Jump to content

விக்னேஸ்வரனின் விலகல் உறுதி


Recommended Posts

விக்னேஸ்வரனின் விலகல் உறுதி
கே. சஞ்சயன் /

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக இருந்தது.  

ஆனால், அவர் வழக்கம் போலவே, தனது முடிவை உறுதியாக அறிவிக்காமல், நழுவிக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவரது உரை, சில தெளிவான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. அவர் தனது உரையில், தன் முன்பாக உள்ள நான்கு தெரிவுகள் பற்றிக் கூறியிருக்கிறார்.  

அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்வுக்குச் செல்வது; புதிய கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுவது; மற்றொரு கட்சியில் இணைவது; நான்காவதாக, கட்சி அரசியலில் இருந்து விலகி, தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக, மக்கள் அரசியலை முன்னெடுப்பது.  

முதலமைச்சரின் உரையைத் தொடர்ந்து நடந்த, ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட இரண்டு தெரிவுகள், பேரவையின் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.  
அவற்றில் ஒன்று, விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஓய்வு வாழ்க்கைக்குச் செல்வது. இரண்டாவது, கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கி, மக்கள் அரசியலை முன்னெடுக்கும் அவரது யோசனை. இந்த இரண்டும் பொருத்தமற்றது என்று, தமிழ் மக்கள் பேரவையால் குறிப்பிடப்பட்டுள்ளது.  

முதலமைச்சர் தனிக் கட்சியை அமைப்பது பற்றிய யோசனைக்கு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் கூட, ஆதரவு அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.  

எது எவ்வாறாயினும், தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, இன்னமும் எந்த முடிவையும் எடுக்காத முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தொடர்ந்து இருப்பது பற்றியோ, அதிலேயே மீண்டும் போட்டியிடுவது பற்றியோ பேசவேயில்லை.  

இதற்கு முன்னர், மூன்று தெரிவுகள் பற்றி, அவர் ஊடகங்களிடம் பேசியிருந்தார். அதில், ஒன்று கூட்டமைப்பிலேயே தொடர்ந்து போட்டியிடுவது என்ற தெரிவு.  

 ஆனால், இப்போது அவர், அதைத் தனது ஒரு தெரிவாக முன்வைக்கவில்லை. அதைவிட, 2009இல் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டுவிட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இனிமேலும் ஒட்டியிருக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார்.   கூட்டமைப்பு ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டு விட்டது என்று பகிரங்கமாகக் கூறிவிட்டு, மீண்டும் அவரால், கூட்டமைப்புடன் இணைந்து, தேர்தல்களில் நிற்க முடியாது; அது அறமும் அல்ல.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை, முன்னரேயே எடுத்து விட்டார். அண்மையில், வல்வெட்டித்துறையில் அவர் உரையாற்றிய போது, தமிழ்த் தலைமைகளின் மீது, ஒட்டுமொத்தமாகப் பழியைப் போட்டு, குற்றம்சாட்டியிருந்தார்.  

அதுபோதாதென்று, முதலமைச்சரின் சகபாடிகளில் ஒருவரான, மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், “கூட்டமைப்பு ஒரு கூழ் முட்டை” என்றும், “அதை இனி அடைகாப்பதில் பயனில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் வழியே தான், இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தோல்வி கண்டுவிட்டது என்ற பிரகடனத்தைச் செய்திருக்கிறார்.  

அவ்வாறாயின் அதன் அர்த்தம், புதியதொரு தலைமை தமிழ் மக்களுக்குத் தேவை; புதியதோர் அணுகுமுறை தேவை என்பது தான்.  

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  அந்த தலைமைத்துவ வகிபாகத்தை விக்னேஸ்வரன் இப்போது கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.  

தமிழ் மக்களின் ஒற்றுமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து, கடந்த ஒரு தசாப்த காலமாக, பரவலாக வலியுறுத்தப்பட்டு வந்தது. பல்வேறு தவறுகள், குறைபாடுகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் இருந்த போதும், தமிழ் மக்களின் ஒற்றுமையைக் கூட்டமைப்பின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பது, பொதுவான நிலைப்பாடாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் என்ற நிலையைத் தான், விக்னேஸ்வரன் உடைப்பதற்கு எத்தனித்திருக்கிறார்.   

கூட்டமைப்பு தலைமைத்துவம் மற்றும் அணுகுமுறையில், தோல்வி கண்டுவிட்டது என்று அவர் பிரகடனம் செய்துள்ளதன் மூலம், இன்னொரு தலைமையைத் தெரிவு செய்யத் தயாராக வேண்டும் என்பதை அறிவித்திருக்கிறார். இது மாற்றுத் தலைமை பற்றி வலியுறுத்தி வந்த தரப்புகளின் கருத்துகளுடன் அவர் நெருங்கிச் சென்று விட்டார் என்பதைப் புலப்படுத்தி இருக்கிறது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான, தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், விக்னேஸ்வரனை மீண்டும் போட்டியில் நிறுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.  

ஒருவேளை, தமிழரசுக் கட்சியே கூட, அவரை மீண்டும் களத்தில் இறக்க நினைத்தாலும், அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால், தோல்வி கண்டு விட்ட கூட்டமைப்பின் சார்பில், அவரால் போட்டியில் நிற்க முடியாது. அவ்வாறு நின்றால், அது விக்னேஸ்வரன் என்ற ஆளுமையின் தோல்வியாகவே விமர்சிக்கப்படும்.  

விக்னேஸ்வரனின் இந்த முடிவு, சரியா - தவறா என்பதற்கு அப்பால், அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள், அவரை மீண்டும் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது, இரண்டு தரப்புகளுக்குமே ஏற்றதாக இருக்காது.  அண்மையில், வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணி விடயத்தில் கூட்டமைப்புக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் தான், அவர் இந்த முடிவை எடுத்தார் என்று கூறினால் அது தவறு; அந்த முடிவு அவரால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது.  

முன்னர், தலைமைத்துவத்தில் கூட்டமைப்பு தோல்வி கண்டு விட்டது என்ற அடிப்படையில் தான், அவர் அந்த முடிவை எடுத்திருந்தார். இப்போது, அவர், ‘அணுகுமுறை’ என்ற விடயத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.  

அதாவது, தமிழ் மக்களின் பிரச்சினைகள், அவற்றுக்குத் தீர்வு காணும் விடயங்களில், கூட்டமைப்பின் அணுகுமுறையைத் தான் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். செயலணிக் கூட்டத்தின் பிரதிபலிப்பு அதில் தெரிகிறது.  

அதேவேளை, கூட்டமைப்பு, தோல்வி கண்டு விட்டது என்று தெரிந்த பின்னரும், எதற்காக அவர் தொடர்ந்தும் கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகிய முதலமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி நியாயமானது.  

ஏற்கெனவே அவரைப் பதவியில் இருந்து விலகுமாறும், அது அனுதாப வாக்குகளைப் பெற்றுத்தரும் என்றும் சிலர் ஆலோசனைகளைக் கூறியிருந்தனர்.  

ஆனாலும், முதலமைச்சர் பதவியை விட்டுத்தர அவர் தயாராக இல்லை. முதலமைச்சர் பதவியை விக்னேஸ்வரன், தனக்கு எழுதித் தரப்பட்ட ஓர் ஒப்பந்தம் போலவே பார்க்கிறார்.  

இன்னும் சில வாரங்களில், வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்து விடும் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர், அதற்குப் பின்னரே, தனது முடிவை அறிவிப்பார் என்பது திண்ணம்.  

கூட்டமைப்பு தான், அவரை அரசியலுக்கு அழைத்து வந்து, முதலமைச்சர் பதவியையும் பெற்றுக் கொடுத்தது. அந்த முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே, கூட்டமைப்பை விமர்சித்து, அரசியல் செய்த விக்னேஸ்வரன், அந்த முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே, தனது அடுத்த கட்ட அரசியலுக்கும் தளம் அமைப்பது தார்மீகமாகப் பார்க்கப்படாது.  

அதாவது, கூட்டமைப்பால் கொடுக்கப்பட்ட பதவியில் இருந்து கொண்டே, இன்னொரு கட்சியை ஆரம்பிப்பது, இன்னொரு கட்சியுடன் இணைவது, அவரது ஆளுமையைச் சிறுமைப்படுத்தி விடும்.  

அதைத் தவிர்க்கவே, கூட்டமைப்பின் ஒப்பந்தம் முடியும் வரையில், அதாவது மாகாணசபையின் ஆயுள் பூர்த்தியாகும் வரையும் அவர் பொறுத்திருக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கு முன்னர், அவரது வாயை எப்படித் தான் கிளறினாலும், சுற்றி வளைத்து எதையோ சொல்லி விட்டு, நழுவிக் கொள்வார் என்றே தெரிகிறது. ஆனாலும், தமிழ்த் தேசிய அரசியலின் வரலாறு, தனக்குக் கொடுத்துள்ள பொறுப்புக் குறித்து, ஆராய்வதாகக் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.  

அதாவது, கட்சி அரசியலின் ஊடாக மீண்டும் மாகாண சபையைக் கைப்பற்றும் இலக்குடன் நகர்வதா மக்கள் அரசியலின் ஊடாகத் தமிழ்த் தேசிய அரசியல் அபிலாஷைகளுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதா என்ற இரண்டு தெரிவுகள் தான், அவரிடம் உண்மையாகவே உள்ளன போல்த் தெரிகிறது. அதில் அவர் எந்த முடிவை எடுத்தாலும், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சிக்கலானது தான். கூட்டமைப்பின் வாக்கு வங்கிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே, தமிழரின் அரசியல் அடையாளம் என்ற நிலையை, இல்லாமல் செய்யும் அரசியல் நகர்வுக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன், பாதை அமைக்கத் தொடங்கி விட்டார்.  
‘எலி கொழுத்தால் வளையில் தங்காது’  என்பது பழமொழி. அப்படிப்பட்ட  நிலையில்தான் விக்னேஸ்வரன் இருக்கிறார்.  

தெரிந்தோ தெரியாமலோ, அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த கூட்டமைப்பு, தனக்குத் தானே புதைகுழியைத் தோண்டியிருக்கிறது.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விக்னேஸ்வரனின்-விலகல்-உறுதி/91-221377

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.