Jump to content

ஊமை பேசிய விந்தை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை வேண்டாம், நாயைப் பிடி

image_1535997667-1b02eaa9c3.jpg

இலங்கை, கண்டி அணிவத்தை பகுதியில் ஊமை பிச்சைக்காரர், அப்பகுதி மக்களின் அனுதாபத்தை பெற்று, பணம், உணவு பெற்றுக் கொண்டு சந்தோசமாக காலத்தினைக் கழித்து வந்துள்ளார்.

அப்பகுதியில் இருந்த வசதியானவர்கள் வீடுகளுக்கு சென்று, சைகை மூலம், யாசகம் பெறுவதே அவரது தினசரி வேலை.

ஒரு நாள், இப்படித்தான் கிளம்பிப்போய் ஒரு வீட்டின் கேட்டினை திறந்து உள்ளே போய் இருக்கிறார்.

போனவர், வீட்டுக்காரரின் கவனத்தினைக் கவர, கதவில் தட்டி ஒலி எழுப்ப, அவரது கெட்ட காலம், அந்த நேரம் பார்த்து, குளிப்பாட்டி, கட்டில் இருந்து அவிழ்க்கப் பட்டிருந்த நாய், வேகமாகப் பாய்ந்து திரத்திக் கொண்டு வந்தது.

அவ்வளவுதான்.

பாய்ந்து ஓடிப் போய் மரத்தில் ஏற முயன்றவரின் சாரத்தினை, கவ்விக் பிடித்து மூர்க்கமாக இழுத்தது அந்த கடி நாய். 

'ஐயோ மகே அம்மே, இந்த நாயைப் பிடியுங்கோ என்று' பெரும் குரலில் கத்தினார் ஊமை பிச்சைக்காரர்

ஓடி வந்து நாயைப் பிடித்துக் கொண்டார் வீட்டுக் காரர். ஊமை கத்திய கத்தில் கூடிய அயலவர்களில், ஒரு புத்திசாலி வடிவேலு ஸ்டைலில் கேட்டார்.

'ஆமா, உமையா நடிச்சு, இம்புட்டு காலமும், நம்ம கிட்ட, பிச்சை கேட்டு ஆட்டையை போட்டு இருக்கிறாய், நீ'...

அம்புட்டு தான்... நாலு சாத்து வாங்கிய ஊமை பிச்சைக்காரர்.... தனது தொழிலையே கெடுத்த நாயினை சபித்தபிடியே, வேறு ஊர் பார்க்க கிளப்பி சென்றார்.

http://www.dailymirror.lk/article/The-dumb-beggar-spoke-and-his-charade-ended-154958.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவி கையில இருந்த சாப்பாட்டை நாயிட்டை விட்டெறிந்து போட்டு பே ....பே  என்று ஓடியிருக்கலாம். தொழிலில் இன்னும் முன்னேற வேண்டும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசரன் தொழில்  சூட்சுமங்கள் தெரியாமல் என்ன கோதாரிக்கு வேலைக்கு போனவன்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

விசரன் தொழில்  சூட்சுமங்கள் தெரியாமல் என்ன கோதாரிக்கு வேலைக்கு போனவன்...:grin:

தொழில் சூட்சுமம் அந்த மாதிரி...

கோதாரி பிடிச்ச நாயை அவிழ்த்து விட்டிருப்பியள் எண்டு தெரியாமல் போட்டுதே... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2018 at 8:09 AM, Nathamuni said:

தொழில் சூட்சுமம் அந்த மாதிரி...

கோதாரி பிடிச்ச நாயை அவிழ்த்து விட்டிருப்பியள் எண்டு தெரியாமல் போட்டுதே... :grin: 

மனிசிமார் தங்கடை கோழிமுட்டைக்கண்ணை வைச்சு   எத்தினை உரட்டல் பிரட்டல் சிக்னல் போட்டு ஆண்சிங்கங்களை வெருட்டி வைச்சிருப்பினம்....எண்டாலும் நாங்கள் எதுவுமே நடக்காதமாதிரி நடிக்கல?
அது மாதிரித்தான் மேடை நாடகமெண்டு வந்துட்டால் நடிக்கணும்......ஐ மீன்  காவடி எடுத்தால் ஆடணும் அது நாய் வந்தாலென்ன நக்மா வந்தாலென்ன. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.