாது குப்பைமேடு சுற்றிவரக் காட்சியளிக்கும் பகுதி அது எல்லாம் வல்ல ஜெயலலிதா தேர்தலுக்குப்பின்பு வெள்ளத்துக்கு  அங்குபோனதாக நினைவு அவர்கள் அடிக்கிற காசில் மாதாந்தம் ஒரு விகிதம் செலவளித்திருந்தாலே அத்தொகுதியின் நிலையை மாற்றியிருக்கலாம் அபராஜிதன் சென்னையில்தானே வாழ்கிறீர்கள் ஒருகை போய்வாருங்கள் ஆர் கே நகருக்கு கையோட இயலுமாகில் சாலினியையும் கூட்டிப்போங்கள் அப்போ தெரியும் யார் பெம்பளத்தான் என.

இப்போது வருகுது திருவாரூர் இடைத்தேர்தல் கருனாநிதியின் தொகுதி அப்பிரதேசம் அதைவிடக்கேவலம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜேர்மனியில் வசிக்கும் கு.சா. ஐயாவுக்கு கட்டாயம் வரலாற்றைப் பற்றி வகுப்பெடுத்திருப்பார்கள். ஆனால் ஹிட்லர் மேல் இருக்கும் கவர்ச்சியால் 6 மில்லியன் யூதர்களைக் கொடூரமாகக் கொன்றது ஒரு வீதமாகத் தெரிகின்றது. இந்தக் கணக்கின்படி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 600 மில்லியன் மக்களை காலனியாதிக்கத்தில் கொன்றிருக்கவேண்டும். 

நிற்சயமாக ....
6000 மில்லியனை ஒரே போரில் கொல்லவில்லை 
பிரிடிஷ் ஏகபத்தியாயத்தின் தொடர்ச்சியாக இன்றும் மக்கள் 
இறந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

மூன்றாம் உலகு .. முதலாம் உலகு என்ற பாகுபாடே 
முதலாம் உலகு மேற்கொண்ட பொருளாதார சுரண்டலால் 
வந்துதான் அனைத்து வளங்களும் சூறையாடப்பட்டு 
தொடர்ச்சியான சுரண்டலுக்கும் வழிகோலி உள்ளூர் 
கலவரங்களையும் .... இன மோதல்களையும் உருவாக்கி 
சென்றவர்கள் பிரிடிஷ் ஏகாபத்திய காரர்கள்தான்.

ஈழத்தமிழரின் படுகொலையில் அவர்களுக்கும் நிறைய பங்கு உண்டு 
இல்லாத தேசங்களை உருவாக்கி பாரிய போர்களை தொடர்ச்சியாக 
வழிகாட்டி வந்தவர்கள் ...... இன்றைய சிரிய போரின் அடிப்படை பிரச்சினை என்ன?
அத்தனை கொலைக்கும் அத்திவாரம் போட்டது பிரிட்ஸின் எல்லை பிரிப்புதான். 

 

சீமான் மீது ஆரம்பத்தில் சேறுபூச தொடங்கியதால் 
கைவிடமுடியாத நிலையில் பலரும் ஆதி நுனி தெரியாது 
சேறுபூசவது போலவே பிரிடிஷ் ஏகபத்திய சுரண்டலும் கொலைகளும் தொடர்கின்றன.

மற்றைய இனங்களை அவதூறாக சீமான் தூற்றுவதில்லை 
அவர் தூற்றுகிறாரோ இல்லையோ 
தூற்றவேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் பலர் தவிக்கிறார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அபராஜிதன் said:

இதற்கு கனடாவிசிட் புகழ் டொக்டர்ஷாலினி முகநூலில்  எழுதின இன்றைய பதிவு ஒன்றையும் அதற்கு கிடைத்த குறிப்பிட்ட எதிர்வினைகளையும் இணைத்தல் நன்று அவர்களின் சீமான் பற்றிய பார்வை எப்படிஇருக்கிறது என அறியலாம் 

 

இது டாக்டர் ஷாலினியின் பதிவு 

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் அல்லவா...

வி சி கட்சி திமுகவுடன், காங்கிரசுடன் கூட்டணி போட முயல்கிறது.

வேறு என்ன எதிர்பார்க்க முடியும், அந்த அம்மணியிடம் இருந்து?

27 வருடங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த இம்ரான் கான் குறித்தும் எதிர்க்கடசிகள் இப்படி தான் சொன்னார்கள். 

பிளே பாய் அரசியலுக்கு லாயக்கு ஆகி வர முடியுமா என்று நக்கல் அடித்தார்கள். இது கிரிக்கட் இல்லை ராஜா, நினைத்தவுடன் சிக்ஸ்ர் அடிக்க என்கிறார்கள்.

அவர் அமைதியாக ஆனால் தெளிவுடன், உறுதியாக காத்திருந்தார்... 27 வருடங்கள். இன்று மக்கள் அவரை பிரதமராக்கி உள்ளனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத்தமிழர்களுக்கு (எல்லோருமில்லை) ஈழத்தானைக்கண்டால் எப்பவுமே இளக்காரம் அப்படியானவர்களது உறவாடல்களோ என்னவோ அபராஜிதனுக்கு தனது சமூகத்தை யாராவது பழித்தால் குசியாகிவிடுவார் சென்னையில் நீண்ட நாதள் வாழ்கிறார் இதனாலும் அவரது நட்புவட்டம் பத்திரிகையாளர் பத்தி எழுத்தாளர்கள் இவர்களைச்சுற்றியிருப்பது காரணமாகலாம். அதுசர் ஒரு கேள்வி உங்களிடம் அண்மையில் நீங்கள் கூறினீர்கள் இறுதிப்போரின்போது தாயகத்திலிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அகதி அந்தஸ்து கோராது வாழ்கிறேன் என சென்னையில் கியூ பிரிவுப் பொலீசாரின் கண்களில் மண்தூவுவது சிரமம் அப்படியாகில் என்ன செல்வாக்கில் அங்கு வாழ்கிறீர்கள் ஒன்றில் மேற்படியாருடன் தொடர்பிருக்கவேணும் இல்லையேல் நிறயப்பணமிருக்கவேணும் இதில் எதுசரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Elugnajiru said:

இந்தியத்தமிழர்களுக்கு (எல்லோருமில்லை) ஈழத்தானைக்கண்டால் எப்பவுமே இளக்காரம் அப்படியானவர்களது உறவாடல்களோ என்னவோ அபராஜிதனுக்கு தனது சமூகத்தை யாராவது பழித்தால் குசியாகிவிடுவார் சென்னையில் நீண்ட நாதள் வாழ்கிறார் இதனாலும் அவரது நட்புவட்டம் பத்திரிகையாளர் பத்தி எழுத்தாளர்கள் இவர்களைச்சுற்றியிருப்பது காரணமாகலாம். அதுசர் ஒரு கேள்வி உங்களிடம் அண்மையில் நீங்கள் கூறினீர்கள் இறுதிப்போரின்போது தாயகத்திலிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அகதி அந்தஸ்து கோராது வாழ்கிறேன் என சென்னையில் கியூ பிரிவுப் பொலீசாரின் கண்களில் மண்தூவுவது சிரமம் அப்படியாகில் என்ன செல்வாக்கில் அங்கு வாழ்கிறீர்கள் ஒன்றில் மேற்படியாருடன் தொடர்பிருக்கவேணும் இல்லையேல் நிறயப்பணமிருக்கவேணும் இதில் எதுசரி

 

இங்கிருந்து புஹ்தகம் எழுதி 
வெளியிட்ட பலரையே நாம் பார்த்திருக்கிறோம் 

சொந்த பிழைப்புக்கு 
இனத்தை விக்கிறதுதான் அவர்கள் வேலை.

இதில் சீமானை வீழ்த்தவும் சேறு அடிக்கவும் ஒரு குரூப் வேற.

சீமான் சொல்வது முழுதும் பொய் என்றால் கூட .........
ஊழல் செய்து ...... கொள்ளை அடித்து நாடடையே நாறடித்த 
நாதரிகள் அரசியல் செய்யும் ஊரில் 
பொய் சொல்லுவதுதான் பெரிய குற்றமா ? 

அந்த நாதாரிகள் பற்றி ஏன் இவர்கள் யாரும் ஏதும் எழுதுவதில்லை?
சொந்த பிழைப்புக்கு நக்குவதை தவிர வேறு என்ன காரணம்?

ஒரு வேளை சீமான் முதல்வராகி விட்டால் ....
சீமானுக்கு போய்  காவடி எடுக்கும் கூடடமும் இதுதான் 
நாம் அப்போதும் இங்கே சும்மாதான் இருப்போம். 


புலிகள் உச்சத்தில் இருந்த காலத்தில் 
புலிகளுக்கு காவடி ஆடி 
சொந்த பிழைப்பை பார்த்த அதே கூடடம்தான் 
எழுத்துக்களில் ஆயுதம் செய்து புத்தகம் விக்கிறார்கள் 

நாம் புலிகளிடமும் அடிவாங்கி ....
ஆமியிடமும் வாங்கி தான் வந்திருக்கிறோம்.

அதுக்காக அடித்தார்கள் என்பதால் கூட 
புலிகள் மீது சேறு அடித்து சொந்த இனத்தை விக்கும் 
புத்தி வரவில்லை ..... வர போவதும் இல்லை.

இந்த நாதாரிகள் வாழும் இனத்தை வைத்து இப்படி ஒரு 
விடுதலை போரை எப்படி செய்தார்கள் என்ற வியப்பு மட்டுமே. 

Link to comment
Share on other sites

1 hour ago, Elugnajiru said:

இந்தியத்தமிழர்களுக்கு (எல்லோருமில்லை) ஈழத்தானைக்கண்டால் எப்பவுமே இளக்காரம் அப்படியானவர்களது உறவாடல்களோ என்னவோ அபராஜிதனுக்கு தனது சமூகத்தை யாராவது பழித்தால் குசியாகிவிடுவார் சென்னையில் நீண்ட நாதள் வாழ்கிறார் இதனாலும் அவரது நட்புவட்டம் பத்திரிகையாளர் பத்தி எழுத்தாளர்கள் இவர்களைச்சுற்றியிருப்பது காரணமாகலாம். அதுசர் ஒரு கேள்வி உங்களிடம் அண்மையில் நீங்கள் கூறினீர்கள் இறுதிப்போரின்போது தாயகத்திலிருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அகதி அந்தஸ்து கோராது வாழ்கிறேன் என சென்னையில் கியூ பிரிவுப் பொலீசாரின் கண்களில் மண்தூவுவது சிரமம் அப்படியாகில் என்ன செல்வாக்கில் அங்கு வாழ்கிறீர்கள் ஒன்றில் மேற்படியாருடன் தொடர்பிருக்கவேணும் இல்லையேல் நிறயப்பணமிருக்கவேணும் இதில் எதுசரி

நான் வாழ்வது சென்னையில் இல்லை இதுவரையும் சென்னை / இந்தியா போனதும் இல்லை

 

என் இனத்தை தலைவரை மற்றும் இயக்கத்தை போராட்டத்தை விமர்ச்சிப்பவர்களுடன் என் கருத்துகளால் கடுமையாக பதிலடி கொடுக்கிறேன்  எனக்கு தெரிந்த விடயங்களை வைத்து.. அதற்காக அவர்களிற்கும் நாம் தமிழர்களிற்குமிடையிலான கருத்து மோதல்களில் மௌனமாக கடந்து விடுவேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, அபராஜிதன் said:

நான் வாழ்வது சென்னையில் இல்லை இதுவரையும் சென்னை / இந்தியா போனதும் இல்லை

அட பயப்பிடாதீங்கோ...

எழு ஞாயிறு சும்மா தாமசுக்கு.. அப்படி கேட்டார்.. :grin:

*****

தமிழகத்து போலி அரசியல் வாதிகள், கல்வி அறிவு இல்லாத அபத்த அரசியல் வாதிகள் மத்தியில் சீமானின் அறிவு பூர்வமான பேச்சு எனக்கு வியப்பினை அளிக்கிறது.

லயன் கிளப் போன்ற அறிவு சார் கூட்டம்.... கல்லூரிகள், பாடசாலைகள் அவரை தமது விழாவுக்கு அழைப்பு விட ஓர் வலுவான காரணம் உண்டு. 

இந்த அழைப்பு ஸ்டாலினுக்கோ, வைகோவுக்கு போகாது. ஏனெனில் எங்கே, என்ன பேச வேண்டும் என பலருக்கு புரிவதில்லை.

நீண்ட பேச்சின் போது, களைப்பினால்,  ஒரு flow வில், toungue slip காரணமாக சில சில்லறை தவறுகள் விட்டிருக்கலாம். அதனை வேண்டுமென்றே பெரிதாக்கும் எதிராளிகள் குறித்த கவலைப் பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து. 

அதுவே நான் சீமானை ஆதரிக்கக் காரணம்....

அவர் புலிகளை ஆதரிக்கிறார், பிரபாகரனை தாங்கிப் பிடிக்கிறார் என்பதெல்லாம் எனக்கு பெரியதாக படவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் அல்லவா...

வி சி கட்சி திமுகவுடன், காங்கிரசுடன் கூட்டணி போட முயல்கிறது.

வேறு என்ன எதிர்பார்க்க முடியும், அந்த அம்மணியிடம் இருந்து?

27 வருடங்களுக்கு முன்னர் கட்சி ஆரம்பித்த இம்ரான் கான் குறித்தும் எதிர்க்கடசிகள் இப்படி தான் சொன்னார்கள். 

பிளே பாய் அரசியலுக்கு லாயக்கு ஆகி வர முடியுமா என்று நக்கல் அடித்தார்கள். இது கிரிக்கட் இல்லை ராஜா, நினைத்தவுடன் சிக்ஸ்ர் அடிக்க என்கிறார்கள்.

அவர் அமைதியாக ஆனால் தெளிவுடன், உறுதியாக காத்திருந்தார்... 27 வருடங்கள். இன்று மக்கள் அவரை பிரதமராக்கி உள்ளனர்.  

இவர் வி்சி்க இல்லை பெரியாரிஸ்ட் திமுக விசுவாசி நடுநிலை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பவர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.