Jump to content

பறக்கும் விமானத்தில்.. பெண் பயணியுடன், கடும் வாக்குவாதத்தில் குதித்த தமிழிசை.


Recommended Posts

'பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது

சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

சோஃபியாபடத்தின் காப்புரிமைFACEBOOK Image captionசோஃபியா

இன்று காலையில் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.

விமானம் பயணம் நெடுகசோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.

இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்திவிட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் அதிசயகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.

தமிழிசைபடத்தின் காப்புரிமைFACEBOOK

இதற்குப் பிறகு, சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இதன் பிறகு மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சோஃபியா, வயிற்று வலி என்று கூறியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரை நாளை பிணையில் எடுப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கிடையில் விமான நிலையத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சோஃபியாவுக்குப் பின்னால் ஏதேனும் அமைப்புகள் இருக்கிறதோ என சந்தேகிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

சோஃபியா கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சோஃபியாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கூறியுள்ளார். "அப்படிச் சொல்பவர்களையெல்லாம் சிறையில் அடைப்பீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கிறேன், பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

22 வயதாகும் சோஃபியா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வு மாணவியாக இருந்துவருகிறார். இந்தியாவின் இணைய தளங்கள் சிலவற்றிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தமிழிசை செளந்தரராஜன் அந்த பெண் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் இந்திய அளவில் 'பாசிச பாஜக_ஆட்சி ஒழிக' என்ற ஹாஷ் டேக் டிவிட்டரில் டிரண்டாகி வருகிறது.

 

https://www.bbc.com/tamil/india-45398985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à¯à®ªà®¿à®¯à®¾

பறக்கும் விமானத்தில்.. பெண் பயணியுடன், கடும் வாக்குவாதத்தில் குதித்த தமிழிசை.

தூத்துக்குடி விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை இளம் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது.

அந்தப் பெண் ஏதோ கூறியதால், கோபமடைந்த தமிழிசை செளந்தரராஜன் அந்தப் பெண்ணுடன் சண்டைக்குப் போய் விட்டார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சவுந்தராஜன் இன்று கலந்து கொள்ளவிருக்கிறார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு பயணமானார்.

அப்போது விமானத்தில் தமிழிசையை கண்டதும் சோபியா என்ற இளம் பெண் ஒருவர், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று பாஜகவுக்கு எதிராக திடீரென கண்டன முழக்கங்களை எழுப்ப தொடங்கினார்.

விமானத்துக்குள்ளேயே தனியாளாக இப்படி பாஜகவுக்கு எதிரான முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை உட்பட மற்ற பயணிகள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், பாஜகவை விமர்சித்து கோஷமிட்ட அந்த பெண்ணிடம் தமிழிசை விமானத்திலேயே வாக்குவாதத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய காவல்நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதல் காரணமே இளம் பெண் தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/thamizhisai-soundararajan-argues-with-young-girl-on-the-plan-328876.html

 

###################  #####################  #######################  #####################  ##########################

 

சோபியாவின் ஒரே கோஷம்.. ஒரு மணி நேரத்தில், தேசிய அளவில் வைரல் ஆன  பாசிச பாஜக ஆட்சிஒழிக!

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதை அடுத்து #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் 1 மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆகி உள்ளது..

சோபியா பற்றித்தான் தற்போது தமிழகமே பேசிக்கொண்டு இருக்கிறது. ஒரு விமான பயணம், அவரை இந்தியா அளவிற்கு வைரலாக்கும் என்று அவரே நினைத்து இருக்க மாட்டார்.

நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' பெரிய வைரல் ஆகியுள்ளது. இதனால் தமிழிசைக்கும் சோபியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

இதன் காரணமாக பலரும் சோபியாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். தமிழிசைக்கு, பாஜகவிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்க தொடங்கினார்கள். இதனால் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் 1 மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆனது.

பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் எந்த அளவிற்கு வைரல் ஆனதோ அதே அளவிற்கு சோபியா என்ற பெயரும் வைரல் ஆனது. ஆம், இந்தபெயரை வைத்து நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான டிவிட்டுகள் செய்யப்பட்டுள்ளது.

இவர் ''வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து விட்ட கதை...ஏர்போர்ட்ல முடிஞ்சி இருக்க வேண்டிய பிரச்சனய ஆல் இந்தியா டிரெண்ட் ஆகி போச்சே'' என்றுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/fascist-bjp-rule-down-down-slogan-becomes-viral-after-sophia-328905.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாà®à®¿à® பாà®à® à®à®´à®¿à®

தமிழிசையுடன் வாதிட்ட மாணவி சோபியா அதிரடி கைது.. !

தூத்துக்குடி விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து, பாஜக ஒழிக என முழக்கமிட்ட சோபியா என்ற மாணவி கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணமானார்.

அப்போது விமானத்தில் தமிழிசையை பார்த்ததும், சோபியா என்ற இளம் பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று பாஜகவுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்ப தொடங்கினார்.

தமிழிà®à¯ வாà®à¯à®à¯à®µà®¾à®¤à®®à¯

விமானத்துக்குள்ளேயே இப்படி முழக்கமிட்டதை பார்த்து, தமிழிசை அதிர்ச்சியிடைந்து, பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், விமானம் தரை இறங்கியதும் தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்து, அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவரின் மகள்தான் சோபியா என்றும், 23 வயதுடைய சோபியா கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

15 நாள் சிறை: இதன்பின்னர், சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு பிறகு நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்க சோபியாவை போலீசார் கொண்டு செல்ல இருந்தனர். இந்த நிலையில் அவரை திடீரென மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் போலீஸார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/15-days-police-remand-speak-against-bjp-tamilisai-328896.html

Link to comment
Share on other sites

சோபியாவுக்கு ஜாமீன்: தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

 

 
jkjpgjpg

பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சோபியா (28). இவர் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி மாணவியாக உள்ளார். இந்நிலையில், இவர் திங்கள்கிழமை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணித்தார். அதே விமானத்தில் அப்பெண்ணின் இருக்கைக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணித்தார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் அந்த விமானத்தில் இருப்பதை அறிந்த சோபியா, ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தமிழிசை எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளார்.

 

நண்பகலில் விமானம் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சோபியா மீண்டும் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, வரவேற்பறையில் “விமானத்தில் இப்படிச் சொல்வது சரியா?” என தமிழிசை அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இதனால், அப்பெண்ணுக்கும் தமிழிசைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழிசை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பயணித்த இண்டிகோ அதிகாரிகளிடமும் புகார் அளித்தார். அதிகாரிகள் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்தனர். இதையடுத்து தமிழிசை அங்கிருந்து திருநெல்வேலி சென்றார்.

சோபியா மீது ஐபிசி பிரிவு 505 (1) (பி) பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளுதல், ஐபிசி 290 பொதுஇடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவித்தல், தமிழ்நாடு சிட்டி போலீஸ் பிரிவு 75 போலீஸாருக்கு ஒத்துழைக்காதது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன்பின், போலீஸார் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற 3-வது நீதிபதி தமிழ்ச்செல்வி வீட்டில் இரவில் சோபியாவை ஆஜர்படுத்தினர். அப்போது ஐபிசி பிரிவு 505 (1) (பி) இதற்குப் பொருந்தாது என ரத்து செய்து, மற்ற இரு வழக்குகளில் சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் நெல்லை மகளிர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அப்பெண்ணின் வழக்கறிஞர் அதே நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவை செவ்வாய்கிழமை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24862434.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா?  --சுப்பிரமணியன் சுவாமி

1536027986-9579.jpg

இன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர்.

அதேபோல் சோபியாவை பாஜக தலைவர்கள் ஒரு தீவிரவாதி போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி,

'சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சோபியா கனடாவில் படித்து வருவதாகவும், கனடாவில் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாகவும், கனடாவில் உள்ள தமிழர்கள்தான் 'பாசிசம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும் சுவாமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஏற்கனவே சோபியாவின் பின்னணியை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவரை பின்னால் இருந்து ஏதோ ஒரு இயக்கம் வழிநடத்துவதாகவும் பாஜக தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் இல.கணேசன் கூறியுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தகக்து.

http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/sophia-is-a-ltte-member-says-subramanian-swamy-118090400054_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையை விமான நிலையத்துடன் அப்படியே விட்டிருந்தால் பாரதீய ஜனதாவுக்கு சேதாரம் இல்லாமல் போயிருக்கும். இப்ப சிறை....விவாதம் என பெரிசு படுத்தி உள்ளதையும் கெடுத்து விட்டார்கள். :cool:

Link to comment
Share on other sites

யார் இந்த லூயிஸ் ஷோபியா? - பின்னணி தகவல்

 

சோபியா

PC:aajtak.intoday.in

லூயிஸ்  ஷோபியா... ஊடகங்களிலும் சமூக வலைதளங்களில் இப்போது இந்தப் பெண்ணின் பெயர்தான் டிரெண்டிங். விமானத்தில், இவர் பா.ஜ.க-வின் தமிழக தலைவர்  தமிழிசை செளந்தரராஜனை நோக்கி, ``பாசிச பா.ஜ.க ஒழிக” எனக் கோஷமிட்டதற்காக, கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனையற்ற ஜாமீனில் வெளி வந்திருக்கிறார். 

 

 

இவர் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் (university of montreal), கணிதத்தில் பி.எச்டி  பயின்றுவருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு கலவரம் நடந்தபோது, இந்தக் கலவரத்தின் பின்னணி பற்றியும் வேதாந்தா நிறுவனம் செய்யும் அரசியல் பற்றியும் சமூக வலைதளங்களில் எழுதி வந்தவர். இதைத் தொடர்ந்து, ’தி போலிஸ் ப்ராஜெக்ட்’ (The Polis Project) என்ற இணையதளத்தில், விரிவான பேட்டி ஒன்றையும் அளித்திருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்திலும், திருமுருகன் காந்தியின் கைது நடவடிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவித்தும், சமீபத்தில் எழுத்தாளர்கள் கைது குறித்தும்,  ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதியின் இயக்கிய ’ஒருத்தரும் வரல’ என்ற ஆவணப் படத்துக்கு ஆதரவு தெரிவித்தும், சமூக ஆர்வலர் வளர்மதியைக்  காவல்துறையினர் சித்ரவதை செய்ததைக் கண்டித்தும் எழுதியிருக்கிறார்.

அவரைக் கைது செய்வதற்கு முன்னதாக, ``நான் இப்போது தமிழிசை செளந்தரராஜனுடன் விமானத்தில் இருக்கிறேன். எனக்குப் `பாசிச பா.ஜ.க ஒழிக' என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது. என்னை விமானத்திலிருந்து இறக்கிவிட்டுவிடுவார்களோ?!”, என்று  ட்விட் செய்திருந்தார். இவர் தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து எழுதி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இவரின் கைது நடவடிக்கையை, ஒருபுறம் ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல் என்றும், மறுபுறம் விமானத்தில் கோஷமிடுவது சட்டப்படி குற்றம் என்றும் விவாதிக்கப்பட்டுவருகிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/135909-who-is-lois-sofia.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2018 at 4:52 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சோபியா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவரா?  --சுப்பிரமணியன் சுவாமி

1536027986-9579.jpg

இன்று காலை முதல் இந்திய அளவில் டிரெண்டில் இருந்து வரும் சோபியாவுக்கு பாஜக மற்றும் அதிமுகவினர் தவிர அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சோபியாவை வீரமங்கை என்ற அளவில் புகழ்ந்து வருகின்றனர்.

 

No automatic alt text available.

 

Image may contain: 2 people

ஆஹா... எப்படி எல்லாம், யோசிக்கிறார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1536027986-9579.jpg&key=c9d74ccbdcbb6093

இந்த மாணவியின் முகத்தில் தெரியும்.....தன்னப்பிக்கையும்....உறுதியும்.....தமிழிசையின் முகத்தில்  அவர் ...எத்தனை....பல்கலைக் கழகங்களின் படிகள் ஏறி இறங்கினாலும்....வரவே வராது!

 

மதுரையை...எரித்த கண்ணகியின்....

கண்களில் கூட......

இந்தக் கனல் கனன்றிருக்காது!

 

மோதி....மிதித்து விடு....பாப்பா,

அவர் தம் முகத்தில் உமிழ்ந்து விடு ...பாப்பா!

அந்தப் பாரதி கண்ட ......

புதுமை பெண் நீயென்பேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

No automatic alt text available.

 

Image may contain: 2 people

ஆஹா... எப்படி எல்லாம், யோசிக்கிறார்கள். :grin:

40940660_2473677186191899_32356439950402

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் பிரபல்யமாவதற்கு இப்படியான குறுக்கு வழிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எல்லோரும் பிரபல்யமாவதற்கு இப்படியான குறுக்கு வழிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் 

இது தான்  இப்படியான சிந்தனைகள் தான் திருப்பி கேள்வி கேட்போரை தூரம் தள்ளி வைக்கின்றது.

ஒரு அரசியல்வாதியிடம் பகிரங்கமாகத்தான் கேள்விகளையும் விமர்சனங்களையும் வைக்க வேண்டும்.

அதை நாலு சுவரின் மத்தியில் கேட்டால்  அது  ஊழல்.


ஒரு அரசியல்வாதியை இன்னொரு அரசியல்வாதிதான் கேள்வி கேட்க முடியுமென்றால்.....
வாக்குகள் எதற்கு? தேர்தல் எதற்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சுதந்திரம் இந்தியாவில் வருமா? tw_blush:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2018 at 12:52 AM, குமாரசாமி said:

பிரச்சனையை விமான நிலையத்துடன் அப்படியே விட்டிருந்தால் பாரதீய ஜனதாவுக்கு சேதாரம் இல்லாமல் போயிருக்கும். இப்ப சிறை....விவாதம் என பெரிசு படுத்தி உள்ளதையும் கெடுத்து விட்டார்கள். :cool:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.