Jump to content

கறுப்புச் சட்டையில் மு.க அழகிரி.... தொடங்கியது அமைதிப் பேரணி!


Recommended Posts

கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இன்று அமைதிப் பேரணி

 

 
newPic1624jpgjpg

மு.க.அழகிரி | கோப்புப் படம்.

சென்னை அண்ணா சாலையிலி ருந்து கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று அமைதிப் பேரணி நடத்துகிறார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைந்து சில நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்'' என்றார்.

 

இதைத் தொடர்ந்து செப். 5-ம் தேதி கருணாநிதி நினை விடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையிலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அழகிரி அமைதிப் பேரணி நடத்துகிறார். இதுதொடர்பாக அழகிரி கூறும்போது, ‘‘பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். எனது அடுத்தகட்ட நடவடிக் கையை பேரணியின் முடிவில் அறிவிப்பேன்'' என்றார்.

திமுக நிர்வாகி நீக்கம்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அழகிரியை வரவேற்ற சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் மு.ரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24869126.ece?utm_source=HP&utm_medium=hp-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞ்சருக்கே நாடு தாங்கல.. ?

alagiri-postera-1536118106.jpg

அசுர குரு சுக்ராச்சாரியாருக்கும் தேவ குரு பிரகஸ்பதிக்கும் "டப் கொம்படிசன்" கொடுக்கினம்.. ?

alagiri-poster23334-1536118016.jpg

பேரு    "பாட்டில் மணி"   .. ஒரே டமாஸ்தான் ?

Link to comment
Share on other sites

கறுப்புச் சட்டையில் மு.க அழகிரி.... தொடங்கியது அமைதிப் பேரணி! #LiveUpdates

 

கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம்:

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள அவரது ஆதரவாளர்கள் பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம் என்று எழுதப்பட்டுள்ளது. 

kara_11392.jpg

 

 

பேரணியின் முடிவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அழகிரி அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். 

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணிக்காக சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

ala_auto_11345.jpg

பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் பேசும் மு.க அழகிரி....... 

ala_11311.jpg

கறுப்புச் சட்டை அணிந்து மு.க அழகிரி அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதிக்கு வந்தார். அவரின் மகன் தயாநிதி அழகிரியும் உடன் உள்ளார். இதைத்தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது.

mask_11166.jpg

அழகிரி சார்பில் நடத்தப்படும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அழகிரி மாஸ்க் அணிந்துள்ளனர். பேரணியில் கலந்துகொண்டுள்ளவர்கள் அழகிரி படங்கள் கொண்ட பதாகைகளை கையில் கொண்டுள்ளனர். 

 

அழகிரியின் அமைதிப் பேரணி

அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் வரை அதிக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ala1_10590.jpg

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரின் மகனாக மு.க அழகிரி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நான் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என வலியுறுத்திவந்தார். இதற்கிடையில் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதியின் 30-வது நாள் நினைவுநாள் அமைதிப் பேரணி நடைபெறும் என்றும் இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார். இன்று அந்தப் பேரணி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இரவு முதல் மதுரையில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு கருணாநிதியின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டது.

malar_10444.jpg

இன்று காலை 10 மணியளவில் அமைதிப்பேரணி தொடங்கவுள்ளது. இதற்காக மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் சென்னை வந்துள்ளார்கள். 

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

அழகிரியின் அமைதிப் பேரணி ஆரம்பமானது: ஆதரவாளர்கள் தொகையில் ஏமாற்றம்

 

sgs-720x450.png

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரின் ஆதரவாளர்கள் ஒன்று கூடும் அமைதிப்பேரணி ஆரம்பமாகியுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க 2000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஆதரவாளர்கள் உன்று கூடுவார்கள் என அழகிரி தெரிவித்திருந்தார்.

எனினும் இதுவரையில் 15000 க்கும் உட்பட்ட ஆதரவாளர்களே கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள் கறுப்பு சட்டையணிந்துள்ள நிலையில் அஞ்சா நெஞ்சன் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் ஏந்தியவாறு கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பேரணி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை செல்லவுள்ள நிலையில், அங்கு தொண்டர்கள் முன் உரையாற்றும் மு.க. அழகிரி தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://athavannews.com/கருணாநிதி-நினைவிடத்தை-நோ/

Link to comment
Share on other sites

மெரினா வந்தடைந்தது அமைதிப் பேரணி; அஞ்சலி செலுத்திய அழகிரி

அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

``பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டனர்” - அஞ்சலி செலுத்திய அழகிரி பேட்டி#LiveUpdates

 

ala_cr_12466.jpg

ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்!

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க அழகிரி, ``கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் இது நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். 

 

 

ala_mic_12013.jpg

அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

 

 

ala_mala_12046.jpg

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

‘ஸ்டாலினுக்கும் எனக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை'- பேரணிக்கு முன் அழகிரி பேட்டி

3349_thumb.jpg
 

`தனக்கும் ஸ்டாலினுக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை. குடும்பத்தில் எதுவும் இல்லை' என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

அழகிரி

தன்னை தி.மு.க-வில் இணைக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க அழகிரி இன்று சேப்பாக்கம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டு வருகிறார். பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டுள்ளனர்.

 

 

பேரணியில் கலந்துகொள்ளும் முன்பு மு.க அழகிரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``கலைஞர் இறந்து இன்றுடன் முப்பது நாள் ஆகிறது. இந்த நாளில் பேரணி நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள அவரின் விசுவாசிகள் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னரே  தீர்மானிக்கப்பட்டு பேரணி நடைபெறுகிறது. என்னைக் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் தொண்டர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். என்னைக் கட்சியில் இணைப்பது தொடர்பாக இதுவரை அவர்கள் (ஸ்டாலின்) தரப்பில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. நானும் அவர்களிடம் பேசவில்லை. என்னைக் கட்சியில் சேர்த்தால் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அதை ஊடகங்கள் பிரித்து, `நான் அவரைத் தலைவராக ஏற்கத் தயார்' எனக் கூறிவருகின்றனர். எங்கள் இருவருக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை உள்ளது. குடும்பத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/politics/136017-mk-alagiri-speaks-about-his-rally-in-chennai.html

Link to comment
Share on other sites

'வந்தது 1 லட்சம் அல்ல; பத்தாயிரம்தான்!' - அழகிரியைக் கொதிக்க வைத்த ஆதரவாளர்கள் 

 

இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார் அழகிரி. 'வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்' என நினைத்தார்.

'வந்தது 1 லட்சம் அல்ல; பத்தாயிரம்தான்!' - அழகிரியைக் கொதிக்க வைத்த ஆதரவாளர்கள் 
 

தி.மு.க தலைமைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணி வெற்றியடையாமல் போனதில் மிகுந்த கொதிப்பில் இருக்கிறார் அழகிரி. 'பேரணியில் ஸ்டாலினுக்குக் கெடு விதிக்கும் முடிவில் இருந்தார். மெரினாவில் எதிர்பார்த்த கூட்டம் கூடாததால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் அழகிரி' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதியை நோக்கி இன்று அமைதிப் பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி. இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். இதைக் கூறும்போது அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் தென்படவில்லை. 

அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். "தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வீட்டில் யாராவது பெரியவர் இறந்து போனால், முப்பதாவது நாள் காரியத்தை கடைபிடிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் கருணாநிதி மறைந்த முப்பதாவது நாளில் அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்தார் அழகிரி. 'மீண்டும் தி.மு.கவில் இணைந்து செயல்பட வேண்டும்' என்பதுதான் அவரது நோக்கம். ஆனால், இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. ஒருகட்டத்தில், 'கருணாநிதி இருக்கும்போதே பதவிக்கு ஆசைப்படாதவன் நான். கட்சியில் சேர்த்துக் கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்' என ஒருபடி கீழிறங்கி வந்து பேசினார். அப்போதும் அறிவாலயத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் ஆத்திரப்பட்டவர், 'நாம் யார் என்பதைக் காட்டியாக வேண்டும். 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரையில் பேரணியில் திரள வேண்டும்'  என உத்தரவிட்டார். மாவட்டத்துக்கு 50 வாகனங்கள்; தலைக்கு 500 ரூபாய் என பத்து நாள்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களை அழைத்து வருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எங்கள் திட்டப்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை" என ஆதங்கத்துடன் விவரித்தவர், 

 

 

அழகிரி நடத்திய பேரணி

"சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு நேற்றே வந்துவிட்டார் அழகிரி. இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார். 'வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்' என நினைத்தார். ஆனால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் கூடவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார். 'கூட்டம் வந்துவிட்டதா?' என அவர் விசாரித்தபோது, ' செங்கல்பட்டு ஏரியாவில் 50 வண்டிகள் நின்று கொண்டிருக்கிறது. மற்ற வண்டிகள் டோல்கேட்டைத் தாண்டிவிட்டன. இதோ வந்துவிடுவார்கள்' என ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கத்தத் தொடங்கிவிட்டார். பின்னர், இருக்கும் கூட்டத்தை வைத்து 11.15 மணிக்குத்தான் பேரணியைத் தொடங்கினார். இதே கோபத்தில், கூட்டத்தில் ஆதரவாளர்களை அவர் அடிக்கும் காட்சிகளும் வெளியானது. பேரணி முடியும் தருணத்தில், அறிவாலயத்துக்குக் கெடு விதிக்கும் வகையில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கூட்டம் கூடாததால், 'எதுவும் பேச வேண்டாம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பேரணி ஏற்பாடுகளில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். சொல்லப் போனால், 'ஒரு லட்சம் பேருக்கும் மேல் திரள்வார்கள்' எனக்கூறி அழகிரியை ஏமாற்றிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார் விரிவாக. 

 

 

"அழகிரி குறித்து கழக நிர்வாகிகள் எந்தக் கருத்தையும் பேசக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின். கட்சியின் பொருளாளர் ஆன பிறகு இன்று காட்பாடி தொகுதிக்குச் சென்றார் துரைமுருகன். அப்போது அழகிரி குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், 'நோ கமென்ட்ஸ்' எனக் கூறிவிட்டார். அதேபோல், 'அழகிரி குறித்து எந்தக் கேள்வி வந்தாலும் பதில் அளிக்கக் கூடாது; தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கு பெறக் கூடாது' என உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். குறிப்பாக, ஒரு தொலைக்காட்சியைக் குறிப்பிட்டு, 'அந்தச் சேனலில் இருந்து எந்த விவாதத்துக்கு அழைத்தாலும் செல்ல வேண்டாம்' எனக் கூறிவிட்டார். இதே கட்டுப்பாடுதான் குடும்ப உறுப்பினர்களுக்கும்" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

https://www.vikatan.com/news/tamilnadu/136056-azhagiris-plan-fails-as-just-10000-members-arrive-for-the-event.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.