Jump to content

சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ஆவது நினைவு தினம்


Recommended Posts

சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ஆவது நினைவு தினம்

 
 
1-%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E

சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலையின் 28ஆவது ஆண்டு நீங்காத நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சத்துருக்கொண்டான்

நினைவுத்தூபி சந்தி முன்பாக இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார்.

சத்துருக்கொண்டான் படுகொலையானது 1990 செப்டம்பர் மாதம் 9 திகதியன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் பகுதியில் தங்கியிருந்த 184 தமிழ் மக்களை ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட நாளாகும்.

இது தொடர்பாக அரசாங்கம் இரு விசாரணைக் குழுக்களை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டது.

 

 
 

எனினும், எவரும் இதுவரையும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும், அவரது 3 மாதக்குழந்தையும் "மண்ணா" கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

அத்தோடு 5 கைக்குழந்தைகள், பத்து வயதுக்கும் குறைவான 42 சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது படுகொலைசெய்யப்பட்டனர்.

இப்போது 28 வருடங்கள் கடந்தும் இந்தப் படுகொலைக்கு இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

உயிர்நீத்த உறவுகளை உளமாற நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அரியநேந்திரன் தெரிவித்தார்.

http://www.vaaramanjari.lk/2018/09/09/செய்திகள்/சத்துருக்கொண்டான்-படுகொலையின்-28ஆவது-நினைவு-தினம்

Link to comment
Share on other sites

184பேர் பலியெடுக்கப்பட்ட மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 

chathurukondan_murder_002.jpg?resize=500
1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான். இலங்கை  அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான்.
 
ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு அணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியுள்ளார். போகாது விட்டால் பிரச்சினை என நினைத்த மக்கள் இராணுவமுகாமிற்குச் சென்றனர். வயது முதிர்ந்தவர்களை லொறிகளில் ஏற்றிச்சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்கள் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருத்தப்பட்டனர்.
 
ஏழு மணியிருக்கும். அங்கிருந்தவர்களை சரிக்கத் தொடங்கியது சிங்கள இராணுவம். அவர்களுடன் ஊர்காவல்படையும் இணைந்துகொண்டனர். வாளினால் வெட்டினர். கத்தியினால் குத்தினர். துப்பாக்கியினால் சுட்டனர். கிடங்கொன்றில் ரயரை எரித்து கொன்ற அதில் அப்பாவித் தமிழ் மக்களை வீசினர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எவரும் வேறுபாடற்று அழித்து எரிக்கப்பட்டனர். பிரதேசமே ஓலத்தால் நிரம்பியது.
 
சிறுவர்களின் கைகளை பின்பக்கமாக கட்டினர். பின்னர் அவர்களை கத்தியால் குத்திக் கொன்று வீசினர். நிலவு வெளிச்சம் இருட்டில் கலந்திருந்தது. வெட்டி வீசப்பட்டவர்களின் குறை உயிருடன் துடிப்பவர்களைத் தேடித் தேடி எந்த இடத்தில் குத்தினால் உயிர் பிரியும் என பார்த்துப் பாரத்துக் குத்திக் கொன்றனர் இலங்கை இராணுவத்தினர். 47 குழந்தைகள். 85 பெண்கள். 28 முதியவர்கள். 184பேர் காவுகொள்ளப்பட்டனர். வின்சன் டிப்போ தோட்டத்தில் விடிய விடிய எரிந்த நெருப்பை எஞ்சியவர்கள் பார்த்தக்கொண்டிருந்தனர். ஒரு கிராமே கொலை செய்யப்பட்டது. ஒரு பிரதேசமே அழிந்தது.
 
எந்த தடயமும் எந்த ஆதாரங்களும் எந்த சாட்சிகளுமற்ற ரீதியில் இந்தப் இனப் படுகொலையை சிங்களப் படைகள் மேற்கொண்டனர். ஆனால் இந்தப் படுகொலையில் சிக்கி காயமுற்ற கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். அவரே மனித குலம் நடுங்கும்  இந்தப் படுகொலையின் ஒற்றைச் சாட்சியமானார். வெட்டி வீசப்பட்ட கிருஷ்ணகுமார் இராணுவத்தின் மரணக் குழியில் விழாமல் அதிஸ்டவசமாக வெளியில் விழுந்தார். வெட்டுக்காயங்களுடன் வேலிக் கரையாக வீசப்பட்ட கிருஸ்ணகுமார் மெல்ல மெல்ல தவள்ந்து சென்று ஒரு பற்றையினுள் ஒளிந்துகொண்டார்.
 
மறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்வியுற்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவரை வைத்தியசாலையிலிருந்து கடத்த முற்பட்டனர். குறித்த மதகுரு தனது கடும் பாதுகாக்கில் – இரகசியமாக வைத்து சிகிச்சை அளித்து கிருஷ்ணகுமாரைக் காப்பாற்றினார். சத்துருக்கொண்டான் படுகொலை குறித்து கிருஷ்ணகுமார்  சாட்சியங்களை வழங்கினார்.
 
கொலை நடைபெற்று சில நாட்கள் வின்சன் தோட்ட இராணுவ முகாமை நெருங்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். ஒரு வாரம் கடந்த நிலையிலையே, அந்த இராணுவமுகாமிற்குச் சென்று உங்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே என்று ஊர் மக்கள் கேட்கத் தொடங்கினார்.   இந்த நிலையில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. மனித உரிமை ஆணைக்குழு செஞ்சிலுவை சங்கம் போன்ற இராணுவத்தரப்பிடம் இந்தப் படுகெராலை குறித்து விசாரித்தது. எனினும் இராணுவத்தினர் அவ்வாறு தாம் செய்யவில்லை என்று மறுத்தனர்.
 
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் வெளிவந்த உண்மைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதனை அடுத்து அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு நீதி விசாரணை நடத்துவதாக கூறி இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நிறுவியது. ஓய்வுபெற்ற நீதிபதியான கே. பாலகிட்ணர் தலைமை வகித்த குறித்த விசாரணையின் முடிவில் நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.
 
இவ் இனப்படுகொலை சம்பவம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கொலம்பிய பல்கலைக்கழகம்  இப் படுகொலை தொடர்பான விடயத்தையும் சாட்சிகளையும் ஆவணப்படுத்தியது.அத்துடன் அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர்களும் திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த இப் படுகொலை குறித்து ஆராயந்துள்ளனர். இந்தப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பப்பட்டபோதும் இலங்கை அரசு எதனையும் செய்துவிடவில்லை.
 
இவ் இனப் படுகொலையின் குற்றவாளிகளாக இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ ஆகியோர் இனம் காணப்பட்டனர். எனினும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழிக்க இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டதா என்ற கேள்வியும் மனித உரிமைவாதிகளால் முன்வைக்கப்பட்டது.
 
இலங்கை அரச படைகள் நிகழ்த்தும் எந்தவொரு இனப்படுகொலை நடவடிக்கைக்கும் நீதி கிடைப்பதில்லை என்ற இலங்கையின் அநீதி வரலாற்றில் சத்துருக்கொண்டான் படுகொலையும் அடங்கிற்று.குழந்தைகள் என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல் முதியவர்கள் என்றும் பாராமல் எம் சனங்கள் வெட்டி எரியும் நெருப்பில் வீசப்பட்டமைக்கு இலங்கையில் நீதி மறுக்கப்பட்டது. இவ்வாறு எம் சனம் படுகொலை செய்யப்படுவதே இலங்கை அரசின் நீதியா?
 
இன்றுடன் 28 வருடங்கள் நீதியற்றுக் கடந்துவிட்டன. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதிகோரிய நமது போராட்டத்தில் சத்துருக்கொண்டான் இனப் படுகொலை தொடர்பிலும் கவனத்தை முன்வைப்போம். ஈழத்தின் கிழக்கை, மட்டு மண்ணை, ஈழத்தை, உலகத்தை அதிரப்பண்ணிய இந்தப் படுகொலைகளை தமிழ் இனம் என்றும் மறக்காது. என்றாவது ஒருநாள் உங்களுக்கு நீதி கடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்.
 DSC_0820.jpg?resize=640%2C425
 
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2018/94826/

Link to comment
Share on other sites

சந்­து­ருக்­கொண்­டான் படு­கொலை 28 ஆவது ஆண்டு நினை­வேந்­தல்!!

 
 

41443155_538911856559105_879502461043841

 

 

 
 

மட்­டக்­க­ளப்பு, சத்­து­ருக்­கொண்­டான் படு­கொலை நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நேற்­றுக் கிழக்கு மாகா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை அமர்­வி­லும் நேற்று உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

1990 செப்­ரெம்­பர் 9ஆம் திகதி சத்­து­ருக்­கொண்­டான், பிள்­ளை­யா­ரடி, கொக்­கு­வில் பகு­தி­க­ளைச் சேர்ந்த 184 அப்­பா­வித் தமிழ் மக்­களை இலங்கை இரா­ணு­வ­மும், அத­னோடு இருந்த ஆயு­தக் குழுக்­க­ளும் இணைந்து படு­கொலை செய்­தி­ருந்­தன. அந்­தப் படு­கொ­லை­யின் 28ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நேற்று நடை­பெற்­றன.

சத்­து­ருக்­கொண்­டான் கிரா­மம் மட்­டக்­க­ளப்பு நக­ருக்கு அருகே அமைந்­துள்­ளது. 1990 செப்­ரெம்­பர் 9 ஆம் திகதி மாலை 5.30 மணி­ய­ள­வில், சீருடை அணிந்த இரா­ணு­வத்­தி­ன­ரும், மற்­றும் சில ஆண்­க­ளும் கிரா­மத்­தி­னுள் நுழைந்து கிராம மக்­கள் அனை­வ­ரை­யும் வீதி­யில் கூடு­மாறு பணித்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் அரு­கில் உள்ள இரா­ணுவ முகா­மிக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

விசா­ர­ணை­கள் முடிந்த பின்­னர் அவர்­கள அனை­வ­ரும் விடு­விக்­கப்­ப­டு­வர் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. எனி­னும் அவர்­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அங்­கி­ருந்த தப்­பி­ய­வர்­க­ளின் சாட்­சி­யப்­படி அவர்­கள் அனை­வ­ரும் கொல்­லப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

படு­கொ­லைச்­சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்­த­வென இரு விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­கள் நிய­மிக்­கப்­பட்­டன. ஓய்­வு­பெற்ற நீதி­பதி கே. பால­கிட்­ணர் இந்த விசா­ர­ணை­களை நடத்­த­வென அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த பொது­ஜன ஐக்­கிய முன்­னணி அர­சால் நிய­மிக்­கப்­பட்­டார்.

நீதி­பதி தனது அறிக்­கை­யில் படு­கொலை நிகழ்ந்­த­தற்­கான வலு­வான சாட்­சி­யங்­கள் இருப்­ப­தா­க­வும் குற்­ற­வா­ளி­க­ளுக்­கெ­தி­ரான கடும் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். ஆனால் இது­வரை இவ்­வா­றான சட்ட நட­வ­டிக்­கை­களோ, விசா­ர­ணை­களோ மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தக­வ­லெ­து­வும் இல்லை.

41303386_2001227706567061_39829965869038

DSC_0225.jpg

https://newuthayan.com/story/10/சந்­து­ருக்­கொண்­டான்-படு­கொலை-28-ஆவது-ஆண்டு-நினை­வேந்­தல்.html

Link to comment
Share on other sites

சத்துருக்கொண்டான் படுகொலை தினம் அனுஸ்டிப்பு

 

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுதினம் சத்துருக்கொண்டானில் உள்ள நினைவுத்தூபியில் இன்று மாலை நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 09ஆம் திகதி காலையில் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில், திராய்மடு ஆகிய பகுதிகளில் படையினராலும் ஊர்காவல் படையினராலும் சுற்றிவளைக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என 186பேர் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போனார்கள்.

இவர்கள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட தினத்தினை சத்துருக்கொண்டான் படுகொலை தினமாக அனுஸ்டித்து வருகின்றனர்.

இன்று பகல் பனிச்சையடி கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து சத்துருக்கொண்டான் நினைவுத்தூபியருகே நிகழ்வுகள் நடைபெற்றன.

சத்துருக்கொண்டான் படுகொலைகளுக்கான நீதிகோரும் பொதுமக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் உட்பட பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மௌன இறைவணக்கமும் செலுத்தப்பட்டது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/192968?ref=home-feed

 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.