Jump to content

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம்


Recommended Posts

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் – உச்ச நீதிமன்றம்

 

peraivalan.jpg?resize=615%2C350
இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது

தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

 

இதனையடுத்து கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்ட போதும் அதனை மத்திய அரசும் ; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அதனனை நிராகரித்தனர்.

ஜனாதிபதியின் நிராகரிப்பை எதிர்த்து பேரறிவாளன் உட்பட 7 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், அரிசின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது

எனவே, 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு ஏற்கனவே அளித்த மனு மீது ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

http://globaltamilnews.net/2018/94480/

Link to comment
Share on other sites

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அதிகாரம்; ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம்- உச்ச நீதிமன்றம்

 

 
rajiv2410852f

கோப்புப் படம்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, தமிழக அரசு இதுதொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரையை அனுப்பலாம் என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறும்போது, ''ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம்'' என்றார்.

 

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், ஆளுநர் அந்தப் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்க வாய்ப்புள்ளது.

என்ன நடந்தது?

கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதர 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் கடந்த 2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனையை அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். சுமார் 11 ஆண்டுகள் கால தாமதத்துக்குப் பிறகு அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றம் கெடு

இந்த முடிவை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். கடந்த 2014-ம் ஆண்டில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடிவு எடுத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. இதனிடையே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் நிராகரிப்பு

இதைத் தொடர்ந்து 7 குற்றவாளிகளின் உடல்நிலை, குடும்ப சூழல், பொருளாதார பின்னணி குறித்த விவரங்களை கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் அனுப்பியது. இதற்கு தமிழக அரசு உரிய பதில் அளித்தது. தமிழக அரசு அனுப்பிய 7 குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள், வழக்கு விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தது.

இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராஜீவ் கொலை வழக்கின் 7 குற்றவாளிகளையும் விடுதலை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார்.

இந்நிலையில் கருணை அடிப்படையில் எழுவரை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.ஆனால் எழுவரை விடுவிக்க மறுத்த மத்திய அரசு, அதற்கான கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், எழுவர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கக் கோரி, தமிழக அரசு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்த முடிவு மீண்டும் மத்திய அரசிடமே சென்றுள்ளது.

https://tamil.thehindu.com/tamilnadu/article24879887.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செய்தி. 

ஆயினும் ஆளுனர், பாஜக ஆளாயிற்றே....

Link to comment
Share on other sites

உடனடியாக விடுலை செய்யவேண்டும்- பேரறிவாளனின் தாயார் வேண்டுகோள்

 

 
 

ஏழு தமிழர் விடுதலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளித்துள்ளது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அற்புதம்மாள் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

28வது ஆண்டாவது இந்த வழக்கை முடித்து வைப்பதாக இந்திய உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது மகிழச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்கள் விடுதலை தொடர்பில் இரு தடவை அறிவித்திருந்தார் இதன் காரணமாக இவர்களை தமிழக அரசு உடனடியாக  விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

atputhammal_1.jpg

தமிழக முதல்வர் மற்றும் சட்டத்துறை அமைச்சரை சந்திக்கப்போகின்றேன் அந்த சந்திப்பின் போது விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பேன் எனவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39862

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்திதான்..

இன்னமும் காலத்தை இழுத்தடிக்காமல், சீக்கிரம் விடுதலை பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையை சாத்தியமாக்க தமிழகம் ஒன்றிணைந்து தமிழக அரசிடமும்.. ஹிந்திய மத்திய அரசு ஆளுநரிடமும் பலமான ஒற்றுமைக் குரலை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விடுதலை.. இந்த தீர்ப்பை அடுத்து..  தன்னிச்சையாக நிகழும் என்று எதிர்பார்க்க முடியாது. 

அப்படி தமிழக அரசு தன்னிச்சையாக விடுதலை செய்யின் அது வரலாற்றில் மதிக்கப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் அப்பாவிகள். 27 வருடம் என்பது எவ்வளவு பெறுமதியானது. 

புலிகளும் தாங்கள் திட்டத்திற்கு இவர்களை ஒரு கருவியாக பாவித்துள்ளார்கள்.இதி சரியா?  புலிஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடைய விடுதலையை அரசியலாக்கி அதன் மூலம் மத்திய மாநில
கூட்டணி என்ற அரசியல் சாக்கடையில்  மாநிலக் கட்சிகளும்
மத்தியில் அரசுகளும் நீண்ட காலமாகவே சேறடிக்கின்றனர்.
இப்போதும் அப்பாவிகளின் வாழ்க்கையை நினைக்காமல் எல்லாம் அரசியலாகவே இருக்கின்றது.
நீதிமன்றிற்கு இல்லாத உரிமை  ஆளுநருக்கு இருக்கும் வரையில் எல்லாமே கேள்விக்குறிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

இவர்கள் அப்பாவிகள். 27 வருடம் என்பது எவ்வளவு பெறுமதியானது. 

புலிகளும் தாங்கள் திட்டத்திற்கு இவர்களை ஒரு கருவியாக பாவித்துள்ளார்கள்.இதி சரியா?  புலிஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றர்கள்?

பழம் தின்று, வீசி எறிந்த கொட்டையும் முளை போட்டாச்சு என்று சொல்வார்களே...

அதேபோல 27 வருசத்துக்கு முந்தி வந்த கேள்வி... இப்ப கேட்டு என்ன பிரயோசனம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இவர்கள் அப்பாவிகள். 27 வருடம் என்பது எவ்வளவு பெறுமதியானது. 

புலிகளும் தாங்கள் திட்டத்திற்கு இவர்களை ஒரு கருவியாக பாவித்துள்ளார்கள்.இதி சரியா?  புலிஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றர்கள்?

அவர்கள் அப்பாவிகள் என்பது நியாயம்.  பின்னர் சொல்கிறீர்கள் புலிகள் திட்டத்துக்கு கருவி ஆக்கினார்கள் என்று..??!

அதுக்கு மேல.. புலிகள் தான் குறித்த சம்பவத்துக்குப் பொறுப்பு என்பதும்.. இவர்களை புலிகள் பாவித்தார்கள் என்பதும்.. எப்படி நிரூபிக்கப்பட்டது..??!

உங்களின் கற்பனைகளை புலிகள் மீதும்.. இந்த அப்பாவிகளை புலிகளின் கருவிகளாக்கி.. மீண்டும் குற்றவாளிகள் ஆக்காமலும் விட்டாலே போதும்.

ராஜீவ் கொலைக்கு முன் அவ்விடத்துக்கு விஜயம் செய்த சுப்பிரமணியம் சுவாமி.. சூ அடிக்கத்தான் போனன் என்று சொல்லிக்கிட்டு திரியுறார்.. அவரிடம் போய் இப்படியான கேள்விகளை கேட்டு பதில் வாங்குவீங்களா கொழும்பான் சார்..??! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை  வருடங்களானாலும்

ஈழத்தமிழருடன் இவ்வாறு  எலியும் பூனையும்  விளையாட்டை  விளையாடுவதை  இந்தியா  நிறுத்தாது

ராஜீவ்காந்தியின் கொலை  கூட

இந்த  வதைப்பினால்  எழுந்த தாங்க முடியாத  வலியின்   கோபமே..

Link to comment
Share on other sites

7 தமிழர்களும் கருணை மனுதாக்கல் செய்யும் வாய்ப்பு

 

 
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான தமிழர்கள் 7 பேரும் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்கிறது. 

முதலில் இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின் அந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

rajiv-murder.jpg

என்ன வழக்கு இந்த நிலையில்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க போவதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். மத்திய அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் விடுதலை செய்வது உறுதி என்று தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் மத்திய அரசு இதற்கு எதிராக வழக்கு தொடுத்து முட்டுக்கட்டை போட்டது.

குறித்த கொலையை சி.பி.ஐ. விசாரித்த காரணத்தால், மத்திய அரசுக்கு மட்டுமே விடுதலை செய்ய உரிமை உள்ளது என்று வாதம் வைக்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. விதி எண் 161இன் படி தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம் என்று தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கருணை மனு இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

supreme-court-679-1536289430.jpg

இன்று அவர்கள் ஆளுநரிடமும், முதலமைச்சரிடம் கருணை மனுவை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். என்ன முடிவு ஆனால் ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு ஆளுநர்களிடம் இந்த 7 தமிழர்களும் கருணை மனுவை அளித்துள்ளனர். 

ஜனாதிபதியிடமும் கருணை மனுவை அளித்து இருக்கிறார்கள். முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் தற்போது தமிழக ஆளுநரிடம் இருப்பதால், என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

http://www.virakesari.lk/article/39924

Link to comment
Share on other sites

பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை ஆவார்களா?

ராஜீவ் கொலை வழக்குபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவை இன்று மாலை கூடுகிறது.

தேர்தல் பிரசாரத்திற்காக 1991ல் ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்த சமயத்தில், ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் பேரறிவாளன்,முருகன் மற்றும் சாந்தனுக்கு முதலில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுட்கால சிறைதண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி,ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகியோரும் ஆயுள்தண்டனை பெற்றவர்கள்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகாலமாகத் தனது மகன் பேரறிவாளன் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் வழக்கு நடத்தப்பட்ட விதத்திலும் பிரச்சனை இருந்தது என்றும் கூறி வருகிறார். தூக்குத்தண்டனைக்கு எதிராக போராடிய அவர், தண்டனை காலத்தில் பேரறிவாளனின் நன்னடத்தையைக் காரணமாக கொண்டு அவரை விடுவிக்கவேண்டும் என்று கோரிவந்தார்.

ராஜீவ் கொலை வழக்குபடத்தின் காப்புரிமைSTRDEL

வழக்கில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என பல சமூகஅமைப்புகள் பிரசாரம் செய்துவந்த நிலையில், அவர்களின் விடுதலை தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை பற்றி முடிவு செய்யலாம் என்றும் தமிழக அரசு அவருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை இன்று கூடி முடிவுசெய்யவுள்ளது. ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டபோது, பதில் ஏதும் வரவில்லை.

ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-45463758

Link to comment
Share on other sites

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

 

 

 
rajivjpgjpgjpgjpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்யத் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளனர்.

   
 
rajnjpg
 

இவர்களை விடுதலைக் குறித்த மனு மீதான விசாரணையில் அண்மையில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவை எடுத்து ஆளுநரின் முடிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலைக் குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்குப் பரிந்துரை செய்வது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4மணிக்கு கூடியது. ஏறக்குறைய 2 மணிநேரம்வரை இந்தக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

அமைச்சரவை முடிவுகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

jeyakumarjpg

அமைச்சர் ஜெயக்குமார்

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவித்து சட்டப்பிரிவு 161 பிரிவின் கீழ் ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரை காலதாமதம் இன்றி உடனடியாக செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2-வது தீர்மானமாகத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மூன்றாவதாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரை சூட்டி, எம்.ஜி.ஆர். மத்திய ரயில்நிலையம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருதுவழங்க பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

ராஜீவ் கொலையில் நீண்ட ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாகும். எந்தவிதமான தாமதமும் இன்றி ஆளுநருக்கு உடனடியாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலை செய்ய வேண்டிய விஷயத்தில் ஆளுநர் தாமதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. தமிழக அமைச்சரவையின் இந்தப் பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். 7 பேர்விடுதலை தொடர்பாகஜெயலலிதா எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வலுசேர்த்திருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24908715.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நவீனன் said:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருதுவழங்க பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தீர்மானத்துக்கு நன்றி.

ஆனால் இந்த தீர்மானத்துக்கு என்ன அர்த்தம்? ?

உச்சநீதிமன்றால் சிறைக்கு இவரது கூட்டு களவாணிகள் அனுப்பபட்டு  உள்ளனர். இவர் உயிருடன் இருந்தால் உள்ள இருப்பர் கம்பி எண்ணிக் கொண்டு...

பிறகு எப்படி அந்த விருது கிடைக்கும்? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

தீர்மானத்துக்கு நன்றி.

ஆனால் இந்த தீர்மானத்துக்கு என்ன அர்த்தம்? ?

உச்சநீதிமன்றால் சிறைக்கு இவரது கூட்டு களவாணிகள் அனுப்பபட்டு  உள்ளனர். இவர் உயிருடன் இருந்தால் உள்ள இருப்பர் கம்பி எண்ணிக் கொண்டு...

பிறகு எப்படி அந்த விருது கிடைக்கும்? ?

உஷ் உஷ்   இப்ப எமக்கு அலுவல் நடக்கவேணும்.

Link to comment
Share on other sites

ஆளுநர் கருணை காட்டவேண்டும்- நளினியின் தாயார்

 

 
 

தமிழக ஆளுநர் கருணை காட்டவேண்டும் என ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் தாயார் பத்மாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழு தமிழகர்களின் விடுதலை தொடர்பில்  தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ள நிலையிலேயே நளினியின் தாயார் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து தொலைக்காட்சியொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள நளினியின் தாயார் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கருணை காட்டவேண்டும், எனது மகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

nalini_murugan.jpg

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் ஆளுநர்  அவர்கள் 27 வருடங்களை சிறையில் கழித்துள்ளதை கருத்தில்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/40058

Link to comment
Share on other sites

7 தமிழரை விடுதலை – தமிழக அரசின் பரிந்துரையை, ஆளுநர் நிராகரிப்பார்…

 

 

Subramaniyaswamy.jpg?resize=800%2C600

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். எனினும் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.

இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும்,  தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில், சென்னை கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்திடம் உடனடியாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்தின் முடிவு தமிழக அரசுக்கு சாதகமாக அமைய வேண்டும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்றிரவு கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணிய சாமி, “இது தமிழக அரசின் பரிந்துரை மட்டுமே. இது தமிழ்நாடு ஆளுநரை நிர்பந்திக்காது. தனது சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, தமிழக அரசின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என நம்புகிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2018/94957/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஏழுபேரும் குற்றவாளிகள் என்பதை நான் நம்பவில்லை. ஏனென்றால் இந்திய நீதித்துறையும், காவல்த்துறையும் நீதியான, பக்கச் சார்பில்லாத விசாரணையை நடத்தியிருக்கும் என்பதை இங்கு எவரும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

 வேண்டுமென்றே திட்டமிட்டுச் சோடிக்கப்பட்ட சாட்சிகள், வேண்டுமென்றே விசாரணைக்குட்படுத்தாது விடப்பட்ட சாட்சிகள் என்று ஒரு அவசரப்பட்டு, புலிகள் மீது பழியைப் போட்டுவிடவேண்டுமென்ற நோக்குடனேயே நடத்தி முடிக்கப்பட்ட விசாரணை எபது தெளிவு.

சரி, ஒரு பேச்சுக்கு இவர்களும் உடந்தையாக இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும்கூட, 27 வருடங்கள் தங்களது வாழ்க்கையை சிறையில் கழித்து, கொலையாளிகள் என்ற பட்டத்தைச் சுமந்து இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இவர்களுக்கு தயவு காட்டுவதில் என்ன தவறிருக்கிறது?

கொழும்பான், உங்கள் கேள்வியால் கவலைப்படுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முன்னணிச் செய்தி நிறுவனங்களில் இந்தச் செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்தியா டுடே இணையத்தளத்தில் இந்தச் செய்திக்குப் பின்னூட்டமாக இடப்பட்டு வரும் கருத்துக்களில் பெரும்பாலானவை இவர்கள் விடுதலை செய்யப்படக் கூடாதென்று கோரி வருகின்றன. 

தமது பிரதமரைக் கொன்றவர்கள், கொலையாளிகள், தமிழர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று விழித்து தமிழின எதிர்ப்புக் கக்கப்பட்டு வருகிறது.

பலருக்கு நடந்தவை பற்றியோ அல்லது ரஜீவ் கொல்லப்படு நிகழ்வுக்கு முன்னோடியாக நடந்த நிகழ்வுகள் பற்றியோ எந்தவித அறிவும் தெரிந்திருக்கவில்லை என்றாலும் கூட, இந்தியத் தேசியவாதம் எனும் போலியான கருத்தியலை மட்டுமே கொண்டு எழுதிவருகிறார்கள்.

முடிந்தவர்கள் படித்துப் பார்க்கலாம்.

https://timesofindia.indiatimes.com/city/chennai/Rajiv-Gandhi-assassination-case-Tamil-Nadu-cabinet-decides-to-recommend-release-of-all-seven-convicts/articleshow/65743007.cms

 

 

Link to comment
Share on other sites

``7 பேர் விடுதலை நியாயமானதா.. சாத்தியம் ஆகுமா?" என்ன சொல்கிறார்கள் சட்ட நிபுணர்கள்?

 

28 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலைக் குறித்த இறுதிமுடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 7 பேர் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும் ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன.

``7 பேர் விடுதலை நியாயமானதா.. சாத்தியம் ஆகுமா?
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்திலும் 7 பேர் விடுதலைக்கான தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

இம்முறையும் விடுதலை மறுக்கப்படுமா அல்லது விடுதலை செய்வார்களா என்பது பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற கேள்வி. 28 ஆண்டுக்காலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலைக் குறித்த இறுதிமுடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இவர்களின் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும், ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன. இதுகுறித்து சிலரிடம் பேசியபோது.. 

ஹென்றி டிபேன்; 

 

 

ஹென்றி டிபேன், ஏழு பேர் விடுதலை``7 பேரும் தவறு செய்தவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். 28 ஆண்டுக்காலம் சிறையில் இருந்தவர்களை சிறை வாழ்க்கை திருத்தியிருக்காதா?. சிறையில் ஒருவர் அடைக்கப்படுவதே தண்டனை என்பதைத் தாண்டி மறுவாழ்வுக்கு அவர்களைத் தயார் செய்வதுதானே. அதை போதும், போதும் என்கிற அளவுக்கு இவர்கள் பெற்றுவிட்டார்கள். இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றம் சார்ந்து இருக்கிற சிக்கல்கள், மாற்றுக் கருத்துகள் ஆகியவை சட்டரீதியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் விடுதலையை எதிர்ப்பவர்கள் எப்போதாவது அதற்குப் பதில் கூறியிருக்கிறார்களா?. நீண்டநாள்களுக்குப் பிறகு முறையாக ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. அரசாங்க நடைமுறைகள் 7 பேருக்குச் சாதகமாகப் போய்க் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தயவுசெய்து இதில் அரசியல் செய்யாதீர்கள். ஏற்கெனவே, இவர்கள் விடுதலையில் அரசியல் செய்து நீண்டகாலம் அவர்களைச் சிறையில் இருக்க வைத்துவிட்டீர்கள். 7 பேரின் குடும்பமும் பல கனவுகளுடன் காத்திருக்கின்றன." 

 

 

கோபண்ணா; 

``முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் `கொலைக் குற்றவாளிகள்' என 7 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமராக ராஜீவ்காந்தி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக அவரைக் கொல்ல வேண்டுமென விடுதலைப் புலிகள் தீட்டிய சதித் திட்டத்தின் காரணமாகத் தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். இதன்மூலம் நூறு கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் இறையாண்மையையே அச்சுறுத்தினர். 

கோபண்ணாஇதில் தண்டிக்கப்பட்டவர்கள் 25 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால், விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் விடுத்துள்ளன. இவர்களை விடுவிப்பதற்குக் காட்டுகிற அக்கறை இதேபோல கொலைக் குற்றம் செய்து சிறையில் இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் காட்டப்படுமா? இவர்களை விடுவிக்கும் போது இதேபோல சிறையிலிருக்கும் மற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் ஏன் கோரவில்லை?. ஆனால், `நாங்கள் நிரபராதிகள், ராஜீவ்காந்தி கொலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, நாங்கள் அப்பாவிகள்' என்று கூறுவது என்ன நியாயம். உச்சநீதிமன்றத்தாலே தண்டிக்கப்பட்ட பிறகு நிரபராதிகள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும். இதை நியாயப்படுத்திப் பேசுபவர்கள் என்ன சூப்பர் நீதிபதிகளா. இதைவிட நீதிமன்ற அவமதிப்பு வேறு உண்டா. ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் காட்டுகிற கனிவை மற்ற குற்றவாளிகள் விஷயத்தில் ஏன் காட்டவில்லை. 7 பேருக்குக் காட்டுகிற பரிவு ராஜீவ்காந்தியோடு கொல்லப்பட்ட 18 பேரின் குடும்பத்தினருக்கு ஏன் காட்டப்படவில்லை. 7 பேர் தமிழர்கள் என்றால் 18 பேர் தமிழர்கள் இல்லையா. தமிழ் மக்களை அதிகமாக நேசித்தவர் ராஜீவ்காந்தி. அதேபோல, தமிழ் மக்களும் ராஜீவ்காந்தியை மிகவும் நேசித்தார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக ஒப்பந்தம் போட்டு உரிமைகளைப் பெற்றுத் தந்த ராஜீவ்காந்தியை படுகொலை செய்த பாவத்தைச் செய்தவர்களுக்குப் பரிந்து பேசலாமா. இப்படிப் பேசுவது மனுநீதிச் சோழன் வழிவந்த தமிழர் பண்பாடா. 

 

 

நீண்டகாலமாகச் சிறையில் இருப்பதால் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு விடுவிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பழி வாங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. கருணை மனுவை 11 ஆண்டுக்காலம் முடிவெடுக்காமல் காங்கிரஸ் ஆட்சியில் கிடப்பில் போட்டதால்தான் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. சட்டமும், நீதிமன்றமும் என்ன முடிவெடுக்கிறதோ, அதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும்." 


ஹரி பரந்தாமன் (ஓய்வுபெற்ற நீதிபதி): 

``தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஒருவரை விடுதலை செய்ய அரசுக்கு இரண்டுவிதமான அதிகாரங்கள் உள்ளன. ஒன்று, குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கும் அதிகாரம். அச்சட்டத்தின்படி குற்றவியல் வழக்குகளை சி.பி.ஐ விசாரித்து இருந்தால், அந்த வழக்கில் தண்டனை பெற்றவரை மாநில அரசு விடுதலைச் செய்ய வேண்டுமென்றால் அதுபற்றி மத்திய அரசிடம் ஆலோசிக்க வேண்டும். (Consultant). 

இச்சட்டப்படி 2014 பிப்ரவரியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள்தண்டனையில் இருந்த 7  பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதை மத்திய அரசுக்குத் தெரிவித்தார். உடனே, அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றம் சென்று விடுதலைக்குத் தடைபெற்றது. 2014 மே மாதத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் அரசு போட்ட வழக்கைத் தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க தொடர்ந்து நடத்தியது. 

அந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு 2.12.2015ல் தீர்ப்பு கூறியது. அத்தீர்ப்பில் மத்திய அரசின் ஒப்புதலின்றி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் விடுதலை செய்ய முடியாது என்றது உச்சநீதிமன்றம். ஆனால், அதே தீர்ப்பில் மாநில அரசு அரசமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்தால் அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று குறிப்பிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி மத்திய அரசு அப்போது ஒப்புதல் தர மறுத்ததால் விடுதலை சாத்தியமற்றதாகி விட்டது. 

நீதிபதி ஹரி பரந்தாமன்இந்தச் சூழலில் பேரறிவாளன் போட்ட வழக்கில் 161ன் கீழ் அவரை விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் இந்த செப்டம்பர் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கி, பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்ய தமிழக ஆளுநரை பரிசீலிக்கக் கோரியது. எனவே, அத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை கடந்த 9ம் தேதி ஏழு பேரையும் அரசமைப்புச் சட்டம் 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்ய முடிவு எடுத்து, அதை ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது. அதொரு பக்கம் இருக்க, எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் எந்த ஆயுள்தண்டனை கைதியும் 28 ஆண்டுகள் சிறையில் இருந்ததில்லை. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் ஆகிய தினங்களில் எத்தனையோ கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. ஒருவேளை இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமையான ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டதனால் இவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்றால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆனானப்பட்ட மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களை இதே இந்திய அரசு எப்படி விடுதலை செய்தது! கோபால் கோட்சே, விஷ்ணு கர்க்டே, மதன்லால் பெஹ்வா ஆகிய 3 பேரும் காந்தியைச் சுட்டுக் கொன்றதற்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்கள். ஆனால், இவர்கள் 16 ஆண்டுகளே சிறையில் இருந்தனர். ஜவஹர்லால் நேருவும், வல்லபாய் படேலும் இறந்து போனதும் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

மட்டுமல்லாது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பல அதிகாரிகள் பின்வாங்கிவிட்டனர். இவ்வழக்கை விசாரித்த 3 பேர்கொண்ட நீதிபதிகள் அமர்வில் தலைமை தாங்கிய கே.டி தாமஸ், `இவர்களை விடுதலை செய்யலாம்' என சோனியா காந்திக்குக் கடிதமே எழுதிவிட்டார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் புலனாய்வு செய்த தலைமைப் புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், `வழக்கின் சூழலைக் கணக்கில் கொண்டால் இந்த 7 பேரையும் விடுதலை செய்யலாம்' எனக் கருத்துத் தெரிவித்தார். 

மற்றொரு புலனாய்வு அதிகாரியான தியாகராஜன், குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு விட்டார். அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுவே போட்டார். 

இம்மாதிரியான சறுக்கல்கள், சந்தர்ப்பங்கள் மகாத்மா காந்தி வழக்கில் இல்லை. ஆனால், அவர்கள் மன்னித்து விடுதலை செய்யப்பட்டனர். காந்தியைக் கொன்ற அந்த 3 பேருக்கு ஒரு நியாயம். இந்த 7 பேருக்கு ஒரு நியாயமா. தமிழர்கள் என்பதால் இந்த இளக்காரமா. இனியும் காலம் தாழ்த்தாது இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே என் கோரிக்கை.", என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/136576-is-the-release-of-rajiv-gandhi-murder-accused-possible-this-time.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2018 at 11:40 PM, ragunathan said:

இந்தியாவின் முன்னணிச் செய்தி நிறுவனங்களில் இந்தச் செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்தியா டுடே இணையத்தளத்தில் இந்தச் செய்திக்குப் பின்னூட்டமாக இடப்பட்டு வரும் கருத்துக்களில் பெரும்பாலானவை இவர்கள் விடுதலை செய்யப்படக் கூடாதென்று கோரி வருகின்றன. 

தமது பிரதமரைக் கொன்றவர்கள், கொலையாளிகள், தமிழர்கள், இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று விழித்து தமிழின எதிர்ப்புக் கக்கப்பட்டு வருகிறது.

பலருக்கு நடந்தவை பற்றியோ அல்லது ரஜீவ் கொல்லப்படு நிகழ்வுக்கு முன்னோடியாக நடந்த நிகழ்வுகள் பற்றியோ எந்தவித அறிவும் தெரிந்திருக்கவில்லை என்றாலும் கூட, இந்தியத் தேசியவாதம் எனும் போலியான கருத்தியலை மட்டுமே கொண்டு எழுதிவருகிறார்கள்.

முடிந்தவர்கள் படித்துப் பார்க்கலாம்.

https://timesofindia.indiatimes.com/city/chennai/Rajiv-Gandhi-assassination-case-Tamil-Nadu-cabinet-decides-to-recommend-release-of-all-seven-convicts/articleshow/65743007.cms

 

 

ஒவ்வொன்றும் ஒவ்வொறுவித தனிபட்ட கருத்துக்கள்.

ஏற்கனவே ஜனாதிபதி நிராகரித்த நிலையில் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது. ஆகவே ஆளுனர் நிராகரிக்க காரணம் சொல்ல முடியாது. ஏனெனில் அது மீண்டும் உச்ச நீதிமன்ற பரிசீலணைக்குள்ளாகும்.

Link to comment
Share on other sites

7 பேர் விடுதலை விவகாரம்.. ஆளுநர் நினைத்தால்... பகீர் குண்டை போடும் சுப்பிரமணிய சுவாமி!

 
     
    7 பேர் விடுதலையில் பகீர் குண்டை போடும் சுப்பிரமணிய சுவாமி- வீடியோ

    சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துவிட்டது.

     

    இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து , அமைச்சரவையை கூட்டி விவாதித்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெற்று 7 பேர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்கேற்ப எதிர்க்கட்சிகளும் உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

     
     
    பரிந்துரை செய்வது

    பரிந்துரை செய்வது

    இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று கூடியது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     
    அதிகாரம் உண்டு
      

    அதிகாரம் உண்டு

    விதி எண் 161-இன்கீழ் அரசு, ஆளுநருக்கு பரிந்துரைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் தெளிவாக தமிழக அரசுக்கு, இந்த விஷயத்தில் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

     
    நிராகரிக்க அதிகாரம் உண்டு
     

    நிராகரிக்க அதிகாரம் உண்டு

    எனவே தமிழக அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறியுள்ளார்.

     
    குடும்பத்தினர் வேதனை
      

    குடும்பத்தினர் வேதனை

    எப்போதும் மக்கள் நலனுக்கு எதிராகவே பேசி வரும் சுப்பிரமணியன் சுவாமி 7 தமிழர்கள் விடுதலை விவகாரத்திலும் இவ்வாறு பேசியுள்ளதை கேட்டு அவர்களது குடும்பத்தினர் வேதனை அடைந்துள்ளனர்.

    https://tamil.oneindia.com/news/tamilnadu/subramaniyan-swamy-says-that-tn-governor-may-reject-the-resolution/articlecontent-pf324577-329425.html

    Link to comment
    Share on other sites

    ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது - மத்திய உள்துறை தகவல்

     
     

    ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

    ஏழு பேரின் விடுதலை தமிழக ஆளுநர் முடிவு

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பாயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது தமிழக அமைச்சரவை. ஆனால், ஏழு பேரின் விடுதலை செய்து குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

     

     

    இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி, 'ஏழு பேரின் விடுதலைக் குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும். மத்திய புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரணை செய்தது. ஆகையால், ஆளுநர்  தமிழக அரசின் பரிந்துரையை ஏற்கவோ அல்லது மறுக்கவோ மத்திய அரசிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாட்டு சதி உள்ளது என்பதைத் தெரிவித்து, இது குறித்து வெளிநாட்டில் விசாரணை  நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது சி.பி.ஐ. 

     

     

    மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 435-யின் படி, குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசுடன் ஆலோசனை பெற்ற பிறகே மாநில அரசு பரிந்துரை செய்ய முடியும். ஆகையால், மாநில அரசின் பரிந்துரை குறித்து ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    https://www.vikatan.com/news/india/136665-governor-has-no-power-to-release-rajiv-gandhi-rajiv-gandhi-assassination-case-prisoners-say-home-ministry-officials.html

    Link to comment
    Share on other sites

    விடுதலை... சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்

    1097_thumb.jpg
     

     

    விடுதலைச் சூழல் விரல்நுனி வரை வந்து கைநழுவிப் போன தருணங்கள் நிறைய. அதனால்தான், அவர்களால் கொண்டாட முடியவில்லை; நம்பிக்கை மட்டுமே தெரிவிக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் ஏழு பேருக்கு மீண்டும் ஒரு விடுதலைத் தருணம் வாய்த்திருக்கிறது. இம்முறை அது சாத்தியமாகுமா? செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி அளித்த பரிந்துரையை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் என்ன செய்யப்போகிறார்? எல்லாக் கண்களும் கிண்டி ராஜ்பவன் நோக்கியே இருக்கின்றன.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 27 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தனு, ராஜீவ் காந்தியோடு உடல் சிதறிப் பலியாகிப்போனார்; ராஜீவ் கொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், சந்தர்ப்பச் சூழ்நிலையால் இந்த வழக்கில் சிக்கித் தண்டனை பெற்ற ஏழு பேர், 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள். விடுதலை தொடர்பாக, மற்ற ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன. அதற்கு, சட்டப்படியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படிப் போடப்படும் முட்டுக்கட்டைகளை ஏழு பேரும் சட்டத்தின் துணைகொண்டே ஒவ்வொரு முறையும் உடைக்கின்றனர். இந்த முறையும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருந்த தடைகள் உடைபட்டுள்ளன. ஆனால், விடுதலை சாத்தியமா? 

    p4a_1536666427.jpg

    தூக்குத் தண்டனை ரத்து!

    ராஜீவ் கொலை வழக்கில் இறுதியாக வழங்கிய தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; மற்றவர்களை விடுதலை செய்தது.

    நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் மாறி மாறி மனுக்கள் போடப்பட்டன. அதையடுத்து, 2000 ஏப்ரல் 26 அன்று, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை, நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்தது. இந்த நிலையில், 2011 செப்டம்பர் 9-ம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து, அவர்களைத் தூக்கிலிடத் தேதி குறிக்கப்பட்டது. உடனடியாக அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அமர்வு, 2014 ஜனவரி 21-ம் தேதி தீர்ப்பளித்தது. ‘கருணை மனுக்களை எந்த முடிவும் எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் குடியரசுத் தலைவர் கிடப்பில் போட்டது தவறு. எனவே, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது’ என்பதே அந்தத் தீர்ப்பு. தூக்குத் தண்டனை ரத்தானது. ஆயுள் தண்டனை தொடர்ந்தது.

    ஜெயலலிதா தீர்மானம்!

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா, திடீரென சட்டமன்றத்தைக் கூட்டினார். 2014 பிப்ரவரி 19-ம் தேதி ஜெயலலிதா தலைமையில் கூடிய சட்டமன்றம், “23 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இவர்களை விடுதலை செய்ய எனது தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன்படி தமிழக அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவு, மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தன் கருத்தைத் தெரிவிக்கலாம். கருத்து தெரிவிக்காமல், காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி, ஏழு பேரையும் என் தலைமையிலான அரசு விடுதலை செய்யும்” என அறிவித்தார்.

    தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஏழு பேரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதே சமயத்தில், ‘இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா’ என்பதை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியது.

    p4_1536666410.jpg

    அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சில விதிமுறைகளை உறுதிப்படுத்தினர். அதன் சாரம்...

    குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-ன் படி,

    1. ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையைத் தமிழக அரசு குறைக்க முடியாது.

    2. சி.பி.ஐ. உள்ளிட்ட மத்தியப் புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டனையைக் குறைக்க மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு.

    3. இது தொடர்பான அரசியல் சாசனப் பிரிவில் மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசின் ‘ஒப்புதல்’ பெற வேண்டும் என்பதே அர்த்தம்.

    4. ஆயுள் தண்டனை என்பது ஆயுட்காலம் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதாகும்.

    5. அரசியலமைப்புச் சட்டம் 161-ன் படி கவர்னருக்கு உள்ள கருணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில அரசு ஏழு பேரை விடுதலை செய்வதில் மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் முடிவெடுக்கலாம். நாங்கள் அளித்துள்ள இந்த வரையறைகளின்படி, விடுதலை தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரித்துத் தீர்ப்பளிக்கும் என்று குறிப்பிட்டனர்.

    நளினி மனு, பேரறிவாளன் கடிதம்!

    உச்ச நீதிமன்றத்தின் இந்தத்  தீர்ப்பை வழங்குவதற்கு முன்பே, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை நளினி தாக்கல் செய்தார். அதில், தன்னை அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து, தமிழக அரசு இதில் முடிவெடுக்கட்டும்’ என உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, விடுதலை தொடர்பான வழக்கைத் தொடர்ந்து விசாரித்துவந்தது.

    அப்போது பேரறிவாளன் சார்பில் கவர்னருக்கு ஒரு மனு அனுப்பப்பட்டது. அதில், ‘தமிழக அரசின் கொள்கை முடிவுப்படி, 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால், எங்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், எங்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்கீழ் விடுதலை கோர முடியவில்லை. அதனால், அந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். அது அப்படியே உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஏழு பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசே எடுக்கலாம்’ என உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் ஏழு பேரை விடுதலை செய்ய இப்போது அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

    சட்டம் என்ன சொல்கிறது?

    இனியும் விடுதலையில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளதா? மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர், ‘‘தமிழக அரசு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மூன்று வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்வது, 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்தவர்களைச் சிறை சீர்திருத்த அறிவுரைக் குழுமத்துக்கு அனுப்பி விடுதலை செய்வது, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது.

    இவற்றில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய, 1994-ம் ஆண்டு நவம்பர் 10 அன்று தமிழக அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ‘20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனைக் கைதிகளை, அவர்கள் எந்தவிதமான குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி, மாநில அரசு அப்படி விடுதலை செய்தால் மத்திய அரசோ, வேறு எந்த அரசு அமைப்போ அதைத் தடுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், நீதிமன்றங்களுக்கும்கூட அதைத் தடுக்கும் அதிகாரம் கிடையாது. தற்போது உச்ச நீதிமன்றம் அதையே உறுதிப்படுத்தியுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், appropriate government என்று சொல்லப்படவில்லை; அப்படிச் சொல்லவும் முடியாது; ஏனென்றால், சி.ஆர்.பி.சி சட்டத்துக்குத்தான் அந்த வார்த்தை வரும். தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், concern authority என்றுதான் குறிப்பிட்டுள்ளது. அந்த concern authority தமிழக அரசுதான். அந்த அடிப்படையில்தான், தமிழக அமைச்சரவை கூடித் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளது. ஒருவேளை கவர்னர் முடிவெடுக்கத் தாமதித்தால், மாநில அரசு அவரை வேகமாக முடிவெடுக்கச் சொல்லிக் கேட்கலாம். கவர்னரின் காலதாமதம் இயற்கை நீதிக்கு எதிராகப் போகும்போது, அதை எதிர்த்து நீதிமன்றத்தையும் நாடலாம்’’ என்றார்.

    முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், ‘‘உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தமிழக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின்படி, ஏழு பேர் விடுதலைக்குத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அது கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கொடுக்க மட்டும்தான் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. புறந்தள்ளுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே 1998-99 காலகட்டத்தில் அளித்த தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரிய கருணை மனுக்களை, மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் அன்றைய கவர்னர் ஃபாத்திமா பீவி தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘கவர்னருக்கு மாநில அரசை ஆலோசிக்காமல் எதையும் புறந்தள்ள அதிகாரம் இல்லை. மாநில அரசின் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்’ என்று உறுதிசெய்தது. இப்படி பல வழக்குகளும் சட்டங்களும் உள்ளன. அதனால், கவர்னர் இதில் எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாநில அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஒப்புதல் கொடுப்பது மட்டும்தான் அவருக்கு இருக்கும் அதிகாரம்’’ என்றார்.

    அதிகாரத்துக்கும் அன்புக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன ஏழு உயிர்கள்.

    - ஜோ.ஸ்டாலின்
    அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி


    p4b_1536666320.jpgகவர்னர் என்ன செய்வார்?

    ரசியலமைப்புச் சட்டம் 161-ன்படி, கருணை அடிப்படையில் இவர்களின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதில் முடிவெடுக்க வேண்டியது கவர்னர். அவர் என்ன செய்யலாம்?

    dot_1536666363.jpg அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர். எனவே, உடனே இதை ஏற்று அவர்களை விடுதலை செய்யலாம்.

    dot_1536666363.jpg இதற்கு காலக்கெடு எதையும் அரசியலமைப்புச் சட்டம் விதிக்காததால், அவர் காலம் தாழ்த்தவும் செய்யலாம்.

    dot_1536666363.jpg தேவைப்பட்டால் அவர் மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்கலாம்.

    dot_1536666363.jpgஏதாவது விளக்கம் கேட்டோ, திருத்தம் செய்யச் சொல்லியோ, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டோ, தமிழக அரசுக்கு அவர் திருப்பி அனுப்பலாம். அதன்பிறகு இரண்டாவது முறையும் தமிழக அரசு அதைத் திருத்தம் செய்தோ, அல்லது அப்படியேவோ அனுப்பிவைத்தால், அதை மறுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது.

    dot_1536666363.jpg அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவை ரத்துசெய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை. 

    https://www.vikatan.com/juniorvikatan/2018-sep-16/investigation/144141-rajiv-gandhi-assassination-case-convicts-issue.html

    Link to comment
    Share on other sites

    Archived

    This topic is now archived and is closed to further replies.



    • Tell a friend

      Love கருத்துக்களம்? Tell a friend!
    • Topics

    • Posts

      • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
      • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
      • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
      • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
      • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
    • Our picks

      • மனவலி யாத்திரை.....!

        (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

        அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
        • 1 reply
      • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


        Friday, 16 February 2007

        காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • 20 replies
      • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

        நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
        சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
        நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
        சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


        பொருள்:
        சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • 7 replies
      • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • 46 replies
      • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

        பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

        இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • 5 replies
    ×
    ×
    • Create New...

    Important Information

    By using this site, you agree to our Terms of Use.