Jump to content

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!


Recommended Posts

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

 

 
Image

தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில் தமிழினம் இன்னமும் பின்தங்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன்.

https://www.ibctamil.com/india/80/105680

Link to comment
Share on other sites

1 hour ago, நவீனன் said:

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன். 

சிறகை விரி பின் பற என்ற தத்துவத்தை சொன்னது நீங்கள்தானா......?? இதனைத்தான் அறப்படித்த பல்லி கூழ் பானைக்குள் விழுந்தது என்று சொல்கிறார்களோ. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்குது என்று மஹிந்தவும் சொல்றார்...

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்குது என்று காசி ஐயாவும் சொல்றார்...

அவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில்  சிங்கள இனமான அரசியல்வாதி...

இவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில் தமிழர் இனமான கவிஞர்....

இரண்டுபேரின்  நரம்பு சூடேற்றும் வேலைகளும் ஒன்றே ஒன்றுதான் பண்ணும்....

எந்த  இனத்திற்காக போராடபோய் இன்று அதே இனத்திடம் யாசகம் வேண்டியும்,சல்லிகாசு தட்டில் விழாத நிலையில் வெறும் திருவோட்டுடனும் காய்ந்த வயிறுடனும் வாழும்

பல ஆயிரம் முன்னாள் போராளிகளிடமிருந்து அவர்களுக்கு சொத்தென்று சொல்லி  எஞ்சியிருக்கும் ஒரேயொரு உயிரையும் அவர்களிடம் இருந்து பறிச்சிடணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை இப்படி ஒரு விடையத்தைக் கூறச்சொல்லியிருக்கும் அப்போதான் தமிழ்நாட்டிலும் இலங்கைத்தீவிலும் அவர்கள் தங்கள் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையை மேலும் முன்னெடுக்கலாம் காத்தமுத்து சிவானந்தன் அவர்கள் கூலிக்கு மாரடிக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் மனிதர்கள் தாம் பேசுவதுபற்றி தெளிவுடன் இருக்கிறார்களா என்று எண்ணத் தோன்றும்.

கவிஞர் காசி ஆனந்தன், நெடுமாறன் மற்றும் வைக்கோ போன்றவர்களின் கருத்துக்கள் என்னை அவ்வப்போது இவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதோ அல்லது தலைவர் பிரபாகரன் இன்னும் இருக்கிறார் என்பதோ பலரைப் பொறுத்தவரையில் நினைப்பதற்கு சந்தோஷமாக இருக்கலாம் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதற்கான சாத்தியப்பாடுகள் மற்றும் யதார்த்த நிலை என்று வரும்போது சிலவேளைகளில் இப்படியான கருத்துக்கள் கேலியாக மாறிவிடுவதுடன் இவர்களின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

இப்படியான முழு லூசுகளால்  இன்னமும் கிடைக்க வேண்டியதும் கிடைக்காமால் தள்ளி போகின்றது போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகின்றன இன்னமும் சனம் சொந்த வீட்டுக்கு திரும்ப முடியாமல் போராடுதுகள்  என்ற யதார்த்தம் கூட விளங்காமல் உளறுகிறார் . பிடிச்சுக்கொண்டு போய் கீல் பாக்கம் பயித்தியகார மருத்துவமனையில் சேர்த்து விட்டால் தாயகத்தில் இருக்கிற கொஞ்ச நஞ்ச சனமும் நிம்மதியாய் இருக்கும்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்ப்புள்ள புலிகள் வெளில வரனும் என்றால்..  புலிகள் மீதான சர்வதேச தடைகள்.. பிராந்திய தடைகள் எடுக்கப்பட வேண்டும். புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அழிக்கப்பட்டு.. ஒரு தேசிய இனத்துக்கான விடுதலைப் போராளிகள் என்ற அவர்களின் உண்மையான அடையாளம் உலகால் அங்கீகரிப்பட வேண்டும். 

இதற்காக தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த ஒரு கைங்கரியம் ஏதாவது இருக்கா..??! புலிகள் மீது இன்றும் விசுவாசம் கொண்டுள்ள காசி அண்ணன் போன்றவர்கள் கூட எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல.. கடந்த 10 ஆண்டுகளாக கைவிட்டு விட்டு.. இப்ப புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இன அழிப்பாளர்களுக்கும் இனச்சுத்திகரிப்பாளர்களுக்கும் துரோகிகளுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும்.. சர்வதேச பிராந்திய உள்ளூர் புலனாய்வாளர்களுக்கும்... உதவியாக அமையுமே தவிர புலிகளுக்கு அல்லது புலிகள் அமைப்புச் சார்ந்து செயற்பட்டு இன்று சமூகத்தில் இணைய முற்பட்டுக்கொண்டிருப்போருக்கு.. தமிழ் மக்களுக்கு  உதவாது.

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

45_E10_CBC-_EFFB-439_E-8_C2_F-2_A73_BA06

நானும் இதைத்தான் நினைத்தேன்.?

Link to comment
Share on other sites

13 hours ago, nedukkalapoovan said:

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

இப்படியான கருத்துக்களை இணையங்களும் வெளியிடாமல் தவிர்த்து விடுவது நல்லது. 

Link to comment
Share on other sites

On 9/5/2018 at 9:57 PM, valavan said:

இவர் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாழ்வதில் தமிழர் இனமான கவிஞர்....

99.99% ஆன தமிழ் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் 99.99% கற்பனையில் கோட்டைகட்டி அதை உண்மையென நம்பி வாழ்பவர்கள்.
இவர்களால் உருப்படியாக சாதிக்கப்பட்டது என்று இன்றுவரை எதுவுமே இல்லை!
இதற்கு உதாரணமாக கம்பன்கழக புழுதிவாரிதி ஜெயராஜ் முதல் காசியானந்தன் ஈறாக அப்துல்ரகுமான் வரை கூறலாம்.

Link to comment
Share on other sites

On 9/5/2018 at 3:50 AM, நவீனன் said:

புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.!

 

 
Image

தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில் தமிழினம் இன்னமும் பின்தங்க வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சூழலின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் காசி ஆனந்தன்.

https://www.ibctamil.com/india/80/105680

எனக்கு சமகால அரசியல் போக்கு பற்றி அதிகம் அறிவு இல்லை. இப்போது செய்திகள் முன்பு போல் பார்த்து மினக்கடுவது இல்லை. ஆனால், காசியானந்தன் அவர்களின் இந்த கருத்தையும், இதற்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களையும் வாசித்தேன். உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. போர் நடைபெற்றால் மட்டுமே ஒரு போராட்டம் உயிர்ப்பாக இருக்கும் என்று பலரும் கருதுவதால் இப்படி எழுதுகின்றார்களோ தெரியவில்லை. அதிலும் பெரும்பான்மை யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்கள் வாசித்து ஆச்சரியம் பொங்கியது. காசியானந்தன் இந்தக்கருத்தை கூறினார் என்பதனால் இப்படியான விமர்சனம் வைக்கப்படுகின்றதா அல்லது போர் நடைபெறாதபடியால் இப்படி கூறப்படுகின்றதா? ஒன்னும் புரியல்லே இந்த உலகத்திலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கலைஞன் said:

எனக்கு சமகால அரசியல் போக்கு பற்றி அதிகம் அறிவு இல்லை. இப்போது செய்திகள் முன்பு போல் பார்த்து மினக்கடுவது இல்லை. ஆனால், காசியானந்தன் அவர்களின் இந்த கருத்தையும், இதற்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களையும் வாசித்தேன். உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. போர் நடைபெற்றால் மட்டுமே ஒரு போராட்டம் உயிர்ப்பாக இருக்கும் என்று பலரும் கருதுவதால் இப்படி எழுதுகின்றார்களோ தெரியவில்லை. அதிலும் பெரும்பான்மை யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்கள் வாசித்து ஆச்சரியம் பொங்கியது. காசியானந்தன் இந்தக்கருத்தை கூறினார் என்பதனால் இப்படியான விமர்சனம் வைக்கப்படுகின்றதா அல்லது போர் நடைபெறாதபடியால் இப்படி கூறப்படுகின்றதா? ஒன்னும் புரியல்லே இந்த உலகத்திலே.

ஒன்றும் குழப்பி கொள்ள வேண்டாம் இனி மக்கள் ( போராளிகள் ) நிம்மதியாக வாழட்டும் இவர் எங்க்ருந்தும் பேசிட்டு போகட்டுமே 

 

On 9/5/2018 at 11:55 PM, ragunathan said:

கவிஞர் காசி ஆனந்தன், நெடுமாறன் மற்றும் வைக்கோ போன்றவர்களின் கருத்துக்கள் என்னை அவ்வப்போது இவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன.

ஒர் ஆளை விட்டுடீங்க  ..............சிங்கன் சீமானை :):104_point_left:

Link to comment
Share on other sites

9 hours ago, கலைஞன் said:

எனக்கு சமகால அரசியல் போக்கு பற்றி அதிகம் அறிவு இல்லை. இப்போது செய்திகள் முன்பு போல் பார்த்து மினக்கடுவது இல்லை. ஆனால், காசியானந்தன் அவர்களின் இந்த கருத்தையும், இதற்கு யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்ட விமர்சனங்களையும் வாசித்தேன். உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. போர் நடைபெற்றால் மட்டுமே ஒரு போராட்டம் உயிர்ப்பாக இருக்கும் என்று பலரும் கருதுவதால் இப்படி எழுதுகின்றார்களோ தெரியவில்லை. அதிலும் பெரும்பான்மை யாழ் கருத்துக்களத்தின் கருத்துக்கள் வாசித்து ஆச்சரியம் பொங்கியது. காசியானந்தன் இந்தக்கருத்தை கூறினார் என்பதனால் இப்படியான விமர்சனம் வைக்கப்படுகின்றதா அல்லது போர் நடைபெறாதபடியால் இப்படி கூறப்படுகின்றதா? ஒன்னும் புரியல்லே இந்த உலகத்திலே.

இந்த பதிவிலுள்ள ஒரு யாழ் உறவின் கருத்தை நீங்கள் கவனிக்கத் தவறியதுபோல் தோன்றுகிறது அதனால் அதனை இங்கு உங்களுக்காக இணைத்துள்ளேன். கவனமெடுத்து படியுங்கள், உங்களுக்கும் புரியவரும். :103_point_down::103_point_down:

On ‎9‎/‎5‎/‎2018 at 9:06 PM, nedukkalapoovan said:

உயிர்ப்புள்ள புலிகள் வெளில வரனும் என்றால்..  புலிகள் மீதான சர்வதேச தடைகள்.. பிராந்திய தடைகள் எடுக்கப்பட வேண்டும். புலிகள் மீதான பயங்கரவாத முத்திரை அழிக்கப்பட்டு.. ஒரு தேசிய இனத்துக்கான விடுதலைப் போராளிகள் என்ற அவர்களின் உண்மையான அடையாளம் உலகால் அங்கீகரிப்பட வேண்டும். 

இதற்காக தமிழ் மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் எடுத்த ஒரு கைங்கரியம் ஏதாவது இருக்கா..??! புலிகள் மீது இன்றும் விசுவாசம் கொண்டுள்ள காசி அண்ணன் போன்றவர்கள் கூட எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல.. கடந்த 10 ஆண்டுகளாக கைவிட்டு விட்டு.. இப்ப புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வது ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இன அழிப்பாளர்களுக்கும் இனச்சுத்திகரிப்பாளர்களுக்கும் துரோகிகளுக்கும் ஒட்டுக்குழுக்களுக்கும்.. சர்வதேச பிராந்திய உள்ளூர் புலனாய்வாளர்களுக்கும்... உதவியாக அமையுமே தவிர புலிகளுக்கு அல்லது புலிகள் அமைப்புச் சார்ந்து செயற்பட்டு இன்று சமூகத்தில் இணைய முற்பட்டுக்கொண்டிருப்போருக்கு.. தமிழ் மக்களுக்கு  உதவாது.

எனவே உண்மையோ பொய்யோ.. இப்படியான கருத்துக்களை வெளியிடும் போது கொஞ்சம் தூர நோக்கோடு இன மண் போராளிகள் நலனில் முழு அக்கறை கொண்டு காலத் தேவைக்கு ஏற்ப சில விடயங்களை சொல்லாமல்.. பேசாமல்.. தவிர்ப்பது சாணக்கியமாகும். ?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.