Jump to content

கந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியுமா?


Recommended Posts

கந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியுமா?

 
vamban%2B001.jpg


மணி   ஸ்ரீகாந்தன்.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று ஆரம்பித்து ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் மாபெரும்; படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அய்யன் திருவள்ளுவர்.

உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே நூலில் முப்பாலாக பிரித்து உலக அரங்குகளில் தமிழனின் பெருமையை பறைசாற்றியவர் வள்ளுவர்.
“தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்…” 

என்று குறளின் பெருமையை அக்கால புலவரான கபிலர் வியந்து பாடியிருக்கிறார். அதிகாலை நேரம், கபிலர் பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார்.தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் நுனியில் தினையின் அளவைக் காட்டிலும் குறைவான ஒரு பனித்துளியை அவர் காண்கிறார்.பனித்துளியை உற்று நோக்குகிறார்.அந்தப் பனித்துளியின் அளவுக்குள்ளே, அதனருகே ஓங்கி உயர்ந்து நிற்கும் பனைமரம் முழுவதும் தெரிகிறது!அந்தக் காட்சி கபிலரைக் கற்பனைச் சிறகடித்துப் பறக்கச் செய்கிறது! “ஆகா! ஒரு சிறு பனித்துளிக்குள்ளே பக்கத்தேயுள்ள பனைமரம் முழுவதும் தெரிகிறதே, இதே போலத்தான் குறட்பாவுக்குள்ளும் இந்த வையத்துக்கு தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது. என்று திருக்குறளுக்கான விமர்சனத்தை கபிலர் முன் வைக்கிறார்.
0002.jpg
எல்லீஸ்

உலக பொதுமறையைத் தந்த வள்ளுவனின் வாழ்க்கை வரலாற்றை பின்னோக்கி பார்த்தால், அவரின் பிறப்பு, பிறப்பிடம் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல் ஏதுமில்லை.
சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக ஒரு சாராரும் மதுரையில் பிறந்தாக இன்னொரு சாராரும் குறிப்பிடுகிறார்கள். அதோடு ஆதி பகவன் என்ற பெற்றோருக்கு மகனாக பிறந்தவர்தான் வள்ளுவராம்.
சென்னையை அடுத்துள்ள காவிரிபாக்கம் என்ற இடத்தை சேர்ந்த மார்க்கசெயன் என்பவர் வள்ளுவரின் கவித்துவத்தை வியந்து அவரின் புதல்வியான வாசுகியை வள்ளுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக அறியப்படுகிறது.
தாம் இயற்றிய திருக்குறளை தமிழச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய திருவள்ளுவர் பெரிய போராட்டங்களை செய்து கடைசியில் அவ்வையாரின் உதவியுடன் மதுரையில் அரங்கேற்றியதாகவும் ஒரு கதை இருக்கிறது.

கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில் வள்ளுவரை பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் இருக்கிறதாம்.
சங்க கால புலவரான ஒளவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஒளவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். என்ற கருத்தும் உள்ளது. திருவள்ளுவரின் உருவமே ஒரு கற்பனை வரைபடம்தான்.
14.jpg
 


வள்ளுவர் கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன. 
இதேவேளை வள்ளுவனுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவர்களை பற்றிய வரலாறு மட்டும் ஆதாரப்பூர்வமாக எப்படி கிடைத்தது, வள்ளுவனின் வரலாற்று தகவல்கள் மட்டும் எங்கே போனது! என்று தேடிப்பார்த்தால் வள்ளுவன் என்கிற இந்த பெரும் படைப்பாளியை வெளியுலகுக்கு தெரியாதப்படி திட்டமிட்டு மறைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் புலப்படுகிறது. சாதி,மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறள்களை வள்ளுவர் எழுதியிருக்கிறார்.அதனால் அவர் ஒரு புரட்சியாளர் என்பது வெட்டவெளிச்சமாகிறது. அதோடு வள்ளுவன் என்கிற சொல் தாழ்த்தப்பட்டவன் என்பதை குறிப்பதானால் திருவள்ளுவருக்கு தலித் முத்திரையும் சில ஆதிக்கவாதிகளால் குத்தப்பட்டு இருக்கிறது.
நாம் சொல்லும் கருத்து நம்ப முடியாமல் நகைப்புக்குரியதாக இருக்கிறது என்றால், அன்மையில் ஹரித்வாரில் வள்ளுவர் சிலை நிறுவப்படுவதற்கு அங்குள்ள சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வள்ளுவனை தூக்கியெறிந்தார்கள். அவர்களின் இந்த ஆட்சேபணைக்கு காரணம் திருவள்ளுவர் தலித் என்ற பிரச்சாரம்தான்.
இந்த நவீன காலத்திலேயே வள்ளுவனுக்கு இத்தினை பிரச்சினை என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்டு செல்லரித்துப்போன திருக்குறள் எப்படி தமிழர்களின் கைகளில் கிடைத்தது என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா?
13.jpg
திருவள்ளுவர் நாணயம்

தமிழ் சமஸ்கிரதத்தில் பிறந்த மொழி அல்ல, அது திராவிடக் குடும்பத்தின் மூத்த மொழி. இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பிறகும் தமிழ் பிற மொழிகளின் உதவியில்லாமல் தனித்து இயங்கும் என்று ஆங்கில அறிஞரான கால்டு வெல் குறிப்பிட்டிருந்தார். அவர் தமிழை ஆராய்ந்து சொன்னக் காலத்துக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆங்கில ஆய்வாளரான எல்லீஸ் என்ற அறிஞர் உலகத்துக்கு அதனை அறிவித்திருந்தார். 
இவர் தமிழ் மீது ஏற்பட்ட காதலால் தமிழ் பயின்று எல்லீஸ் என்கிற தமது பெயரை எல்லீசன் என்று மாற்றிக்கொண்டாராம். 1825ல் அறிஞர் எல்லீஸ் சென்னையில் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவி பழங்கால ஓலைச் சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து சேமிக்கும் முயற்சியில் இறங்கினார்.

அப்போது பழங்கால ஓலைச்சுவடிகள் நூற்றுக்கணக்கில் எல்லீஸ் துரையின் கரங்களுக்கு கிடைத்தது. அவற்றில் மிகவும் மோசமாக செல்லரித்துப்போன ஓலைச்சுவடிகளை தமது வீட்டின் சமையற்காரனாக பணியாற்றிய கந்தப்பன் என்பவனிடம் கொடுத்து அவைகளை எரித்துவிடும்படி எல்லீஸ் பணித்திருக்கிறார். அதன்படியே கந்தப்பனும் ஓலைச்சுவடிகளை தீயில் போட்டு கொளுத்தியிருக்கிறான். அப்போது தன் கையில் இருந்த ஒரு கட்டு ஓலைச்சுவடியை எடுத்து படித்து பார்த்திருக்கிறான். அதிலிருந்த வார்த்தைகள் நெஞ்சத்தின் ஆழத்தை தொடுவது போல் இருந்தது. பிறகு அந்த கட்டை தீயில் போட மனமில்லாத கந்தப்பன் எல்லீசனிடம் சென்று “அய்யா இந்த ஓலைச்சுவடிகள் ஏதோ அறியக்கருத்துக்களை சொல்வதுப்போல இருக்கிறது” என்று சொல்ல அந்த ஓலைச்சுவடியை வாங்கிப் பார்த்த எல்லீசன் உடனே புலவர் தாண்டவராய முதலியார், மெனேஜர் முத்துசாமி பிள்ளை ஆகியோரிடம் கொடுத்து அந்த சுவடிகளை பரிசோதித்து 1831ல் உரை நடையுடன் அச்சிலேற்றி தமிழ் உலகுக்கு திருக்குறளை எல்லீசன் வழங்கினார்.
 
 
 
ஆனாலும் தீயின் வாயிற்குள் போக வேண்டிய திருக்குறளை மீட்டுத்தந்தது நமது கதாநாயகன் கந்தப்பன்தான். கந்தபுராணம் தெரிந்த எத்தனை தமிழனுக்கு இந்த கந்தப்பனை தெரியும்?
இந்த கந்தப்பன் வேறு யாருமல்ல, பகுத்தறிவாளர் அய்யா அயோத்திதாச பண்டிதரின் பாட்டன்தான்  இவர்.  
ஆங்கில அறிஞரான எல்லீஸ் துரையும் தமிழுக்கு பெரும்பணியாற்றியிருக்கிறார்.
தமிழ், வடமொழி இரண்டையும் முறையாகக் கற்ற இவர் சென்னையில் வருவாய் வாரியச் செயலராக இருந்து, காணியாட்சி முறையும் வேளாண் சீர்திருத்தமும் கண்டவர். முத்துச்சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவரின் நூல்களை எல்லாம் தேடச் செய்தார். வீரமாமுனிவர் வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு முதன்முதலில் உரையெழுதியிருக்கிறார். 1835ல் ஆளுநர் மன்றோவும் எல்லீசும் சென்னையில் தமிழ் நூல்களின் அச்சகச் சட்டம் கொண்டு வந்து பல தமிழ் நூல்களைப் பாதுகாக்க வழி செய்தனர்.

 காணொளியாக காண்பதற்கு..
 
 

தமிழ்த் தொண்டாற்றிய ஆங்கிலேரான

எல்லீஸ் மரணத்தில் மர்மம்.


இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கியவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த் துறைச் செயலாளராக சென்னைக்கு வந்தார். எட்டு ஆண்டுகள் அந்த வேலையைச் செய்தார். அதன்பின் சென்னை கலெக்டராக பதவி உயர்வு பெற்று பத்து ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக பல இடங்களில் கிணறுகளை தோண்டினார். அந்த கிணற்றின் அருகே தமிழில் கல்வெட்டு அமைத்தார். அதில் 'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு” என்ற நீரின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பொறித்திருந்தார்.
15.jpg

இவருடைய பொறுப்பின் கீழ் இருந்த நாணயச்சாலையில் திருவள்ளுவர் உருவம் பதித்த 2 நாணயங்களை வெளியிட்டார். பிரிட்டிஷ் மகாராணிகளின் உருவம் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக்கட்டத்தில் இது பெரும் புரட்சி. கலெக்டரான பின் அவர் பல இந்திய மொழிகளைக் கற்றார். அந்த மொழிகளில் அவருக்கு தமிழே மிகவும் பிடித்திருந்தது. 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் இவர்தான்.
தமிழ் மொழியை தெரிந்து கொண்டதோடு அவர் நின்று விடவில்லை. தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுதினார். அதை முழுதாக முடிக்கும் முன்னே மரணத்தைத் தழுவினார். அவருடைய திருக்குறள் விளக்கவுரை அரைகுறையாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டது. யாரும் சொல்லாத பல விளக்கங்களை புதுமையாக சொன்ன அறிஞர் என்று தமிழறிஞர்கள் இவரை பாராட்டினர்.

தமிழ் மீது தணியாத தாகம் கொண்ட எல்லீஸ், பண்டைய இலக்கியங்களை சேகரித்து பாதுகாக்கவும் செய்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காக தனது சொத்துக்களின் பெரும்பகுதியை விற்று செலவு செய்தார். அப்படி அவர் தேடும்போது கிடைத்த பொக்கிஷம்தான் 'தேம்பாவணி' என்ற காவியம். இவருடைய முயற்சி இல்லையென்றால் இந்த காப்பியம் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும்.
0008.jpg

தமிழரின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவே சென்னையில் இருந்து மதுரை வந்தார். தமிழோடு தொடர்பு கொண்ட பல இடங்களைப் பார்த்தார். இங்கும் ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார். அதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்த தாயுமானவர் சமாதியை கண்டு உருகினார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது. அது எதிரிகளால் வைக்கப்பட்டதா என்ற விவரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வை இழந்தார். மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. மதுரையைப் பார்க்க வந்த எல்லீஸ் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை. இவர் தனது நூலில் கிறிஸ்துவ சமயத்தைக் குறிக்க பராபரன் என்பதற்கு மாறாக நமச்சிவாய என எழுத, இதனைக் கண்ட கிறிஸ்த்துவ சமயிகள் கிருத்துவ சமயத்தைப் பரப்புவதற்குப் பதிலாக இந்து சமயத்தைப் பரப்புகிறார் எனக்கருதி இவரைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் கேட்பாரற்றுக் கிடந்தன. பெரிய அறைகளில் மலை போல் குவிந்திருந்த ஓலைச் சுவடிகளை ஏலம் விட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அந்த சுவடிகளின் மகத்துவம் அறியாத தமிழர்கள் யாரும் அவற்றை விலை கேட்க முன்வரவில்லை. பல மாதங்கள் பயனற்றுக் கிடந்த சுவடிகளை செல்லரிக்கத் தொடங்கின. பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, சொத்தை விற்று, சேகரித்த பொக்கிஷங்கள் எல்லாம் சென்னையிலும் மதுரை கலெக்டர் பங்களாவிலும் பல மாதங்கள் விறகாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
என்று ஆங்கில அறிஞரான சேர் வோல்டர் ஸ்கொட் எழுதியுள்ளார்.
van-06-04-pg13-nsk.jpg
தமிழின் பெருமை உணர்ந்து, அதற்கு தொண்டாற்றிய எல்லீசின் கனவும் சுவடிகளோடு சுவடியாக எரிந்து போனது.
இந்த ஆங்கிலேயத் தமிழறிஞரை இன்றைக்கு யாருக்கும் தெரியாது. தமிழகத்தின் பெரு நகரங்களில் கே.கே.நகர், அண்ணா நகர் போல எல்லீஸ் நகரும் இருக்கிறது.சாந்தி தியேட்டருக்கு பின்புறம் திருவல்லிக்கேனியிலிருந்து அண்ணாசாலை வரையுள்ள வீதிக்கு எல்லீஸ் வீதி என்று அழைக்கப்படுகிறது. அதோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். வைத்தவர், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
எல்லீஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குனர் ஒருவர் இருந்தார். 'சகுந்தலை' போன்ற படங்களை இயக்கியவர். எல்லீஸ் ஆர். டங்கன் என்பது அவர் பெயர். அவருடைய பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்திருக்கின்றன என்பதுதான் பலரின் எண்ணம். அதுசரியல்ல.
பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்னும் ஆங்கிலேயத்தமிழ் அறிஞரை யாரும் மறக்கக் கூடாது என்பதற்கு தான் எல்லீஸ் நகர் என்று தமிழக அரசு பெயர் வைத்தது. ஆனால் யார் அந்த எல்லீஸ் என்று யாருக்குமே தெரியாததுதான் வேதனையின் உச்சம்..!

காணொளி வடிவத்தில்  காண்பதற்கு.. 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.