Jump to content

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!


Recommended Posts

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

 

 

sumanthiran-1.jpg

சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு, பிற மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது.

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமனது.

மேலும், சிங்கள பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு இழைத்த அநீதிகளை ஒப்புக் கொண்டு, பிற மக்களின் சீர்திருத்தம் மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சிங்கள-பெரும்பான்மையினர/

Link to comment
Share on other sites

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியமில்லை - காலியில் சுமந்திரன்

 

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ma.jpg

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப்போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது. 

எனினும் இது பிரச்சினை தீர்வுக்கான அத்திவாரமாகவே காணப்படும். புதிய அரசியலமைப்பினை முன்வைப்பதனூடாக பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். 

சம்ஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியமில்லை. மாகாண சபை முறைமையை சற்று மாற்றிக் கொண்டு ஒரே நாட்டுக்குள் வாழ எமது மக்கள் தயாராக இருக்கின்றனர் என்றார்.

http://www.virakesari.lk/article/39488

 

’புதிய அரசமைப்பே தமிழர்களுக்கான தீர்வு’
 

image_de2052d9b9.jpgஇந்நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு, புதிய அரசமைப்பின் ஊடாகவே உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு தொடர்பில், பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று, காலியில் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமஷ்டி முறைமையிலான தீர்வொன்றைக் கோரவில்லை என்றும் தனி நாடு என்ற எதிர்ப்பார்ப்பொன்று, தமிழ் மக்களிடம் இல்லையென்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களை, ஒரே பாதைக்குள் கொண்டுவர வேண்டுமாயின், அதற்கு புதிய அரசமைப்பொன்று அவசியமொன்றும் வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி, சிறுபான்மையின மக்களின் கருத்துகளுக்கு இடமளிக்காமை காரணமாகவே, யுத்தமொன்றை இந்த நாடு எதிர்நோக்க வேண்டியிருந்ததென்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நாட்டின் அமுலில் உள்ள மாகாண சபைகள் முறைமையில் சிறு மாற்றத்தைக் கொண்டுவருவதாயின், அதனை ஏற்றுக்கொள்ள, தமிழ் மக்கள் தயாராக இருக்கின்றனரென்றும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிய-அரசமைப்பே-தமிழர்களுக்கான-தீர்வு/175-221062

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்றுக்கொள்ளுவினம்.... பொறுத்துருங்கோவன்:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்... தமிழர்களுக்கு,  செய்த  அநீதிகள்  பட்டியல், மிகவும்  நீளமானது.
சமூக நீதி:   "முதலில் உன்னை திருத்திக் கொள்.  அதன் பின் தான்.... மற்றவர் மேல் குற்றம்  சாட்டலாம்"   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, hasan said:

It is great. He is the first Tamil leader talk to Singhalese people. Doesn't matter he is right or wrong. At least he knows to whom to talk

அந்தாள் மாத்தி மாத்தி பேசுவதில் வல்லவர் இல்லை ஒளிநாடா பதிவில இருந்தாலும் ஓம் சொன்னன் அது நாடகத்துக்கு பழகிறத்துக்கு அப்படி சொன்னன் என்று மழுப்பும் இப்ப காலியில் நின்று சமஸ்ட்டி வேண்டாம் என்றும் நாளை வடமராட்சியில் வந்து நாங்கள் ஈழத்துக்கு ஒப்பான தீர்வுக்கு முயற்ச்ச்சி பண்றம் எல்லாரும் கொஞ்சம் பொறுமையாய் அமைதி காக்கணும் என்று பீலா விடும் அப்ப காலியில் நின்று சமஸ்ட்டியை காலி பண்ணியது அது சிங்களவருக்கு எதிரான ராஜதந்திரம் என்று புளுகும் .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

Link to comment
Share on other sites

ஆனால் ஒரு விஷயம் நித்தியமானது. தமிழர்களின் உரிமை சிங்களவர்களிடம்தான் இருக்கிறதுஇ அவர்கள் அதை சரியாக உணரும் போதுதான் சமத்துவம் சாத்தியமாகும். சிங்களவர்கள் எதிரி என்ற தத்துவத்தில் இயங்கினால் விடிவு சாத்தியமில்லை. எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று. சாதாரண சிங்களவர்களுக்கு தமிழர் தரப்பு நியாயங்கள் எதுவுமே தெரியாது. சிங்களத்தில் உங்கள் உரிமைகளை சரியாக சொல்ல  தெரிந்தவர் இருந்தால் உங்கள் உரிமைகளுக்கு சிங்களவர்களே போரிடுவர். ஆனால் நீங்களோ அவர்களை எல்லாம் எதிரிகள் பக்கத்தில் தள்ளிவிட்டிடுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... தமிழர்களுக்கு,  செய்த  அநீதிகள்  பட்டியல், மிகவும்  நீளமானது.
சமூக நீதி:   "முதலில் உன்னை திருத்திக் கொள்.  அதன் பின் தான்.... மற்றவர் மேல் குற்றம்  சாட்டலாம்"   

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

ஆனால் ஒரு விஷயம் நித்தியமானது. தமிழர்களின் உரிமை சிங்களவர்களிடம்தான் இருக்கிறதுஇ அவர்கள் அதை சரியாக உணரும் போதுதான் சமத்துவம் சாத்தியமாகும். சிங்களவர்கள் எதிரி என்ற தத்துவத்தில் இயங்கினால் விடிவு சாத்தியமில்லை. எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று. சாதாரண சிங்களவர்களுக்கு தமிழர் தரப்பு நியாயங்கள் எதுவுமே தெரியாது. சிங்களத்தில் உங்கள் உரிமைகளை சரியாக சொல்ல  தெரிந்தவர் இருந்தால் உங்கள் உரிமைகளுக்கு சிங்களவர்களே போரிடுவர். ஆனால் நீங்களோ அவர்களை எல்லாம் எதிரிகள் பக்கத்தில் தள்ளிவிட்டிடுகிறீர்கள்.

அடுத்தவர் பிரச்சனையை நாம் உணர முடியாது என்பது நிதர்சனம். ஏனெனில் மனிதன் அடிப்படையில் சுயநல விலங்கு.

எமக்கு வேறு வகையில் பிரச்னை ஒன்று வராவிடில், நாம் எமது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றை விடப் போவதில்லை. இதுதான் இன்று சிங்களவர் நிலை.

போர்த்துக்கேயர் 138 வருடங்கள் ஆண்டார்கள். ஒல்லாந்தர் வருவார்கள் என்று நினைக்காததால், கோவிலை இடித்து, மாடுகளை கொன்று தின்று, எதிர்த்த மக்களை கொலை செய்து அட்டகாசம் செய்தார்கள். ஒல்லாந்தர் வந்தார்கள், அவர்கள் கிளம்ப வேண்டியதாயிற்று. 

ஆங்கிலேயர் வரும் வரை ஒல்லாந்தர் ஆட்டம். உலகின் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தினை ஆளும் தம்மை  அசைக்க முடியாது என்று ஆங்கிலேயர் நினைத்து இருந்தனர்.

ஒரு ஹிட்லர் வந்தார். இன்று அந்த நாட்டிலிலேயே ஸ்காட்லாந்து பிரிந்து போக விரும்புகிறது.

இலங்கையில் அண்மைக்காலமாக ஒரு விசயத்தினை கவனித்திருப்பீர்கள். தமிழ் மக்கள் துணிந்து போராட வருகிறார்கள்.
 
யுத்த காலத்தில், புலிகள் என்று கூறி அடக்கி ஒடுக்கிய சிங்களம், இப்போது செய்வது அறியாது திகைக்கிறது. 

முல்லைதீவில் தமிழ் மீனவர் படகுகளை எரித்ததன் மூலம் அவர்களை அடக்க முனைந்தார்கள். ஆனால் எரியும் போதே, உலகம் முளுவதும் செய்தி பரவியதால், எரித்தவர் மூவர் கைதாகியதுடன், ஏனையோர் கிளம்பிப் போக வேண்டியதாகி விட்டது. 

மக்களின் இந்த அகிம்சைப்  போராட்டமும், தீவின் மீதான சீன, இந்திய, மேற்கு ஆர்வமுமே எமக்கு ஒரு  முடிவை தரும்.   

Link to comment
Share on other sites

3 minutes ago, Nathamuni said:

மக்களின் இந்த அகிம்சைப்  போராட்டமும், தீவின் மீதான சீன, இந்திய, மேற்கு ஆர்வமுமே எமக்கு ஒரு  முடிவை தரும்.  

ஆ மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா

சீ சீ இந்தப் பழமும் புளிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

ஆ மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா

சீ சீ இந்தப் பழமும் புளிக்கும்.

ஓமோம்.

1958ல் முதல் போராட்டம் நடந்தபோது சிங்களவர்கள் தாக்கினர். அப்போது இலங்கைத் தீவுக்கு வெளியே தெரியவில்லை. ஆகவே சிங்களவர்கள் சந்தோசமாக தொடர்ந்தார்கள். 

இப்போது நிலைமை அப்படி இல்லை நண்பரே. ஆயுத போராடடம் வேண்டாமே என்று உபதேசம் செய்த நாடுகள்... கவனிக்கின்றன. அவர்களுக்கும் ஒரு கடப்பாடு உள்ளது.

சும்மா, முன்னர் மாதிரி மக்களை தாக்கி விரட்டிட முடியாது. இது தெரிந்து மக்கள் துணிவுடன் போராட வருகின்றனர்.

மகாவலி வலய குடியேட்ட முயல்வுக்கு எதிராக மக்கள் திரண்டது ஒரு சாட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

 

1 hour ago, ஜீவன் சிவா said:

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

 

தமிழரின்  பட்டியலுக்காக  காத்திருக்கின்றோம்  -  சிங்களம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு தமிழர்களின் அரசியல் விருப்பு எல்லாத்தையும் அகிம்சை வழியில் புகட்ட முனைந்து தோற்றதன் வெளிப்பாடுதான் ஆயுதப் போராட்டம் என்பதை சம் சும்முக்கு இன்னும் புகட்டவில்லைப் போலும்.

தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது எப்படி என்பதைப் பற்றி மட்டும் சம் சும்முக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார் போல் தான் தெரிகிறது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/30/2018 at 7:42 PM, நவீனன் said:

சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்!

எருமைமாட்டிலை மழை பெய்ஞ்சமாதிரி திரியுற இனத்துக்கு இவர் பாடம் எடுக்கப்போறாராம்...tw_blush:

ஏலாக்கட்டத்திலை தான் துவக்கு தூக்க வெளிக்கிட்டது எண்டது ஒருத்தருக்கும் விளங்குதில்லையப்பா tw_worried:

Link to comment
Share on other sites

28 minutes ago, குமாரசாமி said:

எருமைமாட்டிலை மழை பெய்ஞ்சமாதிரி திரியுற இனத்துக்கு இவர் பாடம் எடுக்கப்போறாராம்...tw_blush:

ஏலாக்கட்டத்திலை தான் துவக்கு தூக்க வெளிக்கிட்டது எண்டது ஒருத்தருக்கும் விளங்குதில்லையப்பா tw_worried:

துவக்கு தூக்கி கோவணத்தையும் பறிகொடுத்ததை அதுக்குள்ள மறந்துட்டிங்களா?
ஓ.எல். சோதினையில தோத்து போனாலும் ஏலாக்கட்டம் எண்டு மருந்து குடிக்கிறவையும் இருக்கினம் கண்டியளோ?
ஏலாக்கட்டம் எண்டு இனி என்ன எல்லாரும் மருந்து குடியுங்கோ எண்டா சொல்லுறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Jude said:

துவக்கு தூக்கி கோவணத்தையும் பறிகொடுத்ததை அதுக்குள்ள மறந்துட்டிங்களா?
ஓ.எல். சோதினையில தோத்து போனாலும் ஏலாக்கட்டம் எண்டு மருந்து குடிக்கிறவையும் இருக்கினம் கண்டியளோ?
ஏலாக்கட்டம் எண்டு இனி என்ன எல்லாரும் மருந்து குடியுங்கோ எண்டா சொல்லுறியள்?

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் இப்பவும் தினாவெட்டாய் ரோசம் மானம் இல்லாமல் திரியினம்....

அவையிட்டை போய் உந்த நாதாரிக்கேள்வியை கேளுங்கோ.

எப்பிடியும் பேப்பர் படிச்சுக்கொண்டுதான் பதில் சொல்லுவினம் எண்டது என்ரை நம்பிக்கை :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

அந்தாள் மாத்தி மாத்தி பேசுவதில் வல்லவர் இல்லை ஒளிநாடா பதிவில இருந்தாலும் ஓம் சொன்னன் அது நாடகத்துக்கு பழகிறத்துக்கு அப்படி சொன்னன் என்று மழுப்பும் இப்ப காலியில் நின்று சமஸ்ட்டி வேண்டாம் என்றும் நாளை வடமராட்சியில் வந்து நாங்கள் ஈழத்துக்கு ஒப்பான தீர்வுக்கு முயற்ச்ச்சி பண்றம் எல்லாரும் கொஞ்சம் பொறுமையாய் அமைதி காக்கணும் என்று பீலா விடும் அப்ப காலியில் நின்று சமஸ்ட்டியை காலி பண்ணியது அது சிங்களவருக்கு எதிரான ராஜதந்திரம் என்று புளுகும் .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

சொல்லி வாய் மூடுமுன் 

 

Link to comment
Share on other sites

54 minutes ago, குமாரசாமி said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் இப்பவும் தினாவெட்டாய் ரோசம் மானம் இல்லாமல் திரியினம்....

அவையிட்டை போய் உந்த நாதாரிக்கேள்வியை கேளுங்கோ.

எப்பிடியும் பேப்பர் படிச்சுக்கொண்டுதான் பதில் சொல்லுவினம் எண்டது என்ரை நம்பிக்கை :cool:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

Link to comment
Share on other sites

13 hours ago, பெருமாள் said:

 .ஆனால் சிங்கள அரச மட்டத்தில் தமிழருக்கு ஒரு தீர்வு திட்டமும் உருவாகாது இந்தாள் இருக்கும் வரை .

என்ன சொல்லுறியள்? இந்த ஆளை இல்லாமல் போக செய்த முயற்சி உங்களிட ஆலோசனையில.நடந்ததா? இவர் இல்லாவிட்டால். தீர்வு திட்டம் உருவாகியிடுமா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Jude said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

நீங்கள் கேள்விப்படேல்லை...:(

.நாங்கள் மேடைக்கு மேடை இவையின்ரை அதிரடி அனல் பறக்கும் வார்த்தைகளை காதால் கேட்டிருக்கிறம்....

அதிலையும் தமிழீழ தலைநகர தலைவனின் கனல்சொல் அருவியின் அளவு/அழகு சொல்லி வேலையில்லை.

அந்த ஆள் ஆயுத போராட்டத்துக்கும் ஆதரவில்லை.....பனங்கொட்டை தாக்கிறதுக்கும் லாயக்கில்லை. :cool:

Link to comment
Share on other sites

18 hours ago, hasan said:

It is great. He is the first Tamil leader talk to Singhalese people. Doesn't matter he is right or wrong. At least he knows to whom to talk

முதலில் தமிழில் எழுத பழகுங்கோ. பச்சை அடித்து விட்டு ஓடுபவர்களில்  நீங்கள் தான் முதல்வர்.ரவிராஜ் போன்றவர்கள் சிங்கள் மக்கள் மத்தியில் உண்மையை உரக்க சொன்னதால் தான் சிங்கள இனவாதிகளால் கொல்லப்பட்டார் என்பதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது.

Quote

எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று

ஓகோ அவர் ஒரு சிங்கள் புண்ணாக்கு என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

16 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

 

16 hours ago, ஜீவன் சிவா said:

சும்மா எழுதாம அந்த பட்டியலை ஒருக்கா நீளமா வெளியில சொல்லுங்கோ அண்ணை

இங்கு தன்னை திருத்தாம, சமூகத்தை  திருத்திறம் எண்டு வெளிக்கிட்டு தமிழரை அழிச்சவை கன பேர் - அவங்கட கொலைப் பட்டியலே பல கிலோமீட்டர். கிட்டத்தட்ட இந்த உலகையே சுற்றி வரலாம் - அம்புட்டு தூரம் 

இதுக்குள்ள நீங்க வேற சும்மா பகிடி பண்ணிக்கிட்டு 

Mohan Sundaram முள்ளிவாய்க்காலில் எத்தனை வன்புணர்வு கொடூரக் கொலைகளை நடத்தியது இலங்கை இராணுவம்?

அத்தனையும் Channel 4 அம்பலப்படுத்தியதே ஐயா! எத்தனை இராணுவத்தினர் அதற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.அதன் மீதான தங்களின் குற்றப்பத்திரிகை என்ன?

எப்பவுமே பந்துக்கு ஏற்ப அடிப்பதில்லை சிங்சர் என்பது தான் கொள்கை.அது தான் நிஜமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு சிங்களவன் கும்மினது காணாது 
என்பதையே மேலே இருக்கும் சில கருத்த்துக்கள் 
சொல்கின்றன .........

இதுக்கு மேலேயும் எப்படி அடிப்பது என்பதுதான் புரியவில்லை 

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

துவக்கு தூக்குங்கோடா எண்ட சொன்ன வெள்ளை வேட்டிக்காரர் அமிர்தலிங்கம். சம்பந்தர் அப்பிடி பெடியளை ஏத்தி விட்டமாதிரி நான் கேள்விப்படயில்லை.
இந்த ஆள் முதல் இருந்தெ ஆயுத போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லை. பெடியளுக்கும் இதால இவரை பிடிக்காது.

இரத்தப்பொட்டு வைக்கும் போது நீங்கள் சின்ன ஒரு பன்றியாக இருந்த நினைவு. tw_tounge_xd:tw_tounge_xd:tw_tounge_xd:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.