Jump to content

மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்?


Recommended Posts

மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்?

 

 

 

தமக்கு வாக்­க­ளித்­துத் தம்­மைப் பத­வி­யில் அமர்த்­திய மக்­க­ளது அபி­லா­சை­கள் குறித் துத் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் ஒரு கணம் சிந்­தித்­துப் பார்க்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் போதும் போதும் என்று கூறும் அள­வுக்­குத் துன்­பங்களை அனு­ப­வித்து விட்­ட­னர்.

இன்­ன­மும் வேத­னை­க­ளுக்கு மத்­தி­யில்­தான் அவர்­க­ளது அவல வாழ்வு தொட­ரு­கின்­றது. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் தமது துய­ரங்­க­ளுக்கு ஒரு தீர்­வைப் பெற்­றுத் தரு­வார்­கள் என்ற நம்­பிக்­கையை அவர்­கள் இன்­ன­மும் இழந்­து­வி­ட­வில்லை.

தமிழ் மக்­க­ளது நம்­பிக்­கையை தமிழ் அர­சி­யல்­வா­தி­கள்
காப்­பாற்­று­வார்­களா?

இந்த நம்­பிக்­கை­தான் அவர்­களை வாழ வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அவர்­கள் நம்­பி­யி­ருக்­கின்ற அர­சி­யல்­வா­தி­கள் அவர்­க­ளது நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­று­வார்­களா? என்­ப­து­தான் இன்­றுள்ள முக்­கிய வினா­வா­கும்.

தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளால் தமி­ழர் அர­சி­யல் குழம்­பிப் போய்க் காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக மக்­க­ளும் குழப்­பத்­தில் ஆழ்ந்து கிடக்­கின்ற­ னர். எவர் சொல்­வது சரி?.எவர் பொய் சொல்­கி­றார்? என்­பதை அனு­மா­னிப்­ப­தில் அவர்­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். அவர்­கள் பெரி­தும் நம்­பி­யி­ருந்த வடக்கு மாகாண சபை அவர்­களை முற்­றி­லும் ஏமாற்­றி­விட்­டது.

குறிப்­பாக அதன் முத­ல­மைச்­சர் முற்­றா­கவே ஏமாற்­றி­விட்­டார். ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர் மீது மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை முற்­றா­கவே தகர்ந்து விட்­டது. முக்­கி­ய­மான சபை அமர்­வைப் புறக்­க­ணித்து விட்டு திரு­மண நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்ட அவர் அதற்­குக் கூறிய வியாக்­கி­யா­னம் விசித்­தி­ர­மா­னது.

திரு­ ம­ணம் வாழ்­வில் ஒரு­மு­றை­தான் நிக­ழக் கூடி­யது. ஆனால் மாகாண சபைக் கூட்­டம் மாதாந்­தம் நடக்­கக் கூடி­ய­தென பொறுப்­பற்ற விதத்­தில் கூறிய அவர் போன்ற வேறொ­ரு­வ­ரைக் காண்­பது அரி­தான விட­யம்.

சர்ச்­சை­க­ளுக்­குப் பெயர்­போ­ன­வர் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன்

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுமந்­தி­ரன் சர்ச்­சை­க­ளுக்­குப் பெயர் போன­வர். நாட்­டின் மிகச் சிறந்த வழக்­க­றி­ஞர்­க­ளில் ஒரு­வ­ரான அவர் சில­வே­ளை­க­ளில் தம்மை மறந்து சில கருத்­துக்­க­ளைக் கூறிச் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றார்.

காலி­யில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் உரை­யாற்­றிய அவர் சமஷ்டி தமி­ழ­ருக்­குத் தேவை­யில்லை­ எனக் கூறி­ய­தா­கத் தெரி­வித்­துக் கண்­ட­னங்­கள் எழுந்­துள்­ளன. கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளும் இதற்­குத் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளன. ஆனால் தாம் சமஷ்டி தேவை­யில்­லை­யென ஒரு­போ­தும் கூற­வில்­லை­யெ­ன­வும், சமஷ்டி என்ற பெயர்ப் பல­கை­தான் தேவை­யில்­லை­யெ­னக் கூறி­ய­தா­க­வும் சுமந்­தி­ரன் புதிய விளக்­க­மொன்றை அளித்­தி­ருக்­கி­றார்.

ஆனால், இது விட­யத்­தில் சுமந்­தி­ர­னின் வியாக்கி­ யானம் எடு­ப­டுமா? என்­பது சந்­தே­கத்­துக்கு இட­மா­ன­தொன்று. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் இது போன்ற தேவை­யில்­லாத சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வது ஏற்­றுக்­கொள்­ளத் தக்­க­தல்ல.

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் சில­ரால் தமிழ் மக்­கள் பேரவை தடம்­பு­ரண்டு செல்­வ­தைக் காண­மு­டி­கின்­றது. பேர­வை­யில் அர­சி­ய­லுக்கு இட­மில்­லை­யென ஆரம்­பத்­தில் கூறப்­பட்­டது. ஆனால் அர­சி­யல்­வா­தி­க­ளின் வழி­ந­டத்­த­லின் கீழேயே பேர­வை­யின் செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­வ­தைக் காண­மு­டி­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் தமது அர­சி­யல் தேவை­க­ளுக்­கா­கப் பேர­வை­யைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்.

கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மான­ வர்­கள் அங்கு தஞ்­ச­ம­டைந்­தி­ருப்­ப­தை­யும் காண முடி­கின்­றது. இவற்­றை­யெல்­லாம் கூட்­டிக் கழித்­துப் பார்க்­கும்­போது தமிழ் மக்­கள் பேர­வை­யை­யும் ஓர் அர­சி­யல் கட்­சி­யா­கவே பார்க்க முடி­கின்­றது. இவர்­கள் மக்­களை ஏன் இவ்வாறு ஏமாற்­று­கின்­றார்­கள் என்­பது புரிய­ வில்லை.

பளை­யில் காற்­றாலை அமைத்­த­த­தில் முறை­கே­டு­கள் இடம்­பெற்­ற­னவா?

முன்­னாள் மாகாண அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் தமது சொத்து விவ­ரங்­களை உட­ன­டி­யா­கச் சமர்ப்­பிக்க வேண்­டு­மெ­னக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பளை­யில் காற்­றாலை அமைக்­கப்­பட்­ட­தில் முறை­கே­டு­கள் இடம்­பெற்­ற­தா­கக் கூறியே இந்­தக் கோரிக்கை விடப்­பட்­டுள்­ளது. ஆனால் முத­ல­மைச்­சர் தரப்­பி­லி­ருந்து இதற்­கான ஆக்­க­பூர்­வ­மான பதில் எது­வும் இது­வரை வௌிவ­ர­வில்லை. அது­மட்­டு­மல்­லாது காற்­றா­லைக்கு அனு­மதி வழங்­கிய வடக்கு மாகாண சபைக்­குப் பெரும் நிதி இழப்­பீடு ஏற்­பட்­ட­தா­கக் கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இது தொடர்­பாக முத­ல­மைச்­சர் அலட்­சி­ய­மா­கப் பதி­ல­ளித்­துள்­ளார். பளைக் காற்­றா­லை­யால் மாகாண சபைக்­குக் கிடைத்­தது கொடையே என­வும், நிதி­யி­ழப்பு ஏது­மில்­லை­யெ­ன­வும் அவர் தெரி­வித்­ததை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் அறிக்­கை­யின் பிர­கா­ரம் மாகாண சபைக்கு நிதி­யி­ழப்பு ஏற்­பட்­டது உண்­மை­யா­னால் அதற்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­ய­மா­கும்.

ஒட்டு மொத்­த­மா­கப் பார்க்­கும்­போது தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளின் நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மா­ன­வர்­க­ளா­கத் திக­ழ­வேண்­டும். மக்­க­ளின் மன­ம­றிந்து செயற்­ப­டு­கின்ற தன்­மை­யை­யும் அவர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

https://newuthayan.com/story/13/மக்கள்-மனமறிந்து-செயற்படுவார்களா-தமிழ்-அரசியல்வாதிகள்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.