Jump to content

ஒளி வளர் விளக்கு


Recommended Posts

ஒளி வளர் விளக்கு - சிறுகதை

 
காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

னு பேசினாள். கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எப்படியோ என் நம்பரைப் பிடித்திருக்கிறாள். நம்பவே முடியவில்லை. நாங்கள் இளங்கலை முடித்து 21 ஆண்டு ஆகிறது. இடையில் இரண்டு முறைதான் பேசினோம். நான்தான் அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பரைத் தொலைத்துவிட்டேன். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்கள் போன் நம்பரும் மாறிக் கொண்டிருந்தது. என்னுடைய மொபைல் நம்பரையும் நான் ஆறு முறை மாற்றிவிட்டேன். கடைசியாக மாற்றியது ஏர்செல் பிரச்னையில். 

p84a_1535352690.jpg

நான் வாட்ஸ் அப் குரூப்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜுகள். குட்மார்னிங், குட்நைட், ஹீலர்கள், போலி இயற்கை ஆர்வலர்களின் பரப்புரைகள், உடனே ஏழு பேருக்கு அனுப்பவேண்டிய ஆஞ்சநேயர் பெருமாள் படங்கள், `முன்னோர்கள், முட்டாள்கள் அல்ல’ வகையறா கண்டுபிடிப்புகள் மாறி மாறி எல்லா குரூப்களிலும் வருவதால் எல்லாவற்றையும் ம்யூட் செய்துவிடுவேன்.

இவள் எப்போது கல்லூரிக் குழுவில் இணைந்தாள் என்றே தெரியவில்லை. ``ஹாய் சுமீஈஈஈ... எப்டி இருக்க?” என்ற அவளின் கீச்சுக்குரல், பழைய நினைவுகளைக் கிளறியது. ஆனால், நான் பேசும் நிலையில் இல்லை. நான் வங்கியிலிருந்து முக்கியமான ஓர் அழைப்புக்காகக் காத்திருந்தேன். அவசரமாக கட் பண்ணினால் கோபித்துக்கொள்வாளோ என்ற தயக்கம் எட்டிப்பார்த்தது. ஆனாலும் வேறு வழியில்லை. ``அனு... ஒரு அர்ஜென்ட் காலுக்காக வெயிட்பண்றேன். நானே உன்னைக் கூப்பிடுறேன். ப்ளீஸ்... கோச்சிக்காத” என்றதும் சட்டென போனை வைத்துவிட்டாள். லேசாய் புன்னகைத்தேன். அவள் மாறவேயில்லை என்பது ஆச்சர்யமாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

அனுவை, கல்லூரிவிடுதியில் வைத்துதான் முதன்முதலில் பார்த்தேன். தலையில் எண்ணெய் தடவுவதற்குப் பதிலாய் கொட்டியிருந்தாள். நெற்றியின் விளிம்பில் எண்ணெய் வழிந்து மினுங்கியது. பெரிய சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு வைத்து அதன்மேல் சந்தனத்தை விபூதிபோல நீளமாய்த் தீற்றியிருந்தாள். இரண்டு கண்களின் ஓரத்திலும் நாட்டியக்காரர்கள் வரைவதுபோல நீளமாய் மைத்தீற்றல். அது, வியர்வையாலோ அவள் கண்களைக் கசக்கியதாலோ கலைந்து கன்னத்திலும் அப்பியிருந்தது. காதில் பெரிய்ய்ய தொங்கட்டான்கள். தலையில் கொத்தாய் கனகாம்பரப் பூ.

நானும்கூட கல்லூரி முதல் நாளில் கனகாம்பரமும் மல்லிகையும் கலந்து அம்மா கட்டிக் கொடுத்த பூச்சரத்தைத்தான் வைத்துக்கொண்டு போனேன். என் சீனியர்களில் ஒருத்தி, ``கனகாம்பரம் வைக்காதே. அதுக்குப் பேரே இங்க `கேண காம்பரம்`தான்” என்றாள். உண்மையில் எனக்கு வாசமில்லாத, முகத்தில் அறையும் செந்தூர நிறத்தில் இருக்கும் அந்தப் பூவை ஏற்கெனவே பிடிக்காது. அனு, தனக்கு அதுதான் பிடித்தமான பூ என்பாள். அதோடு தலையில் வைத்து வாடி சிறுத்துப்போன பூவை வெகுசீக்கிரத்தில் தூக்கி எறிய மாட்டாள். ``அது அழகா இருந்தப்ப எவ்ளோ ஆசையா தலையில வெச்சுக்கிறோம்! வாடிப்போச்சுன்னா உடனே எறிஞ்சுடணுமா?” என்பாள். உடன் இருந்தவர்கள் நமட்டுச் சிரிப்போடு அவளைக் கவனிப்பது தெரிந்தாலும், அவள் எதற்காகவும் கவலைப்பட்டதாகவோ தன்னை மாற்றிக்கொள்ள முயன்றதாகவோ தெரியவில்லை.

அவள் குரலே அவளை எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனித்துக் காட்டும். குரலா அல்லது அவள் பேசும்விதமா என்றுகூட குழப்பமாய் இருக்கும். புரியும்படி சொல்வதென்றால், `அன்பே வா’ படத்தில் `போங்கப்பா நீங்கே’ என்று சரோஜாதேவி பேசுவதுபோல என வைத்துக்கொள்ளுங்களேன். கொஞ்சிக் கொஞ்சி நளினமாய்ப் பேசுவதும், ஏறத்தாழ நாட்டியமாடுவதுபோலவே நடப்பதும், கண்கள் கூசும் நிறத்திலான உடைகளும், அந்தக் கண்ணோர மைத்தீற்றலும், ஜல்ஜல்லெனச் சலங்கை போன்ற பெரிய கொலுசும் அவளை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டியது. ஆனால், மூன்றாம் ஆண்டு வருவதற்குள் அவள் நடை உடை பாவனைகள் எல்லாம் ஓரளவு மாறியிருந்தன. கண்களை உறுத்தாத வண்ணங்களில் காட்டன் புடவைகளை உடுத்த ஆரம்பித்தாள். நானும்கூட ஓரிருமுறை அவள் புடவையை வாங்கி உடுத்தியிருக்கிறேன். எனக்கு அப்போதெல்லாம் தாவணிதான் மிகவும் பிரியமான உடை. ஆகாய வண்ணத்தில் மேகத்தைப்போன்றே வெள்ளைத் தீற்றல்கள்கொண்ட அவள் புடவை, எனக்கு மிகவும் பாந்தமாய்ப் பொருந்தியது. அந்தப் புடவையை அவள்தான் தேர்ந்தெடுத்து வாங்கியிருக்கிறாள் என்பதே நம்ப முடியாததாயிருந்தது.

விடுதிக்கு வெளியே பெரிய மைதானம் இருக்கும். ஆங்காங்கே ஓரிரு வேப்பமரங்களும் ஒரே ஒரு புளியமரமும் இருக்கும். பாப்-கட் செய்துகொண்ட சிறுமிபோல குள்ளமாய் புஸுபுஸுவெனத் தலை அடர்ந்து நிற்கும் அந்தப் புளியமரத்தை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மாலையில் படிக்கிறோம் என்று பேர் பண்ணிக்கொண்டு அந்த மரத்தடியில் அமர்ந்து அரட்டையடிப்போம். வார்டன், சீனியர்கள், லெக்சரர்கள் பற்றிய கிசுகிசுக்கள், பேய்க்கதைகள் எனச் சுற்றியடித்து, பேச்சு செக்ஸில் வந்து நிற்கும். சத்தியமாய் எங்கள் யாருக்குமே முதலிரவு அறைக்குள் விளக்கை அணைத்த பிறகு என்ன நடக்கும் என அப்போது தெரிந்திருக்கவில்லை. இப்போதுபோல இன்டர்நெட்டோ ஸ்மார்ட்போனோ குறைந்தபட்சம் ஆண்களுக்கு வாய்த்ததுபோல `சரோஜாதேவி’ புத்தகங்களோகூட கிடைக்கப்பெறாத அப்பிராணிகள் நாங்கள். யூகங்களே கிளுகிளுப்பாயிருக்கும்.

+2 படிக்கும்போது, உடன் படித்த பத்மாவுக்குத் திருமணம் நிச்சயமானது. திருமணம் முடிந்து அவள் மீண்டும் வகுப்புக்கு வரும்போது முதலிரவில் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லவேண்டும் என எல்லோரும் அவளிடம் சத்தியம் வாங்கியிருந்தோம். கல்யாணத்தில் மாலையும் கழுத்துமாய் அவள் நின்றுகொண்டிருக்கும்போது, சுவர்க்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்துவிட்டு அவள் காதில் ரகசியமாய் சத்தியத்தை ஞாபகப்படுத்திவிட்டு வந்தோம். மீண்டும் அவள் பள்ளிக்கு வந்ததும் பிரேயருக்கு முன்பாக அவளைக் கடத்திக்கொண்டு போய் ``சொல்லுடி... சொல்லுடி...” என்று மொய்த்தோம். அவள் ஏகமாய் வெட்கப்பட்டுக்கொண்டு, `` `எல்லாத்தையும் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சப்புறம் வெச்சுக்கலாம். நீ ஒழுங்கா படி’ன்னு மாமா சொல்லிட்டார்” என்றதும் எங்களுக்கு சப்பென்றாகிவிட்டது. அவள் பொய்தான் சொன்னாள் என்று தெரிந்தாலும், அதற்குமேல் அவளிடம் என்ன கேட்பது எனத் தெரியாமல் விட்டுவிட்டோம்.

இதைப்பற்றியெல்லாம் நாங்கள் மும்முரமாய்ப் பேசிக்கொண்டிருக்கையில், அனு என் முதுகைச் சுரண்டுவாள். ``சுமீ... அங்க பாரேன் வானத்தை. சீக்கிரம் பாரு. மேகம் மறைச்சுடும். சீக்கிரம்... அங்கதான். அந்த ஆரஞ்சுக்கும் மஞ்சளுக்கும் இடையில ஒரு புளூ தெரியுதுல்ல? அதான்... அதுவே இன்னும் கொஞ்சம் லைட்டா இருந்தா எப்டி இருக்கும்? அந்த நிறத்துலதான் பர்த்டேக்குப் புடவை எடுத்திருக்கேன். அம்மா இந்த வாரம் கொண்டுவருவாங்க” என்பாள். அந்தி கவிந்து சூரியன் முழுவதுமாக மறைவதற்குள் தாடையைப் பிடித்திழுத்து வானத்தைப் பார்க்கவைத்து, பத்துத் தடவையாவது இதையே திரும்பத் திரும்பச் சொல்லிவிடுவாள்.

சொன்னதுபோலவே அவள் அம்மா அந்தப் புடவையை விடுதிக்குக் கொண்டுவந்து கொடுத்தார். அவரைப் பார்க்கும் எவருக்கும் முதல் பார்வையிலேயே `இவங்கதான் அனுவோட அம்மா’ என்று தெரிந்துவிடும். அவளைப்போலவே கண்ணோரத்தில் மைத்தீற்றலும் கீச்சுக்குரலும் நளின நடையுமாய்த்தான் வருவார். எங்கள் அனைவரின் மீதும் ரொம்பப் பிரியமாயிருப்பார். பெரிய பெரிய சம்புடங்களில் எல்லோருக்கும் சேர்த்து முறுக்கு, அதிரசம், சுய்யம், பொரி உருண்டை செய்து எடுத்து வருவார்கள்.

அவர் வீட்டுக்கு ஒருமுறை நாங்கள் ஆறு பேர் சேர்ந்து போயிருந்தோம். அனுவுக்கு ஓர் அண்ணன் இருந்தான். `சினிமா ஹீரோபோல இருப்பான்’ என்று அடிக்கடி சொல்லியிருக்கிறாள். நாங்கள் அவனை சைட்டடிப்பதா, `அண்ணா’வென்று அழைப்பதா என்ற குழப்பத்துடன்தான் போனோம். அவன் `கிழக்கே போகும் ரயில்’ சுதாகர்போல இருந்தான். அதில் வரும் ராதிகாவைப்போலவே, எங்களைப் பார்த்ததும் அநியாயத்துக்கு வெட்கப்பட்டு தலைகுனிந்து ஒதுங்கிப் போனான். எங்களுக்கு `ஙே` என்றிருந்தது. உடன் வந்த பானுமதி மட்டும் வெட்கத்துடன் ``ஏன்டி இவனுக்கென்ன? ஹீரோ மாதிரிதான இருக்கான்?” என்றாள். நாங்கள் எல்லோரும் கொல்லெனச் சிரித்து, அங்கிருந்து வரும்வரை அவளை ஓட்டித்தள்ளினோம்.அனுவின் அப்பா, வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் கழுத்தில் துண்டோடு தடதடவென புல்லட்டில் வருவார். பெரிய மீசை வைத்திருப்பார். அவருக்கு ஊருக்குள் வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்றும், அதைப் பற்றிக் கேட்டால் அம்மாவை முடியைப் பிடித்திழுத்து கன்னங்களில் அறைவார் என்றும், அவர் அடித்ததில் அம்மாவின் கடைவாய்ப்பற்கள் இரண்டு விழுந்துவிட்டதாகவும் அனு ஒருமுறை என்னிடம் மட்டும் அழுதுகொண்டே சொன்னாள். அவரை நேரில் பார்த்தால், அவ்வளவு கொடுமைக்காரராய்த் தெரியவில்லை. அவர் அடிப்பதையும் அவள் அம்மா கீச்சுக்குரலில் அழுவதையும் கற்பனை செய்ய முயன்று தோற்றிருக்கிறேன்.

இளங்கலை முடித்த பிறகு, நான் என் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். எங்கள் வீட்டின் நிலைமை, என்னை மேற்கொண்டு படிக்க விடவில்லை. அனு அங்கேயே பட்டமேற்படிப்பு சேர்ந்துவிட்டதாகத் தெரிந்தது. நான் ஊருக்கு வெளியில் இருந்த தோல் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் அக்கவுன்ட்ஸ் பிரிவில் சொற்பமான சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். இளங்கலையோடு சேர்த்து கணினியில் Tally படித்திருந்ததால், உடனே வேலை கிடைத்தது. காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிப் போனால், இரவு 8 மணிக்குத்தான் வந்து சேருவேன்.

என்னால் வேலைகூடச் செய்துவிட முடிந்தது. அந்த ஏசி ரூமில் நாள் முழுக்க இருப்பதுதான் பெரிய தொல்லையாக இருந்தது. என்னால் குளிர் தாங்க முடியாது. மார்கழிக் குளிருக்கே இரண்டு கால்களிலும் சாக்ஸ்போல துணி கட்டிக்கொண்டு நடப்பேன். அந்த ரூமில் ஏசியை 18-ல் வைத்திருந்தார்கள். டைப் அடிக்க முடியாதபடி என் விரல்நுனிகள் விறைத்துச் சில்லிட்டுப்போகும். சேர்ந்த ஒரு வாரத்தில், வீட்டில் கதவோரம் ஒட்டி நின்று ``என்னால இந்த வேலைக்குப் போக முடியல. நின்னுடுறேன்” என்று கண்ணீர்விட்டு அழுதேன். அம்மாவுக்கு கார்மென்ட்ஸில் வேலை. இரண்டு கிலோமீட்டர்கள் வெயிலில் நடந்து போய் நாள் முழுக்க ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழ் வேலை செய்ய வேண்டும். ஏசி குளிரையெல்லாம் அனுபவித்ததே இல்லை. ஆனால், அம்மா அதைப் பற்றியெல்லாம் பேசவில்லை. ``மொத தடவை வேலைக்குச் சேந்திருக்க. ஒரு வாரத்துல நின்னா அசிங்கம். மொத மாச சம்பளம் வாங்கிட்டு நின்னுரு” என்றார். அவர் நினைத்ததுபோலவே, அடுத்த வாரத்திலிருந்து எனக்குக் குளிர் பழகிவிட்டது. அங்கே ஆறு வருடங்கள் வேலைசெய்தேன். 

p84b_1535352727.jpg

இரண்டாவது வருடம் ஒருநாள் வேலை முடிந்து களைப்பாய் வீட்டுக்குத் திரும்பியபோது, அம்மா ``அனு போன் செஞ்சா. அவ நம்பரை வாங்க மறந்துட்டேன். நீ வந்தப்புறம் கூப்பிடுறேன்னா” என்றார். `எப்படி என் நம்பர் அவளுக்குக் கிடைத்தது?!’ என ஆச்சர்யமாய் இருந்தது. அன்றைக்கு அனு கூப்பிடவில்லை. அடுத்து ஒரு மாதம் கழித்துதான் கூப்பிட்டாள். நான்தான் எடுத்தேன். நான் என்ன செய்கிறேன் என விசாரித்தாள். `கல்லூரியில் முதல் மாணவியாகத் தேறிவிட்டு, மேற்கொண்டு படிக்காமல் வேலைக்குப் போகிறாயே!’ என வருந்தினாள். பிறகு, “பக்கத்துல அம்மா இல்லல்ல?” என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஆண்டனியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆண்டனி இரண்டு வருடங்களாய் அவளுடன் எம்.காம் படிக்கிறான். முதல் நாள் பார்த்ததிலிருந்தே இருவருக்கும் காதல். யார் முதலில் சொல்வது எனத் தயங்கிக்கொண்டேயிருந்து வருட முடிவில் அவன் பிறந்த நாளன்று இவளேதான் புரப்போஸ் செய்திருக்கிறாள். அடுத்த ஒரு வருடம், போன வேகமே தெரியவில்லை. இதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக்கொள்வ தற்காக இருவருமே எம்.பில் சேர விரும்புகிறார்கள். ஆண்டனி வீட்டில் ஓகே சொல்லிவிட்டார்கள். அனு வீட்டில் இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை.

ஆண்டனி மிகவும் நல்லவன். கைமேல் ஊரும் எறும்பைக்கூட கனிவாய்க் கீழே இறக்கிவிடக்கூடியவன். அனுவை உயிராய் நேசிக்கிறான். வீட்டுக்கு ஒரே பையன். அவன் அப்பாவும் அம்மாவும் அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள். இப்போதெல்லாம் அனு நிறைய மாறிவிட்டாள். அவனுக்குப் பிடித்த நிறங்களில்தான் உடை அணிகிறாள். அவனுக்குப் பிடித்த ஜாதிமல்லிப் பூவைத்தான் சூடுகிறாள். தனக்குப் பிடிக்கவே பிடிக்காத வெனிலா ஐஸ்க்ரீமைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறாள். சந்தோஷமாய்ப் பேசிவிட்டு ஆண்டனியிடம் பேசும்படி போனைக் கொடுத்தாள். அவன் கண்ணியமாய்ப் பேசினான். நலம் விசாரித்தான். அனுவின் இன்னொசன்ஸ்தான் அவளைக் காதலிக்கவைத்ததாகச் சொன்னான். சொந்த ஊர் வேளாங்கண்ணி அருகில் ஏதோ ஒரு கிராமம் என்றான். ``ஓ! நாங்க ஒவ்வொரு வருஷமும் வேளாங்கண்ணி வருவோம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்தப்ப, அம்மா வேண்டிக்கிட்டது” என்று நான் சொன்னதும் ``வேளாங்கண்ணி வந்தால் அவசியம் வீட்டுக்கு வரணும்” என்று கோரிக்கைவைத்து அவன் வீட்டு நம்பரைக் கொடுத்தான்.

அதற்கடுத்த வருடம் நான் என் சொந்த சம்பாத்தியத்தில் 3,000 ரூபாய்க்கு வெள்ளை நிற Nokia 1100 வாங்கினேன். பயங்கர பெருமையாய் இருந்தது. `போன் வாங்கிவிட்டேன்’ என்று யாருக்கெல்லாம் சொல்ல முடியுமோ எல்லோரையும் அழைத்து, ``இதான் என் மொபைல் நம்பர். எழுதிக்கோங்க” என்று சொன்னேன். அப்படி ஆண்டனி வீட்டுக்கும் கூப்பிட்டுச் சொன்னேன். ஆண்டனி வீட்டில்தான் இருந்தான். தான் மட்டும் எம்.பில் படிப்பதாகவும், அனு அதே ஊரில் வேலையில் இருப்பதாகவும், இருவரும் மாலையில் சந்தித்துக்கொள்வதாகவும் சொன்னான். தன்னிடமும் மொபைல் இருப்பதாகச் சொல்லி நம்பர் கொடுத்தான். என் மொபைலில் லேண்ட்லைன் நம்பர்களே அதிகம் இருந்தன.

மொபைல் வைத்திருந்த சொற்ப நபர்களும் பெரியவர்களாக அலுவலகத்தில் எனக்கு மேலிடத்தில் பணிபுரிபவர்களாக இருந்தனர். ஆண்டனி அனுப்பும் ஃபார்வேர்டு மெசேஜ்கள், பிக்சர் மெசேஜ்களை சேவ் செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது வேறு யாருக்காவது அனுப்புவேன். கான்டாக்ட் லிஸ்டில் மொபைல் நம்பர்கள் அதிகரித்த பிறகு, ஒரே நாளில் 300 மெசேஜ்கள் எல்லாம் அனுப்பியிருக்கிறேன். முதலில் செம ஜாலியாய் இருந்தது. திடீரென, போட்டிருந்த 300 ரூபாய் பேலன்ஸ் முழுவதும் காலியானதும், கஸ்டமர் கேருக்குக் கூப்பிட்டு சண்டைபோட்டு மெசேஜுக்கான காசு அது எனத் தெரிந்ததும் ஜெர்க் ஆகி, பிறகு குறைத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு நியூ இயர், தீபாவளி, பொங்கலுக்கு இரண்டு நாள் முன்பே அட்வான்ஸ் வாழ்த்து அனுப்பிக்கொள்வோம். விசேஷ நாளன்று அனுப்பினால், ஒரு மெசேஜுக்கு 1 ரூபாய் போய்விடும்.

ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு வேளாங்கண்ணி போயிருந்தபோது பீச்சில் வந்து என்னைச் சந்தித்துப் பேசினான். நேரில் பார்க்க செம அழகாய் இருந்தான். பார்த்ததும், இவனுக்கு எப்படி அனுவைப் பிடித்தது எனத் தோன்றிய எண்ணத்தை உடனே விலக்கிவிட்டு, அவனுடன் சகஜமாய்ப் பேசினேன். எனக்கும்கூட `யாரையாவது காதலித்துத் திருமணம் செய்துகொண்டால் என்ன?’ எனத் தோன்றியது. அப்பாவுக்கு பயந்து அந்த நினைப்பை உடனடியாக அழித்துவிட்டேன். எல்லாம் சுமுகமாவே போய்க்கொண்டிருந்தன.

திடீரென ஒருநாள், ஆண்டனி போன் செய்தான். குரல் தழுதழுத்தது. ``வீட்டில் திருமணப் பேச்சு எடுக்கிறார்கள் என்று இவர்களாகவே விஷயத்தை உடைத்ததில் பிரச்னையாகிவிட்டது’’ என்றான். இரண்டு ஹெச்.எம்-களும் பெண் மதம் மாறினால் மருமகளாய் ஏற்றுக்கொள்கிறோம் என்கிறார்களாம். ஆனால், அனுவுக்கே அதில் உடன்பாடு இல்லையாம். ``பெயரை மாற்றிக்கொண்டு, பொட்டு வைக்காமலெல்லாம் என்னால் வாழ முடியாது’’ என்கிறாளாம். அனுவின் வீட்டிலோ, சாதிக் கலவரத்துக்கு இணையான ரகளை. `கிழக்கே போகும் ரயில்’ சுதாகருக்குக்கூட வீரம் வந்து உதட்டில் ரத்தம் வரும் அளவுக்கு அனுவை அடித்திருக்கிறானாம். ``வீட்டில் பூட்டிவைத்திருக்கிறார்கள்’’ என்றான். ``என்னால் போய்ப் பார்க்க முடியுமா?’’ என்று கேட்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் அப்போதுதான் தாவணி அணிவதை நிறுத்திவிட்டு புடவைக்கு மாறியிருந்தேன். அதனாலெல்லாம் இதுபோன்ற விவகாரங்களில் தலையிடும் அளவுக்குப் பக்குவம் வந்துவிட்டதாக நானே நம்பியிருக்கவில்லை. என் பெற்றோர் என்னை எப்படி அனுமதிப்பார்கள்? தயங்கித் தயங்கி மழுப்பலாய் என்னவோ பதில் சொன்னேன். சரியென்று வைத்துவிட்டான். 

p84c_1535352760.jpg

இன்னும் சில மாதங்கள் கழித்து மீண்டும் அழைத்தான். உடைந்த குரலில், ``அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்’’ என்றான். திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் பெண்ணின் போட்டோவைக்கூடப் பார்க்க விருப்பமில்லை என்றான். சினிமாக்களில் வருவதுபோல அவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வெறுப்பானோ என்று நானே நினைத்துக்கொண்டு பெரிய மனுஷித்தனமாய், ``உங்கள நம்பி வர்ற அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கை வீணாய்டாதா? அனுவ கொஞ்சம் கொஞ்சமா மறக்கப்பாருங்க” என்று அறிவுரையெல்லாம் சொன்னேன். அதற்குப் பிறகு எனக்குத் திருமணமாகி நான் சம்சார சாகரத்தில் மூழ்கியதில் ஆண்டனியையும் அனுவையும் சுத்தமாய் மறந்துபோயிருந்தேன்.

சர்வேஸுக்கு மொட்டைபோட நாங்கள் பழநி போயிருந்தபோது, ஆண்டனி மறுபடி அழைத்தான். அன்று என் பிறந்த நாள். வாழ்த்தியவனின் குரல் முற்றிலும் வேறு மாதிரியிருந்தது. குதூகலமாய்ப் பேசினான். மகள் பிறந்திருக்கிறாளாம். ``பெயர் ஜெனிஃபர்’’ என்றான். வேறென்ன `அனுராதா’ என்றா வைக்க முடியும்? பேசியதில் முக்கால்வாசி மகள் புராணமாகவே இருந்தது. பேச்சின் முடிவில், தழைந்த குரலில் ``அனுவைப் பற்றி ஏதாவது தெரியுமா?’’ என்று கேட்டான். அவள் பெற்றோரின் சம்மதம் வாங்கிய பிறகு அவர்களின் ஆசியோடுதான் அவனைத் திருமணம் செய்வேன் என்றும், ஆனால் மதம் மாற மாட்டேன் என்றும், கடைசி வரை பிடிவாதமாய் இருந்ததாய்ச் சொன்னான். கடைசிவரை என்றால்... ஆண்டனியின் திருமணம் வரை. கையைக் கிழித்துக்கொண்டும் உண்ணாவிரதம் இருந்தும் போராடிப்பார்த்திருக்கிறாள். பாவம்!

அதற்குப் பிறகு மேலும் 10, 12 வருடம் ஓடிவிட்டது. இப்போதுதான் அனுவின் குரலை மீண்டும் கேட்கிறேன். அவளின் கொஞ்சும் குரலையும் நளின பாவனைகளையும் பார்த்தவர்களால் அவள் அப்படியெல்லாம் போராடுவாள் என்று நம்பவே முடியாது. நிறைய்ய்ய்ய பேசினாள். வகுப்பில் இருந்த நிறைய பேரை மறந்துபோய்விட்டதாகச் சொன்னாள். இன்னும் சிலர் எந்தெந்த ஊர்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். என்னுடையதுபோலவே அவளுடைய கல்லூரி ஆல்பமும் தொலைந்துவிட்டதாகச் சொன்னாள். அதிதீவிர ரமணிசந்திரன் வாசகியாக இருந்த எங்கள் நண்பி ஒருத்திக்கு, இன்னமும் திருமணம் ஆகவில்லை. அவள் யாருடனும் பேசுவதேயில்லை என்றாள். அவளுடைய இப்போதைய வேலை பற்றிப் பேசினாள். தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகச் சொன்னாள். சர்வேஸையும் தர்ஷினியையும் பார்க்க வேண்டும் என்றாள்.

அவள் பேசிவைத்த பிறகு, என்னவோ வெறுமையாய் உணர்ந்தேன். நாங்கள் பேசிய மொத்த நேரம் 58 நிமிடம் என்று என் அலைபேசி காண்பித்தது. 58 நிமிடமாய் நான் எதை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேனோ அது நிகழவேயில்லை என்பதுதான் அந்த வெறுமைக்குக் காரணம் எனப் புரிந்தது. எங்கள் உரையாடலின் நடுவே திரி கொளுத்தப்பட்ட வெடிபோல் இருந்த `ஆண்டனி’ என்ற பெயர், தண்ணீர் பட்டதுபோல இருண்டு அணைந்திருந்தது.

மீண்டும் வாட்ஸ் அப்பைத் திறக்கையில் அவள் குடும்பப் புகைப்படம் அனுப்பியிருந்தாள். அவள் நடுவே அமர்ந்திருக்க, பின்னால் அவர் கணவர் ஒல்லியாய் உயரமாய் வழுக்கைத்தலையுடன் நின்றிருந்தார். அருகில் நின்றிருந்த இரு பெண் குழந்தைகளும் கண்களின் ஓரத்தில் நீண்ட மைத்தீற்றல்களோடும் எண்ணெய் தடவிப் பின்னிய இரட்டை ஜடையில் நீண்டு தொங்கும் ஜாதிமல்லிப் பூச்சரங்களோடும் இருந்தனர்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.