Jump to content

உலகப்பார்வை: ஒரே புதைகுழியில் கிடைத்த 166 மண்டை ஓடுகள்


Recommended Posts

உலகப்பார்வை: ஒரே புதைகுழியில் கிடைத்த 166 மண்டை ஓடுகள்

கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

ஒரே இடத்தில் 166 மண்டை ஓடுகள்

Skullபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

மெக்சிகோவின் வெராகிரஸ் மாகாணத்தில் ஒரே இடத்தில் குறைந்தது 166 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடம் எது என்று தெரிவிக்கப்படவில்லை.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களால் கொல்லப்பட்டவர்களை புதைப்பதற்கான இடமாக வெராகிரஸ் மாகாணத்தை பயன்படுத்துவது வழக்கம்.

மார்ச் 2017இல் அங்கு ஓரிடத்தில் சுமார் 250 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.


அமெரிக்கா: செல்ஃபி எடுக்க முயன்றவர் பலி

Yosemite National Parkபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionயோஸ்மைட் தேசியப் பூங்கா

அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் உள்ள யோஸ்மைட் தேசியப் பூங்காவில் 820 அடி உயரமுள்ள குன்றின் முகட்டில் நின்றுகொண்டு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

டோமர் ஃபிராங்பர்ட்டார் எனும் அந்த 18 வயது இளைஞர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். இரண்டு மாத சுற்றுலாவுக்கு அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.


வடகொரிய நபர் மீது அமெரிக்கா வழக்கு

North Koreaபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை இணையதளத்தை முடக்கும் நோக்கில் மென்பொருள் தயாரித்ததாக வடகொரிய நபர் ஒருவர் மீது அமெரிக்க அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பார்க் ஜின் ஹியோக் எனும் அந்த நபர் தற்போது வடகொரியாவில் வசித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இராக்: ஊழலுக்கு எதிராகப் போராட்டம்

Iraqபடத்தின் காப்புரிமைREUTERS Image captionதீவைக்கப்பட்ட அரசுகு சொந்தமான கட்டடம்

ஊழல் மற்றும் அரசின் சேவைகள் முறையாக கிடைக்காததால் இராக்கின் பெசாரஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு அவர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு வாரமாக நடக்கும் இந்தப் போராட்டத்தில், சென்ற வாரம் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-45443034

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.