Jump to content

கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல்


Recommended Posts

கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல்

06-ceba253b8d5fb0e9dc9a0d07355ec7a26e5d0917.jpg

 

-என்.கண்ணன்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார். எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள் 

காலியில் நடந்த, புதிய அர­சி­ய­ல­மைப்பு யோசனை குறித்து விளக்­க­ம­ளிக்கும் கூட்டம் ஒன்றில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் கருத்து பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி தேவை­யில்லை என்றும், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை விட சற்று கூடு­த­லான அதி­கா­ரங்­க­ளையே அவர்கள் கோரு­வ­தா­கவும் சுமந்­திரன் அந்தக் கூட்­டத்தில் கூறி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

எனினும், அவர் யாழ்ப்­பா­ணத்தில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில், தாம், தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி தேவை­யில்லை என்று கூற­வில்லை என்றும், சமஷ்டி என்ற பெயர் பல­கையில் தொங்கிக் கொண்­டி­ருக்க தேவை­யில்லை என்றே குறிப்­பிட்­ட­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

தாம் சார்ந்த தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னது கொள்கை சமஷ்­டியை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது என்றும் அதி­லி­ருந்து விலக முடி­யாது என்றும் சுமந்­திரன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடை­யி­லான விரிசல், உச்­சக்­கட்­டத்தை அடைந்­தி­ருக்கும் சூழலில், விக்­னேஸ்­வ­ரனின் முன்னாள் மாண­வ­னா­கவும், தற்­போ­தைய பிர­தான அர­சியல் எதி­ரி­யா­கவும் இருக்கும் சுமந்­திரன், சமஷ்டி பற்றிக் கூறிய கருத்து இன்னும் எரியும் நெருப்பில் எண்­ணெயை வார்த்­தி­ருக்­கி­றது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் மற்றும் அவ­ரது பக்­கத்தில் இருக்­கின்ற சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் போன்­ற­வர்கள், சுமந்­தி­ரனின் கருத்தை வலு­வாகக் கண்­டித்தும், கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை ஏமாற்றி விட்­டது, துரோகம் செய்து விட்­டது என்றும் அறிக்கை வெளி­யிட்டு வரு­கின்­றனர். செய்­தி­யாளர் சந்­திப்­பு­களை நடத்தி வரு­கின்­றனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார்.

 எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் நன்­றா­கவே பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அடுத்து நடக்­கப்­போகும் தேர்­தல்­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கவும், சுமந்­தி­ர­னுக்கு எதி­ரா­கவும், முத­ல­மைச்­சரின் தரப்­பி­லுள்­ள­வர்கள் இந்த துருப்­புச்­சீட்டை வைத்து, நன்­றா­கவே பிர­சாரம் செய்­வார்கள் என்­ப­திலும் சந்­தே­க­மில்லை.

சமஷ்டி தேவை­யில்லை என்று கூற­வில்லை என சுமந்­திரன் மறுத்­தி­ருந்­தாலும், சமஷ்டி என்ற விட­யத்தில், அவர் வெளிப்­ப­டுத்­திய விட­யங்கள், அவ­ருக்கு எதி­ரான அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யத்தில் இருந்தே, சமஷ்டி விட­யத்தில் சுமந்­திரன் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் விமர்­ச­னங்­க­ளுக்கு முகம் கொடுத்து வந்­தி­ருக்­கிறார்.

ஒற்­றை­யாட்சி, சமஷ்டி போன்ற சொற்­க­ளுக்கு அவர் அளிக்க முயன்ற விளக்­கங்­களும், அதற்குக் காரணம்.

எவ்­வா­றா­யினும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்­டி­ருந்த சமஷ்­டியை விட்டு விலகி, ஒரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதில் சுமந்­திரன் கணி­ச­மா­கவே பங்­க­ளித்­தி­ருக்­கிறார்.

அத்­த­கைய குற்­றச்­சாட்டு வரும்­போ­தெல்லாம் அவர், தன்னைக் காத்துக் கொள்­வ­தற்கு, சமஷ்டி என்ற பெயர்ப் பலகை முக்­கி­ய­மல்ல, அதன் உள்­ள­டக்கம் தான் முக்­கியம் என்ற கவ­சத்தைப் பயன்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார்.

அதா­வது சமஷ்டி முறையில் உள்­ளது போன்ற அதி­கா­ரப்­ப­கிர்வு தான் முக்­கி­யமே தவிர, சமஷ்டி என்ற அடை­யாளம் தேவை­யில்லை என்று அவர் நியா­யப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கிறார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவில் ஆட்சி முறை பற்­றிய பதங்கள் பெரும்­பாலும் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த விட­யத்தில் சுமந்­தி­ரனின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­னது.

ஆனால், அவ்­வாறு பெயர்ப்­ப­லகை இல்­லாத அதி­கா­ரப்­ப­கிர்வு சமஷ்­டிக்கு இணை­யா­ன­தாக இருக்­குமா என்றால், அது­வு­மில்லை.

சமஷ்டி என்ற பெயர்ப் பல­கையில் தொங்கிக் கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்ல ை என்று, சுமந்­திரன் கூறி­னாலும், அத்­த­கைய ஒரு தீர்வை ஏற்க சிங்­களத் தலை­மைகள் தயா­ராக இல்லை என்­பதே உண்மை.

அதே­வேளை, புதிய அர­சி­ய­ல­மைப்பு 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­திலும் சற்று அதி­க­மான அதி­காரப் பகிர்வை உள்­ள­டக்­கி­ய­தாக இருந்தால் போதும் என்ற வகையில் சுமந்­திரன் கருத்து வெளி­யிட்­டது உண்­மை­யானால், நிச்­ச­ய­மாக அவ­ரது கட்­சியின் சமஷ்டி பற்­றிய கொள்கை கேள்­விக்­கு­ரி­யதே.

சமஷ்டி என்­பதை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை என்று சுமந்­திரன் ஏற்­க­னவே கூறி விட்டார். ஆனால் அதில் உள்ள அடிப்­படை அம்­சங்­களை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது என்றும் அவரே கூறி­யி­ருந்தார்.

அவ்­வா­றாயின் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைவு, சமஷ்டி முறையில் உள்ள அதி­காரப் பகிர்வை ஒத்­த­தா­கவே இருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு இருக்­கி­றதா என்றால் அதுவும் இல்லை.

காலியில் நடந்த கருத்­த­ரங்­கிலும் சரி, தெற்கில் நடக்கும் கருத்­த­ரங்­கு­க­ளிலும் சரி, சுமந்­திரன் மற்­றொரு விட­யத்தை கூறி வரு­கிறார். அதா­வது, புதிய அர­சி­ய­ல­மைப்பு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை முழு­மை­யாகத் தீர்க்­காது, அவர்­களின் அபி­லா­ஷை­களை முற்­றி­லு­மாக நிறை­வேற்­றாது என்­பதே அது.

அவ்­வா­றாயின், சமஷ்­டியும் இல்­லாத- தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும் முற்­றி­லு­மாக தீர்க்­காத, அவர்­களின் அபி­லா­ஷை­க­ளையும் நிறை­வேற்­றாத புதிய அர­சி­ய­ல­மைப்பு எதற்­காக என்ற நியா­ய­மான கேள்வி இருக்­கி­றது.

இப்­போது, உள்­ளதை விட முன்­னேற்­ற­க­ர­மான ஒரு அர­சி­ய­ல­மைப்பு என்ற வாதம் முன்­வைக்­கப்­பட்­டாலும், அது தமிழ் மக்கள் தமது அபி­லா­ஷை­களைக் கைவிட்டு விட்­டார்கள் என்ற வாதத்­துக்குத் துணை போகு­மானால் பேரா­பத்­தாக அமையும்.

அதா­வது, சமஷ்டி என்ற பெயர்ப்­ப­ல­கையும் இல்­லாத- சமஷ்­டியின் பண்­பு­களை ஒத்த அதி­கா­ரங்­களும் இல்­லாத ஒரு வெற்றுக் கூட்­டுக்கு தமிழ் மக்கள் இணங்கி விட்­டார்கள், அதனை ஏற்­றுக்­கொண்டு விட்­டார்கள் என்ற கற்­பி­தத்­துக்கு கார­ண­மாகி விடும்.

சுமந்­தி­ரனைப் பொறுத்­த­வ­ரையில், யதார்த்த அர­சி­யலை அதிகம் பேசு­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை. தற்­போ­துள்ள சூழலில் சமஷ்டி அர­சியல் யாப்பை உரு­வாக்க முடி­யாது. அதே­வேளை, சமஷ்டித் தீர்வு இல்­லாமல் தமிழ் மக்­களைத் திருப்­திப்­ப­டுத்­தவும் முடி­யாது.

எனவே இந்த இரண்­டுக்கும் நடுவே, அங்­கு­மிங்கும் நெகிழ்ந்து ஒரு அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வதே சாலப்­பொ­ருத்தம் என்று அவர் நினைக்­கிறார்.

இத்­த­கைய ஒரு நழு­வ­லான நிலையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்­வார்­களா- அதனை அங்­கீ­க­ரிப்­பார்­களா? இதனை எந்த அர­சி­யல்­வா­தியும் முடிவு செய்ய முடி­யாது. மக்­களே தீர்­மா­னிக்க வேண்­டிய நிலையில் இருக்­கி­றார்கள்.

எது எவ்­வா­றா­யினும், ஒரு காலத்தில் தனி­நாடு கோரிய தமிழ் மக்கள், தமது பிரச்­சி­னை­க­ளுக்கு சமஷ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருக்­கி­றார்கள்.

காலியில் போய் சுமந்­திரன், சமஷ்டி வேண்டாம் என்று கூறி­யி­ருந்­தாலும், கூறி­யி­ருக்கா விட்­டாலும், சமஷ்டி வேண்டாம் என்று முடிவு செய்யும் அதி­கா­ரத்தை தமிழ் மக்கள் அவ­ருக்கு அளித்­தி­ருக்­க­வில்லை.

அதே­வேளை, சமஷ்டி தான் தீர்வு, அதற்கு இம்­மி­ய­ளவும் விட்டுக் கொடுக்க முடி­யாது என்ற நிலையில் இருக்கும் தரப்­புகள் ஒன்றும், யோக்­கி­ய­மா­னவை என்றும் எடுத்துக் கொள்­ள­மு­டி­யாது.

விடு­தலைப் புலிகள் தனி­நாட்டை உரு­வாக்­கு­வ­தற்­கான ஆயுதப் போராட்­டத்தை நடத்­தி­னார்கள். அவர்­களைப் போலவே மேலும் பல தமிழ் இயக்­கங்கள் ஆயு­தங்­களை ஏந்­தின. ஆனால், புலி­களால் மட்டும் தான் அதனை தொடர்ந்து நடத்த முடிந்­தது.

தனி­நாட்­டுக்­கான கட்­டு­மா­னங்­களை உரு­வாக்கி, நடை­முறை அரசு ஒன்றைக் கொண்டு நடத்­தவும் முடிந்­தது.

அதா­வது தனி­நாடு தான் தீர்வு என்­பதை செய­லிலும் காட்­டு­வதில் அவர்கள் உறு­தி­யாக இருந்­தார்கள்.

ஆனால், சமஷ்டி தான் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்­கின்ற தமிழ் தரப்­புகள் எவற்­றி­ட­முமே, அதனை அடை­வ­தற்­கான மூலோ­பா­யமோ, செயற்­திட்­டங்­களோ கிடை­யாது.

தேர்தல் மேடை­க­ளிலும், ஊடக மாநா­டு­க­ளிலும், அறிக்­கை­க­ளிலும் மட்டும் தான், சமஷ்­டியில் பிடித்துத் தொங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர, சமஷ்டி தீர்வு ஒன்றை எட்­டு­வ­தற்­கான சாத்­தி­ய­மான வழி­மு­றையை கண்­ட­றி­யவும் அவர்கள் தயா­ராக இல்லை.

தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வைத் தான் வலியுறுத்துகிறார்கள். அதனையே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஆனாலும், அதனையே அரசியல் வியாபாரமாக மாற்றுவதில் தான் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஏனைய தரப்புகளும் சரி இந்த விடயத்தில், பெரிதாக வேறுபட்டிருக்கவில்லை.

சமஷ்டி என்ற கோஷத்தை வைத்து தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் அரசியல் தான் முன்னெடுக்கப்படுகிறது.

இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் இந்த நிலை தொடரப் போகிறது என்று தெரியவில்லை.

ஆனால், வரும் காலத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடக்கும் என்பதால், சமஷ்டி அரசியல், உணர்ச்சி அரசியல் எல்லாமே கொளுந்து விட்டு எரியப் போகின்றன.

எரியும் நெருப்பில் எண்ணெயை வார்ப்பதற்கு அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்கள். ஏனென்றால், அந்த நெருப்பில் தான் அவர்கள் எப்போதும் குளிர்காய்ந்து வருகிறார்கள். 

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-09#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.