Jump to content

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!


Recommended Posts

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!

 

 

 

 

 

 

அம்பாறை மாவட்டத்தின் வலத்தாப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில் புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி அவ‌ர்களது வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (31) அதிகாலை அம்பாறை வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சோதிநாதன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழு ஒன்று தங்களது வீட்டுக்கு தீவைத்து கொழுத்தியதாகவும் இதன்போது வீட்டில் இருந்த முச்சக்கர வண்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் பொது தாங்கள் விழித்துக் கொள்ளாது இருந்திருந்தால் தங்களது மூன்று மாத குழந்தை உட்பட அனைவரும் தீயில் எரிந்து இறந்திருப்போம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

சம்பவத்திற்கான பின்னணி!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

மட்டக்களப்பு கரடியணாறு பகுதியைச் சேர்ந்த சோதிநாதன் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியான வினோஜினி மற்றும் அவரது மூன்றுமாதக் குழந்தை என குடும்பமாக தனிமையில் வசித்து வந்த குடும்பம் தங்களது தொழில் நிமிர்த்தம் கடந்த ஐந்து வருடங்களாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வலத்தாப்பட்டி பகுதியில் உள்ள ஸ்மையில் புரத்தில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த கிராமம் சுனாமிக்கு பின்னர் உருவாகிய கிராமம் என்பதுடன் அது தற்போது ஸ்மையில் புரம் என்ற பெயருடன் முழு முஸ்லீம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு ஒரு சில தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் வசிப்பதாக இருந்தால் நீங்களும் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமிய மதவாதிகள் இவர்களை அச்சுறுத்தி வந்த நிலையில் பல தடவைகள் சில நபர்களுடன் கைகலப்பு நடைபெற்ற பொலீசில் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்யின் ஊடாக அதிக வருமானத்தை பெற்றுவந்த குறித்த குடும்பம் ஸ்மையில் புரத்தில் உள்ள இஸ்லாமியர்களினால் பல தடவைகள் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாரு வற்புறுத்தப் பட்டுள்ளனர் இன் நிலையிலேயே அந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய 9 பேர்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருடைய மனைவியின் குடும்பத்தில் இருந்த 09 பேர் இது வரை இஸ்லாம் மதத்திற்கு சென்றுள்ளதாகவும்.

அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நெல்லிக்காடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இவர்களும் தொழில் நிமிர்த்தமாக அம்பாறை வலத்தாப்பட்டி கிராமத்திற்கு சென்று வந்த போது சம்மாந்துரையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் ஊடாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பல குடும்பங்களை பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி இஸ்லாம் மதத்திற்கு இணைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கண்டுகொள்ளாத பொலிசார்!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்மாந்துரை பொலீசில் முறைப்பாடு செய்தும். குறித்த சம்பவம் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளாத பொலிசார். ஒரு குடும்பத்தின் கொலை முயற்சியை சிவில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

வலத்தாப்பட்டி ஸ்மையில் புரத்தில் உள்ள சில இஸ்லாமிய மத வாத குழு தங்களது குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும். தங்களது மதத்தை விட்டு இஸ்லாம் மதத்திற்கு நாங்கள் மாற முடியாது எனவும் தாங்கள் தங்களது வீட்டில் வைத்து வணங்கிய இந்து கடவுள்களை எடுத்துக் கொண்டு கரடியணாறு பகுதிக்கு வந்துள்ளதாகவும் இனிமேல் அங்கு சென்றால் தங்களுக்கு எதுவும் நடக்கலாம் என்பதால் இந்த அரசாங்கம் தங்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
 
இதையும் தவறாமல் படிங்க

https://www.ibctamil.com/srilanka/80/105639?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் இஸ்லாமிய மதவாதம் ஆரம்பித்து விட்டது. 
இதை தடை செய்ய முயன்ற ஞனாசரவையும் சிறையில் அடைத்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, colomban said:

இலங்கையிலும் இஸ்லாமிய மதவாதம் ஆரம்பித்து விட்டது. 
இதை தடை செய்ய முயன்ற ஞனாசரவையும் சிறையில் அடைத்து விட்டார்கள்.

அவர் மொக்குத்தனமா நீதிமன்றத்தில குழப்படி பண்ணிபோட்டார்.

எங்கண்ட தூசனப் பிக்கர், சுமனை தேரரிட்ட ஓடிப் போய், விசயத்தைக் காதில போட்டால், மனிதர் சன்னதம் கொண்டாடும். 

உங்க அமைச்சர் முஸ்தபாவின் மருமகன், சிட்டினிலே மாட்டுப் பட்டிருக்கிறதை பார்த்தால், நீங்கள் சொல்லுறது சரிதான். 

Link to comment
Share on other sites

இதையெல்லாம் நான் சில வருடங்களுக்கு முன்னர் எதிர்வு கூறியபோது எந்தவொரு யாழ்  களத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதைவிட நிர்வாகம் எச்சரிக்கை புள்ளியும் இட்டு இருந்தது.....!!!!!

இப்பொழுது எல்லாரும் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 க்குப் பின் முஸ்லீம் மதப் பயங்கரவாதம்... தனது தமிழ் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை அராபிய நாடுகள் மற்றும் பாகிஸ்தான்.. மற்றும் இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத அமைப்புக்களின் உதவியுடன் கடுமையான முன்னெடுத்து வருகிறது.

ஆனால் எங்களில் சிலர் முஸ்லீம் பயங்கரவாதத்திற்கு சகோதர முலாம் பூசி.. தமிழ் மக்களிடம் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானவர்களால்.. இந்த முஸ்லீம் பயங்கரவாதத்தை எதிர்த்து கடிதம் எழுத முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்.

இலங்கைத் தீவில்.. முஸ்லிம்.. மற்றும் சிங்கள பெளத்த பயங்கரவாதிகள் எல்லாரும் சேர்ந்து புலிகளை மீண்டும் வா வா என்று அழைக்கிறார்கள் போலவே தெரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

'இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்'; வீட்டிற்கு தீவைப்பு! அச்சத்தில் வாழும் தமிழ் குடும்பம்!!

வடமாகணத்தை விட்டு வெளியேற்றியதில் என்ன தவறு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பாந்துறை போலீஸெல்லாம் அல்லாண்ட ஆக்கள் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயங்களை கவனித்து நாட்டினைக் காக்க ஞனாசரவை வெளியே விட வேண்டும்! ?

Link to comment
Share on other sites

9 hours ago, nedukkalapoovan said:

.

இலங்கைத் தீவில்.. முஸ்லிம்.. மற்றும் சிங்கள பெளத்த பயங்கரவாதிகள் எல்லாரும் சேர்ந்து புலிகளை மீண்டும் வா வா என்று அழைக்கிறார்கள் போலவே தெரிகிறது. 

நீங்கள் இப்படியே புலி வரும் எண்டு கனவு கண்டு கொண்டே இருங்கோ....!!! புலி இல்லை பூனையும் வராது....  அவன் வன்னியில் 1/3 பங்கை ஆக்கிரமித்துக் விட்டான், கிளி.முல்லையும் தான் மிச்சம்.

வடமரட்சி கிட்டதட்ட அவனது கட்டுபாட்டில், தென்மராட்ட்சி மிக வேகமா இஸ்லாமிய மயமாகிறது.

 

மிச்சத்துக்கு சிங்களவனை திட்டி போட்டு ஒன்றும் செயாதிங்கோ , தமிழ் இனத்தின் தற்போதைய எதிரி சிங்களவன் இல்லை .....!! முஸ்லிம் தான் .... இது புரியாமல் எங்கடைகள்  இன்னமும் சிங்களவன் எதிரி எண்டு போட்டு முஸ்லீம் மதவாத ஆக்கிரமிப்பை கண்ணை மூடிக்கொண்டு பார்த்து கொண்டிருக்கும்.

மக்கள் மத்தித்யில் ஏதாவது விழிப்புணர்வு செய்தோமா...???

 

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

இந்த விசயங்களை கவனித்து நாட்டினைக் காக்க ஞனாசரவை வெளியே விட வேண்டும்!

ஞானசார ஏன் கவனிக்க வேண்டும், தமிழர்கள் எல்லாம் எங்கே...??????!!!!!!!!!!

நல்லூர் திருவிழாவில் ஒரு கூட்டம் பிசி

சாமத்திய சடங்கு கொண்டாடுரதில ஒரு குறூப் பிசி...!!!!

வடக்கு மாகாணத்தில இருக்கிற காணி எல்லத்தையும் முஸ்லீமுக்கு விக்கிறதில பிசி...!!!!!!

எப்படி வெளிநாட்டில அசைலம் அடிக்கலாம் எண்டதில இன்னொரு குறூப் பிசி....!!!!

அப்படி அசைல்ம் அடிக்க ஏலாட்டி எப்படி கல்யாணம் கட்டி வெளிநாட்டுக்கு வரலாம் என்பதில் இன்னொரு குறூப் பிசி....!!!!

இதுக்கு என்ன ம*******க்கு போராட்டம் விடுதலை என்று  இந்த பரதேசி கூட்டம் வெளிக்கிட்டது என்று தான் எண்ட கேள்வி...!!!!!

நாம் எல்லாம் சூடு சுரணை உள்ளவர்களாக இருந்தால் இந்த குடும்பத்தை மிரட்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம், அடுத்து மதம் மாறிய இவர்களது உறவினர்களை மீண்டும் தமிழர் ஆக்குவோம்.....!!!!!

எங்களிடம் அதற்கான பண வசதி உண்டு, சட்ட அறிவு உண்டு..!!! இலங்கை அரசு செய்யாவிடில் ஜெனிவா வரை செல்வோம்...!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லங்காஸ்தான் உருவாக்காமல் ஓய மாட்டார்கள் போல கிடக்கு .. ?

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லங்காஸ்தான் உருவாக்காமல் ஓய மாட்டார்கள் போல கிடக்கு .. ?

குறிப்பாக மேலே குறிப்பிட்ட வலத்தபிட்டி கிராமம் முழுமையாக மதமாற்றம் மூலம் இஸ்லாமியமயமாக்கப்பட்ட கிராமம்.

இதற்கான உத்தியோகபூர்வ தரவுகள் உள்ளன.

Link to comment
Share on other sites

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

உங்களுடைய வெகுளிதனத்தை நம்ப முடியவில்லை, நீங்கள் இன்னமும் புட்டும் தேங்காய் பூவும் நிலையில் தான் இருகின்றீர்கள்.

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

வடமாகணத்தை விட்டு வெளியேற்றியதில் என்ன தவறு? 

தவறே இல்லை என்று அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

பாரம்பரிய முசுலீம்கள் இதனைச் செய்ய முற்பட்டிருப்பார்கள் எனத் தோன்றவில்லை. முசுலீம் மதத்திற்கு மாறிய வந்த மக்களே இதனை முன்நின்று செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

மட்டக்களப்புக்கு வந்த யாழ்ப்பாணத்தவரை யாழ்ப்பாணி என்று துரத்த முற்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்களல்ல, முன்பே மட்டக்களப்புக்கு வந்து குடியேறியிருந்த யாழ்ப்பாணத்தவரின் செயற்பாடுகளை நேரில் கண்ட அனுபவமுள்ளது.

 

9 hours ago, Dash said:

உங்களுடைய வெகுளிதனத்தை நம்ப முடியவில்லை, நீங்கள் இன்னமும் புட்டும் தேங்காய் பூவும் நிலையில் தான் இருகின்றீர்கள்.

என்று , கிஸ்புல்லாவின் தமிழருக்கு எதிராக தாம் செய்தவற்றை விபரித்த தம்பட்ட வீடியோவை பார்த்தேனோ, அன்றே இவர்கள் தொடர்பான எனது வெகுளித்தனத்தை மூட்டை கட்டி வைத்தேன்.

தேவை என்றால், தமிழ் பேசும்....பிட்டும் தேங்காய்பூவும் புண்ணாக்கு கதை... தேவை சிங்களத்தரப்பிலிருந்தாயின், தமிழர் , இஸ்லாமியர் கதை... 

தனது மக்களின் காணித்தேவைக்காக, ரிசாத்தின், வில்பத்து தேசிய காடழிப்பு, முல்லைத்தீவு காடழிப்பு போன்றவை மிகவும் கிரிமினல் தனமானது.

கொழும்பின் மேல்தட்டு மாணவர் , அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தொடர்பில் கைதாகியமை சாதாரணமாணதல்ல.

கிழக்கின், மத்திய கிழக்கு தொடர்புகள் அபாயகரமானவை. பாகிஸ்தான், இலங்கையின் கிழக்கு ஊடாக தென்னிந்தியாவை குறிவைக்கலாம் என்பது ரோவின்  இப்போதைய தலைவலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Dash said:

மிச்சத்துக்கு சிங்களவனை திட்டி போட்டு ஒன்றும் செயாதிங்கோ , தமிழ் இனத்தின் தற்போதைய எதிரி சிங்களவன் இல்லை .....!! முஸ்லிம் தான் .... இது புரியாமல் எங்கடைகள்  இன்னமும் சிங்களவன் எதிரி எண்டு போட்டு முஸ்லீம் மதவாத ஆக்கிரமிப்பை கண்ணை மூடிக்கொண்டு பார்த்து கொண்டிருக்கும்.

மக்கள் மத்தித்யில் ஏதாவது விழிப்புணர்வு செய்தோமா...???

தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு வந்து இப்படியான முஸ்லீம் பயங்கரவாதமும்.. சிங்கள பெளத்தர அரசாங்கத்தின் பயங்கரவாதமும் முறியடிக்கப்படும் என்று நினைத்தால் அப்படியே நினைத்துக் கொண்டே இருக்க வேண்டியான்.

இதெல்லாம்.. ஜெனிவா போய் நடக்கிற காரியமில்லை.

இப்படியான தமிழ் மக்களுக்கு எதிரான மதவாத இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சிங்கள பெளத்தத்தின் இன அழிப்பு நடவடிக்கைகள்.. சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. 

அதேவேளை.. இவற்றிற்கு எதிராக.. குரல் கொடுக்க மறுக்கும் எமது அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

இப்படியான பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான சர்வதேசத்தின் நீதியை கோர வேண்டும்.

அரசியல் ரீதியாக எமது மக்கள் சந்திக்கும்.. இப்படியான துயர்களை.. உடனுக்குடன் வெளிப்படுத்தும்.. பிரபல்யப்படுத்தும்.. மக்கள்.. மண் நலன் சார்ந்த அரசியல் தலைவர்கள்.. பிரதிநிதிகளை மக்கள் உள்ளூரில் உருவாக்க வேண்டும். வளர்த்தெடுக்க வேண்டும்.

இளைய சமூகம்.. இவற்றிற்கு எதிராக முறையாக குரல்கொடுப்பதோடு நிறுவனப்படுத்திய வகையில் உடனடி எதிர்ப்புக்களை சாத்தியமான சட்ட நடவடிக்கைகளை.. எதிர்ப்புக்களை தடைகளை உருவாக்க வேண்டும்.  இவ்வாறான செயல்களுக்கான ஆதாரங்களை.. சாட்சியங்களை..  ஆவணப்படுத்துவதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

ஒரு சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறை உருவாகவல்ல.. சர்வதேச அழுத்தம் ஒன்றினால் தவிர.. எமது மக்களையும் மண்ணையும் அவ்வளவு இலகுவில்.. முஸ்லீம் மதப் பயங்கரவாதத்திடம் இருந்தும்... சிங்கள பெளத்த அரச பயங்கரவாதத்திடம் இருந்தும் பாதுகாக்க முடியாது. இதுதான் கள யதார்த்தம். 

அதைவிடுத்து.. அசைலம் அடிக்கிறவனையும்.. கல்யாணம் முடிக்கிறவனையும்.. ஜெனிவாவையும்.. கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்.. அதனால்.. நமக்கு எந்த நன்மையும் விளையாது.

மூன்றாம் உலக நாடொன்றில் அடிமையாக மூன்றாம் நிலை பொருளாதார நிலையில் வாழும் ஓர் இனத்துக்கு பணக்கார நாடுகளில் நல்ல வாழ்க்கை அமைய ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்றால்.. எந்த இனமும் எம்மவர் போலத்தான் நடந்து கொள்ளும். அதற்குள் இருந்து தான் நாம் போராடிப் பெற வேண்டும்.. உரிமைகளை. திட்டி ஒரு பிரயோசனமும் இல்லை. ?

Link to comment
Share on other sites

கிழக்கில் இசுலாமியர்களால் வீடு எரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் பரிதாப நிலை!

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

அம்பாறை வளத்தாப்பட்டி இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் குறித்தும் அதற்கான பின்னணி குறித்த உண்மைகளை செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

குறித்த செய்தி கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் மதமாற்றம் குறித்த உண்மைகளையும் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பதன் உண்மை தன்மையையும் உலகிற்கு எடுத்து காட்டியிருக்கிறது.

இது வரை நாங்கள் தமிழர்களை மதம் மாற்றவில்லை என்று கூறிய இஸ்லாமிய மத தலைவர்கள் இந்த செய்தியின் பின் நாங்கள் தமிழர்களை வற்புறுத்தி மதம் மாற்றவில்லை அவர்களாகவே விரும்பி மதம் மாறியுள்ளார்கள் என்று ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நிலமை தலைகீழாக மாறிவிட்டது.

குறித்த செய்தி கிழக்கில் தமிழின அழிப்பு நடைபெறுகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இஸ்லாமிய மதமாற்றம் என்பது தமிழின அழிப்பே!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அவர் அவர் விரும்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இலங்கையில் உண்டு ஆனால் அதே சுதந்திரம் ஒரு இனத்தை அழிக்கிறது என்றால் என்ன செய்வது?

கிழக்கில் இடம்பெறும் இஸ்லாமிய மாற்றம் என்பது வெறும் மத மாற்றம் அல்ல அது ஒரு இன மாற்றம் அதாவது மத மாற்றம் என்ற பெயரில் நடைபெறும் தமிழின அழிப்பு.

இதனால் ஒரு தேசிய இனம் மிகவும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

கிழக்கை பொறுத்தமட்டில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இஸ்லாமிய மயமாக்கல் மிகவும் திட்டமிட்டு அரவு நாடுகளில் உதவியுடன் அபிவிருத்தி என்ற போர்வையில் நடைபெறுகிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

முஸ்லீம்களின் பிரதேசங்களில் கடைகளையோ ஆலயங்களையோ வீடுகளையோ தமிழர்கள் கட்டமுடியாது. ஒரு அங்குலம் நிலத்தை கூட தமிழர்கள் வாங்க முடியாது அப்படி அவர்களது பிரதேசத்தில் வாழ்வதாக இருந்தால் அவர்கள் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் இன்நிலையில் தமிழர்களின் பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் எதுவும் செய்யலாம் என்ற நிலை கிழக்கில் உண்டு.

இந்த உண்மையை கூறினால் இந்த ஊடகம் இனவாதத்தை தூண்டுகிறது என்று முழக்கம் இடுவார்கள். இன வாதமோ மத வாதமோ அல்லது பாரிச வாதமோ உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

எனவே கிழக்கில் ஒரு இனம் அழிக்கப்படுகிறது என்பதற்கு இந்த குடும்பத்தில் இருந்து இஸ்லாத்திற்கு மாறிய 9 பேருடன் இஸ்லாத்திற்கு மாற மறுக்கும் அந்த குடும்பமும் ஒரு சாட்சி.

அவர்கள் விரும்பி போனார்களோ இல்லை வற்புறுத்தப்பட்டார்களோ என்பதற்கு அப்பால் இது போன்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மத மாற்றங்கள் கிழக்கில் நடைபெறு‌கிறது என்ற உண்மையை எமது ஊடகம் பதிவு செய்கிறது. இல்லை என்று வாதிடுபவர்கள் இதற்கான மறுப்பை ஆதாரத்துடன் அனுப்பி வையுங்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இன்றைய நிலை!

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

தமிழன் ஒருவரின் வீடு ஆட்டடோ எரிக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்கள் இரவு நித்திரையில் இருந்த போது எரித்துள்ளார்கள் அவர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் அவர்களும் தீயில் எரிந்து இருப்பார்கள். அவர்கள் நாளாந்தம் வருமானம் தேடிய முச்சக்கர வண்டியும் எரிக்கப்பட்டுள்ளது இதற்கெல்லாம் விடை தேடாத சில ஊடகங்கள் பாதிக்கப்பட்ட குடும்பம் குறித்து கவலை கொள்ளாத ஊடகங்கள் இஸ்லாமிற்கு மதமாறுமாரு வற்புறுத்தினார்களா? இல்லை என்பதை மட்டும் நிருபிப்பதற்கு செய்தி தயாரிப்பில் ஈடுபட்டு ஊடகத்தின் மனிதாபிமானம் எவ்வாறு இருந்தது என்று அதை பார்த்தவர்களுக்கு தெரியும்.

பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நீதியை பெற்றுக்கொடுத்து. அவர்கள் தங்கியிருந்த வீட்டை எரித்தவர்கள் யார் என்பதை வெளியில் கொண்டுவராது அந்த சம்பவத்திற்கான காரணத்தை தேடாது முற்று முழுதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை இழிவு படுத்தும் வேலையை ஊடகம் என்ற போர்வையில் சென்ற அந்த இஸ்லாமிய மதவாத குழு கனகச்சிதமாக செய்துள்ளது.

அவர்களுக்கு ஏதும் நடந்திருந்தால் இதே பதிலைத்தான் சொல்லி இருப்பார்கள் அது அவர்களது ஒற்றுமை.

தற்போது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாளாந்தம் வருமானம் ஈட்டி வந்த முச்சக்கர வண்டி எரியூட்டப்பட்டதால் அவர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். தற்போது அவர்கள் போரதீவு என்னும் இடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கவலை கொள்ளாத அம்பாறை தமிழ் பாராளுமன்ற மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் மதம் மாற்றம் பற்றிபேசியதை தூக்கி பிடித்துக்கொண்டு அவர் முச்சக்கர வண்டிக்காக நாடகமாடுவதாக கூறியுள்ளனர்.

அவர்கள் முச்சக்கர வண்டி வேனும் என்றால் இஸ்லாம் மதத்திற்கே சென்றிருப்பார்கள். இப்படி தமிழ் பிரதிநிதிகள் இடம் கெஞ்சி திரியவேண்டிய தேவையில்லை.

இதே விடயம் ஒரு முஸ்லீம் நபருக்கு தமிழ் பிரதேசங்களில் நடந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள். இன்நேரம் அந்த குடும்பத்திற்கு அரவு நாட்டில் இருந்து உதவிகள் குவிந்திருக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்டது தமிழ் குடும்பம் என்ற படியால் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை சுத்துமாத்து கதைகள் பாவம் அந்த குடும்பம். அவர்களை எமது தமிழ் உறவுகளே ஏடேடுத்து பார்க்கவில்லை.

நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்!

குறித்த குடும்பத்தை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சம்பவத்தின் உண்மை தன்மை குறித்து கேட்டறிந்ததுடன். அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

புலம்பெயர் உறவுகளுக்கான வேண்டுகோள்!

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் தன்னுடைய நாளாந்த வருமானத்திற்காக இருந்த முச்சக்கர வண்டியையும் இழந்து இருப்பிடம் இல்லாது தவித்து வருகின்றனர். எனவே இவர்களது நாளாந்த வருமானத்திற்கான உதவிகளை செய்ய முன்வருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு ஊதவி செய்ய விரும்பும் உறவுகள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்- சோதிநாதன் சந்திரசேகர் 0773507156

https://www.ibctamil.com/srilanka/80/106050

Link to comment
Share on other sites

வீடு எரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் பரிதாப நிலை!

 

வீடு எரிக்கப்பட்ட தமிழ் இளைஞரது தந்தையின் சாட்சி

தமிழ்க் குடும்பத்தின் வீடு எரிக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியானது!!

 

 

அம்பாறை வளத்தாப்பட்டி இஸ்மாயில் புரத்தில் இருந்த தமிழ் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் குறித்தும் அதற்கான பின்னணி குறித்த உண்மைகளை செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.

அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று ஒரு சில ஊடகங்கள் மறுத்திருந்தன.

இந்த நிலையில் குறிப்பிட்ட தமிழ் இளைஞனின் வீடும், அவனது முற்சக்கரவாகணமும் தீயிட்டு எரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயல்வீட்டில் வசித்தவர்களால் இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ibctamil.com/articles/80/106078?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு சாதரண கூலி வேலைக்கும் அங்கே அதாவது முஸ்லீம்கள் பகுதிகளுக்கும் கடைகளுக்கும் சென்று  காத்திருக்கும் நிலை தமிழ் மக்களுக்கு அங்கே சந்தியில் வேலைக்கு தேவையான ஆட்களை நாட்கூலி பேசி  அழைத்து செல்வார்கள் அப்படி களைத்து வேலை செய்து விட்டு பெற்றுக்கொள்ளும் பணத்தை அப்படியே  சாராய தவறனைக்கு கொடுத்து விட்டு செல்கிறார்கள் நான் கண்ணால் பார்க்கும் காட்சி இடம் சாய்ந்த மருது பள்ளியடி சந்தி மற்றது கல்முனை தரவை பிள்ளையாரடி சந்தி 

 

தமிழர்களோ ஓர் அபிவிருத்தி அல்லது கடை கட்டி வியாபாரம் செய்ய தயார் இல்லை ஆனால் பதுக்கி வைத்த பணத்தை பல மாடி கட்டிடங்களை அழகான வீடுகளைகட்டியும் தூசும் ஒட்டறையும் பிடிக்க வைத்துள்ளார்கள் ஓர் அரச வேலை செய்தால்  போதும் எனவும் பிறகு எப்படி அடுத்தவனுக்கு தொழில் கொடுத்து அவனையும்  வாழ வைக்கலாம் என்ற சிந்தனையும் இல்லை. தான் வாழ்ந்தால் போதும் என  நினைக்கும் கூட்டம்தான் அதிகம் ( ஒரு சிலர்) 

இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் ஆனால் அதுவும்  இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனை (தனிப்பட்ட ) அந்த நபர்தான் செய்திருக்கலாம் என கூற முடிகிறது (அந்த தமிழர்)  விசாரணை தொடர்கிறது வளத்தாப்பிட்டி பிரதேசம் நாள்தோறும் அரிக்கப்பட்டும் விற்கப்பட்டும் வரும் பகுதியாக மாறுகிறது அதே போல கிழக்கில் வறுமை காரணமாக மதமும் மாறுகிறார்கள் பின் சேருகிறார்கள் மாறுகிறார்கள் சேருகிறார்கள் இது நாள் தோறும் காணும் நிலை சிறிய சிறிய ஊர்களில் இருக்கும் மக்கள் மனது ஏன் கிறிஸ்தவ பாதிர்யர்களால் கூட தான் மாற்றப்படுகிறது என்றும் கூறலாம்  வறுமையும் வயிறும் தான் காரணம் அது தான் போராட்டமாக இருக்கிறது 

41717076_1101368036680304_51504790313715  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.