Jump to content

மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்?


Recommended Posts

மக்கள் மனமறிந்து செயற்படுவார்களா தமிழ் அரசியல்வாதிகள்?

 

 

 

தமக்கு வாக்­க­ளித்­துத் தம்­மைப் பத­வி­யில் அமர்த்­திய மக்­க­ளது அபி­லா­சை­கள் குறித் துத் தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் ஒரு கணம் சிந்­தித்­துப் பார்க்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் போதும் போதும் என்று கூறும் அள­வுக்­குத் துன்­பங்களை அனு­ப­வித்து விட்­ட­னர்.

இன்­ன­மும் வேத­னை­க­ளுக்கு மத்­தி­யில்­தான் அவர்­க­ளது அவல வாழ்வு தொட­ரு­கின்­றது. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் தமது துய­ரங்­க­ளுக்கு ஒரு தீர்­வைப் பெற்­றுத் தரு­வார்­கள் என்ற நம்­பிக்­கையை அவர்­கள் இன்­ன­மும் இழந்­து­வி­ட­வில்லை.

தமிழ் மக்­க­ளது நம்­பிக்­கையை தமிழ் அர­சி­யல்­வா­தி­கள்
காப்­பாற்­று­வார்­களா?

இந்த நம்­பிக்­கை­தான் அவர்­களை வாழ வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால் அவர்­கள் நம்­பி­யி­ருக்­கின்ற அர­சி­யல்­வா­தி­கள் அவர்­க­ளது நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­று­வார்­களா? என்­ப­து­தான் இன்­றுள்ள முக்­கிய வினா­வா­கும்.

தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளால் தமி­ழர் அர­சி­யல் குழம்­பிப் போய்க் காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மாக மக்­க­ளும் குழப்­பத்­தில் ஆழ்ந்து கிடக்­கின்ற­ னர். எவர் சொல்­வது சரி?.எவர் பொய் சொல்­கி­றார்? என்­பதை அனு­மா­னிப்­ப­தில் அவர்­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். அவர்­கள் பெரி­தும் நம்­பி­யி­ருந்த வடக்கு மாகாண சபை அவர்­களை முற்­றி­லும் ஏமாற்­றி­விட்­டது.

குறிப்­பாக அதன் முத­ல­மைச்­சர் முற்­றா­கவே ஏமாற்­றி­விட்­டார். ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர் மீது மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை முற்­றா­கவே தகர்ந்து விட்­டது. முக்­கி­ய­மான சபை அமர்­வைப் புறக்­க­ணித்து விட்டு திரு­மண நிகழ்­வொன்­றில் கலந்­து­கொண்ட அவர் அதற்­குக் கூறிய வியாக்­கி­யா­னம் விசித்­தி­ர­மா­னது.

திரு­ ம­ணம் வாழ்­வில் ஒரு­மு­றை­தான் நிக­ழக் கூடி­யது. ஆனால் மாகாண சபைக் கூட்­டம் மாதாந்­தம் நடக்­கக் கூடி­ய­தென பொறுப்­பற்ற விதத்­தில் கூறிய அவர் போன்ற வேறொ­ரு­வ­ரைக் காண்­பது அரி­தான விட­யம்.

சர்ச்­சை­க­ளுக்­குப் பெயர்­போ­ன­வர் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன்

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சுமந்­தி­ரன் சர்ச்­சை­க­ளுக்­குப் பெயர் போன­வர். நாட்­டின் மிகச் சிறந்த வழக்­க­றி­ஞர்­க­ளில் ஒரு­வ­ரான அவர் சில­வே­ளை­க­ளில் தம்மை மறந்து சில கருத்­துக்­க­ளைக் கூறிச் சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றார்.

காலி­யில் இடம்­பெற்ற நிகழ்­வொன்­றில் உரை­யாற்­றிய அவர் சமஷ்டி தமி­ழ­ருக்­குத் தேவை­யில்லை­ எனக் கூறி­ய­தா­கத் தெரி­வித்­துக் கண்­ட­னங்­கள் எழுந்­துள்­ளன. கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளும் இதற்­குத் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ளன. ஆனால் தாம் சமஷ்டி தேவை­யில்­லை­யென ஒரு­போ­தும் கூற­வில்­லை­யெ­ன­வும், சமஷ்டி என்ற பெயர்ப் பல­கை­தான் தேவை­யில்­லை­யெ­னக் கூறி­ய­தா­க­வும் சுமந்­தி­ரன் புதிய விளக்­க­மொன்றை அளித்­தி­ருக்­கி­றார்.

ஆனால், இது விட­யத்­தில் சுமந்­தி­ர­னின் வியாக்கி­ யானம் எடு­ப­டுமா? என்­பது சந்­தே­கத்­துக்கு இட­மா­ன­தொன்று. தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் இது போன்ற தேவை­யில்­லாத சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வது ஏற்­றுக்­கொள்­ளத் தக்­க­தல்ல.

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் சில­ரால் தமிழ் மக்­கள் பேரவை தடம்­பு­ரண்டு செல்­வ­தைக் காண­மு­டி­கின்­றது. பேர­வை­யில் அர­சி­ய­லுக்கு இட­மில்­லை­யென ஆரம்­பத்­தில் கூறப்­பட்­டது. ஆனால் அர­சி­யல்­வா­தி­க­ளின் வழி­ந­டத்­த­லின் கீழேயே பேர­வை­யின் செயற்­பா­டு­கள் இடம்­பெ­று­வ­தைக் காண­மு­டி­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் தமது அர­சி­யல் தேவை­க­ளுக்­கா­கப் பேர­வை­யைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்.

கூட்­ட­மைப்­புக்கு விரோ­த­மான­ வர்­கள் அங்கு தஞ்­ச­ம­டைந்­தி­ருப்­ப­தை­யும் காண முடி­கின்­றது. இவற்­றை­யெல்­லாம் கூட்­டிக் கழித்­துப் பார்க்­கும்­போது தமிழ் மக்­கள் பேர­வை­யை­யும் ஓர் அர­சி­யல் கட்­சி­யா­கவே பார்க்க முடி­கின்­றது. இவர்­கள் மக்­களை ஏன் இவ்வாறு ஏமாற்­று­கின்­றார்­கள் என்­பது புரிய­ வில்லை.

பளை­யில் காற்­றாலை அமைத்­த­த­தில் முறை­கே­டு­கள் இடம்­பெற்­ற­னவா?

முன்­னாள் மாகாண அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் தமது சொத்து விவ­ரங்­களை உட­ன­டி­யா­கச் சமர்ப்­பிக்க வேண்­டு­மெ­னக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பளை­யில் காற்­றாலை அமைக்­கப்­பட்­ட­தில் முறை­கே­டு­கள் இடம்­பெற்­ற­தா­கக் கூறியே இந்­தக் கோரிக்கை விடப்­பட்­டுள்­ளது. ஆனால் முத­ல­மைச்­சர் தரப்­பி­லி­ருந்து இதற்­கான ஆக்­க­பூர்­வ­மான பதில் எது­வும் இது­வரை வௌிவ­ர­வில்லை. அது­மட்­டு­மல்­லாது காற்­றா­லைக்கு அனு­மதி வழங்­கிய வடக்கு மாகாண சபைக்­குப் பெரும் நிதி இழப்­பீடு ஏற்­பட்­ட­தா­கக் கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் இது தொடர்­பாக முத­ல­மைச்­சர் அலட்­சி­ய­மா­கப் பதி­ல­ளித்­துள்­ளார். பளைக் காற்­றா­லை­யால் மாகாண சபைக்­குக் கிடைத்­தது கொடையே என­வும், நிதி­யி­ழப்பு ஏது­மில்­லை­யெ­ன­வும் அவர் தெரி­வித்­ததை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. கணக்­காய்­வா­ளர் தலைமை அதி­ப­தி­யின் அறிக்­கை­யின் பிர­கா­ரம் மாகாண சபைக்கு நிதி­யி­ழப்பு ஏற்­பட்­டது உண்­மை­யா­னால் அதற்­குப் பொறுப்­பா­ன­வர்­கள் மீது உரிய நட­வ­டிக்கை எடுப்­பது அவ­சி­ய­மா­கும்.

ஒட்டு மொத்­த­மா­கப் பார்க்­கும்­போது தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளின் நம்­பிக்­கைக்­குப் பாத்­தி­ர­மா­ன­வர்­க­ளா­கத் திக­ழ­வேண்­டும். மக்­க­ளின் மன­ம­றிந்து செயற்­ப­டு­கின்ற தன்­மை­யை­யும் அவர்­கள் வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்.

https://newuthayan.com/story/13/மக்கள்-மனமறிந்து-செயற்படுவார்களா-தமிழ்-அரசியல்வாதிகள்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.