Jump to content

கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களுடன் கலைஞனின் உரையாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....கலைஞன்!

வேலையில் இருக்கிறேன்!

வீட்டுக்குப் போன பின்னர் கருத்தெழுதுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். கலைஞன் நேர்காணல் செய்வதும், அதுவும் யாழ் இணையத்திற்காக, மிகவும் நன்றாக உள்ளது.  எல்லோரும் காணொளியை முழுமையாக பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் குருஜி......பின்பு கருத்து எழுதுகின்றேன்......!

Link to comment
Share on other sites

முழுமையாக உரையாடலை கேட்ட பின் உங்கள் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டால் சிறப்பாக அமையும்; நன்றி!

Link to comment
Share on other sites

மிக்க நன்றி கலைஞன்.. கன காலத்திற்கு பிறகு பிரயோசனமான ஒரு நேர்காணால். வாழ்த்துக்கள்

கவிஞரின் பாடல்கள் முன்பு கேட்டிருக்கின்றேன். அவரோடு உரையாடியதை பார்த்தது மிக மன நிறைவு.

சம காலத்தை இலக்கியமாக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மிக உயர்ந்தது. அவர் அதையே செய்தார். இப்ப கூட நாட்டில் நடக்கும் வாள்வெட்டு கஞ்சா போதை புழக்கத்தை இலக்கித்தினூடாக சுட்டிக்காட்ட வேண்டும் என்கின்றார். இலக்கியப் பற்றும் காலத்தோடு ஒன்றிய சமூக அக்கறையும் ஒருமித்த எண்ணமாக வெளிப்படுகின்றது. 

நினைவு மீட்டிய வள்ளலார் பாடலும் பாரதிதாசன் பாடலும் மிக இனிமையாக இருந்தது. எம்மவர்களில் கவிஞர் போன்று சரளமாக இயல்பாக துணிவாக பேசுகின்றவர்கள் அதிகமில்லை. எம் சமூகத்திற்கு இவர் ஒரு முன்உதாரணம். 

மீண்டும் நன்றிகள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் கலைஞன். நல்லதொரு முயற்சி.

நாங்கள் வாழ்வில் சந்திக்கும் பல் துறை சார்ந்தோர்கள் மற்றும் சான்றோர்களை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையுமானால் இப்படி பிரத்தியேக பேட்டிகள் எடுத்து யாழ் களத்தில் கோப்புக்களாக சேமிப்பது மிகவும் போற்றத்தக்கது.

- 14:00 - 17:00 உங்களின் சமகால இலக்கியம் குறித்த கேள்விக்கு; கவிஞர் ஐயா அவர்களின் பதில் நெத்தியடியாக இருந்தது. அவ்வளவு யதார்த்தமான பதில். இந்த பதில் சமகால அரசியல்வாதிகளுக்கு சாளப் பொருந்தும்.

- வாசிப்புத்திறன், மொழிஆளுமை, ரசிப்புத்திறன் மற்றும்  இலக்கணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு கவிதை வரைந்தால் ..கவிதையில் உயிர்ப்பு இருக்காது போன்ற கருத்துக்கள் மிகவும் ஆழமானவை.

கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு இறைவனை தொழுது, 
தமிழ் வளர்த்த அவருக்கும், அவரை இங்கே அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றியயை தெரிவிக்கின்றேன்...?

Link to comment
Share on other sites

நேரம் செலவளித்து உரையாடலை கேட்டு, அத்துடன் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சண்டமாருதன், சசிவர்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நானும் இப்போது தான் முழுமையாகப் பார்த்து முடித்தேன்!

உங்கள் குரலும்.....கேள்விகளும்...அருமை!

கமராவை....முழு நேரமும்....கவிஞர் ஐயாவை நோக்கி இருக்காமல்....இடைக்கிடை...நீங்கள் கேள்விகளைக் கேட்கும் போது...உங்களையும் நோக்கித் திருப்பியிருந்தால்..பேட்டி...இன்னும் உயிருள்ளதாக அமைந்திருக்கக் கூடும் என்பது எனது தாழ்மையான கருத்து!

பேட்டியின் இறுதியில்....மனதில்...ஒரு இனம்புரியாத இறுக்கம் ஏற்பட்டது!

எம்முள்ளேயே இருக்கும்....எத்தனை கவிஞர்களை....அறிவு ஜீவிகளை....எழுத்தாளர்களை...நாம் அறியாமல் இருந்திருக்கிறோம் என்பதனால் தான் அந்த இறுக்கம் எனக் கருதுகிறேன்!

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்....இவ்வாறானவர்களை...வெளிச்சத்துக் கொண்டு வாருங்கள்!

அவர்கள் வாழும் காலத்திலேயே...அவர்களுக்கான அங்கீகாரத்தையும்....எம்மாலானா உதவிகளையும்....செய்வோம்! 

மீண்டும் நன்றி......!

Link to comment
Share on other sites

நன்றி புங்கையூரன் உங்கள் நேரத்துக்கும், கருத்துக்கும். நீங்கள் கூறிய விடயங்களை கவனத்தில் எடுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் அதே திடத்தோடு  எண்ணங்களை வெளிப்படுத்துவது என்பது கவிஞரய்யாவுக்கே உரித்தானது.சமூகம் தொடர்பான கவலையும் மீட்பும் அவரிடம் முன்பைவிட இன்னும் அடர்த்தியாகத்தான் இருக்கிறது. அங்கு இன்றைய காலத்தில் தோன்றியிருக்கும் இலக்கிய வறட்சி பற்றி இதுவரையும் யாரும் வெளிப்படுத்தவில்லை. நேற்று முடிந்தேறிய விடயத்தை மட்டுமே இருக்கும் சிலரும் எழுதுவதும்... அவற்றைக் கடந்த காலமாக கருதி சமூகம் விலகி நடப்பதும் இன்றைய நாளுக்குரியதை சொல்லும் திராணியற்று இலக்கியவெளி இருண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டும் திறன்மிக்க நெம்புகோல் இவர். தமிழும், தமிழர் சமூகமும் அவர்தம் வாழ்வும் பற்றி ஒரு உணர்ச்சிக்குழம்பான கவிஞராக அல்லாமல் சிறந்த திறனாய்வு மிக்க விசாலமான சிந்தனையாளராக பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். எதிர்வரும் 15 - 9 - 2018 அவருடைய நூல் வெளியீட்டுக்கு செல்ல உள்ளேன். பலர் புகழ் மிக்கவர்களாக  சுயநலமிகளாக இலக்கிய வெளிகளில் ஆணவம் நிறைந்தவர்களாக இருக்கும் இந்நாளில் இவரைப்போன்ற ஒரு பெருமகனைப்பார்க்கமுடியாது. இப்போதெல்லாம் நூல் வெளியீடுகளை அறவே தவிர்த்து வருகிறேன். ஆனால் சிலருக்கு மட்டும் தலை வணங்குவேன். அத்தகைய என் வணக்கத்திற்கு உரிவர்கள் மிகச்சிலரே. அதில் கவிஞர் ச. வே பஞ்சாட்சரம் அய்யாவும் ஒருவர்.  அவருடைய நூல் வெளியீட்டுக்குச் செல்வது எனக்கு காலத்தால் கிடைத்திருக்கும் பொக்கிசமாகும். நேர்காணலுக்கு நன்றி கலைஞன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கவிஞர்  பஞ்சாட்சரம் ஐயாவிடம், கலைஞன்  கேட்ட கேள்விகள்...
ஐயாவின்  வாழ்க்கை அனுபவத்திலிருந்து, நாம் என்ன அறிய வேண்டுமோ.... அதனை அழகாக கேட்டிருந்தார். 
யாழ். களத்துக்காக,  பிரத்தியேகமாக... எடுக்கப் பட்ட  பேட்டிக்கு,  ஆயிரம் நன்றிகள் கலைஞன்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகனாக இருந்தால்தான் கலைஞனாக உருவாகலாம் என்று கவிஞர் சொல்லுகின்றார். வாசிப்புப் பழக்கம் குன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கலைஞன் தொடர்ந்தும் நம்மவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்.... இதற்கு முன்பும், இலங்கையில் வசிக்கும் முக்கியமான ஒருவரை....
பல வருடங்களின் முன்பு,   பேட்டி கண்டவர்.  அதுகும்... மறக்க முடியாதது.

அந்த இணைப்பையும்.... இணைத்து விடுங்களேன். ?

எமக்கு... ஒரு  ஒப்பீட்டுக்கு, பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.  ?

Link to comment
Share on other sites

நன்றி கிருபன், தமிழ்சிறி. 

தமிழ்சிறி, நீங்கள் கூறுவது சுவிஸ் வானொலி அஜீவனுடனான உரையாடல் என்று நினைக்கின்றேன். அந்த திரி யாழில் இருக்கவேண்டும், ஆனால் ஒலிப்பதிவு அழிந்துவிட்டது, குறிப்பிட்ட ஈசினிப்ஸ் இணையம் தற்போது பாவனையில் இல்லை என்று நினைக்கின்றேன். கனடாவில் தமிழ் திரைப்படம் எடுத்த கலைஞர் ஒருவரையும் முன்பு பேட்டி கண்டேன். இவை தவிர, அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கே. எஸ். பாலச்சந்திரன் ஐயா, தமிழ் வாணம் (நோர்வே வசீகரன்) இன்னும் சிலரது நூல்கள்/படைப்புக்கள் பற்றியும் முன்பு விமர்சனங்கள் கொடுத்தேன். 

இவை எல்லாம் யாழ் கருத்துக்கள உறவுகள், நண்பர்களின் ஊக்கத்தினால் சாத்தியம் ஆகின.

Link to comment
Share on other sites

  • 4 months later...

அருமையான உரையாடல், கலைஞன். எனது உண்மையான பெயரைச் சூடியவர் கவிஞர் ஐயா தான். நம் ஊரவர். சிறுவயதில் எனது தமிழாசான்; நாட்டுச் சூழலால் ஏற்பட்ட பிரிவு நிறைய விடங்களை ஐயாவிடமிருந்து கற்பதைத் தடுத்துவிட்டது. 

நன்றி கலைஞன். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான பேட்டி குருஜி........! இப்பொழுதுதான் முழுதும் பார்த்தேன். பண்டிதர் அய்யாவின் கம்பீரம் ஒரு சிங்கம் கர்சிப்பதுபோல் இருந்தது....பலப்பல விடயங்களை அருமையாக எடுத்து சொல்கின்றார்......!

அன்று எங்களுக்கு வெளியில் பொழுது போக்குவது என்றால் சினிமாதான் இருந்தது. என்றாலும் கூட தமிழ் படங்கள் எல்லாம் சுத்தமான தமிழ் படங்களாகவும், பாடல்கள் எல்லாம் எதுகை மோனை சந்தங்களுடன் கூடியதாகவும் சிறப்புற அமைந்திருந்தது எமது தலைமுறை செய்த பெரும்பேறு. பிறகு பார்த்தால் எப்போதும் மாறி மாறி கோவில்களில் கருத்தான பாடல்களுடன் கூடிய பிரசங்கங்கள் வில்லுபாட்டுகள் மற்றும் சொற்பொழுவுகள்  நடைபெறும். அங்கு செல்லாமல் வீட்டுக்குள் படுத்திருந்தாலும் கூட அவை ஒலிபெருக்கி வழியாக எமது செவிக்குல் நுழைந்து கொண்டே இருக்கும். இன்றைய தலைமுறையின் வாழ்க்கை பாதையே முற்றிலுமாக மாறி இருக்கின்றது. ஆகவே எல்லாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் ஆகியிருக்கு. வீடுகளிலும் சமூகத்திலும்  பழமொழிகளுக்கு பஞ்சமிருந்ததில்லை. இப்போது அவை பஞ்ச்  டயலாக் ஆக மாறி விட்டது. பழமொழி தெரியாத சின்னஞ் சிறுசுகள் எல்லாம் பஞ்ச் டயலாக்கை பஞ்சு போல் பறக்க விடுகின்றார்கள். நாம் இவற்றை ஏற்றுக் கொண்டுதான் கடந்து போக வேண்டும்......!

பகிர்வுக்கு நன்றி குருஜி.....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.