Jump to content

சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்


Recommended Posts

சானியா மிர்சாவிடம் ‘முறைதவறி’ நடந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்: சோயிப் மாலிக் திடீர் புகார்

 

 

 
SANIAMIRZA

சானியா மிர்சா : கோப்புப்படம்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் வங்கதேச கிரிக்கெட் வீரர் முறைதவறி நடந்ததாகக் கூறி சானியாவின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்ட சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். இவை மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் நடந்த டென்னிஸ் போட்டிகளிலும் சானியா மிர்ஸா சிறப்பாகச் செயல்பட்டு பட்டங்களை வென்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.

   
 
SANIA-SHOAIBjpg

சானியாமிர்சா அவரின் கணவர் சோயிப் மாலிக்

 

கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து சானியா மிர்சா வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சானியா மிர்சாவிடம் முறைதவறி வங்கதேச வீரர் ஒருவர் நடந்ததாகக் கூறி அவரின் கணவர் சோயிப் மாலிக் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி சானியா மிர்சாவுடன் வங்கதேசத்தில் நடந்த பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியில் பங்கேற்றேன். அப்போது வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை கிரிக்கெட் கமிட்டி ஆப் தாகா மெட்ரோபோலிஸ்(சிசிடிஎம்) அமைப்பின் தலைவரிடம் சோயிப் மாலிக் வழங்கியுள்ளார் என்று வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவிடம் வம்பு செய்த வங்கதேச வீரர் குறித்து இத்தனை நாட்களாக எந்த விவரமும் வெளிவராத நிலையில் இப்போது வந்துள்ளது.

sabir%20rahmanjpg

வங்கதேச கிரிக்கெட் வீரர் சபிர் ரஹ்மான்

 

வங்கதேச கிரிக்கெட் அணியில் சபிர் ரஹ்மான் மிகவும் சர்ச்சைக் குரிய வீரர் எனப் பெயரெடுத்தவர். 26 வயதான சபிர் ரஹ்மான் கடந்த சில மாதங்களுக்கு முன் மைதானத்துக்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் சில வாரங்கள் சஸ்பெண்ட் செய்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

அதன்பின் பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதால், சபீர் ரஹ்மான் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர், இதையடுத்து இவர் மீது 6 மாதங்கள் வரை தடை விதிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பங்களாதேஷ் ப்ரிமியர் லீக் போட்டியின் போது ஹோட்டலுக்கு அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி பெண் ஒருவரை அழைத்துவந்த புகாரில் சபிர் ரஹ்மானுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தமும் 6 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே சானியா மிர்சாவிடம் முறைதவறி நடக்க முயன்றதாக அவரின் கணவர் சோயிப் மாலிக் புகார் அளித்துள்ள நிலையில், குற்றம் உண்மையானதாக இருந்தால், சபீர் ரஹ்மானுக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் என்று வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சபிர் ரஹ்மான் இதுவரை 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,054 ரன்களும், 41 டி20 போட்டிகளிலும் விளையாடி 906 ரன்களும் சேர்த்துள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24843964.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.