Jump to content

இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இரு தமிழ் வீராங்கனைகள்


Recommended Posts

இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இரு தமிழ் வீராங்கனைகள்

 

 

இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். 

DSC_1601__1_.JPG

ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் (செலான் வங்கி), எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெறுகின்றனர். 

 

சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

 

 

இலங்கை அணி

 

சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அமரவங்ஷ, நௌஷலி ராஜபக்ஷ, துலாங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, ஹசிதா மெண்டிஸ், எழிலேந்தி சேதுகாவலர்.

 

இந்நிலையில்,  ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை ஈட்டும் கங்கணத்துடன் சிங்கப்பூரில் நாளை (செப்டெம்பர் 1) ஆரம்பமாகும் 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/39517

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ணத்தை வென்றெடுக்கும் கங்கணத்துடன் இலங்கை

 

 

(நெவில் அன்தனி)

 

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை ஈட்டும் கங்கணத்துடன் சிங்கப்பூரில் நாளை (செப்டெம்பர் 1) ஆரம்பமாகும் 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளது.

received_697939347208862.jpeg

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக அரங்கில் நாளைமுதல் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள எம்.1 ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் (சம்பியன்ஷிப்) போட்டிகளில் 12 நாடுகள் பங்குபற்றுகின்றன.

 

அதிக தடவைகள் சம்பியனான இலங்கை (1989, 1997, 2001, 2009), மூன்று தடவைகள் சம்பியனான சிங்கப்பூர், இரண்டு தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்றெடுத்த நடப்பு சம்பியன் ஆகியவற்றுடன் மலேசியா, ஹொங்கொங், இந்தியா, ஜப்பான், மாலைதீவுகள், சைனீஸ் தாய்ப்பே, தாய்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், புருணை ஆகிய நாடுகள் நான்கு குழுகளில் போட்டியிடுகின்றன.

 

இலங்கையைப் பொறுத்தமட்டில் முதல் சுற்றில் பாரிய சவால் இருக்காது என்றே கருதப்படுகின்றது. ஆனால் இரண்டாவது சுற்றில் இலங்கைக்கு பாரிய சவால் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

received_232075344153822.jpeg

முதல் சுற்றில் பி குழுவில் சைனீஸ் தாய்ப்பே, இந்தியா ஆகிய நாடுகளை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

 

‘‘முதல் சுற்றில் சைனீஸ் தாய்ப்பே, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிராக 100 கோல்களுக்கு மேல் போடுவதே இலங்கை அணியின் இலக்கு. ஆனால் இரண்டாம் சுற்றில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் எமக்கு பெரும் சவாலாக விளங்கும். இந்த இரண்டு நாடுகளும் எமக்கு காலம்காலமாக பலத்த சவாலாக இருந்துவந்துள்ளன. 

coach_thilaka_jinadasa.JPG

எனவே இந்த இரண்டு நாடுகளுக்கு எதிரான போட்டிகள் குறித்தே நாம் மிகுந்த கவனம் செலுத்தவுள்ளோம். இந்த இரண்டு போட்டிகளிலும் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம்’’ என இலங்கை வலைப்பந்தாட்ட அணி பயிற்றுநர் திலகா ஜினதாச இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் தெரிவித்தார்.

 

‘‘எமது பயிற்சிகள் வெற்றி அளித்துவருகின்றன. வீராங்கனைகளினது ஒழுக்கமும் உயர்வாக இருப்பதுடன் அவர்கள் அர்ப்பணிப்புடனும் பெரு முயற்சியுடனும் விளையாடி வருகின்றனர். மலாவி வலைபந்தாட்ட சுற்றுப்பயணத்தின்போது வீராங்கனைகளின் ஆற்றல்கள் மிகச் சிறப்பாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. எமது அணியில் முதல் எழுவரும் சரி, மாற்று வீராங்கனைகளாக இடம்பெறும் விராங்கனைகளும் சரி திறமையாக விளையாடக் கூடியவர்கள். இப் போட்டி உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிக்கான ஆசிய தகுதிகாண் சுற்றாகவும் அமைவதால் கடும் போட்டி நிலவும் என்பதை நான் அறிவேன். ஆனால் எமது அணியை ஆசிய சம்பியனாக்குவதே எனது குறிக்கோள்’’ என திலகா ஜினதாச மேலும் கூறினார்.

 

அணித் தலைவி தெரிவிக்கையில்,

 

‘‘கடந்த காலங்களைவிட இம்முறை எமது அணி சிறந்த நிலையில் இருக்கின்றது. பயிற்றுநர் திலகா ஜினதாசவிடம் ஏழு மாதங்களாக தொடர்ந்து பெற்ற பயிற்சிகள், மலாவியில் பங்குபற்றிய பயிற்சிப் போட்டிகள் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் என்பன எமக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளன. எமது அணியில் அனுபசாலிகளுடன் துடிப்புமிக்க இளம் வீராங்கனைகளும் இடம்பெறுகின்றனர். எனவே ஆசிய கிண்ணத்தை வென்றெடுக்க கடுமையாக முயற்சிப்போம்’’ என சத்துராங்கனி தெரிவித்தார்.

 

 

பங்குபற்றும் அணிகளின் குழுக்கள்

 

ஏ குழு: மலேசியா, ஜப்பான், மாலைதீவுகள்.

 

பி குழு: இலங்கை, சைனீஸ் தாய்ப்பே, இந்தியா.

 

சி குழு: சிங்கப்பூர், புருணை, பாகிஸ்தான்.

 

டி குழு: ஹொங்கொங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்.

 

DSC_1601__1_.JPG

இலங்கையின் போட்டிகள்

(முதல் சுற்று)

எதிர் சைனிஸ் தாய்ப்பே (செப்.1)

எதிர் இந்தியா (செப். 2)

 

இலங்கை அணி

 

சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அமரவங்ஷ, நௌஷலி ராஜபக்ஷ, துலாங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, ஹசிதா மெண்டிஸ், எழிலேந்தி சேதுகாவலர்.

http://www.virakesari.lk/article/39516

Link to comment
Share on other sites

இலங்கைக்கு ஆரம்பப் போட்டியில் அமோக வெற்றி

 

 
 

ஆசிய வலைபந்தாட்ட போட்டியில் இலங்கை அணி தனது முதாவது போட்டியில் சாதனைமிகு வெற்றியை ஈட்டியது.01.jpg

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் அமைந்துள்ள சிங்கப்பூர் ஓசிபிசி எரினா உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான 11ஆவது எம் 1 ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் பி குழுவில் இடம்பெறும் முன்னாள் சம்பியன்  இலங்கை தனது முதலாவது போட்டியில் சாதனைமிகு வெற்றியை ஈட்டியது.

02.jpg

சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் கோல்மழை பொழிந்த இலங்கை 137 க்கு 5 என்ற கோல்கள் கணக்கில் அமோக வெற்றிபெற்றது.

இன்றைய  தினம் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை மாத்திரமே 100 கோல்களைக் கடந்தது. முதல் இரண்டு போட்டிகளில் 100 கோல்களை இலங்கை கடக்கும் என பயிற்றுநர் திலகா ஜினதாச கூறியதற்கு அமைய முதலாவது போட்டியில் இலங்கை 100 கோல்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

03.jpg

போட்டியின் முதல் கால் மணி நேர ஆட்ட முடிவில் இலங்கை 37 க்கு 2 எனவும் இரண்டாவது கால் மணி நேர ஆட்ட முடிவில் 37 க்கு 0 எனவும் முன்னிலையில் இருந்தது. இதன் பிரகாரம் இடைவேளையின்போது 64 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

மூன்றாவது கால் மணி நேர ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை 32 க்கு 1 என முன்னிலை வகித்ததுடன் 100 கோல்களையும் கடந்திருந்தது.

கடைசி ஆட்ட நேர பகுதியிலும் சைனீஸ் தாய்ப்பேயை துவம்சம் செய்த இலங்கை 31 க்கு 2 என முன்னிலை வகித்து ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 137 க்கு 5 என்ற கோல்கள் கணக்கில் அமொக வெற்றிபெற்றது. இந்த வெற்றியானது இவ் வருடப் போட்டிகளில் இலங்கை அணிக்கு சம்பியானாவதற்கான வாய்ப்பு இருப்பதை எடுத்துக்காட்டியது.

04.jpg

11ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளின் ஆரம்பப் போட்டியில் (சி குழு) புருணையை எதிர்த்தாடிய சிங்கப்பூர் 68 க்கு 19 என்ற கோல்கள் (19 க்கு 4, 20 க்கு 4, 15 க்கு 6, 14 க்கு 5) அடிப்படையில் வெற்றிபெற்றது.

ஏ குழுவுக்கான போட்டியில் ஜப்பானை 88 க்கு 13 என்ற கோல்கள் (22 க்கு 5, 26 க்கு 1, 23 க்கு 3, 17 க்கு 4) அடிப்படையில் மலேசியாவும் டி குழுவுக்கான போட்டியில் பிலிப்பைன்ஸை 71 க்கு 36 என்ற கோல்கள் (20 க்கு 10, 20 க்கு 9, 18 க்கு 6, 13 க்கு 11) கணக்கில் தாய்லாந்தும் வெற்றபெற்றன.

இலங்கை தனது இரண்டாவது போட்டியில் இந்தியாவை நாளை ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது. (என்.வீ.ஏ.)

http://www.virakesari.lk/article/39555

Link to comment
Share on other sites

இலங்கைக்கு இரண்டாவது இலகுவான வெற்றி

 

 
 

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்பில் அமைந்துள்ள சிங்கப்பூர் ஓ.சி.பி.சி. எரினா உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 11 ஆவது ஆசிய கிண்ணப் போட்டிகளில் பி குழுவில் இடம்பெற்ற முன்னாள் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன் இலங்கை தனது இரண்டாவது போட்டியிலும் 100 கோல்களைக் கடந்து அபார வெற்றிபெற்றது.

netball.jpg

தனது முதலாவது ஆட்டத்தில் சைனிஸ் தாய்ப்பே அணியை 137 க்கு 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் அமோக வெற்றிகொண்ட இலங்கை இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை 101 க்கு 29 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டது.

இப் போட்டியின் முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 25 க்கு 8 என்ற கோல்கள் கணக்கிலும் இரண்டாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில்  33 க்கு 4 என்ற கோல்கள் கணக்கிலும் முன்னிலை வகித்த இலங்கை இடைவேளையின் போது 58 க்கு 12 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் மூன்றாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 20 க்கு 7 என முன்னிலை வகித்த இலங்கை கடைசி கால் மணி நேர ஆட்டப் பகுதியில் இந்திய அணியிடம் சிறு சவால எதிர்கொண்டது. எனினும் அப் பகுதியில் 22 க்கு 10 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த இலங்கை இறுதியில் 101 க்கு 29 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்றது.

netball2.jpg

இந்த வெற்றியுடன் பி குழுவில் முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கை ஆசிய கிண்ணத்துக்கான இரண்டாவது சுற்றில் பிரதான அணிகளை சந்திக்கவுள்ளது.

நாளை ஓய்வு தினமாகும். இரண்டாவது சுற்றுப் போட்டிகள் செவ்வாயன்று ஆரம்பமாகும்.

http://www.virakesari.lk/article/39596

Link to comment
Share on other sites

தர்ஜினியின் சிறப்பட்டத்தால் சிங்கப்பூரையும் அச்சுறுத்திய இலங்கை வலைப்பந்து அணி

Tharjini-696x464.jpg
 

தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டத்துடன் இலங்கை வலைப்பந்து அணி, 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணப் பிரிவு (Cup Category) முதல் போட்டியில் சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை 74-41 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து வெற்றிகரமாக முன்னேறுகின்றது.

 

 

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் குழு நிலைப் போட்டிகளில் சைனீஸ் தாய்ப்பே அணியினை 137-5 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்த இலங்கை வலைப்பந்து அணி, அதன் பின்னர் இந்தியாவை 101-29 என்கிற புள்ளிகள் அடிப்படையில் துவம்சம் செய்து மிகவும் வெற்றிகரமான ஒரு ஆரம்பத்தை காட்டியிருந்தது.

இப்படியான ஒரு ஆரம்பத்தை காட்டிய இலங்கையின் வலைப்பந்து அணிக்கு ஆசியாவின் ஜாம்பவான் சிங்கப்பூர் வலைப்பந்து அணியுடனான ஆட்டம் அணியுடனான ஆட்டம் மிகவும் சவலாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் விடயங்கள் எதிர்பார்த்தது போன்று சிங்கப்பூருக்கு சாதகமாக அமையவில்லை.

சிங்கப்பூரின் OCBC அரங்கில் ஆரம்பான போட்டியில் சிங்கப்பூர் வலைப்பந்து அணி முதல் நிமிடங்களில் 7-4 என்கிற முன்னிலையில் காணப்பட்ட போதிலும், இலங்கை வலைப்பந்து அணிக்காக புள்ளி வேட்டையில் ஈடுபட்ட தர்ஜினியின் திறமையான ஆட்டத்தினால் முதல் கால் பகுதி இலங்கைக்கு 18-12 என்கிற புள்ளிகள் கணக்கில் சொந்தமாகியது.

இரண்டாம் கால் பகுதியிலும் முதல் கால் பகுதியினை கைப்பற்றிய உற்சாகத்தில் இலங்கை வலைப்பந்து அணி 28-18 என்கிற புள்ளிகள் அடிப்படையில் தமது முன்னிலையினை நீடித்தது. இந்த கால் பகுதியில் ஹாசித மென்டிஸ் பரிமாறிய பந்துகளின் மூலம் தர்ஜினி சிவலிங்கம் புள்ளிகள் மழை பொழிந்தார்.

 

எனினும், தமது கோல் காப்பாளராக செயற்பட்ட சென் லிலியினை சிந்து நாயர் மூலம் பிரதியீடு செய்த சிங்கப்பூர் வலைப்பந்து அணி பதில் தாக்குதல் நடாத்தியது. இதனால் இலங்கை இராண்டாம் கால் பாகுதியில் பெற்ற புள்ளிகளுக்கு (19) கிட்டவாக சிங்கப்பூர் வலைப்பந்து அணியின் புள்ளிகள் (16) இருந்த போதிலும் போட்டியின் முதல் பாதி 37-28 என்கிற புள்ளிகள் அடிப்படையில் முடிந்தது.

முதல் பாதி – இலங்கை 37 – 28 சிங்கப்பூர்

சிங்கப்பூர் வலைப்பந்து அணிக்கு மூன்றாம் கால் பகுதி அவர்கள் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. சிங்கப்பூர் வலைப்பந்து அணி தமது வீராங்கனைகளில் சில மாற்றங்களையும் செய்து முயற்சித்தது எனினும், அவை எதுவும் கைகூடமால் போன நிலையில் மூன்றாம் கால் பகுதியும் இலங்கை வலைப்பந்து அணியின் ஆதிக்கத்துடன் 58-42 என்கிற புள்ளிகள் கணக்கில் முடிந்தது.

போட்டியின் நான்காவதும் இறுதியுமான கால் பகுதியினை சிங்கப்பூர் 19-16 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றி ஆதிக்கத்தை காட்டிய போதிலும், இலங்கை வலைப்பந்து அணிக்கு முன்னர் இடம்பெற்ற கால் பகுதிகளில் கிடைத்த புள்ளிகள் ஆட்டத்தில் வெற்றி பெற போதுமாக அமைந்தது.

முழு நேரம் – இலங்கை 74 – 61 சிங்கப்பூர்

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஆசிய சம்பியனை வீழ்த்தியது இலங்கை வலைப்பந்தாட்ட அணி

 

11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி நடப்புச் சம்பியனான மலேஷியாவை வீழ்த்தி தனது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.41020287_542670456170632_275411944036578

 

 

ஆசிய நாடுகளில் 12 அணிகள் பங்கேற்றுள்ள 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம்  இரண்டாம் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இத் தொடரில் கலந்துகொண்டு விளையாடிவரும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் சைனிஸ் தாய்பே அணியை 137–5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்தது. 

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவை 101–29 என வீழ்த்தியது. இந்த 3 வெற்றிகளுடன் இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில் சிங்கப்பூர் அணியை 74-–61 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய இலங்கை அணி நேற்று ஆசிய சம்பியன்ஷிப் தொடரின் நடப்பு சம்பியனான மலேஷியாவை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் இரு அணிகளும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கின. ஒவ்வொரு அணியும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள புள்ளிகள் பட்டியல் சரிசமமாகவே நகர்ந்தது.

இறுதியில் முந்திக்கொண்ட இலங்கை அணி 62-–59 என்ற புள்ளிகள் அடிப்படையில் நடப்பு சம்பியனை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்து கொண்டது. 

இரண்டாவது சுற்றின் மூன்றாவது போட்டியில் இன்று ஹொங்கொங் அணியை சந்திக்கின்றது இலங்கை.

http://www.virakesari.lk/article/39854

Link to comment
Share on other sites

ஹொங்கொங்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் இலங்கை

 

 

11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹொங்கொங் அணியை 71:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

singapore.jpg

சிங்­கப்­பூரில் நடை­பெற்­று­வரும் 11 ஆவது ஆசிய வலைப்­பந்­தாட்ட சம்­பி­யன்ஷிப் தொடரில் மொத்தம் 12 நாடுகள் பங்­கேற்று விளை­யா­டி ­வ­ரு­கின்­றன.

இத் தொடரில் மோதிய 5 போட்­டி­க­ளிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி கோப்பைப் பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அந்­த­ வ­கையில் இன்று நடை­பெற்ற இரண்­டா­வது சுற்றுப் போட்­டியில் ஹொங்­கொங் அணி, தர்ஜினியின் ஆட்டத்துக்கும் உயரத்துக்கும் ஈடுகொடுக்க முடியாது 71:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கையிடம் வீழ்ந்தது.

நாளை தொடரின் ஓய்­வு நாள் என்பதுடன் நாளை மறுதினம் முதல் அரை­யி­றுதிப் போட்­டிகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளமையும் குறிப்­பி­டத்­தக்­கது.

http://www.virakesari.lk/article/39901

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணத்திற்கு தகுதி பெறுவதே இலக்கு – தர்ஜினி

 

Tharjini-1-696x464-720x450.jpg

வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவதே இலங்கை அணியின் ஒரே இலக்கு என நட்சத்திர வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஆசிய வலைப்பந்தாட்டத்தில் சாம்பியனாகி, வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறுவதே இலங்கை அணியின் ஒரே இலக்கு.

அதற்கு ஏற்றவாறு எமது அணியினர் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர்“ என தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

லீக் சுற்றில் சைனிஸ் தாய்பே, இந்தியா ஆகிய அணிகளை வென்ற இலங்கை அணி இரண்டாம் சுற்றில் சிங்கப்பூர், மலேஷியா, ஹொங்கொங் ஆகிய அணிகளை வெற்றி கொண்டு கிண்ணத்திற்கான அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேவேளை, இந்தப் போட்டித் தொடரில் அதிக கோல்களைப் போட்ட வீராங்கனையாக தர்ஜினி சிவலிங்கம் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/உலகக்கிண்ணத்திற்கு-தகுத/

Link to comment
Share on other sites

ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி சம்பியனானது

srilanka-netball-2.jpg?resize=696%2C464
சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி இவ்வாண்டிற்கான சம்பியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட இலங்கை அணி 69 – 50 என்ற அடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது. இந்தத் தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியிலும் தோல்வியடைந்திருக்கவில்லை என்பதுடன் 9 ஆண்டுகளின் பின்னர் இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வென்ற சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

srilanka-netball.jpg?resize=650%2C433

http://globaltamilnews.net/2018/94902/

Link to comment
Share on other sites

ஆசிய வலைப்பந்தாட்டத்தில் 5 ஆவது முறையாகவும் வெற்றி வாகை சூடியது இலங்கை

 

 
 

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 2018 தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 69 - 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளது.

net1.jpg

இது­வ­ரையில்  நடை­பெற்­ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டித் தொடர்­களில் இலங்கை 5 ­முறை சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்­ளது.

1985 ஆம் ஆண்டு முதன்­மு­றை­யாக நடத்­தப்­பட்ட ஆசிய சம்­பி­யன்ஷிப் தொடரை மலே­ஷியா வென்­றது.

அதன்­பி­றகு நடை­பெற்ற இரண்­டா­வது தொடரை இலங்கை அணி வென்­றது. அதன்­பி­றகு 1997 ஆம் ஆண்டு, 2001 ஆம் ஆண்டு, 2009 ஆம் ஆண்டு என 4 முறை சம்­பியன் பட்­டத்தை வென்­றுள்­ளது. 

net2.jpg

கடந்த முதலாம் திகதி முதல் நடை­பெற்று வரும் இப்­போட்­டியில் நடப்பு சம்­பி­ய­னான மலே­ஷியா, உப சம்­பி­யனான இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், மாலைத்­தீவு, சீனா, ஜப்பான், ஹொங்கொங், சைனீஸ் தாய்ப்பே, பிலிப்பைன்ஸ், தாய்­லாந்து ஆகி­ய­வற்­றுடன் போட்டி ஏற்­பாடு நாடான சிங்­கப்பூர் ஆகிய 12 நாடுகள் பங்­கேற்­றன.

தலா­மூன்று அணிகள் ஏ,பீ,சி,டி என நான்கு குழுக்­க­ளாக நடை­பெற்ற லீக் சுற்றில் தத்­த­மது குழுக்­களில் முத­லிடம் பெறும் 4 அணிகள் சம்­பி­யன்ஷிப் கிண்­ணத்­துக்­கான பிரி­விக்கு முன்னேறியது.

இதன்­படி குழு ஏயில் மலே­ஷி­யாவும், குழு பீயில்  இலங்­கையும், குழு சியில் சிங்­கப்­பூரும், குழு டியில் ஹொங்­கொங்கும் தத்­த­மது குழுக்­களில் முத­லிடம் பிடித்து சம்­பி­யன்­ஷிப்­புக்­கான பிரிவில் இடம்­பெற்­றன.  

தனது முதல் சுற்றில் விளை­யா­டிய இலங்கை இந்­தி­யாவை 101 – 29 என்ற கோல்கள் கணக்­கிலும், சைனீஸ் தாய்ப்­பேயை 137 – 5 என்ற கோல்கள் கணக்­கிலும் அபார வெற்­றியை ஈட்­டி­யது.

இதே­வேளை, தத்­த­மது குழுக்­களில் இரண்டாம் இடம் பெறும் அணிகள் 5 முதல் 8 வரை­யான இடங்­க­ளுக்­கான போட்டிப் பிரி­விலும், மூன்றாம் இடம் பெறும் அணிகள் 9 முதல் 12 வரை­யான இடங்­க­ளுக்­கான பிரி­விலும் போட்­டி­யிட்­டன.

சம்­பி­யன்­ஷிப்பின் பிர­தான போட்­டியில் பங்­கேற்ற இலங்கை அணி ஹொங்கொங்கை 71 – 48 என்ற கோல்கள் கணக்­கிலும், சிங்­கப்­பூரை 74 – 61 என்ற கோல்கள் கணக்­கிலும், நடப்புச் சம்­பி­யனான மலே­ஷி­யாவை 62 – 59 என்ற கோல்கள் கணக்­கிலும் வெற்றி பெற்று இரண்­டா­வது சுற்­றிலும் முத­லி­டத்தைப் பெற்று அரை­யி­று­திக்கு தகுதி பெற்­றது. 

நேற்­றைய தினம் ஹொங்கொங் அணி­யு­ட­னான அரை­யி­றுதிப் போட்­டியில் பெரும் சவாலை அளித்த ஹொங்கொங் அணியை 55 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தோல்­வி­ய­டை­யாத அணி­யாக இலங்கை இறுதிப் போட்­டிக்கு நுழைந்­தது. 

இதன் முதல் கால்­ம­ணியில் 14 – 13 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை பின்­னிலை­யி­லிருந்­த­போதும், அடுத்த மூன்று கால் மணி­க­ளிலும் முறையே 15 – 10, 12 – 10, 15 – 12 என கோல்­களை போட்டு மொத்­த­மாக 55 – 46 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டின.

இரண்டாவது அரையிறுதியில் மலேஷியாவுடனான போட்டியில் -51 – 43 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சிங்கப்பூர்  இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

அதன்படி இரு அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி சிங்­கப்­பூரின் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் இலங்கை நேரப்­படி  இன்று பிற்­பகல் 1.30 மணிக்கு ஆரம்பமானது.

இதில் இலங்கை அணி 69 - 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் சம்பியின் பட்டத்தை சுவீகரித்து கொண்டுள்ளது.

http://www.virakesari.lk/article/40037

Link to comment
Share on other sites

வலைப்பந்தாட்ட அணிக்கு கட்டுநாயக்காவில் வரவேற்பு!!

 
 
41456179_2639220579438855_13795214150483

 

 

வெற்றிவானை சூடிய இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் சிங்கப்பூரில் இருந்து இன்று காலை நாடு திரும்பினர்.

அவர்களுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களை வரவேற்றார்.

இவர்கள் ஆசிய வலைப்பந்தாட்ட கிண்ணத்தினை தொடர்ச்சியாக 5 ஆவது தடவையாகவும் வென்று இலங்கைக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

41539646_2639220666105513_2082889590431041515120_2639220979438815_4190590863333641489452_2639220679438845_4440299944095541472374_2639221222772124_1322601239971641566215_2639220749438838_39354604257426

https://newuthayan.com/story/19/வலைப்பந்தாட்ட-அணிக்கு-கட்டுநாயக்காவில்-வரவேற்பு.html

 

 

Link to comment
Share on other sites

 

Welcoming Tharjini Sivalingam at Seylan Bank Head Office... winners of the Asian Netball Championship 2018

எழிலின் முதல் அனுபவமும் அடுத்த இலக்கும்

 

நடைபெற்று முடிந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணம் வென்ற இலங்கை அணி வீராங்கனை எழிலேந்தினி சேதுகாவலர் வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய பின்னர் தனது அனுவத்தைப் பகிர்ந்த தருணம்.

 

 

எனது பங்கை முழுமையாக செய்து கொடுத்தேன் – தர்ஜினி

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணம் வென்ற இலங்கை அணியின் முன்னணி வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் நாடு திரும்பியதும், இத்தொடரில் தான் பெற்ற அனுபவம் மற்றும் தான் அவுஸ்திரேலியாவில் பெற்ற அனுபவம் என்பவை குறித்து தெரிவித்த கருத்து.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.