Jump to content

30 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி கருக்கலைப்பு: கருவுக்கு வாழ்வுரிமை உண்டா?


Recommended Posts

30 ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி கருக்கலைப்பு: கருவுக்கு வாழ்வுரிமை உண்டா?

 
கருபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றிருந்த நிலையில், அந்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண்ணின் கரு 27 வாரங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், கருக்கலைப்பு செய்வது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்றம், ஒரு பெண்ணின் கருப்பையில் வளரும் கருவுக்கு உள்ள உரிமைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின்படி, எந்தவொரு சட்டத்தையும் மீறாத வரையில், அனைவருக்கும் சுதந்திரத்துடன் வாழும் உரிமை இருக்கிறது.

இதை அடுத்து, உயிருள்ள மனிதருக்கு நிகரான உரிமைகள், ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் கருவுக்கும் உண்டா என்ற கேள்வி எழுகிறது. உலகில் இதைப் பற்றி இதுவரை இந்த விதமான கேள்விகளோ, கருத்துக்களோ பேசப்பட்டதில்லை.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ், 'கரு' என்ற சொல்லுக்கான வரையறை எதுவும் இருந்ததில்லை.

கரு என்றால் என்ன?

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1994ஆம் ஆண்டு, அறிமுகப்படுத்தப்பட்டபோது, கரு என்ற வார்த்தை முதன்முதலில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்டது.

ஒரு பெண்ணின் கருப்பையில், சினைமுட்டையுடன் விந்து இணைந்த எட்டாவது வாரத்தில், அதாவது 57 வது நாளில் இருந்து குழந்தை பிறக்கும்வரை, அது 'கரு' (' Foetus' means 'embryo' என்று வரையறுக்கப்பட்டது.

கருபடத்தின் காப்புரிமைBSIP

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே விரும்பும் சமுதாயத்தில், கருவுற்றிருக்கும் பெண்ணின் கருப்பை திரவம் (அம்னியா சென்டஸிஸ்) சோதனை செய்யப்பட்டு, கருவில் உருவாகி இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து பெண்ணாக இருந்தால், கருவை கலைத்துவிடும் நடைமுறைகள் தொடங்கின.

கரு உருவாவதற்கு முன்னதாகவோ, பிறகோ பாலின தேர்வை தடை செய்யவும், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் தொழில்நுட்பத்தை சீரமைக்கவும், பரம்பரை மாறுபாடுகள், வளர்ச்சிதை மாறுபாடுகள், குரோமோசோம் மாறுபாடுகள், பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றிகாக செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகளை முறைப்படுத்தவும் இந்த சட்டம் 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

1980 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளதாக 'லேன்செட்' என்ற சர்வதேச மருத்துவ சஞ்சிகையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

பெண் சிசுக்களை கொல்வதை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தை மீறும் மருத்துவருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

கருவின் வாழும் அதிகாரத்தை முடிவு செய்வது யார்?

பெண் சிசுக் கொலைகளைத் தவிர, கருவில் இருக்கும் குழந்தையை கலைப்பதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. உதாரணமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட ஒரு பெண் கருவுற்றால், அந்த கருவை கலைக்க, பாதிக்கப்பட்ட பெண் விரும்பலாம்.

அதேபோல், கருத்தடை வழிகள் பயனளிக்காமல் போகும் நிலையிலும், குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாத சந்தர்ப்பத்திலும், கருவை சுமக்க பெண் தயாராக இல்லாத நிலையிலும் கருவை கலைக்கும் முடிவை எடுக்க நேரிடலாம்.

இந்தியாவில் சில தசாப்தங்களுக்கு முன்னதாக, கருக்கலைப்பு செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. குழந்தை பிறந்தால், கருவுற்ற பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும் நிலைமை இருந்தது.

அதிகரிக்கும் மக்கள்தொகை, தவறான ஆட்களிடம் போய் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 1971 ஆம் ஆண்டில், மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டம் (The Medical Termination of Pregnancy Act) இயற்றப்பட்டது. அதன்படி, 20 வாரங்கள் வரையிலான கருவை கலைப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது. கருவை சுமப்பதால், கருவுற்ற பெண்ணுக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியிலான பாதிப்புகள் ஏற்படும் என்ற நிலையிலும், பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு உடல்ரீதியிலான, மனோரீதியிலான பாதிப்புகள் ஏற்படும் என்ற நிலையிலுமே கருக்கலைப்பு செய்யலாம்.

கருவில் உள்ள குழந்தையை கலைக்கும் முடிவை எடுக்கும் உரிமை கருவுற்ற பெண்ணுக்கும், கருவின் தந்தைக்கும் உண்டு. இருந்தாலும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் உரிமை மருத்துவருக்கே உண்டு.

கருபடத்தின் காப்புரிமைBSIP

12 வாரங்களுக்கு உட்பட்ட கருவைக் கலைப்பதை முடிவு செய்யும் உரிமை பதிவு செய்யப்பட்ட மருத்துவருக்கு உண்டு. 12 முதல் 20 வாரங்கள் வரை வளர்ச்சியடைந்த கருவை கலைப்பதற்கு, பதிவுசெய்யப்பட்ட இரண்டு மருத்துவர்களின் ஒருமித்த கருத்து அவசியம்.

சட்ட விரோதமான கருக்கலைப்புக்கான தண்டனை

1971 ஆம் ஆண்டில், மருத்துவ முறை கருக்கலைப்புச் சட்டத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் ஒரு பெண் தனது கருவை கலைத்தாலோ அல்லது வேறு ஒருவர் அந்த முயற்சியை எடுத்தாலோ, அது குற்றம். அதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

கருவுற்ற பெண்ணுக்கு தெரியாமல் யாராவது கருக்கலைப்பு செய்தது உறுதியானால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். கருவை கலைக்கும் நோக்கத்தில் கர்ப்பிணியை தாக்கினாலோ, கொலை செய்தாலோ அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்பே கொலை செய்ய முயற்சி எடுத்தாலோ, குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஒருவரின் குறிப்பிட்ட நடவடிக்கையால் கர்பிணிக்கு மரணம் ஏற்பட்டாலோ அல்லது கருவுற்ற பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்களால் குழந்தை கருவிலேயே இறந்துபோனாலும், அது மரணத்தை ஏற்படுத்தும் செயலாக கருதப்பட்டு, அதற்கு பத்தாண்டுகள் தண்டனை விதிக்கப்படும்.

https://www.bbc.com/tamil/india-45477863

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கே இந்த குதி…குதிக்கிறீங்களே… ரணில் தனது Austin Mini ஐ எங்கே பார்க் பண்ணுவார் என அறிந்தால் என்ன குதி குதிப்பீர்களோ🤣.
    • @தமிழன்பன், @விசுகு, @குமாரசாமி, @ஈழப்பிரியன் இந்தத் தலைப்புக்கு பொருத்தமான கவுண்டமணியின் காணொளி ஒன்றை  மேலே இணைத்துள்ளேன் தவறாமல் பார்க்கவும். 😂 🤣
    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.