Jump to content

வீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா?


Recommended Posts

வீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா?

மருத்துவர் கில்ஸ் இயோ Image captionமருத்துவர் கில்ஸ் இயோ

கடந்த சில வருடங்களாக இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் வீகனிசம் எனப்படும் விலங்குகளிருந்து பெறப்படும் உணவுகள் மற்றும் மாமிசங்களை அறவே சாப்பிடாமல் இருக்கும் உணவுமுறையை கொண்டவர்களான வீகன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல்நலன், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவை மீதான ஈடுபாட்டின் காரணமாக இறைச்சி, கோழி, மீன் அல்லது விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டைகள், பால் பொருட்களையும் தாங்கள் உண்பதில்லை என்று வீகன்கள் கூறுகின்றனர்.

சாதாரண உணவுமுறையை மேற்கொள்ளபவர்களுக்கு இந்த மாற்றம் எவ்வளவு கடினமாக இருக்கும்? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

பிபிசியின் 'ட்ரஸ்ட் மீ ஐ ஆம் ஏ டாக்டர்' தொடரின் சமீபத்திய பதிப்பில், மருத்துவர் கில்ஸ் இயோ என்பவர், வீகனிசத்தை ஒரு மாதத்திற்கு கடைபிடித்து, அதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு முடிவு செய்தார்.

 

 

விலங்குகளோடு தொடர்பில்லாத பொருட்கள் என்று அறியப்படுபடும் உணவுகளுக்கும் விலங்குகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருப்பதை அவர் வெகு விரைவிலேயே கண்டறிந்தார்.

முட்டைகள், பாலாடைக்கட்டி போன்றவற்றிற்கு வீகன்கள் மறுப்புத் தெரிவிப்பதாக கூறினாலும், மயோனைசே (முட்டை கலந்தது), பாஸ்தா (இதுவும் முட்டை கலந்துதான்) மற்றும் மதுவகைகள் (சில வகை மதுபானங்களை தயாரிக்கும்போது அதில் மீன்களின் எலும்புகள் அல்லது மற்ற விலங்குகளின் புரதங்களை கலக்கின்றனர்) ஆகியவற்றை தங்களது உணவுகளில் கொண்டுள்ளனர்.

வீகன்கள் தவறுதலாக விலங்குகளோடு தொடர்புடைய உணவுகளை தவிர்ப்பது எவ்வளவு சவாலானதோ, தங்களது உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களை தவறாமல் எடுத்துக்கொள்வதும் சவால் நிறைந்ததாகவே உள்ளது.

நீங்கள் வீகனிசத்தை பின்பற்றினால், உடலின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான வைட்டமின் டி கிடைக்காத நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் உள்ளது.

வீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வீகனிசத்தின் வரைமுறையின்படி இதுபோன்ற சத்துக்களை பெறவேண்டுமென்றால், செறிவூட்டப்பட்ட உணவுகள், சோயா பால், அரிசி பால், ஆரஞ்சு பழச்சாறு மற்றும் தானிய வகைகளை சார்ந்திருக்க வேண்டும்.

மாற்றாக வைட்டமின் டி மாத்திரையை எடுத்துக்கொள்வதை கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

நீங்கள் வீகனிசத்தை பின்பற்றினால், உடலின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான அயோடினை இழக்க நேரிடும். எனவே, பாலை தவிர்த்து அயோடின் அதிகமுள்ள பாதாம் பால் போன்றவற்றை நீங்கள் பருக வேண்டியிருக்கும். கடற்பாசிகளில் அயோடின் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், அதை பெறுவதற்கு நீங்கள் மாத்திரை வடிவில் அதை உட்கொள்ள வேண்டியிருக்கும்.

 

 

வைட்டமின் பி12-ஐ பெறுவதும் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனெனில், இது விதைகள், பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளில் கிடைப்பதில்லை. எனவே, வீகன்கள் செறிவூட்டப்பட்ட உணவுகள், தானியங்கள் அல்லது மாத்திரைகளை உட்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

வீகனிசத்தை கடைபிடிப்பது ஆரோக்கியத்துக்கு உதவுகிறதா?

சைவத்தை கடைபிடிப்பவர்கள் மற்றும் வீகனிசத்தை கடைபிடிப்பவர்களை அடிப்படையாக கொண்டு இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 10 ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று வீகனிசத்துக்கு ஆதரவாக பதிலளிக்கிறது.

சைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ பின்பற்றுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களும், புற்றுநோயும் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ கடைபிடிப்பதென்பது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதே தவிர நீண்டகாலம் வாழ்வதற்கான வழியாக கருதப்படவில்லை.

வீகன் ஆவதனால் உண்மையிலேயே ஆரோக்கியம் மேம்படுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சரி, மருத்துவர் இயோ ஒரு மாதத்திற்கு வீகனிசத்தை கடைபிடித்த பிறகு அவருக்கு என்ன ஆனது தெரியுமா? 30 நாட்களில் அவரது உடல் எடை நான்கு கிலோ குறைந்ததோடு மட்டுமல்லாமல், அவரது உடல் கொழுப்பின் அளவும் 12 சதவீதம் வரை குறைந்தது.

நீங்கள் வீகனிசத்தை தொடர்ந்து கடைபிடிப்பீர்களா என்று அவரிடம் கேட்டபோது, "நான் மிகவும் அசந்துவிட்டேன்! இருந்தபோதிலும் முழுவதும் வீகனாக ஆவதற்கு நான் விரும்பவில்லை. ஒரு மாதத்தில் ஒருசில நாட்களுக்கு இதை கடைபிடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்" என்று அவர் கூறுகிறார்.

"கடந்த ஒரு மாத வீகன் வாழ்க்கையில் முட்டைகளை மிகவும் தவறவிட்டேன். ஆனால், இதை துவங்குவதற்கு முன்பு இறைச்சிகள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று எண்ணினேன்" என்று இயோ மேலும் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/science-45465346

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.