Jump to content

படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!


Recommended Posts

படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!

 
Capture-83-780x405.jpg

 

 

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனையடுத்து, குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2014 ஆம் ஆண்டு காணி உரிமையாளர்கள், அச்சுவேலி இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/story/16/படையினர்-வசமிருந்த-காணி-விடுவிப்பு.html

Link to comment
Share on other sites

On 8/31/2018 at 4:59 PM, நவீனன் said:

6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2 * 16 = 32 பரப்பு 

இதாவது நடக்குதே.

இப்படித்தான் சென்ற வாரமும் காங்கேசன்துறையிலும் 4.7 ஏக்கர் விடப்பட்டது என்று ஊடகங்கள் முழங்கின 

அதுவும் வெறும் 4,7 * 16 = 75 பரப்புத்தான்

பரவாயில்லை இதாவது நடக்குதே.

 

Link to comment
Share on other sites

இனியென்ன காத்தான்குடியானுக்கு வித்து போட்டு ஏஜென்சி காரனுக்கு 60  லட்சம் கொடுத்து போட்டு பிரான்ஸுகோ அல்லது பிரித்தானியாவுக்கோ வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Dash said:

இனியென்ன காத்தான்குடியானுக்கு வித்து போட்டு ஏஜென்சி காரனுக்கு 60  லட்சம் கொடுத்து போட்டு பிரான்ஸுகோ அல்லது பிரித்தானியாவுக்கோ வந்து அசைலம் அடிக்க வேண்டியது தான்.

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

 

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

 

Link to comment
Share on other sites

நானெல்லாம் எப்படி ஊருக்கு போகலாம் தோட்டமோ வயலோ எனக்கு பிடித்ததை செய்து கொண்டு நிம்மதியா இருக்கலாம் என்டு  பார்க்கிறன் அங்க இருப்பவை இங்கால வர இருக்கினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

2 hours ago, அபராஜிதன் said:

நானெல்லாம் எப்படி ஊருக்கு போகலாம் தோட்டமோ வயலோ எனக்கு பிடித்ததை செய்து கொண்டு நிம்மதியா இருக்கலாம் என்டு  பார்க்கிறன் அங்க இருப்பவை இங்கால வர இருக்கினம்..

என் கடைசி கால ஆசையும் அதுதான் ஆனால் முடியுதில்லை அமைதியடைய இங்குள்ள நடப்புகள்.

மூன்று முறை இங்கு வந்து விட்டன் இன்னும் அந்த மரண ஓலம்கள் கேட்டு நடு இரவில் முழிக்க பண்ணுது கனவு .

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

நான் பார்த்தனான் தமிழ் பகுதிகளுக்கு வரும் உதவிகளை மடை திருப்பி சிங்களம் நன்றாக கொளுத்து இருக்கு .

 

பெருமாள்,சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது....உண்மையில் வன்னி மக்களையும் விட கஷடப்படும் மக்கள் சிங்கள கிராமப் பகுதியில் இருக்கிறார்கள்....அதே மடடக்களப்பு வாகரைப் பகுதியில் இருக்கிறார்கள்.

மேலே ஜீவன் சொன்ன மாதிரி கொடுக்கும் காசை திருப்பி அனுப்பினால் சிங்களவன் என்ன செய்வான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2018 at 4:01 AM, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

இருந்தாலும் வெளிநாட்டு மோகம் கொஞ்சம் அதிகம் தான் பாருங்க இங்குள்ள சனத்துக்கு மற்றது உடம்பு வலிக்க கொஞ்சம் வேலை செய்வதென்பது பொறுப்பாத்தான் இருக்கு இங்குள்ள சனத்துக்கு :grin:

 

On 9/2/2018 at 4:16 PM, ரதி said:

 

அண்ணா ,சிங்கள்ப் பகுதிக்கு போய் பார்த்திருக்கிறீங்களே வன்னி எவ்வலவோ மேல் என உணாருவிர்கள்

 

அண்ணேயும் வந்து போனவர் ஆனால் சிங்கள பகுதிகளையும் காட்டுக்குள் இருக்கும் குடில்களையும் கண்டிருக்கமாட்டாரு  அங்கே தமிழர்களை குடியிருக்க சொன்னால் கூட குடியிருக்க மாட்டார்கள் 

5 hours ago, ஜீவன் சிவா said:

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

நாம தான் கண்கூடாக பார்க்கிறோமே இவனுகள் பிடிக்கிற சண்டையை ( மரியாதை இனி கொடுப்பதில்லை அரசியல் வாதிகளுக்கு )

1 hour ago, ரதி said:

பெருமாள்,சும்மா எழுத வேண்டும் என்பதற்காக எழுத கூடாது....உண்மையில் வன்னி மக்களையும் விட கஷடப்படும் மக்கள் சிங்கள கிராமப் பகுதியில் இருக்கிறார்கள்....அதே மடடக்களப்பு வாகரைப் பகுதியில் இருக்கிறார்கள்.

மேலே ஜீவன் சொன்ன மாதிரி கொடுக்கும் காசை திருப்பி அனுப்பினால் சிங்களவன் என்ன செய்வான்?

பொழுது போக வேண்டாமா என்ன :)

Link to comment
Share on other sites

On 9/2/2018 at 4:01 AM, குமாரசாமி said:

 நாடும் ஊரும் எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவனவன் என்னத்துக்கு அகதி முகத்துக்கு ஆசைப்படப்போறான்?
தெற்கு/மத்திய மாகாணங்களைப்போல் வடகிழக்கு மாகாணங்களும் சகல  அபிவிருத்திகளும் வழங்கப்பட்டால் ஏன் நாட்டை விட்டு வெளியேறப்போகின்றான்?

சிங்கள பகுதிகளுக்கும் தமிழ்பகுதிகளுக்கும் பாரபட்சமில்லாமல் சுற்றுலா சென்று வாருங்கள். அப்போது தெரியும் அபிவிருத்தி வேற்றுமையின் வர்ணங்கள்.

உண்மையை கூற போனால் , நட்டில் என்ன தான் பிரச்சனை இப்போது....???

அதற்காக பிரச்சனைகள் இல்லை என்று கூறவில்லை.... ஆனால் நாட்டை விட்டு அகதி வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை.....!!!!!!!

30 வருடங்களுக்கு முன்னர் மக்கள் அகதிகளாக வெளியேறிய பொழுது (ஸ்டுடண்ட் வீசா, வேலை வீசாவும் இதில் அகதிகள் வரையறைக்குள் அடங்கும்)  இருந்த அரசியல் பொருளாதார நிலைமைகள் வேறு ......!!!!  முன்னர்  புலம்பெயர் வாழ்வானது உயிர் பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் வழங்கியது..... இப்பொழுது புலம்பெயர் நாட்டில் BMW,Benz இல் வலம் வருவோர் தாயகத்தில் இருந்தால் ஓட்டை சைக்கிளில் தான் ஓடியிருப்பர், இல்லாவிடில் போரில் சிக்கி உயிர் இழந்து இருப்பர்.

ஆனால் இது 30 வருடங்களுக்கு முற்பட்ட நிலைமை...!!!!!! ஆனால் இப்போதைய நிலைமை வேறு.....!!!

2008 ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் மேற்கு உலகத்தால் முன்னர் வழங்கிய பொருளாதார மேம்பாட்டை வழங்க முடியாது

2009 க்கு முன்னர் புலிகள் இருந்தனர் அவர்கள் எமது மண்ணை காப்பாற்றினார்கள், ஆனால் அவர்கள் இல்லாத நிலையில் எமது மக்களின் தொடர் வெளியேற்றமானது எம்மை பல்வீனமாக்கும்....சிங்களவனால் பெரிய பிரச்சனை வராது......முஸ்லீம்கள் நன்கு திட்டமிட்ட முறையில் முழுமையான இஸ்லாமிய மாவட்டமாக மாற்றவே திட்டமிட்டு செயற்படுகின்றனர்.... எமது வெளியேற்றமானது இதை இலகுவாக போகிறது (மன்னார் மாவட்டம் ஏற்கனவே அவுட்)

அதைவிட முக்கியமாக வெளினாடுகளில் என்ன என்ன சுக போகங்களை அனுபவிக்கலாமோ அவற்றையெல்லம்  இப்பொழுது தாயகதிலும் அனுபவிக்கலாம். இவ்வகையான வாய்ப்பை 2008 பிற்பட்ட இந்தியா-சீனாவை மையப்படுதிய புதிய பொருளாதார கட்டமைப்பு ஏற்பாடுத்தி உள்ளது.....!!!!

அதைவிட ஒரு அரசாங்கத்தால் உட்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே ஏற்படுத்தி குடுக்க முடியும் முதலீடானது தனியார் தரப்பிடம் இருந்து தான் வர முடியும்.

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர் செய்வார்கள்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் செய்வார்கள்

தமிழர் பிரதேசங்களுக்கு யார் செய்வார்கள்....?????

எமது மக்கள் மத்தியில் வெளி நாடு தான் வாழ்க்கை என்பது ஆழ பதிந்து விட்டது, இது  எமது மக்களை தாயத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை பற்றி சிந்திக்காமல் வாழ வைத்துள்ளது.

ஏன் என்றால் எல்லர் மனதிலும் எப்படி வெளியில் செல்லலாம் என்பது தான் கேள்வி...?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் காணி விடுவிப்பு.. அப்பி... தென்டப் புளுவங்.. கன்டப் புளுவங் என்று சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாத இராணுவத் தளபதி முழங்கின மாதிரியான விடயம் தான். ஆனால் இதுவே சில தமிழ் கூலி அரசியல்வாதிகளுக்கும்.. சிங்கள ஆக்கிரமிப்புப் பயங்கரவாத அரசியல்வாதிகளுக்கும்.. இன்னும் ஒரு 50 வருசத்துக்கு அரசியல் முதலீடாக இழுத்தடிக்கப்படும் போலவே தெரிகிறது.

விடுவிக்கிற காணி எல்லாம் இப்ப ஒற்றை இலக்க.. ஏக்கருக்குள் வந்துவிட்டது. 

சிலபேர் மக்களிடம் பெருந்தொகை பணத்தை வாங்கிக் கொண்டு பள்க்கா காணி விடுவிக்கப் போறம் என்று சொல்லி வழக்குகள் தாக்கல் செய்திச்சினம்... இப்ப அந்த வழக்குகளுக்கு என்னாச்சுன்னே தெரியாது. பொக்கட் நிரப்பினதும்.. சும் கோமாளி இன்னொரு கட்டத்துக்கு தாண்டிவிட்டார். சம் கோமாளி அதை விடுப்புப் பார்க்கிறார். இதில் இடையில நல்லாட்சிக் கோசம் வேற.

போர் முடிஞ்சு 10 வருசம் ஆகப் போகுது.. இன்னும் காணி விடிவிப்பு முடியல்லைன்னா.. அது தான் இப்ப அரசியலில் முதலீடுன்னு தெரிஞ்சுக்கனும் மக்களே. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர் செய்வார்கள்.

முஸ்லிம்களுக்கு முஸ்லிம்கள் செய்வார்கள்

தமிழர் பிரதேசங்களுக்கு யார் செய்வார்கள்....?????

நீங்கள் யதார்த்தத்துடன் பந்தி பந்தியாக எழுதினாலும்  ஒரு நிறுதிட்டமான சிறந்த அரசியல் முன்னெடுப்புகள் இல்லாமையாலும் சிறந்த திடகாத்திரமான அரசியல் தலைமை இல்லாமையாலும் தான் தமிழர் பிரதேசமக்கள் அல்லல்படுகின்றனர்.

"உவங்களோ" என்று  ஒரு சில இடங்களில் விளிக்குமளவிற்கு தமிழ் அரசியல் தலைமைகள் இருக்கின்றனர்.  காசு பணத்தை மட்டும் கணக்கில் வைத்து அரசியல் செய்யும் தமிழ்த்தலைமைகள் கொழும்பில் உள்ள குளிரூட்டி வாசஸ்தலங்களில்  எல்லாம் அவன் செயல் என்ற போக்கில் வசிக்கின்றார்கள். உருவாக்கிய இனவாத பிரச்சனையில் குளிர்காய்கின்றவர்களும் இவர்களே.

புலம்பெயர் தமிழரை விட இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் வெளிநாட்டு சொத்துக்களை தேடிப்பாருங்கள் அவர்களின் இலட்சணம் தெரியும்.

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய அரசியல்வாதி ஒரு ஜனநாயகத்துடன் கூடிய சர்வாதிகாரியாக இருக்கவேண்டுமென்பது எனது  எண்ணம். கடுமையான அரசியல் திட்டங்களால் மட்டுமே வடகிழக்கை நீட்டி நிமிர்த்த முடியும்.

Link to comment
Share on other sites

13 hours ago, ஜீவன் சிவா said:

தாறதையே திருப்ப அவங்களுக்கே குடுக்கிறதில நம்ம சி வி கோஷ்டி மும்மரமா இருந்தா அப்படித்தான் / அதுக்குள்ளே இரண்டு வருஷம் மட்டும் இருப்பன் என்றவர் மறுபடியும் தேர்தலிலாம் 

ஐயோ ஐயோ 

வடிவேலுதான் ஞாபகத்துக்கு வருகிறார்

விக்கிக்கு ஒன்றை திறம்பட கொண்டு நடத்திற திறன் பத்தாது தான்.. தற்போது வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக யாரை முன்மொழிவீர்கள்.. உங்கள் பார்வையில் 

Link to comment
Share on other sites

7 hours ago, nedukkalapoovan said:

உந்தக் காணி விடுவிப்பு.. அப்பி... தென்டப் புளுவங்.. கன்டப் புளுவங் என்று சொறீலங்கா சிங்கள அரச பயங்கரவாத இராணுவத் தளபதி முழங்கின மாதிரியான விடயம் தான். ஆனால் இதுவே சில தமிழ் கூலி அரசியல்வாதிகளுக்கும்.. சிங்கள ஆக்கிரமிப்புப் பயங்கரவாத அரசியல்வாதிகளுக்கும்.. இன்னும் ஒரு 50 வருசத்துக்கு அரசியல் முதலீடாக இழுத்தடிக்கப்படும் போலவே தெரிகிறது.

விடுவிக்கிற காணி எல்லாம் இப்ப ஒற்றை இலக்க.. ஏக்கருக்குள் வந்துவிட்டது. 

சிலபேர் மக்களிடம் பெருந்தொகை பணத்தை வாங்கிக் கொண்டு பள்க்கா காணி விடுவிக்கப் போறம் என்று சொல்லி வழக்குகள் தாக்கல் செய்திச்சினம்... இப்ப அந்த வழக்குகளுக்கு என்னாச்சுன்னே தெரியாது. பொக்கட் நிரப்பினதும்.. சும் கோமாளி இன்னொரு கட்டத்துக்கு தாண்டிவிட்டார். சம் கோமாளி அதை விடுப்புப் பார்க்கிறார். இதில் இடையில நல்லாட்சிக் கோசம் வேற.

போர் முடிஞ்சு 10 வருசம் ஆகப் போகுது.. இன்னும் காணி விடிவிப்பு முடியல்லைன்னா.. அது தான் இப்ப அரசியலில் முதலீடுன்னு தெரிஞ்சுக்கனும் மக்களே. ?

அப்படியானால் அரசியல்வாதிகளை மாற்ற வேண்டியது தான்.....!!!!!

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் எந்த ஒரு பயமும் இல்லை , தேர்தல் வந்தால் சமஷ்டி+ புலி ஆதர்வு= தேர்தல் வெற்றி என்று தெரியும் எதுவும் செய்ய போறதில்லை.....!!!!!

இவர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பதை தவிர்த்தால். மட்டுமே ஏதாவது வெளிச்சம் ஏற்படும்.

Link to comment
Share on other sites

On 9/4/2018 at 7:09 AM, அபராஜிதன் said:

விக்கிக்கு ஒன்றை திறம்பட கொண்டு நடத்திற திறன் பத்தாது தான்.. தற்போது வடமாகாண முதலமைச்சர்  வேட்பாளராக யாரை முன்மொழிவீர்கள்.. உங்கள் பார்வையில் 

ஆனது பார்வையில் பல கிலோ மீட்டர் தூரத்திலும் யாரும் தென்படவில்லை என்பதுதான் உண்மையே. அதற்காக நிர்வாகத்திறன் அற்ற ஒருவரைத் தூக்கிப் பிடிக்கவும் நான் தயாரில்லை.

On 9/4/2018 at 3:07 AM, குமாரசாமி said:

தமிழ் மக்களுக்கு வரவேண்டிய அரசியல்வாதி ஒரு ஜனநாயகத்துடன் கூடிய சர்வாதிகாரியாக இருக்கவேண்டுமென்பது எனது  எண்ணம். கடுமையான அரசியல் திட்டங்களால் மட்டுமே வடகிழக்கை நீட்டி நிமிர்த்த முடியும்.

இதுதான் யதார்த்தம் 

ஆனால் யார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

இதுதான் யதார்த்தம் 

ஆனால் யார் 

நீங்கள் ஊரில் இருக்கின்றீர்கள் அல்லவா!

உவ்விடத்து அரசியல் நீரோட்டம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தரமான ஒரு பெயரை சொல்லுங்கள்.

இல்லையேல் இலைமறைகாயாக இருக்கும் ஒருவரையாவது சொல்லுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஊரில் இருக்கின்றீர்கள் அல்லவா!

உவ்விடத்து அரசியல் நீரோட்டம் தங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.

தரமான ஒரு பெயரை சொல்லுங்கள்.

இல்லையேல் இலைமறைகாயாக இருக்கும் ஒருவரையாவது சொல்லுங்கள்! 

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

சூர்யனுக்கு பக்கத்தில் நிக்கும்மட்டும் தான் இந்த பூமிக்கு மரியாதை விலகி தானும் சூரியன் என்று இந்த பூமி தன் பாட்டுக்கு விலகி  போகுமாயிருந்தால் கடைசியில் ஒன்றும்முடியாமல் பிண்டமாக வேண்டியதுதான்.பிணத்துக்கு சமமான ஆளிடம் எந்த திறமையும் இனி இருக்காது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

அதுதான் அம்மாண்ட வலது கை பிள்ளையான் ஆட்சி கிழக்கிலே பார்த்தமே...

அதை விட வேற என்ன 'அத்தாச்சி' வேணும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 

என்ட அண்ணர் தான் உதற்கு சரியான ஆள் என்டால் ஏற்கவா போறீங்கள்?...விதண்டாவாதம் கதைத்து அழிந்து போங்கோ
 

இதென்ன கோதாரி விழுந்த கதையாய்க்கிடக்கு........கொண்ணர் இப்பவே தவண்டடிக்கிறாராம்.....இதுக்கை சரியான ஆள் அவர்தான் எண்டு புலுடாக்கதை வேறை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.