Jump to content

கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களுடன் கலைஞனின் உரையாடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....கலைஞன்!

வேலையில் இருக்கிறேன்!

வீட்டுக்குப் போன பின்னர் கருத்தெழுதுகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூல் வெளியீடு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். கலைஞன் நேர்காணல் செய்வதும், அதுவும் யாழ் இணையத்திற்காக, மிகவும் நன்றாக உள்ளது.  எல்லோரும் காணொளியை முழுமையாக பார்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் குருஜி......பின்பு கருத்து எழுதுகின்றேன்......!

Link to comment
Share on other sites

முழுமையாக உரையாடலை கேட்ட பின் உங்கள் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டால் சிறப்பாக அமையும்; நன்றி!

Link to comment
Share on other sites

மிக்க நன்றி கலைஞன்.. கன காலத்திற்கு பிறகு பிரயோசனமான ஒரு நேர்காணால். வாழ்த்துக்கள்

கவிஞரின் பாடல்கள் முன்பு கேட்டிருக்கின்றேன். அவரோடு உரையாடியதை பார்த்தது மிக மன நிறைவு.

சம காலத்தை இலக்கியமாக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மிக உயர்ந்தது. அவர் அதையே செய்தார். இப்ப கூட நாட்டில் நடக்கும் வாள்வெட்டு கஞ்சா போதை புழக்கத்தை இலக்கித்தினூடாக சுட்டிக்காட்ட வேண்டும் என்கின்றார். இலக்கியப் பற்றும் காலத்தோடு ஒன்றிய சமூக அக்கறையும் ஒருமித்த எண்ணமாக வெளிப்படுகின்றது. 

நினைவு மீட்டிய வள்ளலார் பாடலும் பாரதிதாசன் பாடலும் மிக இனிமையாக இருந்தது. எம்மவர்களில் கவிஞர் போன்று சரளமாக இயல்பாக துணிவாக பேசுகின்றவர்கள் அதிகமில்லை. எம் சமூகத்திற்கு இவர் ஒரு முன்உதாரணம். 

மீண்டும் நன்றிகள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் கலைஞன். நல்லதொரு முயற்சி.

நாங்கள் வாழ்வில் சந்திக்கும் பல் துறை சார்ந்தோர்கள் மற்றும் சான்றோர்களை சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையுமானால் இப்படி பிரத்தியேக பேட்டிகள் எடுத்து யாழ் களத்தில் கோப்புக்களாக சேமிப்பது மிகவும் போற்றத்தக்கது.

- 14:00 - 17:00 உங்களின் சமகால இலக்கியம் குறித்த கேள்விக்கு; கவிஞர் ஐயா அவர்களின் பதில் நெத்தியடியாக இருந்தது. அவ்வளவு யதார்த்தமான பதில். இந்த பதில் சமகால அரசியல்வாதிகளுக்கு சாளப் பொருந்தும்.

- வாசிப்புத்திறன், மொழிஆளுமை, ரசிப்புத்திறன் மற்றும்  இலக்கணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு கவிதை வரைந்தால் ..கவிதையில் உயிர்ப்பு இருக்காது போன்ற கருத்துக்கள் மிகவும் ஆழமானவை.

கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு இறைவனை தொழுது, 
தமிழ் வளர்த்த அவருக்கும், அவரை இங்கே அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றியயை தெரிவிக்கின்றேன்...?

Link to comment
Share on other sites

நேரம் செலவளித்து உரையாடலை கேட்டு, அத்துடன் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சண்டமாருதன், சசிவர்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் நானும் இப்போது தான் முழுமையாகப் பார்த்து முடித்தேன்!

உங்கள் குரலும்.....கேள்விகளும்...அருமை!

கமராவை....முழு நேரமும்....கவிஞர் ஐயாவை நோக்கி இருக்காமல்....இடைக்கிடை...நீங்கள் கேள்விகளைக் கேட்கும் போது...உங்களையும் நோக்கித் திருப்பியிருந்தால்..பேட்டி...இன்னும் உயிருள்ளதாக அமைந்திருக்கக் கூடும் என்பது எனது தாழ்மையான கருத்து!

பேட்டியின் இறுதியில்....மனதில்...ஒரு இனம்புரியாத இறுக்கம் ஏற்பட்டது!

எம்முள்ளேயே இருக்கும்....எத்தனை கவிஞர்களை....அறிவு ஜீவிகளை....எழுத்தாளர்களை...நாம் அறியாமல் இருந்திருக்கிறோம் என்பதனால் தான் அந்த இறுக்கம் எனக் கருதுகிறேன்!

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்....இவ்வாறானவர்களை...வெளிச்சத்துக் கொண்டு வாருங்கள்!

அவர்கள் வாழும் காலத்திலேயே...அவர்களுக்கான அங்கீகாரத்தையும்....எம்மாலானா உதவிகளையும்....செய்வோம்! 

மீண்டும் நன்றி......!

Link to comment
Share on other sites

நன்றி புங்கையூரன் உங்கள் நேரத்துக்கும், கருத்துக்கும். நீங்கள் கூறிய விடயங்களை கவனத்தில் எடுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த காலத்திலிருந்து இன்று வரைக்கும் அதே திடத்தோடு  எண்ணங்களை வெளிப்படுத்துவது என்பது கவிஞரய்யாவுக்கே உரித்தானது.சமூகம் தொடர்பான கவலையும் மீட்பும் அவரிடம் முன்பைவிட இன்னும் அடர்த்தியாகத்தான் இருக்கிறது. அங்கு இன்றைய காலத்தில் தோன்றியிருக்கும் இலக்கிய வறட்சி பற்றி இதுவரையும் யாரும் வெளிப்படுத்தவில்லை. நேற்று முடிந்தேறிய விடயத்தை மட்டுமே இருக்கும் சிலரும் எழுதுவதும்... அவற்றைக் கடந்த காலமாக கருதி சமூகம் விலகி நடப்பதும் இன்றைய நாளுக்குரியதை சொல்லும் திராணியற்று இலக்கியவெளி இருண்டு கிடப்பதையும் சுட்டிக்காட்டும் திறன்மிக்க நெம்புகோல் இவர். தமிழும், தமிழர் சமூகமும் அவர்தம் வாழ்வும் பற்றி ஒரு உணர்ச்சிக்குழம்பான கவிஞராக அல்லாமல் சிறந்த திறனாய்வு மிக்க விசாலமான சிந்தனையாளராக பல சமயங்களில் பார்த்திருக்கிறேன். எதிர்வரும் 15 - 9 - 2018 அவருடைய நூல் வெளியீட்டுக்கு செல்ல உள்ளேன். பலர் புகழ் மிக்கவர்களாக  சுயநலமிகளாக இலக்கிய வெளிகளில் ஆணவம் நிறைந்தவர்களாக இருக்கும் இந்நாளில் இவரைப்போன்ற ஒரு பெருமகனைப்பார்க்கமுடியாது. இப்போதெல்லாம் நூல் வெளியீடுகளை அறவே தவிர்த்து வருகிறேன். ஆனால் சிலருக்கு மட்டும் தலை வணங்குவேன். அத்தகைய என் வணக்கத்திற்கு உரிவர்கள் மிகச்சிலரே. அதில் கவிஞர் ச. வே பஞ்சாட்சரம் அய்யாவும் ஒருவர்.  அவருடைய நூல் வெளியீட்டுக்குச் செல்வது எனக்கு காலத்தால் கிடைத்திருக்கும் பொக்கிசமாகும். நேர்காணலுக்கு நன்றி கலைஞன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கவிஞர்  பஞ்சாட்சரம் ஐயாவிடம், கலைஞன்  கேட்ட கேள்விகள்...
ஐயாவின்  வாழ்க்கை அனுபவத்திலிருந்து, நாம் என்ன அறிய வேண்டுமோ.... அதனை அழகாக கேட்டிருந்தார். 
யாழ். களத்துக்காக,  பிரத்தியேகமாக... எடுக்கப் பட்ட  பேட்டிக்கு,  ஆயிரம் நன்றிகள் கலைஞன்.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகனாக இருந்தால்தான் கலைஞனாக உருவாகலாம் என்று கவிஞர் சொல்லுகின்றார். வாசிப்புப் பழக்கம் குன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கலைஞன் தொடர்ந்தும் நம்மவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்.... இதற்கு முன்பும், இலங்கையில் வசிக்கும் முக்கியமான ஒருவரை....
பல வருடங்களின் முன்பு,   பேட்டி கண்டவர்.  அதுகும்... மறக்க முடியாதது.

அந்த இணைப்பையும்.... இணைத்து விடுங்களேன். ?

எமக்கு... ஒரு  ஒப்பீட்டுக்கு, பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.  ?

Link to comment
Share on other sites

நன்றி கிருபன், தமிழ்சிறி. 

தமிழ்சிறி, நீங்கள் கூறுவது சுவிஸ் வானொலி அஜீவனுடனான உரையாடல் என்று நினைக்கின்றேன். அந்த திரி யாழில் இருக்கவேண்டும், ஆனால் ஒலிப்பதிவு அழிந்துவிட்டது, குறிப்பிட்ட ஈசினிப்ஸ் இணையம் தற்போது பாவனையில் இல்லை என்று நினைக்கின்றேன். கனடாவில் தமிழ் திரைப்படம் எடுத்த கலைஞர் ஒருவரையும் முன்பு பேட்டி கண்டேன். இவை தவிர, அன்புக்கும் மதிப்புக்கும் உரிய கே. எஸ். பாலச்சந்திரன் ஐயா, தமிழ் வாணம் (நோர்வே வசீகரன்) இன்னும் சிலரது நூல்கள்/படைப்புக்கள் பற்றியும் முன்பு விமர்சனங்கள் கொடுத்தேன். 

இவை எல்லாம் யாழ் கருத்துக்கள உறவுகள், நண்பர்களின் ஊக்கத்தினால் சாத்தியம் ஆகின.

Link to comment
Share on other sites

  • 4 months later...

அருமையான உரையாடல், கலைஞன். எனது உண்மையான பெயரைச் சூடியவர் கவிஞர் ஐயா தான். நம் ஊரவர். சிறுவயதில் எனது தமிழாசான்; நாட்டுச் சூழலால் ஏற்பட்ட பிரிவு நிறைய விடங்களை ஐயாவிடமிருந்து கற்பதைத் தடுத்துவிட்டது. 

நன்றி கலைஞன். ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான பேட்டி குருஜி........! இப்பொழுதுதான் முழுதும் பார்த்தேன். பண்டிதர் அய்யாவின் கம்பீரம் ஒரு சிங்கம் கர்சிப்பதுபோல் இருந்தது....பலப்பல விடயங்களை அருமையாக எடுத்து சொல்கின்றார்......!

அன்று எங்களுக்கு வெளியில் பொழுது போக்குவது என்றால் சினிமாதான் இருந்தது. என்றாலும் கூட தமிழ் படங்கள் எல்லாம் சுத்தமான தமிழ் படங்களாகவும், பாடல்கள் எல்லாம் எதுகை மோனை சந்தங்களுடன் கூடியதாகவும் சிறப்புற அமைந்திருந்தது எமது தலைமுறை செய்த பெரும்பேறு. பிறகு பார்த்தால் எப்போதும் மாறி மாறி கோவில்களில் கருத்தான பாடல்களுடன் கூடிய பிரசங்கங்கள் வில்லுபாட்டுகள் மற்றும் சொற்பொழுவுகள்  நடைபெறும். அங்கு செல்லாமல் வீட்டுக்குள் படுத்திருந்தாலும் கூட அவை ஒலிபெருக்கி வழியாக எமது செவிக்குல் நுழைந்து கொண்டே இருக்கும். இன்றைய தலைமுறையின் வாழ்க்கை பாதையே முற்றிலுமாக மாறி இருக்கின்றது. ஆகவே எல்லாம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் ஆகியிருக்கு. வீடுகளிலும் சமூகத்திலும்  பழமொழிகளுக்கு பஞ்சமிருந்ததில்லை. இப்போது அவை பஞ்ச்  டயலாக் ஆக மாறி விட்டது. பழமொழி தெரியாத சின்னஞ் சிறுசுகள் எல்லாம் பஞ்ச் டயலாக்கை பஞ்சு போல் பறக்க விடுகின்றார்கள். நாம் இவற்றை ஏற்றுக் கொண்டுதான் கடந்து போக வேண்டும்......!

பகிர்வுக்கு நன்றி குருஜி.....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.