Jump to content

கல்விக்கான செலவு எந்த நாட்டில் மிகவும் அதிகம்? - ஓர் பார்வை


Recommended Posts

கல்விக்கான செலவு எந்த நாட்டில் மிகவும் அதிகம்? - ஓர் பார்வை

பீட்டர் ரூபீன்ஸ்டீன்பிபிசி ப்யூச்சர்

வசந்த காலம் என்றால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புது கல்வியாண்டின் தொடக்கமாக இருக்கும். ஆனால் யாரவது அமெரிக்கா, ரஷ்யா, ஐஸ்லாந்து அல்லது சிலி போன்ற நாடுகளில் வசிப்பவராக இருந்தால் சில விஷயங்கள் முற்றிலும் மாறானதாக இருக்கும்.

பள்ளி மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதலில் சில கேள்விகள்.

எந்த நாட்டில் குழந்தைகள் மற்ற நாட்டினரை ஒப்பிடும்போது பள்ளிக்கு குறைவான காலத்தையே செலவிடுகிறார்கள்?

எந்த நாட்டின் குடும்பத்தினர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களுக்கு அதிகம் செலவு செய்கின்றனர்?

எந்த நாட்டில் ஒருவர் கல்விக்காக தனது வாழ்க்கையில் சராசரியாக 23 வருடங்கள் செலவிடுகிறார் ?

உலகம் முழுவதும் கல்வி முறையில் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள் குறித்த விவரங்கள் இதோ.

27.5 பில்லியன் டாலருக்கு உங்களால் எவ்வளவு பேப்பர் மற்றும் பசை வாங்க முடியும்?

அமெரிக்காவில் சராசரியாக ஒரு குடும்பமானது, குழந்தையின் மழலை கல்வி முதல் மேல்நிலை கல்விப்படிப்பு வரைக்கும் பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டிய உபகரணுங்களுக்காக சராசரியாக 685 டாலர்கள் செலவிடுகிறது. 2005-ல் சுமார் 250 டாலராக இருந்த செலவுத்தொகை இப்போது அதிகரித்துள்ளது. 2018 கல்வியாண்டுக்கு மட்டும் அமெரிக்காவில் சுமார் 27.5 பில்லியன் டாலர் இப்பொருட்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

பல்கலைகழக படிப்புக்கு ஆகும் செலவுகளையும் கருத்தில் கொண்டால் அமெரிக்காவில் இந்த ஆண்டுக்கான செலவு 83பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 5.88லட்சம் கோடி ரூபாய். அதிகம் செலவாவது கணினிக்குதான். சராசரியாக ஒவ்வொரு வீடும் சுமார் 299 டாலர் இதற்கு செலவிடுகிறது.

இதற்கு அடுத்தபடியாக துணி மணி செலவுகள் (286 டாலர்), வரைபட்டிகை மற்றும் கால்குலேட்டர் போன்றவற்றுக்கு 271 டாலர்கள் செலவிடப்படுகிறது. புத்தகம், பைண்டிங் செலவு உள்பட மற்ற செலவுகளுக்கு சராசரியாக 112 டாலர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த செலவு மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பள்ளி மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ரஷ்யாவில் பள்ளி நேரம் எவ்வளவு?

33 வளர்ந்த நாடுகளில், ரஷ்யாவில் தான் ஆரம்ப பள்ளி மாணவர்கள் ஒரு வருடத்துக்கு மிகக்குறைவான நேரமே பள்ளியில் செலவிடுகின்றனர்.

சர்வதேச அளவில் ஒரு பள்ளி மாணவர் வருடத்திற்கு 800 மணி நேரம் செலவிடும் நிலையில், ரஷ்யாவில் ஆரம்ப பள்ளி மாணவ மாணவிகள் 500 மணி நேரம் மட்டுமே செலவிடுகின்றனர்.

அதாவது எட்டு மாத கால கல்வியாண்டில் ஒவ்வொரு வகுப்புக்கும் இடையேயான இடைவேளையோடு சேர்த்து ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகின்றனர். ஆனால் ரஷ்யாவில் கல்வியறிவு விகிதம் கிட்டத்தட்ட 100% என்பதை நினைவில் வையுங்கள்.

பள்ளி மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

டென்மார்க்குக்கு வருவோம். இங்கே ஆரம்பபள்ளி மாணவர்கள் ஒரு வருடத்திற்கு 1000 மணி நேரம் செலவிடுகின்றனர். ரஷ்யாவை விட இரண்டு மாதம் அதிகம் செலவிடுகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளிலும் அதிக நேரம் பள்ளி வகுப்பில் இருக்கின்றனர். கல்வியில் டென்மார்க் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் இருக்கிறது. நீண்ட கல்வியாண்டின் மூலம் சில பலன்கள் இருப்பதை டென்மார்க் உணர்த்துகிறது.

மலிவான விலையில் கல்வி கற்க வேண்டுமா? ஹாங்காங் பக்கம் போறீங்களா?

வீட்டில் இருந்து பள்ளி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை பொருத்து மொத்த செலவுகளில் சராசரியாக ஒரு லட்சம் டாலர் அளவுக்கு வித்தியாசம் இருக்கிறது. பள்ளி வகுப்பு கட்டணம், புத்தக செலவு, போக்குவரத்து செலவு, ஆரம்ப கல்வி முதல் இளங்கலை கல்வி வரையிலான தங்குமிட செலவு உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் உலகிலேயே அதிகம் செலவாவது ஹாங்காங் பள்ளிகளில்தான். அரசின் உதவி, கல்வி கடன், உதவித்தொகை இவற்றுக்கெல்லாம் அப்பால் தங்களது குழந்தைகளின் பள்ளி செலவுக்கு தங்கள் கையில் இருந்து சராசரியாக 1.31 லட்சம் டாலர் வரை (92 லட்சம் ரூபாய்) ஹாங்காங்கில் உள்ள பெற்றோர்கள் செலவு செய்கின்றனர்.

பள்ளி மாணவர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இங்கே 99,000 டாலர் செலவு செய்கிறார்கள். அதற்கடுத்தபடியாக சிங்கப்பூரில் 71 ஆயிரம் டாலர் மற்றும் அமெரிக்காவில் 58 ஆயிரம் டாலர் செலவு செய்கிறார்கள். ஆனால் பிரான்சில் பெற்றோர்கள் 16 ஆயிரம் டாலர்கள் மட்டுமே குழந்தை கல்விக்கு செலவு செய்கிறார்கள்.

பெற்றோர்கள் மட்டும்தான் செலவு செய்கிறார்களா?

இது தோற்ற மெய்ம்மை(விர்ச்சுவல் ரியாலிட்டி), 3டி ப்ரின்ட்டிங், ட்ரான்கள் அதிகம் பயன்படுத்தப்படும் காலம். எனினும், உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் பென்சில் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை.

பென்சில் கண்டுபிடிக்கப்பட்டு 400 வருடங்களான போதிலும் ஒவ்வொரு வருடமும் 15 -20 பில்லியன் பென்சில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பென்சில்

வடமேற்கு பசிபிக்கில் உள்ள சீடர் மரங்கள்தான் பேப்பர் தயாரிக்க பெரும்பாலும் மூல பொருளாக அமைகிறது. சீனா மற்றும் இலங்கையில் கிராஃபைட் அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பென்சிலுக்காக 60,000 முதல் 80,000 மரங்கள் வெட்டப்படுகின்றன.

வாழ்வில் நான்கில் ஒரு பங்கை பள்ளியில் செலவழிக்கும் ஆஸ்திரேலிய மாணவர்கள்

पढ़ाई पर कितना खर्च

ஒரு குறிப்பிட்ட புள்ளியில், பள்ளி வாழ்க்கை முடியவேண்டும். ஆனால் நியூசிலாந்து மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் கிட்டதட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பள்ளி வாழ்க்கை நீடிக்கிறது.

வெவ்வேறு காலகட்டத்தில் ஆரம்ப கல்வி முதல் இளநிலை பட்டபடிப்புக்கான காலம்வரையிலான கட்டத்தில் சராசரியாக மாணவ மாணவிகள் வகுப்புக்குச் செல்லும் காலகட்டத்தை 'பள்ளி வாழ்நாள்' என குறிப்பிடலாம்

ஆரம்ப பள்ளி முதல் பல்கலைகழக படிப்பு வரைக்கும் சுமார் 22.9 ஆண்டுகளை செலவிடுகின்றனர் ஆஸ்திரேலிய மாணவர்கள். அதாவது ஆறு வயதில் இருந்து 28 வயது வரை கல்வி கற்கிறார்கள்.

குறைவான பள்ளி வாழ்நாள் இருப்பது நைஜீரியாவில்தான். அங்கே ஏழு வயதில்தான் ஆரம்ப கல்வி செல்கிறார்கள். நைஜீரிய மாணவர்கள் சராசரியாக 5.3 வருடங்கள் மட்டுமே பள்ளியில் செலவிடுகின்றனர். முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையிலான வித்தியாசம் 17 ஆண்டுகள்.

சரி இந்தியாவில் கல்விக்கு பெற்றோர்கள் எவ்வளவு செலவழிக்கிறார்கள்? இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு பகிரும்பட்சத்தில் உங்களது கருத்தையும் சேர்த்து பகிருங்கள்.

https://www.bbc.com/tamil/global-45382873

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.