Jump to content

"கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம்


Recommended Posts

"கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம்

 
136374_thumb.jpg
 

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்லூரியில் மலர்கிற சாதியை மீறிய காதல், கல்யாண வாழ்க்கை வரை சென்றதா, இல்லையா? இந்த ஜோடி எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்? இதற்கான விடைகளுடன் விரிகிறது 'தொட்ரா' திரைப்படம்.

கல்லூரியில் படித்துக்கொண்டே வீடுவீடாக பேப்பர் போட்டு பார்ட் டைம் வேலைபார்க்கும் ஹீரோ, சங்கர் (ப்ரித்வி பாண்டியராஜன்). அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதி, சாதி சங்கத் தலைவர் குடும்பத்து மகளாக ஹீரோயின் திவ்யா (வீணா). தமிழ் சினிமாவின் ஆயிரத்து ஐந்நூற்றி முப்பத்தி ஏழாவது முறையாக, ஒரு மழையில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிறகு, கல்லூரியில் வாலன்டியராக திவ்யாவிடம் பார்க்கும் இடங்களிலெல்லாம் அட்டன்டென்ஸ் போடுகிறார், ஹீரோ. ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து காதலிக்கிறார்கள். வழக்கம்போல இது வீட்டுக்குத் தெரிந்து சாதிப் பிரச்னை ஆகிறது. அதன்பின் நடக்கும் பஞ்சாயத்துகள், ரிவெஞ்ச் என 'டேக் டைவர்ஷன்' போர்டு மாட்டி, படம் பார்ப்பவர்களைப் பல கிலோ மீட்டர்கள் சுற்றலில் விட்டுப் படம் ஊர்கிறது. 

தொட்ரா

 

 

காதலர்களைச் சேர்த்துவைக்கும் ஏஜென்ஸி வைத்திருக்கும் ஏ.வெங்கடேஷிடம் தஞ்சம் புகும் சங்கருக்கு, அவர் என்ன நோக்கத்திற்காக உதவிசெய்கிறார், சாதித் தலைவர்களான ஹீரோயினின் அப்பாவும், அண்ணனும் என்னென்ன எதிர்வினைகள் செய்கிறார்கள், காதல் ஜோடியின் நிலை என்ன... என்பதே படத்தின் கதை.

 

 

தமிழ்நாட்டுக்குத் தெரிந்த, சாதிக்கு இறையான இளவரசன் - திவ்யா, சங்கர் - கெளசல்யா... இரு உண்மையையும் ஒரு கதையாக்கி, சாதிக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்த இயக்குநர் மதுராஜுக்குப் பாராட்டுகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ப்ரித்வி பாண்டியராஜனின் படம் வெளியாகியிருக்கிறது. நடிப்பில் அவ்வப்போது செயற்கைத்தனம் எட்டிப் பார்த்தாலும், அப்பாவியான இளைஞனாகக் கவர்கிறார். ஹீரோயின் வீணா சில காட்சிகளில் அழகு, சில காட்சிகளில் அலுப்பு. முக்கியமான காட்சிகளில், ஹீரோயின் தேமேயென இருப்பது, திரைக்கதையின் பலவீனம். ஹீரோயினின் அண்ணனாக பவுன்ராஜ் கேரக்டரில் நடித்துள்ள எம்.எஸ்.குமார் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சாதிக் கெளரவத்தில் காலரைத் தூக்கிவிட்டுத் திரியும் கிராமத்து டான் கேரக்டர், இவருக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. குமாரின் மனைவியாக வரும் 'மைனா' சூசனும் தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார். ஏ.வெங்கடேஷ் தன் பணியை சரியாகச் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், கதை நகர நகர பல இடங்களில் இவரது நடிப்பு ஓவர் ஆக்டிங்! 

தொட்ரா

ஹீரோவுக்கு நண்பர்களாக வரும் இருவரும், அந்த கேரக்டரில் இருந்து விலகியே இருக்கிறார்கள். எளிமையான திரைக்கதையில், இரு உண்மைச் சம்பவங்களைச் சொன்ன இயக்குநர், அதை ஒரு படைப்பாகக் கொடுக்கும் இடத்தில் தாறுமாறாகத் தடுமாறியிருக்கிறார். ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வாய் இழுத்தடித்த முதல் பாதியில், எடிட்டர் கண்ணை மூடிக்கொண்டு கத்தரி போட்டிருக்கலாம். பல காட்சிகளில் ஏற்கெனவே வெளியான படங்களின் காட்சிகளின் ரெஃபரென்ஸ் போரிங்! 'அத்தர், ஜவ்வாது, பன்னீர்னு எல்லாமே கலந்து வந்தாலும், சாக்கடை சாக்கடைதான். என்னெல்லாம் கலந்து மிதந்து வந்தாலும், ஆத்து தண்ணி ஆத்து தண்ணிதான்' போன்ற வசனங்கள் வில்லனுக்குப் பொருத்தம். அதேமாதிரி, சாதிக்கு எதிரான வசனங்களும் வலிமையாக இருந்திருக்கலாம். 

 

 

கேட்ட பின்னணி இசை, பாடல்களாகவே கடந்துபோகிறது, உத்தமராஜாவின் இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. திரைக்கதையும் நொண்டி அடிப்பதால், 'படம் எப்போ முடியும்?' என நிலைக்குச் செல்லவேண்டி இருக்கிறது. முக்கியமாக, அந்த 'பர்தா' டெக்னிக்கில் எஸ்கேப் ஆவதெல்லாம் பாகவதர் காலத்து ஃபார்முலா பாஸ்!

தொட்ரா

சாதித் தலைவர்கள் மற்றும் காதலை வைத்து டீல் பேசுபவர்கள் ஆகியோரைப் பற்றிய படமாக மட்டும் இருந்திருந்தால், படத்தின் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கும். காலேஜ் வரை படித்திருக்கும் சங்கருக்கும், திவ்யாவுக்கும் ஏ.வெங்கடேஷ் கொடுக்கும் வேலை 'முடியல!' ரகம். 

இரு உண்மைச் சம்பவங்களை இணைத்த ஐடியா சூப்பர். அதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தால், படம் கவனம் பெற்றிருக்கும். 'தொட்ரா' என்ற இந்தப் படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் என்ன சம்பந்தம் என இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்.

https://cinema.vikatan.com/movie-review/136374-thodraa-tamil-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.