Jump to content

காடுமண்டிய ஓர் பின்தங்கிய கிராமத்தில்தான் அந்தக் காப்பகம்! உலகத் தமிழர்களின் கவனத்திற்கு!!


Recommended Posts

காடுமண்டிய ஓர் பின்தங்கிய கிராமத்தில்தான் அந்தக் காப்பகம்! உலகத் தமிழர்களின் கவனத்திற்கு!!

 

ஐ.பி.சி தமிழ் மாதாந்தம் முன்னெடுக்கும் ’உயிர்ச் சுவடு’ எனும் அறப்பணிச் செயற்திட்டத்தின் மூன்றாம் பாகம் இன்றைய நாள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் காப்பகத்தில் இடம்பெற்றது.

இதன்படி ஐ.பி.சி தமிழின் தாயகக் கலையக பணியாளர்கள் குறித்த முதியோர் காப்பகம் சென்று அங்குள்ள முதியோருடன் மகிழ்ச்சிகரமான ஒரு ஊடாட்டத்தினை மேற்கொண்டனர்.

குறித்த காப்பகத்தில் சமையல் செய்து முதியவர்களுடன் பரிமாறி பல்வேறுபட்ட ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து பராமரிக்கப்பட்டுவரும் குறித்த காப்பகம் யுத்த சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டிருந்தாலும் வட மாகாணசபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உதவிகளுடன் மீளவும் இயங்கிவருகிறது.

குறித்த முதியோர் காப்பகத்தின் நிர்வாக அலுவலரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமாகிய செல்வநாயகம் கருத்துத் தெரிவித்தபோது, “நீர்வளம் நிலவளம் உள்ளபோதும் நிதிவளம் மிகுந்த பற்றாக்குறையாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி நகரத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர்களுக்கு அப்பால் பிந்தங்கிய ஒரு கிராமமாக காணப்படும் வன்னேரிக் குளத்திலேயே குறித்த முதியோர் இல்லம் இயங்கிவருவதாகவும் இதனால் தமக்கு உதவிகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஏ9 வீதிகளில் வெளித்தெரியும் அளவுக்கு இருக்கின்ற முதியோர் காப்பகங்களுக்கே திரும்பத் திரும்ப உதவிகள் கிடைப்பதாக தெரிவித்த அவர் இதுபோன்ற பிந்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் முதியோர் காப்பகங்கள் குறித்து ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

எவ்வாறாயினும் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தில் முன்னர் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியைப் பார்த்து புலம்பெயெர்ந்த தமிழ்க் கொடையாளிகள் பலர் தமக்கு உதவிகள் செய்ததாகவும் அண்மையில் கனடா நாட்டைச் சேர்ந்த கொடையாளி ஒருவர் குளாய்க் கிணறு அமைப்பதற்கான நிதியுதவியைச் செய்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

மண்ணையும் மக்களையும் மனதிருத்தி ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் முதல்வர் கந்தையா பாஸ்கரனின் சிந்தனையில் உதயமாகிய ‘உயிர்ச் சுவடு’ அறப்பணிச் செயற்திட்டம், ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் நாள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் இம்மாதத்துக்குரிய அறப்பணியாகவே மேற்படி வன்னேரிக்குளம் முதியோர் காப்பகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

இதேவேளை உயிர்ச் சுவடு செயற்திட்டத்தின் முன்னைய பாகங்கள் கடந்த இரு மாதங்களில் கடைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/105705

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.