Jump to content

கறுப்புச் சட்டையில் மு.க அழகிரி.... தொடங்கியது அமைதிப் பேரணி!


Recommended Posts

கருணாநிதி நினைவிடத்துக்கு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இன்று அமைதிப் பேரணி

 

 
newPic1624jpgjpg

மு.க.அழகிரி | கோப்புப் படம்.

சென்னை அண்ணா சாலையிலி ருந்து கருணாநிதி நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று அமைதிப் பேரணி நடத்துகிறார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். கருணாநிதி மறைந்து சில நாட்கள் அமைதியாக இருந்த அழகிரி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘‘கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் உள்ளனர்'' என்றார்.

 

இதைத் தொடர்ந்து செப். 5-ம் தேதி கருணாநிதி நினை விடத்துக்கு அமைதிப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையிலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அழகிரி அமைதிப் பேரணி நடத்துகிறார். இதுதொடர்பாக அழகிரி கூறும்போது, ‘‘பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். எனது அடுத்தகட்ட நடவடிக் கையை பேரணியின் முடிவில் அறிவிப்பேன்'' என்றார்.

திமுக நிர்வாகி நீக்கம்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அழகிரியை வரவேற்ற சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் மு.ரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24869126.ece?utm_source=HP&utm_medium=hp-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞ்சருக்கே நாடு தாங்கல.. ?

alagiri-postera-1536118106.jpg

அசுர குரு சுக்ராச்சாரியாருக்கும் தேவ குரு பிரகஸ்பதிக்கும் "டப் கொம்படிசன்" கொடுக்கினம்.. ?

alagiri-poster23334-1536118016.jpg

பேரு    "பாட்டில் மணி"   .. ஒரே டமாஸ்தான் ?

Link to comment
Share on other sites

கறுப்புச் சட்டையில் மு.க அழகிரி.... தொடங்கியது அமைதிப் பேரணி! #LiveUpdates

 

கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம்:

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள அவரது ஆதரவாளர்கள் பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் கரங்கள் கோர்ப்போம், கழகம் காப்போம் என்று எழுதப்பட்டுள்ளது. 

kara_11392.jpg

 

 

பேரணியின் முடிவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அழகிரி அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார். 

மு.க அழகிரி தலைமையில் நடக்கும் அமைதிப் பேரணிக்காக சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

ala_auto_11345.jpg

பேரணியில் தனது ஆதரவாளர்களுடன் பேசும் மு.க அழகிரி....... 

ala_11311.jpg

கறுப்புச் சட்டை அணிந்து மு.க அழகிரி அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதிக்கு வந்தார். அவரின் மகன் தயாநிதி அழகிரியும் உடன் உள்ளார். இதைத்தொடர்ந்து அமைதிப் பேரணி தொடங்கியது.

mask_11166.jpg

அழகிரி சார்பில் நடத்தப்படும் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அழகிரி மாஸ்க் அணிந்துள்ளனர். பேரணியில் கலந்துகொண்டுள்ளவர்கள் அழகிரி படங்கள் கொண்ட பதாகைகளை கையில் கொண்டுள்ளனர். 

 

அழகிரியின் அமைதிப் பேரணி

அமைதிப் பேரணி தொடங்கும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் வரை அதிக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ala1_10590.jpg

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரின் மகனாக மு.க அழகிரி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நான் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என வலியுறுத்திவந்தார். இதற்கிடையில் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதியின் 30-வது நாள் நினைவுநாள் அமைதிப் பேரணி நடைபெறும் என்றும் இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார். இன்று அந்தப் பேரணி தொடங்கவுள்ள நிலையில், நேற்று இரவு முதல் மதுரையில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு கருணாநிதியின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டது.

malar_10444.jpg

இன்று காலை 10 மணியளவில் அமைதிப்பேரணி தொடங்கவுள்ளது. இதற்காக மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் சென்னை வந்துள்ளார்கள். 

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

அழகிரியின் அமைதிப் பேரணி ஆரம்பமானது: ஆதரவாளர்கள் தொகையில் ஏமாற்றம்

 

sgs-720x450.png

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரின் ஆதரவாளர்கள் ஒன்று கூடும் அமைதிப்பேரணி ஆரம்பமாகியுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டதற்கு இணங்க இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க 2000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடபடுத்தப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஆதரவாளர்கள் உன்று கூடுவார்கள் என அழகிரி தெரிவித்திருந்தார்.

எனினும் இதுவரையில் 15000 க்கும் உட்பட்ட ஆதரவாளர்களே கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேரணியில் கலந்து கொண்டுள்ளவர்கள் கறுப்பு சட்டையணிந்துள்ள நிலையில் அஞ்சா நெஞ்சன் என்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் ஏந்தியவாறு கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த பேரணி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை செல்லவுள்ள நிலையில், அங்கு தொண்டர்கள் முன் உரையாற்றும் மு.க. அழகிரி தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://athavannews.com/கருணாநிதி-நினைவிடத்தை-நோ/

Link to comment
Share on other sites

மெரினா வந்தடைந்தது அமைதிப் பேரணி; அஞ்சலி செலுத்திய அழகிரி

அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

``பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டனர்” - அஞ்சலி செலுத்திய அழகிரி பேட்டி#LiveUpdates

 

ala_cr_12466.jpg

ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்!

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க அழகிரி, ``கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் இது நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த காவல்துறைக்கு நன்றி. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். 

 

 

ala_mic_12013.jpg

அழகிரி தலைமையில் திருவல்லிக்கேணியில் தொடங்கிய அமைதிப் பேரணி தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தை அடைந்துள்ளது. அங்கு அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

 

 

ala_mala_12046.jpg

https://www.vikatan.com/news/tamilnadu/136004-azhagiris-silent-march-to-marina.html

Link to comment
Share on other sites

‘ஸ்டாலினுக்கும் எனக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை'- பேரணிக்கு முன் அழகிரி பேட்டி

3349_thumb.jpg
 

`தனக்கும் ஸ்டாலினுக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை. குடும்பத்தில் எதுவும் இல்லை' என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

அழகிரி

தன்னை தி.மு.க-வில் இணைக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க அழகிரி இன்று சேப்பாக்கம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி மேற்கொண்டு வருகிறார். பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கறுப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டுள்ளனர்.

 

 

பேரணியில் கலந்துகொள்ளும் முன்பு மு.க அழகிரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``கலைஞர் இறந்து இன்றுடன் முப்பது நாள் ஆகிறது. இந்த நாளில் பேரணி நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள அவரின் விசுவாசிகள் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னரே  தீர்மானிக்கப்பட்டு பேரணி நடைபெறுகிறது. என்னைக் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் தொண்டர்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். என்னைக் கட்சியில் இணைப்பது தொடர்பாக இதுவரை அவர்கள் (ஸ்டாலின்) தரப்பில் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. நானும் அவர்களிடம் பேசவில்லை. என்னைக் கட்சியில் சேர்த்தால் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அதை ஊடகங்கள் பிரித்து, `நான் அவரைத் தலைவராக ஏற்கத் தயார்' எனக் கூறிவருகின்றனர். எங்கள் இருவருக்கும் அரசியலில் மட்டுமே பிரச்னை உள்ளது. குடும்பத்தில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

https://www.vikatan.com/news/politics/136017-mk-alagiri-speaks-about-his-rally-in-chennai.html

Link to comment
Share on other sites

'வந்தது 1 லட்சம் அல்ல; பத்தாயிரம்தான்!' - அழகிரியைக் கொதிக்க வைத்த ஆதரவாளர்கள் 

 

இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார் அழகிரி. 'வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்' என நினைத்தார்.

'வந்தது 1 லட்சம் அல்ல; பத்தாயிரம்தான்!' - அழகிரியைக் கொதிக்க வைத்த ஆதரவாளர்கள் 
 

தி.மு.க தலைமைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணி வெற்றியடையாமல் போனதில் மிகுந்த கொதிப்பில் இருக்கிறார் அழகிரி. 'பேரணியில் ஸ்டாலினுக்குக் கெடு விதிக்கும் முடிவில் இருந்தார். மெரினாவில் எதிர்பார்த்த கூட்டம் கூடாததால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் அழகிரி' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதியை நோக்கி இன்று அமைதிப் பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வேறு எந்த நோக்கத்துடனும் நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி. இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். இதைக் கூறும்போது அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் தென்படவில்லை. 

அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். "தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வீட்டில் யாராவது பெரியவர் இறந்து போனால், முப்பதாவது நாள் காரியத்தை கடைபிடிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் கருணாநிதி மறைந்த முப்பதாவது நாளில் அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்தார் அழகிரி. 'மீண்டும் தி.மு.கவில் இணைந்து செயல்பட வேண்டும்' என்பதுதான் அவரது நோக்கம். ஆனால், இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. ஒருகட்டத்தில், 'கருணாநிதி இருக்கும்போதே பதவிக்கு ஆசைப்படாதவன் நான். கட்சியில் சேர்த்துக் கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்' என ஒருபடி கீழிறங்கி வந்து பேசினார். அப்போதும் அறிவாலயத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் ஆத்திரப்பட்டவர், 'நாம் யார் என்பதைக் காட்டியாக வேண்டும். 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரையில் பேரணியில் திரள வேண்டும்'  என உத்தரவிட்டார். மாவட்டத்துக்கு 50 வாகனங்கள்; தலைக்கு 500 ரூபாய் என பத்து நாள்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களை அழைத்து வருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், எங்கள் திட்டப்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை" என ஆதங்கத்துடன் விவரித்தவர், 

 

 

அழகிரி நடத்திய பேரணி

"சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு நேற்றே வந்துவிட்டார் அழகிரி. இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார். 'வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்' என நினைத்தார். ஆனால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் கூடவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார். 'கூட்டம் வந்துவிட்டதா?' என அவர் விசாரித்தபோது, ' செங்கல்பட்டு ஏரியாவில் 50 வண்டிகள் நின்று கொண்டிருக்கிறது. மற்ற வண்டிகள் டோல்கேட்டைத் தாண்டிவிட்டன. இதோ வந்துவிடுவார்கள்' என ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கத்தத் தொடங்கிவிட்டார். பின்னர், இருக்கும் கூட்டத்தை வைத்து 11.15 மணிக்குத்தான் பேரணியைத் தொடங்கினார். இதே கோபத்தில், கூட்டத்தில் ஆதரவாளர்களை அவர் அடிக்கும் காட்சிகளும் வெளியானது. பேரணி முடியும் தருணத்தில், அறிவாலயத்துக்குக் கெடு விதிக்கும் வகையில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். கூட்டம் கூடாததால், 'எதுவும் பேச வேண்டாம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பேரணி ஏற்பாடுகளில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். சொல்லப் போனால், 'ஒரு லட்சம் பேருக்கும் மேல் திரள்வார்கள்' எனக்கூறி அழகிரியை ஏமாற்றிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார் விரிவாக. 

 

 

"அழகிரி குறித்து கழக நிர்வாகிகள் எந்தக் கருத்தையும் பேசக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின். கட்சியின் பொருளாளர் ஆன பிறகு இன்று காட்பாடி தொகுதிக்குச் சென்றார் துரைமுருகன். அப்போது அழகிரி குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், 'நோ கமென்ட்ஸ்' எனக் கூறிவிட்டார். அதேபோல், 'அழகிரி குறித்து எந்தக் கேள்வி வந்தாலும் பதில் அளிக்கக் கூடாது; தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கு பெறக் கூடாது' என உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். குறிப்பாக, ஒரு தொலைக்காட்சியைக் குறிப்பிட்டு, 'அந்தச் சேனலில் இருந்து எந்த விவாதத்துக்கு அழைத்தாலும் செல்ல வேண்டாம்' எனக் கூறிவிட்டார். இதே கட்டுப்பாடுதான் குடும்ப உறுப்பினர்களுக்கும்" என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

https://www.vikatan.com/news/tamilnadu/136056-azhagiris-plan-fails-as-just-10000-members-arrive-for-the-event.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.