Jump to content

சிங்கள இரத்தம் வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கிறீர்களா? தமிழரிடம் கேட்ட குரே!


Recommended Posts

சிங்கள இரத்தம் வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கிறீர்களா? தமிழரிடம் கேட்ட குரே!

 

 

வைத்தியசாலைகளுக்கு காயங்களுடன் செல்லும்போது சிங்கள இரத்தம் ஏற்றவேண்டாம் என யாராவது கூறியிருக்கிறீர்களா என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தமிழ் மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இரத்த வங்கிகளுக்கு கணிசமானளவு இராணுவத்தினரும் பௌத்த துறவிகளும் குருதி வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல. அதனால்தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் தங்கை நிருபம்மா ராஜபக்ஷ நடேசன் எனும் தமிழரை திருமணம் முடித்து வாழ்கின்றார். மறைந்த வெளிவிகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சிங்கள பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்திருக்கின்றார். இதேபோன்று மைதிரிபால சேனாநாயக்க எனும் பெருந் தலைவர் ஒருவர் தமிழ் பெண் ஒருவரையே மணம் முடித்து இருக்கின்றார்.

இந்த நாட்டினை ஆட்சி செய்த சிங்கள அரசர்கள் இந்தியாவின் மதுராபுரியிலிருந்து தமிழ் பெண்களை திருமணம் முடித்திருக்கின்றார்கள்.

பௌத்த விகாரைக்குள் இந்து தெய்வங்கள் புத்த பெருமானோடு சந்தோசமாக சாந்தியும் சமாதானமுமாக இருக்கின்றபோது புத்தரை கும்பிட போற மக்கள் சண்டை பிடிக்கின்றார்கள். இச்செயலை பார்த்து தெய்வம் சிரிக்கின்றது. தெய்வத்திடமிருக்கும் நல்லவை ஏன் மனிதனிடம் இருக்கக்கூடாது.

வைத்தியசாலையில் நீங்கள் உயிரிருக்கு போராடும்போது வைத்தியர்கள் இரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னால் அந்த இரத்தம் யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா? இரத்த வங்கிகளுக்கு இராணுவத்தினர் பௌத்த துறவிகள் இரத்தம் வழங்குகின்றார்கள். இந்த சிங்கள இரத்தம் எனக்கு வேண்டாம் என்று யாராவது கூறியிருக்கின்றீர்களா?

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கடமையில் இருப்பவர்கள் சிங்கள மொழி பேசும் பொலிஸார். மிகச்சிறந்த நீதிபதி இளஞ்செழியன் ஐயாவை உயிர் கொடுத்து காப்பாற்றியவர் ஒரு சிங்கள மொழி பேசும் பொலிஸ் கான்ஸ்டபிள். தமிழ் பொலிஸார் யாரையும் ஏன் பாதுகாப்புக்கு உறுப்பினர்கள் வைத்திருப்பதில்லை.

கௌரவ முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஏன் தமிழ் பொலிஸாரை பாதுகாப்பிற்கு வைத்திருக்கவில்லை. அவர் சிங்கள பொலிஸார் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார். அவ்வாறு நம்பிக்கையை சிங்கள பொலிஸார் மீது வைத்துக்கொண்டு வெளியே வேறு கதை பேசுகின்றார்.

மக்கள் மத்தியில் விரைவாக தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாதம், குலவாதம் பேசுவது. வேறு ஒன்றும் தேவையில்லை குறுகிய காலத்திற்குள் தலைவராவதற்கு. தேர்தல் காலம் நெருங்கும்போது இனவாதம் மொழிவாதம் குலவாதம் பேசுகிறார்கள். அவை தேர்தல் காலத்தில் மட்டுமேதான்.

வெள்ளவத்தை பக்கத்திலே தமிழ் மக்கள் வீடு கட்ட முடியும் கோவில் கட்ட முடியும் கோவில்களில் விழா கொண்டாட முடியும். அங்கு எங்கும் எந்த தடையும் இல்லை. இங்கே ஒரு சிலை வைத்தால் பாரிய பிரச்சினைகள் எழுக்கின்றன. பௌத்த விகாரைக்குள் நீங்கள் போவதற்கு பெயரை மாற்றத் தேவை இல்லை மதம் மாற வேண்டியதில்லை அதேபோன்று பௌத்த மக்கள் இந்து கோவிலுக்குள் போறதற்கு தடை ஏதும் இல்லை பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் நல்லூர் கோவிலுக்குள் சென்று வழிபடுவதை நான் கண்டிருக்கின்றேன்.

மதங்கள், இனங்களுக்கு மேலே மனிதத் தன்மையை மேலே வைக்க வேண்டும் நாம் அனைவரும் மனிதர்களாக வாழ வேண்டும்.

அன்பான மாணவர்களே!

படித்தவர்களில் பல யாழ்ப்பாண தமிழர்கள் தலைவர்களாக பெரியவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்திருக்கின்றார்கள். லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம், ரஜனி திராணகம, ஆனந்தகுமாரசுவாமி, சிற்றம்பலம் காடினர், ஜிஜி பொன்னம்பலம், எதிர்வீரசிங்கம் போன்றோர் போல நீங்களும் பெரியவர்களாக அவர்களின் பாதையில் வரவேண்டும்.

இங்கே படித்துவிட்டு பெரிய ஆளாகி பல பதவிகளை வகிக்கின்றவர்கள் தாய் நாட்டிற்கும் தாய் தந்தையருக்கும் சேவை செய்வது கிடையாது. படித்து பெரியவர்களாக இருந்தாலும் தாய் தந்தை, மற்றும் தாய் நாட்டிற்கு திருப்பி சேவை செய்யாது போனால் பிரியோசனம் ஒன்றும் இல்லை. அரசியல் வாதிகள் அடுத்த தேர்தலை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எதிர்கால அடுத்த சந்ததிக்காக சிந்திக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்” என்று தெரிவித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

https://www.ibctamil.com/srilanka/80/105797

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உமக்கு வரலாறோ அல்லது பூர்விகமோ தெரியாது இருக்கலாம், அல்லது தெரியாதது போல் நடிக்கலாம்.

உமது பெயரிலும் மற்றும் மதத்திலும் இருந்து தெரிவது, உமது பூர்விகம் தற்போதைய தமிழ் நாடு அல்லது கேரளா ஆகும்.

பூர்விக சிங்களவர் இரத்தம் எனில், பூர்விக சிங்களவர் பூர்விகம் தமிழ், எழு மொழியைப் பாவித்தவர்கள், பௌத்தம் மற்றும் பிராகிருத, பாளி   மொழி கலப்பினாலும்  திரிப்பினாலும், 7-8 ம் நூற்றாண்டில் சிங்களம் பேச்சு மொழியாக  பூர்விக சிங்களவரினால் வரிக்கப்பட்டது.

எனவே, சிங்களவரில் ஓடுவது தமிழ் இரத்தமே.

இதை எல்லாம் நடுவில் வந்த வெள்ளையனின் ஆரியம் பேச்சை கேட்டு அழிக்க முயன்று, இப்போது இரத்தத்தில் வந்து நிற்கிறது வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் மனிதர்கள் இல்லை. சிங்களவர்கள் என்று தான் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதுதான் மனித உயிர்களின் முக்கியத்துவம் அறியாமல் ஒரு நிலப்பரப்பை இந்து சமுத்திரத்தில் சுடுகாடாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் போலும். 

Link to comment
Share on other sites

பாடசாலைகளில் பொறுப்பாக இருக்கும் அடிவருடிகள் அற்பசொற்ப சலுகைகளுக்காக  கழுதைகளை பாடசாலை விழாவிற்கு அழைத்தால்  அது கனைக்கத் தான் செய்யும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

படித்தவர்களில் பல யாழ்ப்பாண தமிழர்கள் தலைவர்களாக பெரியவர்களாக இந்த நாட்டில் வாழ்ந்திருக்கின்றார்கள். லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம், ரஜனி திராணகம, ஆனந்தகுமாரசுவாமி, சிற்றம்பலம் காடினர், ஜிஜி பொன்னம்பலம், எதிர்வீரசிங்கம் போன்றோர் போல நீங்களும் பெரியவர்களாக அவர்களின் பாதையில் வரவேண்டும்.

அது சரி படித்த இந்த பெரியவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அது சரி படித்த இந்த பெரியவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்? :cool:

சிங்கள எஜமான விசுவாச சுயநலனுக்கு.. தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்தார்கள்... அவ்வளவே. ?

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

சிங்கள எஜமான விசுவாச சுயநலனுக்கு.. தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்தார்கள்... அவ்வளவே. ?

அவர் பட்டியல்  இட்ட ஒருவரை தமிழர்கள் அறிவது அவசியம். ஆனந்த குமாரசாமி இதுவரையில் அதிசிறந்த இலங்கையர். அவருக்கு இணையான இலங்கையர் என்னும் பிறக்கவில்லை என எண்பதுகளில் ஆங்கில பத்திரிகையில் ஒரு சிங்கள ஆய்வாளர் குறிப்பிட்டார். ஆனந்த குமாரசாமியை கற்காமல் ஒருவன் கலை துறையில் முழுமை அடையமுடியாது என எனது சிங்கள பல்கலைக்கழக ஆசிரியர் என்னை வலிந்து படிக்க வைத்தார். அவரது 'Medieval singhalese art ' என்ற நூல் இலங்கை புராதன கலைகளின் பைபிள் போன்றது. அவரது 'Dance of  Siva' என்ற நூல் கீழைத்தேச கலைகளை மேலைத்தேசத்தவருக்கு அறிமுகப்படுத்தியது. இவர் பற்றிய ஒரு விபரணப் படத்தை எழுபதுகளில் ஜேர்மன் அரசு வெளியிட்டது. 

இவர் ஐநூறுக்கு மேற்படட கலை பற்றிய ஆய்வு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒரு விஞ்ஞானி. இவர் கண்டுபிடித்த ஒரு கனிமப்பொருளுக்கு இவர் பெயரே உள்ளது. நான் வேலை செய்த  வெளிநாட்டு அலுவலகத்தில் ஒரு சிறிய புத்தக அலுமாரி உள்ளது. ஒரு நூறு புத்தகம் கூட இல்லை. அதில் ஆனந்த குமாரசாமியின் ஒரு நூல் இருந்தது. அவர் எனது நாட்டவர் என சொல்லி நானும் பெருமைப்பட்டேன். அவரை பெற்றெடுத்த மண் அவரை அறியாமல் கேலிசெய்வது கவலைக்குரியது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, hasan said:

அவர் பட்டியல்  இட்ட ஒருவரை தமிழர்கள் அறிவது அவசியம்.

படித்த தமிழர்களை மெச்சி பட்டியலிடும் அவரிடம்,

எதற்காக படித்துகொண்டிருந்த தமிழர்களின் பாடசாலைகளை குறிவைத்து விமான தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக மாணவர்களை கொன்றுகுவித்தார்கள் என்று கேட்டு சொல்லமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுனர் ஐயா இனவாதம் என்றால் என்னவென்று விபரமில்லாம பேசியிருக்கிறார்,

தமிழர் பகுதியின்ஒரு ஆளுனராக இருந்துகொண்டு,அவர்களின் ஒருவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு,அவர்களின் நடுவில் நின்றுகொண்டு   முழுக்க முழுக்க தமிழர்களே இனவாதிகள் என்பதுபோல் பேசுவதற்கு பெயர்தான் இனவாதம் ஐயா.

சிங்களவரின் இரத்தம் வேண்டாம் என்பதால் வருவதல்ல இனவாதம், தமிழரின் ரத்தம் சிங்களவருக்கு வேண்டும் என்று நீங்கள் அடம்பிடித்ததால் வந்ததே இலங்கையில் இனவாதம்.

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

படித்த தமிழர்களை மெச்சி பட்டியலிடும் அவரிடம்,

எதற்காக படித்துகொண்டிருந்த தமிழர்களின் பாடசாலைகளை குறிவைத்து விமான தாக்குதல் நடத்தி கொத்து கொத்தாக மாணவர்களை கொன்றுகுவித்தார்கள் என்று கேட்டு சொல்லமுடியுமா?

ஆளுநர் பேசியதை பற்றியதல்ல எனது கருத்து. தமிழ் வெறி இல்லாத மனிதகுலத்துக்கு பங்களித்த தமிழர்களை எந்தவித ஆய்வுமில்லாமல் தமிழ் துரோகிகளாக படடமளிப்பதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். ஆனந்த குமாரசாமி தன்னை தமிழனாக நிறுவி அதில் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லாத மாமனிதன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு போட்டுவிட்டுச் சொல்லிக்காட்டுகிறார் "நக்குண்டார் நாவிழந்தார்"

இவர் படிச்சவர்தானா இல்லையா!

அடுத்த முறை யாராவது அவசரத்துக்கு வைத்தியசாலையில் ரத்தம் ஏத்துவதாகவிருந்தால் சிங்களவனின் ரத்தமா தமிழனின் ரத்தமா எனகேட்டு ஏத்துங்கோ.

எவ்வளவு கேவலபுத்தி இவருக்கு இவரது கருத்தே உண்மையைச்சொல்கிறது என்றுமே சிங்கள இனம் மேன்மக்களாக இருக்கமுடியாது என.

Link to comment
Share on other sites

ஐயா குரே அவர்களே! தமிழ் இரத்தம், சிங்கள இரத்தம் தமிழ் கடவுள், சிங்களக்கடவுள் இவற்றையெல்லாம் விடுங்கள். இன்றைய காலத்தில் தமிழர்கள் சுயமாக வாழ்வதற்கு இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து அவர்கள் கேட்ட, அவர்களுடைய மண்ணை உங்கள் நிர்வாகத்திலிருந்து விடுவித்துவிட்டுப் பாருங்கள், சிங்களப் பகுதிகளில் இருக்கும் புத்த தூபிகளை விடவும் உயரமான தூபி அங்கு எழுந்து காட்சிதரும். அன்று மூதாதையர்களை இலங்கையில் எரித்து அழித்த அனுமனையே இன்று வானளாவ நிறுவி கோவில் கட்டியிருக்கும் தமிழர்களின் செயற்பாடுகளே இதற்குச் சாட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, hasan said:

ஆளுநர் பேசியதை பற்றியதல்ல எனது கருத்து. தமிழ் வெறி இல்லாத மனிதகுலத்துக்கு பங்களித்த தமிழர்களை எந்தவித ஆய்வுமில்லாமல் தமிழ் துரோகிகளாக படடமளிப்பதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். ஆனந்த குமாரசாமி தன்னை தமிழனாக நிறுவி அதில் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லாத மாமனிதன். 

உங்களுக்கு பிடித்த மாமனிதனை நீங்கள் பூஜிக்கவேண்டாம் என்று இங்கே யாராவது சொன்னார்களா?

அதுபோல் அடுத்தவர் எப்படி இருக்கவேண்டுமென்று நீங்களும் கருத்து சொல்வது தகாது.

தமிழர்களுக்கு பிடித்த தமிழனை சிங்களவர்களுக்கு பிடிக்காதபோது,

சிங்களவர்களுக்கு பிடித்த தமிழர்களை தமிழர்களுக்கும் பிடிக்காது என்பது  துரோகி பட்டமளிப்பதல்ல, துரதிர்ஷ்டவசமாக எம் மனதில் படிந்துவிட்ட அளவையியல் கோட்பாடு, அவ்வளவுதான்.

நாம் பட்ட காயங்கள் அப்படி.

Link to comment
Share on other sites

குரே அவர்கள் அதிகமாகத் தமிழ் சிங்கள இரத்தம்பற்றியே பேசுகிறார். ஒருவேளை அவரிடம் இரண்டு இரத்தங்களும் கலந்து ஓடுகிறதோ...... Bildergebnis für %e0%ae%86%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf

எதற்கும் அவரை 'டி என் ஏ' பரிசோதனைக்கு உட்படுத்தினால் புரிந்துவிடும். Bildergebnis für dna

Link to comment
Share on other sites

On 9/8/2018 at 7:15 PM, valavan said:

உங்களுக்கு பிடித்த மாமனிதனை நீங்கள் பூஜிக்கவேண்டாம் என்று இங்கே யாராவது சொன்னார்களா?

அதுபோல் அடுத்தவர் எப்படி இருக்கவேண்டுமென்று நீங்களும் கருத்து சொல்வது தகாது.

தமிழர்களுக்கு பிடித்த தமிழனை சிங்களவர்களுக்கு பிடிக்காதபோது,

சிங்களவர்களுக்கு பிடித்த தமிழர்களை தமிழர்களுக்கும் பிடிக்காது என்பது  துரோகி பட்டமளிப்பதல்ல, துரதிர்ஷ்டவசமாக எம் மனதில் படிந்துவிட்ட அளவையியல் கோட்பாடு, அவ்வளவுதான்.

நாம் பட்ட காயங்கள் அப்படி.

உண்மை! உண்மை! உண்மை!
(பச்சை முடிஞ்சிட்டு)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.