Jump to content

ஒளி வளர் விளக்கு


Recommended Posts

ஒளி வளர் விளக்கு - சிறுகதை

 
காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

னு பேசினாள். கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எப்படியோ என் நம்பரைப் பிடித்திருக்கிறாள். நம்பவே முடியவில்லை. நாங்கள் இளங்கலை முடித்து 21 ஆண்டு ஆகிறது. இடையில் இரண்டு முறைதான் பேசினோம். நான்தான் அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பரைத் தொலைத்துவிட்டேன். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்கள் போன் நம்பரும் மாறிக் கொண்டிருந்தது. என்னுடைய மொபைல் நம்பரையும் நான் ஆறு முறை மாற்றிவிட்டேன். கடைசியாக மாற்றியது ஏர்செல் பிரச்னையில். 

p84a_1535352690.jpg

நான் வாட்ஸ் அப் குரூப்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜுகள். குட்மார்னிங், குட்நைட், ஹீலர்கள், போலி இயற்கை ஆர்வலர்களின் பரப்புரைகள், உடனே ஏழு பேருக்கு அனுப்பவேண்டிய ஆஞ்சநேயர் பெருமாள் படங்கள், `முன்னோர்கள், முட்டாள்கள் அல்ல’ வகையறா கண்டுபிடிப்புகள் மாறி மாறி எல்லா குரூப்களிலும் வருவதால் எல்லாவற்றையும் ம்யூட் செய்துவிடுவேன்.

இவள் எப்போது கல்லூரிக் குழுவில் இணைந்தாள் என்றே தெரியவில்லை. ``ஹாய் சுமீஈஈஈ... எப்டி இருக்க?” என்ற அவளின் கீச்சுக்குரல், பழைய நினைவுகளைக் கிளறியது. ஆனால், நான் பேசும் நிலையில் இல்லை. நான் வங்கியிலிருந்து முக்கியமான ஓர் அழைப்புக்காகக் காத்திருந்தேன். அவசரமாக கட் பண்ணினால் கோபித்துக்கொள்வாளோ என்ற தயக்கம் எட்டிப்பார்த்தது. ஆனாலும் வேறு வழியில்லை. ``அனு... ஒரு அர்ஜென்ட் காலுக்காக வெயிட்பண்றேன். நானே உன்னைக் கூப்பிடுறேன். ப்ளீஸ்... கோச்சிக்காத” என்றதும் சட்டென போனை வைத்துவிட்டாள். லேசாய் புன்னகைத்தேன். அவள் மாறவேயில்லை என்பது ஆச்சர்யமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

அனுவை, கல்லூரிவிடுதியில் வைத்துதான் முதன்முதலில் பார்த்தேன். தலையில் எண்ணெய் தடவுவதற்குப் பதிலாய் கொட்டியிருந்தாள். நெற்றியின் விளிம்பில் எண்ணெய் வழிந்து மினுங்கியது. பெரிய சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு வைத்து அதன்மேல் சந்தனத்தை விபூதிபோல நீளமாய்த் தீற்றியிருந்தாள். இரண்டு கண்களின் ஓரத்திலும் நாட்டியக்காரர்கள் வரைவதுபோல நீளமாய் மைத்தீற்றல். அது, வியர்வையாலோ அவள் கண்களைக் கசக்கியதாலோ கலைந்து கன்னத்திலும் அப்பியிருந்தது. காதில் பெரிய்ய்ய தொங்கட்டான்கள். தலையில் கொத்தாய் கனகாம்பரப் பூ.

நானும்கூட கல்லூரி முதல் நாளில் கனகாம்பரமும் மல்லிகையும் கலந்து அம்மா கட்டிக் கொடுத்த பூச்சரத்தைத்தான் வைத்துக்கொண்டு போனேன். என் சீனியர்களில் ஒருத்தி, ``கனகாம்பரம் வைக்காதே. அதுக்குப் பேரே இங்க `கேண காம்பரம்`தான்” என்றாள். உண்மையில் எனக்கு வாசமில்லாத, முகத்தில் அறையும் செந்தூர நிறத்தில் இருக்கும் அந்தப் பூவை ஏற்கெனவே பிடிக்காது. அனு, தனக்கு அதுதான் பிடித்தமான பூ என்பாள். அதோடு தலையில் வைத்து வாடி சிறுத்துப்போன பூவை வெகுசீக்கிரத்தில் தூக்கி எறிய மாட்டாள். ``அது அழகா இருந்தப்ப எவ்ளோ ஆசையா தலையில வெச்சுக்கிறோம்! வாடிப்போச்சுன்னா உடனே எறிஞ்சுடணுமா?” என்பாள். உடன் இருந்தவர்கள் நமட்டுச் சிரிப்போடு அவளைக் கவனிப்பது தெரிந்தாலும், அவள் எதற்காகவும் கவலைப்பட்டதாகவோ தன்னை மாற்றிக்கொள்ள முயன்றதாகவோ தெரியவில்லை.

அவள் குரலே அவளை எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனித்துக் காட்டும். குரலா அல்லது அவள் பேசும்விதமா என்றுகூட குழப்பமாய் இருக்கும். புரியும்படி சொல்வதென்றால், `அன்பே வா’ படத்தில் `போங்கப்பா நீங்கே’ என்று சரோஜாதேவி பேசுவதுபோல என வைத்துக்கொள்ளுங்களேன். கொஞ்சிக் கொஞ்சி நளினமாய்ப் பேசுவதும், ஏறத்தாழ நாட்டியமாடுவதுபோலவே நடப்பதும், கண்கள் கூசும் நிறத்திலான உடைகளும், அந்தக் கண்ணோர மைத்தீற்றலும், ஜல்ஜல்லெனச் சலங்கை போன்ற பெரிய கொலுசும் அவளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டியது. ஆனால், மூன்றாம் ஆண்டு வருவதற்குள் அவள் நடை உடை பாவனைகள் எல்லாம் ஓரளவு மாறியிருந்தன. கண்களை உறுத்தாத வண்ணங்களில் காட்டன் புடவைகளை உடுத்த ஆரம்பித்தாள். நானும்கூட ஓரிருமுறை அவள் புடவையை வாங்கி உடுத்தியிருக்கிறேன். எனக்கு அப்போதெல்லாம் தாவணிதான் மிகவும் பிரியமான உடை. ஆகாய வண்ணத்தில் மேகத்தைப்போன்றே வெள்ளைத் தீற்றல்கள்கொண்ட அவள் புடவை, எனக்கு மிகவும் பாந்தமாய்ப் பொருந்தியது. அந்தப் புடவையை அவள்தான் தேர்ந்தெடுத்து வாங்கியிருக்கிறாள் என்பதே நம்ப முடியாததாயிருந்தது.

விடுதிக்கு வெளியே பெரிய மைதானம் இருக்கும். ஆங்காங்கே ஓரிரு வேப்பமரங்களும் ஒரே ஒரு புளியமரமும் இருக்கும். பாப்-கட் செய்துகொண்ட சிறுமிபோல குள்ளமாய் புஸுபுஸுவெனத் தலை அடர்ந்து நிற்கும் அந்தப் புளியமரத்தை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் படிக்கிறோம் என்று பேர் பண்ணிக்கொண்டு அந்த மரத்தடியில் அமர்ந்து அரட்டையடிப்போம். வார்டன், சீனியர்கள், லெக்சரர்கள் பற்றிய கிசுகிசுக்கள், பேய்க்கதைகள் எனச் சுற்றியடித்து, பேச்சு செக்ஸில் வந்து நிற்கும். சத்தியமாய் எங்கள் யாருக்குமே முதலிரவு அறைக்குள் விளக்கை அணைத்த பிறகு என்ன நடக்கும் என அப்போது தெரிந்திருக்கவில்லை. இப்போதுபோல இன்டர்நெட்டோ ஸ்மார்ட்போனோ குறைந்தபட்சம் ஆண்களுக்கு வாய்த்ததுபோல `சரோஜாதேவி’ புத்தகங்களோகூட கிடைக்கப்பெறாத அப்பிராணிகள் நாங்கள். யூகங்களே கிளுகிளுப்பாயிருக்கும்.

+2 படிக்கும்போது, உடன் படித்த பத்மாவுக்குத் திருமணம் நிச்சயமானது. திருமணம் முடிந்து அவள் மீண்டும் வகுப்புக்கு வரும்போது முதலிரவில் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லவேண்டும் என எல்லோரும் அவளிடம் சத்தியம் வாங்கியிருந்தோம். கல்யாணத்தில் மாலையும் கழுத்துமாய் அவள் நின்றுகொண்டிருக்கும்போது, சுவர்க்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்துவிட்டு அவள் காதில் ரகசியமாய் சத்தியத்தை ஞாபகப்படுத்திவிட்டு வந்தோம். மீண்டும் அவள் பள்ளிக்கு வந்ததும் பிரேயருக்கு முன்பாக அவளைக் கடத்திக்கொண்டு போய் ``சொல்லுடி... சொல்லுடி...” என்று மொய்த்தோம். அவள் ஏகமாய் வெட்கப்பட்டுக்கொண்டு, `` `எல்லாத்தையும் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சப்புறம் வெச்சுக்கலாம். நீ ஒழுங்கா படி’ன்னு மாமா சொல்லிட்டார்” என்றதும் எங்களுக்கு சப்பென்றாகிவிட்டது. அவள் பொய்தான் சொன்னாள் என்று தெரிந்தாலும், அதற்குமேல் அவளிடம் என்ன கேட்பது எனத் தெரியாமல் விட்டுவிட்டோம்.

இதைப்பற்றியெல்லாம் நாங்கள் மும்முரமாய்ப் பேசிக்கொண்டிருக்கையில், அனு என் முதுகைச் சுரண்டுவாள். ``சுமீ... அங்க பாரேன் வானத்தை. சீக்கிரம் பாரு. மேகம் மறைச்சுடும். சீக்கிரம்... அங்கதான். அந்த ஆரஞ்சுக்கும் மஞ்சளுக்கும் இடையில ஒரு புளூ தெரியுதுல்ல? அதான்... அதுவே இன்னும் கொஞ்சம் லைட்டா இருந்தா எப்டி இருக்கும்? அந்த நிறத்துலதான் பர்த்டேக்குப் புடவை எடுத்திருக்கேன். அம்மா இந்த வாரம் கொண்டுவருவாங்க” என்பாள். அந்தி கவிந்து சூரியன் முழுவதுமாக மறைவதற்குள் தாடையைப் பிடித்திழுத்து வானத்தைப் பார்க்கவைத்து, பத்துத் தடவையாவது இதையே திரும்பத் திரும்பச் சொல்லிவிடுவாள்.

சொன்னதுபோலவே அவள் அம்மா அந்தப் புடவையை விடுதிக்குக் கொண்டுவந்து கொடுத்தார். அவரைப் பார்க்கும் எவருக்கும் முதல் பார்வையிலேயே `இவங்கதான் அனுவோட அம்மா’ என்று தெரிந்துவிடும். அவளைப்போலவே கண்ணோரத்தில் மைத்தீற்றலும் கீச்சுக்குரலும் நளின நடையுமாய்த்தான் வருவார். எங்கள் அனைவரின் மீதும் ரொம்பப் பிரியமாயிருப்பார். பெரிய பெரிய சம்புடங்களில் எல்லோருக்கும் சேர்த்து முறுக்கு, அதிரசம், சுய்யம், பொரி உருண்டை செய்து எடுத்து வருவார்கள்.

அவர் வீட்டுக்கு ஒருமுறை நாங்கள் ஆறு பேர் சேர்ந்து போயிருந்தோம். அனுவுக்கு ஓர் அண்ணன் இருந்தான். `சினிமா ஹீரோபோல இருப்பான்’ என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாள். நாங்கள் அவனை சைட்டடிப்பதா, `அண்ணா’வென்று அழைப்பதா என்ற குழப்பத்துடன்தான் போனோம். அவன் `கிழக்கே போகும் ரயில்’ சுதாகர்போல இருந்தான். அதில் வரும் ராதிகாவைப்போலவே, எங்களைப் பார்த்ததும் அநியாயத்துக்கு வெட்கப்பட்டு தலைகுனிந்து ஒதுங்கிப் போனான். எங்களுக்கு `ஙே` என்றிருந்தது. உடன் வந்த பானுமதி மட்டும் வெட்கத்துடன் ``ஏன்டி இவனுக்கென்ன? ஹீரோ மாதிரிதான இருக்கான்?” என்றாள். நாங்கள் எல்லோரும் கொல்லெனச் சிரித்து, அங்கிருந்து வரும்வரை அவளை ஓட்டித்தள்ளினோம்.அனுவின் அப்பா, வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் கழுத்தில் துண்டோடு தடதடவென புல்லட்டில் வருவார். பெரிய மீசை வைத்திருப்பார். அவருக்கு ஊருக்குள் வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்றும், அதைப் பற்றிக் கேட்டால் அம்மாவை முடியைப் பிடித்திழுத்து கன்னங்களில் அறைவார் என்றும், அவர் அடித்ததில் அம்மாவின் கடைவாய்ப்பற்கள் இரண்டு விழுந்துவிட்டதாகவும் அனு ஒருமுறை என்னிடம் மட்டும் அழுதுகொண்டே சொன்னாள். அவரை நேரில் பார்த்தால், அவ்வளவு கொடுமைக்காரராய்த் தெரியவில்லை. அவர் அடிப்பதையும் அவள் அம்மா கீச்சுக்குரலில் அழுவதையும் கற்பனை செய்ய முயன்று தோற்றிருக்கிறேன்.

இளங்கலை முடித்த பிறகு, நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். எங்கள் வீட்டின் நிலைமை, என்னை மேற்கொண்டு படிக்க விடவில்லை. அனு அங்கேயே பட்டமேற்படிப்பு சேர்ந்துவிட்டதாகத் தெரிந்தது. நான் ஊருக்கு வெளியில் இருந்த தோல் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் சொற்பமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். இளங்கலையோடு சேர்த்து கணினியில் Tally படித்திருந்ததால், உடனே வேலை கிடைத்தது. காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிப் போனால், இரவு 8 மணிக்குத்தான் வந்து சேருவேன்.

என்னால் வேலைகூடச் செய்துவிட முடிந்தது. அந்த ஏசி ரூமில் நாள் முழுக்க இருப்பதுதான் பெரிய தொல்லையாக இருந்தது. என்னால் குளிர் தாங்க முடியாது. மார்கழிக் குளிருக்கே இரண்டு கால்களிலும் சாக்ஸ்போல துணி கட்டிக்கொண்டு நடப்பேன். அந்த ரூமில் ஏசியை 18-ல் வைத்திருந்தார்கள். டைப் அடிக்க முடியாதபடி என் விரல்நுனிகள் விறைத்துச் சில்லிட்டுப்போகும். சேர்ந்த ஒரு வாரத்தில், வீட்டில் கதவோரம் ஒட்டி நின்று ``என்னால இந்த வேலைக்குப் போக முடியல. நின்னுடுறேன்” என்று கண்ணீர்விட்டு அழுதேன். அம்மாவுக்கு கார்மென்ட்ஸில் வேலை. இரண்டு கிலோமீட்டர்கள் வெயிலில் நடந்து போய் நாள் முழுக்க ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழ் வேலை செய்ய வேண்டும். ஏசி குளிரையெல்லாம் அனுபவித்ததே இல்லை. ஆனால், அம்மா அதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. ``மொத தடவை வேலைக்குச் சேந்திருக்க. ஒரு வாரத்துல நின்னா அசிங்கம். மொத மாச சம்பளம் வாங்கிட்டு நின்னுரு” என்றார். அவர் நினைத்ததுபோலவே, அடுத்த வாரத்திலிருந்து எனக்குக் குளிர் பழகிவிட்டது. அங்கே ஆறு வருடங்கள் வேலைசெய்தேன். 

p84b_1535352727.jpg

இரண்டாவது வருடம் ஒருநாள் வேலை முடிந்து களைப்பாய் வீட்டுக்குத் திரும்பியபோது, அம்மா ``அனு போன் செஞ்சா. அவ நம்பரை வாங்க மறந்துட்டேன். நீ வந்தப்புறம் கூப்பிடுறேன்னா” என்றார். `எப்படி என் நம்பர் அவளுக்குக் கிடைத்தது?!’ என ஆச்சர்யமாய் இருந்தது. அன்றைக்கு அனு கூப்பிடவில்லை. அடுத்து ஒரு மாதம் கழித்துதான் கூப்பிட்டாள். நான்தான் எடுத்தேன். நான் என்ன செய்கிறேன் என விசாரித்தாள். `கல்லூரியில் முதல் மாணவியாகத் தேறிவிட்டு, மேற்கொண்டு படிக்காமல் வேலைக்குப் போகிறாயே!’ என வருந்தினாள். பிறகு, “பக்கத்துல அம்மா இல்லல்ல?” என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஆண்டனியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆண்டனி இரண்டு வருடங்களாய் அவளுடன் எம்.காம் படிக்கிறான். முதல் நாள் பார்த்ததிலிருந்தே இருவருக்கும் காதல். யார் முதலில் சொல்வது எனத் தயங்கிக்கொண்டேயிருந்து வருட முடிவில் அவன் பிறந்த நாளன்று இவளேதான் புரப்போஸ் செய்திருக்கிறாள். அடுத்த ஒரு வருடம், போன வேகமே தெரியவில்லை. இதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக்கொள்வ தற்காக இருவருமே எம்.பில் சேர விரும்புகிறார்கள். ஆண்டனி வீட்டில் ஓகே சொல்லிவிட்டார்கள். அனு வீட்டில் இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை.

ஆண்டனி மிகவும் நல்லவன். கைமேல் ஊரும் எறும்பைக்கூட கனிவாய்க் கீழே இறக்கிவிடக்கூடியவன். அனுவை உயிராய் நேசிக்கிறான். வீட்டுக்கு ஒரே பையன். அவன் அப்பாவும் அம்மாவும் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள். இப்போதெல்லாம் அனு நிறைய மாறிவிட்டாள். அவனுக்குப் பிடித்த நிறங்களில்தான் உடை அணிகிறாள். அவனுக்குப் பிடித்த ஜாதிமல்லிப் பூவைத்தான் சூடுகிறாள். தனக்குப் பிடிக்கவே பிடிக்காத வெனிலா ஐஸ்க்ரீமைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறாள். சந்தோஷமாய்ப் பேசிவிட்டு ஆண்டனியிடம் பேசும்படி போனைக் கொடுத்தாள். அவன் கண்ணியமாய்ப் பேசினான். நலம் விசாரித்தான். அனுவின் இன்னொசன்ஸ்தான் அவளைக் காதலிக்கவைத்ததாகச் சொன்னான். சொந்த ஊர் வேளாங்கண்ணி அருகில் ஏதோ ஒரு கிராமம் என்றான். ``ஓ! நாங்க ஒவ்வொரு வருஷமும் வேளாங்கண்ணி வருவோம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்ப, அம்மா வேண்டிக்கிட்டது” என்று நான் சொன்னதும் ``வேளாங்கண்ணி வந்தால் அவசியம் வீட்டுக்கு வரணும்” என்று கோரிக்கைவைத்து அவன் வீட்டு நம்பரைக் கொடுத்தான்.

அதற்கடுத்த வருடம் நான் என் சொந்த சம்பாத்தியத்தில் 3,000 ரூபாய்க்கு வெள்ளை நிற Nokia 1100 வாங்கினேன். பயங்கர பெருமையாய் இருந்தது. `போன் வாங்கிவிட்டேன்’ என்று யாருக்கெல்லாம் சொல்ல முடியுமோ எல்லோரையும் அழைத்து, ``இதான் என் மொபைல் நம்பர். எழுதிக்கோங்க” என்று சொன்னேன். அப்படி ஆண்டனி வீட்டுக்கும் கூப்பிட்டுச் சொன்னேன். ஆண்டனி வீட்டில்தான் இருந்தான். தான் மட்டும் எம்.பில் படிப்பதாகவும், அனு அதே ஊரில் வேலையில் இருப்பதாகவும், இருவரும் மாலையில் சந்தித்துக்கொள்வதாகவும் சொன்னான். தன்னிடமும் மொபைல் இருப்பதாகச் சொல்லி நம்பர் கொடுத்தான். என் மொபைலில் லேண்ட்லைன் நம்பர்களே அதிகம் இருந்தன.

மொபைல் வைத்திருந்த சொற்ப நபர்களும் பெரியவர்களாக அலுவலகத்தில் எனக்கு மேலிடத்தில் பணிபுரிபவர்களாக இருந்தனர். ஆண்டனி அனுப்பும் ஃபார்வேர்டு மெசேஜ்கள், பிக்சர் மெசேஜ்களை சேவ் செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது வேறு யாருக்காவது அனுப்புவேன். கான்டாக்ட் லிஸ்டில் மொபைல் நம்பர்கள் அதிகரித்த பிறகு, ஒரே நாளில் 300 மெசேஜ்கள் எல்லாம் அனுப்பியிருக்கிறேன். முதலில் செம ஜாலியாய் இருந்தது. திடீரென, போட்டிருந்த 300 ரூபாய் பேலன்ஸ் முழுவதும் காலியானதும், கஸ்டமர் கேருக்குக் கூப்பிட்டு சண்டைபோட்டு மெசேஜுக்கான காசு அது எனத் தெரிந்ததும் ஜெர்க் ஆகி, பிறகு குறைத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு நியூ இயர், தீபாவளி, பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பே அட்வான்ஸ் வாழ்த்து அனுப்பிக்கொள்வோம். விசேஷ நாளன்று அனுப்பினால், ஒரு மெசேஜுக்கு 1 ரூபாய் போய்விடும்.

ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு வேளாங்கண்ணி போயிருந்தபோது பீச்சில் வந்து என்னைச் சந்தித்துப் பேசினான். நேரில் பார்க்க செம அழகாய் இருந்தான். பார்த்ததும், இவனுக்கு எப்படி அனுவைப் பிடித்தது எனத் தோன்றிய எண்ணத்தை உடனே விலக்கிவிட்டு, அவனுடன் சகஜமாய்ப் பேசினேன். எனக்கும்கூட `யாரையாவது காதலித்துத் திருமணம் செய்துகொண்டால் என்ன?’ எனத் தோன்றியது. அப்பாவுக்கு பயந்து அந்த நினைப்பை உடனடியாக அழித்துவிட்டேன். எல்லாம் சுமுகமாவே போய்க்கொண்டிருந்தன.

திடீரென ஒருநாள், ஆண்டனி போன் செய்தான். குரல் தழுதழுத்தது. ``வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கிறார்கள் என்று இவர்களாகவே விஷயத்தை உடைத்ததில் பிரச்னையாகிவிட்டது’’ என்றான். இரண்டு ஹெச்.எம்-களும் பெண் மதம் மாறினால் மருமகளாய் ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார்களாம். ஆனால், அனுவுக்கே அதில் உடன்பாடு இல்லையாம். ``பெயரை மாற்றிக்கொண்டு, பொட்டு வைக்காமலெல்லாம் என்னால் வாழ முடியாது’’ என்கிறாளாம். அனுவின் வீட்டிலோ, சாதிக் கலவரத்துக்கு இணையான ரகளை. `கிழக்கே போகும் ரயில்’ சுதாகருக்குக்கூட வீரம் வந்து உதட்டில் ரத்தம் வரும் அளவுக்கு அனுவை அடித்திருக்கிறானாம். ``வீட்டில் பூட்டிவைத்திருக்கிறார்கள்’’ என்றான். ``என்னால் போய்ப் பார்க்க முடியுமா?’’ என்று கேட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்போதுதான் தாவணி அணிவதை நிறுத்திவிட்டு புடவைக்கு மாறியிருந்தேன். அதனாலெல்லாம் இதுபோன்ற விவகாரங்களில் தலையிடும் அளவுக்குப் பக்குவம் வந்துவிட்டதாக நானே நம்பியிருக்கவில்லை. என் பெற்றோர் என்னை எப்படி அனுமதிப்பார்கள்? தயங்கித் தயங்கி மழுப்பலாய் என்னவோ பதில் சொன்னேன். சரியென்று வைத்துவிட்டான். 

p84c_1535352760.jpg

இன்னும் சில மாதங்கள் கழித்து மீண்டும் அழைத்தான். உடைந்த குரலில், ``அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்’’ என்றான். திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் பெண்ணின் போட்டோவைக்கூடப் பார்க்க விருப்பமில்லை என்றான். சினிமாக்களில் வருவதுபோல அவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வெறுப்பானோ என்று நானே நினைத்துக்கொண்டு பெரிய மனுஷித்தனமாய், ``உங்கள நம்பி வர்ற அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கை வீணாய்டாதா? அனுவ கொஞ்சம் கொஞ்சமா மறக்கப்பாருங்க” என்று அறிவுரையெல்லாம் சொன்னேன். அதற்குப் பிறகு எனக்குத் திருமணமாகி நான் சம்சார சாகரத்தில் மூழ்கியதில் ஆண்டனியையும் அனுவையும் சுத்தமாய் மறந்துபோயிருந்தேன்.

சர்வேஸுக்கு மொட்டைபோட நாங்கள் பழநி போயிருந்தபோது, ஆண்டனி மறுபடி அழைத்தான். அன்று என் பிறந்த நாள். வாழ்த்தியவனின் குரல் முற்றிலும் வேறு மாதிரியிருந்தது. குதூகலமாய்ப் பேசினான். மகள் பிறந்திருக்கிறாளாம். ``பெயர் ஜெனிஃபர்’’ என்றான். வேறென்ன `அனுராதா’ என்றா வைக்க முடியும்? பேசியதில் முக்கால்வாசி மகள் புராணமாகவே இருந்தது. பேச்சின் முடிவில், தழைந்த குரலில் ``அனுவைப் பற்றி ஏதாவது தெரியுமா?’’ என்று கேட்டான். அவள் பெற்றோரின் சம்மதம் வாங்கிய பிறகு அவர்களின் ஆசியோடுதான் அவனைத் திருமணம் செய்வேன் என்றும், ஆனால் மதம் மாற மாட்டேன் என்றும், கடைசி வரை பிடிவாதமாய் இருந்ததாய்ச் சொன்னான். கடைசிவரை என்றால்... ஆண்டனியின் திருமணம் வரை. கையைக் கிழித்துக்கொண்டும் உண்ணாவிரதம் இருந்தும் போராடிப்பார்த்திருக்கிறாள். பாவம்!

அதற்குப் பிறகு மேலும் 10, 12 வருடம் ஓடிவிட்டது. இப்போதுதான் அனுவின் குரலை மீண்டும் கேட்கிறேன். அவளின் கொஞ்சும் குரலையும் நளின பாவனைகளையும் பார்த்தவர்களால் அவள் அப்படியெல்லாம் போராடுவாள் என்று நம்பவே முடியாது. நிறைய்ய்ய்ய பேசினாள். வகுப்பில் இருந்த நிறைய பேரை மறந்துபோய்விட்டதாகச் சொன்னாள். இன்னும் சிலர் எந்தெந்த ஊர்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். என்னுடையதுபோலவே அவளுடைய கல்லூரி ஆல்பமும் தொலைந்துவிட்டதாகச் சொன்னாள். அதிதீவிர ரமணிசந்திரன் வாசகியாக இருந்த எங்கள் நண்பி ஒருத்திக்கு, இன்னமும் திருமணம் ஆகவில்லை. அவள் யாருடனும் பேசுவதேயில்லை என்றாள். அவளுடைய இப்போதைய வேலை பற்றிப் பேசினாள். தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகச் சொன்னாள். சர்வேஸையும் தர்ஷினியையும் பார்க்க வேண்டும் என்றாள்.

அவள் பேசிவைத்த பிறகு, என்னவோ வெறுமையாய் உணர்ந்தேன். நாங்கள் பேசிய மொத்த நேரம் 58 நிமிடம் என்று என் அலைபேசி காண்பித்தது. 58 நிமிடமாய் நான் எதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேனோ அது நிகழவேயில்லை என்பதுதான் அந்த வெறுமைக்குக் காரணம் எனப் புரிந்தது. எங்கள் உரையாடலின் நடுவே திரி கொளுத்தப்பட்ட வெடிபோல் இருந்த `ஆண்டனி’ என்ற பெயர், தண்ணீர் பட்டதுபோல இருண்டு அணைந்திருந்தது.

மீண்டும் வாட்ஸ் அப்பைத் திறக்கையில் அவள் குடும்பப் புகைப்படம் அனுப்பியிருந்தாள். அவள் நடுவே அமர்ந்திருக்க, பின்னால் அவர் கணவர் ஒல்லியாய் உயரமாய் வழுக்கைத்தலையுடன் நின்றிருந்தார். அருகில் நின்றிருந்த இரு பெண் குழந்தைகளும் கண்களின் ஓரத்தில் நீண்ட மைத்தீற்றல்களோடும் எண்ணெய் தடவிப் பின்னிய இரட்டை ஜடையில் நீண்டு தொங்கும் ஜாதிமல்லிப் பூச்சரங்களோடும் இருந்தனர்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.