Jump to content

கிளிநொச்சியில் 98 சோடிகள் பங்குபற்றிய முதலாவது மாட்டு வண்டிசவாரி


Recommended Posts

கிளிநொச்சியில் 98 சோடிகள் பங்குபற்றிய முதலாவது மாட்டு வண்டிசவாரி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_6672.jpg?resize=800%2C600

 

இலங்கை மாட்டுவண்டி சவாரி வரலாற்றில் 98 ஜோடிகள் பங்குபற்றிய போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற மாட்டுவண்டி சவாரியில் நடந்துள்ளது.

குறித்த சவாரி போட்டி கிளிநொச்சி அக்கராயன் சவாரி திடலில் இடம்பெற்றது. கிளிநொச்சி சவாரி சங்கத்தின் ஓற்பாட்டில் அக்கராயன் உழவர் கழகத்தினால் நடத்தப்பட்ட குறித்த போட்டியில் வரலாற்றில் இல்லாதவாறு 98 ஜோடிகள் 5 பிரிவுகளில் பங்கு பற்றியிருந்தன.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக திகழும் குறித்த போட்டி இலங்கையில் 50 வருடங்களிற்கு மேலாக முன்னெடுத்து வரப்படுகின்றது. குறித்த போட்டியில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து 98 ஜோடிகள் அழைத்து வரப்பட்டு விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. அதி கூடிய ஜோடிகள் பங்குபற்றிய முதலாவது போட்டி இது என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

IMG_6655.jpg?resize=800%2C600IMG_6665.jpg?resize=800%2C600IMG_6668.jpg?resize=800%2C600  IMG_6673.jpg?resize=800%2C600IMG_6674.jpg?resize=800%2C600IMG_6675.jpg?resize=800%2C600IMG_6676.jpg?resize=800%2C600IMG_6677.jpg?resize=800%2C600IMG_6678.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/94925/

Link to comment
Share on other sites

98 ஜோடிகள் பங்கேற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி

 

இலங்கை மாட்டுவண்டி சவாரி வரலாற்றில் 98 ஜோடிகள் பங்குபற்றிய போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று நிறைவேறியது. 

IMG_6653.JPG

குறித்த சவாரி போட்டி இனறு கிளிநொச்சி அக்கராயன் சவாரி திடலில் இடம்பெற்றது. 

கிளிநொச்சி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போட்டியில் வரலாற்றில் இல்லாதவாறு 98 ஜோடிகள் 5 பிரிவுகளில் பங்கு பற்றின. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக திகழும் குறித் போட்டி இலங்கையில் 50 வருடங்களிற்கு மேலாக முன்னெடுத்து வரப்படுகின்றது. 

IMG_6657.JPG

குறித்த போட்டியில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து 98 ஜோடிகள் அழைத்து வரப்பட்டு விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. அதி கூடிய ஜோடிகள் பங்குபற்றிய முதலாவது போட்டி இது என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

IMG_6668.JPG

மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர் மத்தியில் தற்புாது குறித்த விளையாட்டு பாரிய இடம்பிடிப்பதாக தெரிவிக்கும் ஏற்பாட்டாளர்கள், இதுவரை மாகாண ரீதியில் எமக்கான இடம் கிடைக்கவில்லை எனவும், 

IMG_6673.JPG

அதற்கு மாகாண சபை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர். வரலாற்றில் இடம்பிடித்த குறித்த போட்டியில் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தமை குறிப்பிடதக்கதாகும்.

IMG_6677.JPG

இன்று இடம்பெற்ற போட்டியில்,

அ பிரிவு

முதலாமிடம் - யாழ்ப்பாணம் சங்குவில் 

இரண்டாம் இடம் - கிளிநொச்சி பன்னங்கண்டி

மூன்றாம் இடம் - கிளிநொச்சி பன்னங்கண்டி

நான்காம் இடம் - யாழ்ப்பாணம் சங்குவில்

ஆ பிரிவு

முதலாமிடம் - யாழ்ப்பாணம் அளவட்டி

இரண்டாம் இடம் - முல்லைத்தீவு விசுவமடு

மூன்றாம் இடம் - கிளிநொச்சி முட்கொம்பன்

நான்காம் இடம் - யாழ்ப்பாணம் கொடிகாமம்

இ பிரிவு

முதலாமிடம் - யாழ்ப்பாணம் மட்டுவில்

இரண்டாம் இடம் - முல்லைத்தீவு தேராவில்

மூன்றாம் இடம் - கிளிநொச்சி வட்டக்கச்சி

நான்காம் இடம் - யாழ்ப்பாணம் விழான்

ஈ பிரிவு

முதலாமிடம் - முல்லைத்தீவு ரெட்பான

இரண்டாம் இடம் - யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை

மூன்றாம் இடம் - கிளிநொச்சி வட்டக்கச்சி

நான்காம் இடம் - கிளிநொச்சி பூநகரி

உ பிரிவு

முதலாமிடம் - கிளிநொச்சி முட்கொம்பன் கிளி

இரண்டாம் இடம் - யாழ்ப்பாணம் நீர்வேலி

மூன்றாம் இடம் - கிளிநொச்சி கண்ணகிபுரம் கிளி

நான்காம் இடம் - கிளிநொச்சி முட்கொம்பன்  ஆகிய இடங்களை பெற்றுக்கொண்டன.

IMG_6678.JPG

 
http://www.virakesari.lk/article/40059
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.