Jump to content

நகைக் கள்ளனும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலை செய்வது ஒரு தபாற் கந்தோரில். இரண்டு கவுண்டர்களில் எனது திறந்தது. பொதிகளை வாங்குவதற்கு இலகுவாக ஒன்றை மூடியும் மற்றையதைத் திறந்தும்  அமைத்திருக்கின்றனர். வெய்யில் காலத்தில் குளிரூட்டியின் குளிர்மையில் நன்றாக இருப்பது குளிர் காலத்தில் நடுங்கவைக்கும். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இருப்பதாலும் முதலாளி என்று சொல்லப்படும் சிங் இனத்தவர் எப்போதாவது வருவதாலும் நானும் இன்னுமொரு தமிழ் அக்காவும் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்து, ஆட்கள் வராவிட்டால் போனில் முகநூலை மேய்ந்து, பொன் கதைத்து நின்மதியாக வேலை செய்வோம். வாகனத் தரிப்பிட வசதியுடன் பத்து நிமிடத்தில் காரில் போனால் வேலை. வேலை முடிய ஒரு பதினைந்து நிமிடத்தில் வீடு. 

ஆனாலும் ஒரு குறை. பூட்டிய அறையுள் இருக்கும் அக்கா விதவிதமாய்ச் சங்கிலிகளும் தோடுகளும் மாத்தி மாத்திப் போட்டு வர நான் மிகவும் மெல்லிய ஒரு சங்கிலியும் சிறிய தோட்டுடனும் இருப்பது எனக்கே கடுப்பைக் கிளப்பும். அதுக்குக் காரணம் மனிசன் நகைகள் வாங்க விடுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கும் நகைகளையும் வீட்டில் வைக்கவிடாது பேங்க் லாக்கரில் கொண்டுபோய் வச்சிடுவார். ஒருநாள் நானும் வீட்டில கிடந்த நல்ல வடிவான சங்கிலியும் பெரிய தோடும் போட்டுக்கொண்டு போக, வந்த ஒரு கறுப்பு இனத்தவன் "கோல்ட் ஆ.... உது" என்று கேட்டதிலிருந்து திருப்ப வெள்ளித் தோடு சங்கிலி என மாறிப்போனன். 

எனது நண்பர் ஒருவரின் தபார் கந்தோரில் வேலை செய்யும் பெண் இருவார விடுமுறையில் செல்ல வேலைக்கு ஆட்கள் இன்றி என்னைக் கெஞ்சிக் கேட்டதனால் வேறு வழியின்றி சம்மதம் சொல்லிவிட்டு முகவரியைக் கேட்டால், அங்கு கார் நிறுத்தக் கன காசு. நீர் பஸ்ஸில் வாரும் என்றார் நண்பர்.

அந்தத் தபார் கந்தோருக்கு முன்னர் ஒருதடவை போயிருக்கிறேன் தான். ஆனாலும் வேலையை ஏற்கும் நேரம் காசுக் கணக்குகளை ஒழுங்காக எடுத்துப் பொறுப்பெடுக்க வேண்டும். திங்கள் காலை எட்டு மணிக்குத் திறப்பது. எட்டில் இருந்து பன்னிரண்டு சரியான சனமாக இருக்கும். நீர் ஒரு பன்னிரண்டுக்கு வந்தால் சனம் குறைவான நேரம் கணக்கெடுத்து எல்லாம் சொல்லித்தரமுடியும் என்றார் நண்பர்.

சரி அவதியாய் முதல் நாள் ஓடத் தேவை இல்லை. ஆறுதலாக எழும்பி மதிய உணவையும் சமைத்து காலை உணவையும் உண்டு முடித்து, புது இடம் எண்டதால கொஞ்சம் நல்ல உடுப்பைப் போட்டு கண்ணாடியைப் பார்த்தால் சில்வர் சங்கிலி பொருத்தம் இல்லாததுபோல் ஓர் எண்ணம் தோன்ற, நண்பரின் தபாற்கந்தோர் திறந்தது அல்ல. மூடியது. எனவே என்னிடம் உள்ள தங்க நகையைப் போடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற எண்ணம் கூடவே எழுந்தது. சாதாரணமாகச் சிறிய சங்கிலி போடும் என் கைகளில் புதிதாக வாங்கி ஒரே ஒருமுறை மட்டும் போட்ட அழகான சங்கிலி தட்டுப்பட, அங்கே ஒருத்தரும் பறிக்க முடியாது என்ற நின்மதியான எண்ணமும் கூடவே எழுந்தது. பஸ்சும் கடையின் வாசலில் தான் நிற்பது. ஏறுவதும் எதிர்ப்பக்கம். எனவே என்னை நானே கண்ணாடியில் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டேன்.

அடிக்கடி பஸ்ஸில் பயணிக்காததால் பிரையாண அட்டையைத் தேடி எடுத்து இதற்கென்று வைத்திருக்கும் சிறிய பணப் பையுள் இருபது பவுன்ஸ் தாளும் ஒரு ஆறு பவுண்ட்சுகள் சிலறையும் போட்டு கைப்பையுள் வைத்து பதினொன்று பத்துக்குப் புறப்பட்டாச்சு. தரிப்பிடம் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைதான். தரிப்பிடத்தில் போய் நின்றால் பஸ் வரப் பத்து நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. தரிப்பிடத்தில் யாரும் இல்லை. தெந்தட்டில் இருப்பதற்கான  இருக்கை இருக்க அதில் நான் இருக்க அந்த நேரம் பார்த்து என் மனிசன் போன் அடிக்கிறார்.

என்ன வெளிக்கிட்டியோ ???? ஓமப்பா பஸ் வரேல்லை.

சரி போய்ச் சேர்ந்தபிறகு போன் செய்.

நான் என்ன சின்னப் பிள்ளையே துலைய. ஒருக்கா நீங்கள் கொண்டு போய் விடுங்கோவன்.

இப்பதான் வீட்டை வந்தனான். நிறைய வேலை இருக்கு. நீயே போய்க்கொள்.

சரி போனை வையுங்கோ என்று கடுப்போடு சொல்லிவிட்டு பார்க்க நான் இருக்கும் பக்கமாக ஒரு ஸ்கூட்டியில் இருவர் வீதியின் பக்கம் உள்ள நடைபாதையில் வருவதையும் அவர்களில் ஒருவன் வீடுகள் இருக்கும் பக்கமாய்க் கையைக் காட்டி எதோ மற்றவனுக்குக் கூறுவதையும் கவனித்த நான் அவர்கள் அந்த வீடுகளில் எதிலாவது இருக்கிறார்கள் போல என எண்ணியபடி பார்க்க இருவரும் முகத்தில் மூக்கை மறைத்து கறுப்புத் துணியும் கட்டியிருப்பதைப் பார்த்து என்னடா இவர்கள் குளிரும் இல்லை.  வெய்யில் கொளுத்துகிறது. எதற்கு முகத்தில் துணி என எண்ணமிட்டவாறே பையைத் திறந்து காசு வைத்த பையையும் எடுத்து பிரையாண அட்டையை எங்கே என்று  குனிந்து பையுள் தேடிக்கொண்டு இருக்க, என் குனிந்த தலைக்கு முன்னால் எனக்குக் கிட்டவாக இரு சப்பாத்துக் கால்கள் தெரிகின்றன. தலையை நிமிர்த்திப் பார்த்தால் என்னை முட்டிவிடும் தூரத்தில் கறுப்பு உடைகளுடன் தலைக் கவசம் அணிந்தபடி ஒரு ஆணின் உருவம் தெரிகிறது. 

திடுக்கிட்டு நான் எழ, என்னிலும் உயரமாக ஒருவன் வெள்ளை நிறத்தவன் நிற்பது தெரிய உனக்கு என்ன வேண்டும் என நான் கேட்கிறேன். அவனின் இரு கைகளும் என் காதுகளை நோக்கி வர அப்போதுதான் அவன் திருடன் என்று எனக்கு உறைக்கிறது. உடனே நான் என் இரு கைகளாலும் அவனைத் தள்ளிவிட்டு ஓடுகிறேன். அவன் பின்னால் துரத்துகிறான். நான் அவனிடம் அகப்படவே இல்லை .......என் கூச்சல் கேட்டு வீதியால் சென்றவர்கள் ஓடிவர திருடன் பயந்து ஓடிவிட்டான். என் நகையும் தப்பி விட்டது. 

மேலே சொன்னது போல் நடந்திருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நடந்ததோ .....

அவன் என் காதுக்குக் கைகளைக் கொண்டுவர என் கைகள் தானாகவே என் காதைப் பொத்திக்கொள்ள செய்வதறியாது நிற்கிறேன் நான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாது எல்லாம் மறந்து மரத்துவிட்ட நிலை ஒரு நிமிடம். அவன் எப்படி என் கழுத்தில் இருந்து சங்கிலியை எடுத்தான் என்பது கூட எனக்கு இன்னும்  தெரியவில்லை. அடுத்த நிமிடம் சுய நினைவு வரப்பெற்று கண்ணை விளித்துப் பார்த்தால் அவன் இன்னும் என் முன் நிற்கிறான். அப்போதுதான் என் நான்கு விரல்களிலும் நான் போட்டிருந்த மோதிரம் என் நினைவுக்கு வர, ஆட்களை உதவிக்கு அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு வினாடி எப்படிக் கத்துவது என்று எண்ணிவிட்டு க்காஆ........என்று என் குரலை எத்தனை கூட்ட முடியுமோ கூட்டிக் கத்துகிறேன். உடனே அவன் மிரண்டு ஓட நானும் ஓடிப் போய்ப் பார்க்கிறேன். ஸ்கூட்டியில் எந்த இலக்கத்தையும் காணவில்லை. மற்றவன் ஸ்கூட்டியை தயார் நிலையில் வைத்திருக்க ஏறப் போனவன் நான் எட்டிப் பார்ப்பதைக் கண்டு மீண்டும் திரும்பி வருகிறான். ஒரு செக்கன் என்னசெய்வது என்று திகைத்தபடி பார்க்க என் கைப்பையும் போனும்  வேறு சில பொருட்களும் நிலத்தில் கிடப்பது தெரிகிறது. உடனே ஒரு கையில் கைப்பையையும் மறுகையில் போனையும் எடுத்துக்கொண்டு வீதியைப் பார்க்கிறேன். வீதியில் யாரும் இல்லை. வாகனங்கள் கூட ஒன்றும் இல்லை. உதவி உதவி  திருடர் என்று கத்திக்கொண்டு ஓடுகிறேன்.

ஒரு ஐம்பது மீற்றரும் ஓடியிருக்கமாட்டேன். எனக்கு எதிர்ப்புறமாக இரு ஆண்கள் சாதாரண உடையுடன் ஓடிவருவது தெரிகிறது. ஒரு வினாடி அவர்களும் என்னைப் பிடிப்பதற்காகத்தான் ஓடிவருகின்றனர் என நான் ஸ்தம்பித்து நிற்க அவர்கள் என்னைக் கடந்து ஓடிய பின்தான் அவர்கள் திருடனைத் துரத்துகிறார்கள் என்று புரிய உடனே திரும்பிப் பார்க்கிறேன். அவன் ஓடிச் சென்று ஸ்கூட்டியில் அமர மற்றவன் ஸ்கூட்டியை வீதிக்கு இறக்குகிறான். படங்களில் வருவதுபோன்று வீதியின் மறுபக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் அவர்களை மறிக்க, அவர்கள் இருவரும் கீழே விழுகின்றனர். துரத்திக்கொண்டு போனவர்கள் அண்மித்துவிட அவர்கள் பிடிபடுவது உறுதி என நான் மகிழ, விழுந்த வேகத்தில் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் எப்படிப் பறந்தார்கள் என்று இன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது. போலந்து நாட்டைச் சேர்ந்த இருவரும் திரும்பி வந்து உனக்கு ஓக்கேயா என்று கேட்டுவிட்டு போலீசுக்கும் போன் செய்துவிட்டு என்னைச் சுவரில் அமரச் சொல்கிறார்கள். அமரும்போது பார்க்கிறேன் என் கால்கள் இரண்டும் தொய்ந்துபோய் நடுங்குகின்றன. ஒரு போலந்துக்காரர் நான் இருந்த இடத்தில் சிதறிக்கிடந்த என் பொருட்கள் சிலவற்றை எடுத்துவருகிறார். ஆம் என்று வாங்கிய நான் பையுள் தேடுகிறேன் எனது சிறிய பணப் பையையும் காணவில்லை.

ஒரு ஐந்து நிமிடமும் இல்லை போலீசார் இருவர் வந்துவிட்டனர். காரில் வழிமறி த்தவர் திரும்பி வந்து போலிசுக்கு வாக்குமூலம் கொடுத்தார். அவர்கள் எதோ வைத்திருந்தார்கள். அது துவக்கா கத்தியா என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் பயத்தால் நான் அவர்களைப் பின்பற்றிச் செல்லவில்லை என்றார். மற்ற இருவரிடமும் வாக்குமூலம் ஒருவர் எடுக்க மற்றவர் என்னிடம் வந்து கருப்பு இனத்தவரா என்றார். இல்லை வெள்ளை என்றேன் நான். எப்படி இருந்தார்கள், என்ன நிற உடை அணிந்தார்கள், உனக்கு ஏதாவது காயங்கள் உள்ளதா, அம்புலன்சுக்கு அடிக்கவா எனக் கேட்டு நான் வேண்டாம் என்றபின் எதுக்கும் நாம் தடவியல் துறைக்கு அறிவித்துள்ளோம். உன் கழுத்தில் அவர்கள் கை பட்டதா??? அல்லது கையுறை போட்டிருந்தார்களா என்றெல்லாம் கேட்டுவிட்டு எனக்கு நினைவில்லை என்றவுடன் உன்வீடு எங்கே என்றார்கள். ஐந்து நிமிட நடைதான் என்றவுடன்  என்னோடு அவர்களும் வந்து நான் அழைப்பு மணியை அழுத்த வந்து கதவைத் திறந்த மனிசன் போலீசையும் என்னையும் மாறிமாறிப் பாக்கிறார். மனிசனுக்கு விசயத்தைச் சொல்லிப்போட்டு நான் கதிரையில் அமர்கிறேன்.

நான் போட்டிருந்த மேற்சட்டையைக் கழற்றித் தரும்படி போலிஸ் கூற நான் உடைமாற்றி வந்து எனது அழகிய மேற்சட்டையை ஒரு பையில் வைத்து அவர்களிடம் கொடுத்தேன்.

மூன்று நாட்களின் பின் தம்மால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் உனது கேசை தற்காலிகமாக மூடுகிறோம் என்றனர். எனது மேற்சட்டை எங்கே என்றேன். தடவியல் துறையினரிடம் கொடுத்துள்ளோம். விரைவில் திருப்பிய அனுப்புகிறோம் என்றார்கள். இரண்டு வாரமாகியும் இன்னும் வரவில்லை.

 

 

அது ஒருபுறம் இருக்க ஒரு வாரம் கடந்தபின் மீண்டும் அந்த இருவரும் என் கண்ணில் பட்டனர்.  

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் துர்க்கையம்மன் .....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அழகிய தோழியே....,!

 

லண்டன் மாநகரின் வானத்தை...,

ஒரு தடவை அண்ணார்ந்து பார்..!

 

இது கோடை காலம்!

 

பதினோரு மணி தானே?

இருபத்தி நாலு மணி நேரத்து...

இயந்திர நகரம்.....,

இன்னும் அரைத் தூக்கத்திலிருந்து..

முற்றாக விழிக்கவில்லை!

 

விடிகாலை தருகின்ற புதிய உணர்வு..,

இன்னும் நீங்கவில்லை!

 

புதுத் துளிர் விட்ட மரங்களும்..

எப்போதோ வருகின்ற...

வெயிலைக் கண்ட பூக்களும்,

மெதுவாகச் சிரிக்கும் ஒலி கூட...'

உன் காதில் விழவில்லையா?

 

கதிரவனுக்கு நன்றி சொல்லும்...

அந்தப் பறவைகளின் பாடல் சத்தம்..,

உனக்குக் கேட்கவில்லையா?

 

இவையெல்லாம் அழகில்லையா?

எதற்காக நகைகள்?

என்னிடம் பணம் மிஞ்சியிருக்கின்றது,

என இல்லாதவனுக்கு சொல்லுகிறாயா?

 

எனது கருத்தில்....,

குற்றவாளி அவர்கள் மட்டுமல்ல....,

நீயும் தானே தோழி?

 

சுமே....கதை அழகு...!

கவனமாக இருங்கள்!

மேலே உள்ள கருத்து சும்மா பம்பலுக்கு எழுதினது! சீரியஸாக எடுக்காதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மீண்டும் துர்க்கையம்மன் .....:cool:

அப்ப வரவேண்டாமோ????

6 hours ago, புங்கையூரன் said:

எனது அழகிய தோழியே....,!

 

லண்டன் மாநகரின் வானத்தை...,

ஒரு தடவை அண்ணார்ந்து பார்..!

 

இது கோடை காலம்!

 

பதினோரு மணி தானே?

இருபத்தி நாலு மணி நேரத்து...

இயந்திர நகரம்.....,

இன்னும் அரைத் தூக்கத்திலிருந்து..

முற்றாக விழிக்கவில்லை!

 

விடிகாலை தருகின்ற புதிய உணர்வு..,

இன்னும் நீங்கவில்லை!

 

புதுத் துளிர் விட்ட மரங்களும்..

எப்போதோ வருகின்ற...

வெயிலைக் கண்ட பூக்களும்,

மெதுவாகச் சிரிக்கும் ஒலி கூட...'

உன் காதில் விழவில்லையா?

 

கதிரவனுக்கு நன்றி சொல்லும்...

அந்தப் பறவைகளின் பாடல் சத்தம்..,

உனக்குக் கேட்கவில்லையா?

 

இவையெல்லாம் அழகில்லையா?

எதற்காக நகைகள்?

என்னிடம் பணம் மிஞ்சியிருக்கின்றது,

என இல்லாதவனுக்கு சொல்லுகிறாயா?

 

எனது கருத்தில்....,

குற்றவாளி அவர்கள் மட்டுமல்ல....,

நீயும் தானே தோழி?

 

சுமே....கதை அழகு...!

கவனமாக இருங்கள்!

மேலே உள்ள கருத்து சும்மா பம்பலுக்கு எழுதினது! சீரியஸாக எடுக்காதீர்கள்!

போலீஸ்காரன் சொன்னதும் அதுதான். உங்கள் ஆட்கள் விலை அதிகமான நகையை ஏன் போடுகிறார்கள் என்றான். எமது காசில் தானே நாம் போடுகிறோம் என்றேன் நான்.

பணம் மிஞ்சியிருப்பவர்கள் முப்பது பவுண் கொடி ஒரு விழாவுக்கு ஒரு நகை என்று போடுவார்கள். நாம்அப்படியா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ, உங்கள் வீட்டு காப்புறுதியில் contents இருந்தால் அதில் கொண்டு போகும் நகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியர் கள்ளன்..... இப்ப நகை கள்ளன்...

சுமே அக்காவை தேடிப்பிடிச்சு அற்றாக் பண்ணுறாங்கள்.

எனக்கென்னவோ.... பியர் கள்ளன் தான் செற்றப் செய்த மாதிரி தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

உண்மைதான். அடுத்த தடவை கள்ளன் நிக்கிறான் என்று போன் செய்தும் யாருமே வரவில்லை. இப்ப வீட்டினுள்ளும் தனிய இருக்கப் பயமாத்தான் இருக்கு.

 

3 hours ago, Nathamuni said:

பியர் கள்ளன்..... இப்ப நகை கள்ளன்...

சுமே அக்காவை தேடிப்பிடிச்சு அற்றாக் பண்ணுறாங்கள்.

எனக்கென்னவோ.... பியர் கள்ளன் தான் செற்றப் செய்த மாதிரி தெரியுது.

பியர்க்கள்ளன் தமிழன். இது. கிழக்கு ஐரோப்பிய இனக்கள்ளன்.

4 hours ago, MEERA said:

சுமோ, உங்கள் வீட்டு காப்புறுதியில் contents இருந்தால் அதில் கொண்டு போகும் நகைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

2 hours ago, Nathamuni said:

 

வெள்ளைகளுக்கே இப்பிடி என்றால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பியர்க்கள்ளன் தமிழன். இது. கிழக்கு ஐரோப்பிய இனக்கள்ளன்.

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

எல்லாம் எங்கடையள் தான் இங்குள்ள கள்வர்களை உளவு சொல்லி ஏவி விடுவதே இதுகள்தான் .இப்ப எல்லாம் அவங்களுக்கும் தெரியும் எது பசையுள்ள ஆட்கள் என்று. வீட்டு வாசலில்  மாங்கோ லீப் தோரணம் தொங்குவது மிடில் அந்த தோரணத்துடன் லெமனும் சில்லியும் தொங்கினால் அப்பர் மிடில்  இவைகளுடன் ஒரு அக்லி(வடிவில்லாத)படத்துடன் அல்லது அக்லி சிலையுடன் கிழமைக்கு ஒருக்கால் லெமனும் சில்லியும் புதிதாய் மாத்தி கொண்டு இருந்தால் அதி பணபுழக்கம் உள்ள வீடுகள் என்று காப்புலி விளக்கம் தருது .

நல்லகாலத்துக்கு மெட்ரோ பாங் லொக்கர் வந்த படியால் களவு கொள்ளை குறைவு அத்துடன் வீட்டுக்கு பாதுகாப்பு அலாரம் பற்றிய விழிப்புணர்வும் ring போன்ற நவீன பாதுகாப்பு சிஸ்ட்டம் என்பவற்றால் இன்னும் முன்னேற்றம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

 

இது பொறாமையின உச்சம். ஏன் நீங்கள் முகத்திற்கு உதட்டிற்கு சாயம் பூசி படம் காட்டுவதில்லையோ? 

3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதில் வீட்டுக்குள் களவு என்றால்த்தானே கொடுப்பார்கள்

உங்கள் காப்புறுதிப் பத்திரத்தை வாசித்து பாருங்கள். 

எடுத்து செல்லும் மடிக்கணினி கைத்தொலைபேசி என்பவற்றுடன் அணிந்திருக்கும் நகைகளுக்கும் காப்புறுதி உள்ளது. (கைப்பையில் அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இது பொறாமையின உச்சம். ஏன் நீங்கள் முகத்திற்கு உதட்டிற்கு சாயம் பூசி படம் காட்டுவதில்லையோ? 

 

ஒன்றின் மேல் பொறாமைப்படுவதற்கு  அதன் மேல் ஆசை இருக்க வேண்டும்...நான் லிப்ஸடிக் போடுவதால் ஒருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை....நகை போடுவது,போடாமல் விடுவது சுமோவின்{அவரவர்} விருப்பம்...ஆனால் எதுவும் இடத்திற்கு தக்க மாதிரி இருக்க வேண்டும் ...

கலைஞ்னுடனான எங்கள் சந்திப்பே கடைசி சந்திப்பாக இருக்கட்டும்...முகத்திற்கு பின்னால்  மற்றவர்களை விமர்ர்சிக்கும் உங்களை போன்றவர்களை  இனி மீள் சந்திக்கவே கூடாது...நன்றி ...வணக்கம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஒன்றின் மேல் பொறாமைப்படுவதற்கு  அதன் மேல் ஆசை இருக்க வேண்டும்...நான் லிப்ஸடிக் போடுவதால் ஒருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை....நகை போடுவது,போடாமல் விடுவது சுமோவின்{அவரவர்} விருப்பம்...ஆனால் எதுவும் இடத்திற்கு தக்க மாதிரி இருக்க வேண்டும் ...

கலைஞ்னுடனான எங்கள் சந்திப்பே கடைசி சந்திப்பாக இருக்கட்டும்...முகத்திற்கு பின்னால்  மற்றவர்களை விமர்ர்சிக்கும் உங்களை போன்றவர்களை  இனி மீள் சந்திக்கவே கூடாது...நன்றி ...வணக்கம் 
 

ஒருவர் ஒரு பொருளை இழந்து நிற்கும் போது மகிழ்ச்சி கொண்டாடும் உங்களை போன்றவர்களின் மனநிலையை என்ன என்று சொல்வது.

சந்திப்பிற்கு வருவதும் வராமல் விடுவதும் உங்கள் விருப்பம்.

ஆனால் முகத்திற்கு பின்னால் விமர்சித்தமை என்பது உங்களின் அடுத்த புரளி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழிப்பறி செய்த கள்வர்களைத் துரத்திக்கொண்டு வந்த இரண்டு போலந்துகாரர்கள் சரியாக அப்போதுதான் சொல்லிவைத்தாற்போல் வந்தார்கள் என்றபடியால் எனது சிந்தனைக்கு அவர்களிலும் சந்தேகமே வருகிறது. தமது சகாக்கள்(கள்வர்கள்) பொருளுடன் தப்பிச் செல்வதை அன்னியரைப்போல் நின்று உதவுவது இவர்கள் போன்றவர்களின் பொறுப்பு. களவு கொடுத்தவருக்கு கள்வனைப்பற்றி என்னென்ன துப்புகள் கிடைத்துள்ளன - என்னென்ன பொருட்கள் மீதியாய் உள்ளன - காயம் எதுவும் ஏற்பட்டதா  என்பது போன:ற தரவுகளை களவு கொடுத்தவருடன் அளவளாவி இவர்கள் அறிந்து தமது குழுவை உசாராக்கிக்கொள்வார்கள்.

அண்மையில் இலண்டன் ஒக்ஸ்போட் வீதியில் மோட்டார் சைக்கிளில்  வந்த இருவரால் என் கண்ணுக்கு முன்பாக நிகழ்ந்த இதுபோன்ற ஒரு வழிப்பறியை  நான்  கண்டிருக்கிறேன். அங்கும் முதலில் உதவிக்கு வந்தது இரண்டு கிழக்கு ஐரோப்பிய ஆண்கள். சிறிதுநேர விசாரணையின்பின் பொலிசார் அந்த இரண்டு நபர்களையும் தமது வண்டியில் ஏற்றிச் சென்றதையும் கண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதில் ஆறுதல். 

இந்த சம்பவம் உங்களுக்கு படிப்பினையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு  எச்சரிக்கையும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அவையளை செட் பண்ணி அனுப்பியது இவையள் தானே...

நீங்கள் போட்டிருக்கிறது கிள்ற் இல்லை தங்கம் தான் என்று அவங்களுக்கு யாரு சொன்னது?

உண்மைதான்

5 hours ago, ரதி said:

உண்மையாய் நகை களவு போச்சுதா அல்லது சுமோவின் கற்பனையோ தெரியவில்லை...உண்மையாய் களவு போயிருந்தால் ரதிக்கு மிக்க மகிழ்ச்சசி...உங்களை மாதிரி நகைகளை போட்டுக் கொண்டு படம் காட்டுபவர்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் .

 

நீங்கள் இப்பிடித்தான் எழுதுவீர்கள் என்று அனுமானித்தபடியால் கோபம் வரவில்லை. நகை என்பது பெரும்பாலான பெண்களுக்குப் பிடிப்பதுதான். உங்கள் கதையைப் பார்த்தால் நகை போடுபவர்கள் எல்லாம் மற்றவர்கள் நகையைத் திருடிப் போடுவதுபோல் கூறுகிறீர்கள். நான் வேலைசெய்து என்காசில் நகை வாங்கிப் போடுவதில் உங்களுக்கு ஏன் கோபம்.??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

எல்லாம் எங்கடையள் தான் இங்குள்ள கள்வர்களை உளவு சொல்லி ஏவி விடுவதே இதுகள்தான் .இப்ப எல்லாம் அவங்களுக்கும் தெரியும் எது பசையுள்ள ஆட்கள் என்று. வீட்டு வாசலில்  மாங்கோ லீப் தோரணம் தொங்குவது மிடில் அந்த தோரணத்துடன் லெமனும் சில்லியும் தொங்கினால் அப்பர் மிடில்  இவைகளுடன் ஒரு அக்லி(வடிவில்லாத)படத்துடன் அல்லது அக்லி சிலையுடன் கிழமைக்கு ஒருக்கால் லெமனும் சில்லியும் புதிதாய் மாத்தி கொண்டு இருந்தால் அதி பணபுழக்கம் உள்ள வீடுகள் என்று காப்புலி விளக்கம் தருது .

நல்லகாலத்துக்கு மெட்ரோ பாங் லொக்கர் வந்த படியால் களவு கொள்ளை குறைவு அத்துடன் வீட்டுக்கு பாதுகாப்பு அலாரம் பற்றிய விழிப்புணர்வும் ring போன்ற நவீன பாதுகாப்பு சிஸ்ட்டம் என்பவற்றால் இன்னும் முன்னேற்றம்.

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

1 hour ago, vanangaamudi said:

வழிப்பறி செய்த கள்வர்களைத் துரத்திக்கொண்டு வந்த இரண்டு போலந்துகாரர்கள் சரியாக அப்போதுதான் சொல்லிவைத்தாற்போல் வந்தார்கள் என்றபடியால் எனது சிந்தனைக்கு அவர்களிலும் சந்தேகமே வருகிறது. தமது சகாக்கள்(கள்வர்கள்) பொருளுடன் தப்பிச் செல்வதை அன்னியரைப்போல் நின்று உதவுவது இவர்கள் போன்றவர்களின் பொறுப்பு. களவு கொடுத்தவருக்கு கள்வனைப்பற்றி என்னென்ன துப்புகள் கிடைத்துள்ளன - என்னென்ன பொருட்கள் மீதியாய் உள்ளன - காயம் எதுவும் ஏற்பட்டதா  என்பது போன:ற தரவுகளை களவு கொடுத்தவருடன் அளவளாவி இவர்கள் அறிந்து தமது குழுவை உசாராக்கிக்கொள்வார்கள்.

அண்மையில் இலண்டன் ஒக்ஸ்போட் வீதியில் மோட்டார் சைக்கிளில்  வந்த இருவரால் என் கண்ணுக்கு முன்பாக நிகழ்ந்த இதுபோன்ற ஒரு வழிப்பறியை  நான்  கண்டிருக்கிறேன். அங்கும் முதலில் உதவிக்கு வந்தது இரண்டு கிழக்கு ஐரோப்பிய ஆண்கள். சிறிதுநேர விசாரணையின்பின் பொலிசார் அந்த இரண்டு நபர்களையும் தமது வண்டியில் ஏற்றிச் சென்றதையும் கண்டேன்.

நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏன் கள்வரைத் துரத்திச் செல்லவேண்டும். ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

நீங்கள் கூறுவதும் சரியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கள்வரைத் துரத்திச் செல்லவேண்டும். ?????

 

1 hour ago, Kavi arunasalam said:

உங்களுக்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதில் ஆறுதல். 

இந்த சம்பவம் உங்களுக்கு படிப்பினையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு  எச்சரிக்கையும் கூட.

அதன்பின் நான் யோசித்தேன். இந்தநாட்டில் பட்டப்பகலில் நான் ஒருசிலநிமிடம் உறங்குநிலைக்குச் சென்றுவிட்டேன் என்றால் உயிர்ப் பாதுகாப்பற்ற நிலையில் இராணுவத்தைக்கண்டு எப்படிப் பெண்பகள் பதைத்திருப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்ப வரவேண்டாமோ????

இதென்ன கரைச்சலாய்க்கிடக்கு.....எங்கை நான் அப்பிடி சொன்னனான்?

und wie geht's ihnen? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கரைச்சலாய்க்கிடக்கு.....எங்கை நான் அப்பிடி சொன்னனான்?

und wie geht's ihnen? :cool:

மிக்க நலம் குமாரசாமி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இலண்டனில் ஸ்கூட்டரில் வந்து திருடுபவர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. அவர்களிடம் சுமேயும் அகப்பட்டது கவலையானது. பொலிஸ்காரர் இவர்களைப் பிடிக்க நேரத்தைச் செலவழிக்கப்போவதில்லை என்பதால் நாங்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்.

சிலோன்லை  இண்டியாவிலை வாழுற மக்கள் மாதிரி  லண்டனிலையும் வாழுறம் எண்டு நாசுக்காய் சொல்லுறீங்க...tw_tounge:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்குத் தெரியாததா. எந்த ஊர்க்காறர் நகைகள் அடுக்கி வீதிகளில் திரிந்தார்கள் என்று. நான் சாதாரணமாக்க் கொடிகூடப் போடுவதில்லை. ஒரு இரண்டரைப்பவுண் சங்கிலி கூடப் போட முடியாத நிலை என்றால் என்னத்துக்குச் சட்டமும் ஒழுங்கும்.

இப்படியொரு கருத்துக்குத்தான் ஒராள் வேண்டிகட்டிகொண்டு இருக்கிறா இப்போ நீங்களும் அதே வழியில் எவர் அடுக்கினால் உங்களுக்கு ஏதும் பாதிப்பா ? இரண்டரை என்ன 100 பவுனில் போடுங்க இங்குதான் தனியார் பாதுகாப்பு நிருவனம்கள் முடக்குக்கு முடக்கு இருக்கிறது பந்தாவா நகைகளை போட்டுகொண்டு பாதுகாவலர் புடை சூழ போய் வாருங்க . சும்மா அரசமரத்துக்கு கீல் நின்றுகொண்டு பறைவை எச்சம் போட்டுதாம் என்று வழமை போல் முகாரி பாடதீங்க.

2 hours ago, குமாரசாமி said:

சிலோன்லை  இண்டியாவிலை வாழுற மக்கள் மாதிரி  லண்டனிலையும் வாழுறம் எண்டு நாசுக்காய் சொல்லுறீங்க...tw_tounge:

வான் களவு போனதுக்கு போனில் கிரைம்  ரெபரன்ஸ் தரும் இங்குள்ள போலிஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் கதையைக் கேட்டதும்....இரண்டு சம்பவங்கள் எனக்கு உடனே நினைவுக்கு வந்தன!

அந்தக் காலத்து ரூட்டிங் புகையிரத நிலையத்துக்கு அருகில் ஒரு தமிழ்க்கடை புதிதாகத் திறக்கப்பட்டது! அங்கு ஒரு தமிழ்ப் பெண் காசாளராக வேலை செய்து கொண்டிருந்தார்! அந்தப் பக்கத்தால் வந்த ஒரு கறுவல்....அவரது கழுத்திலிருந்த தாலிக்கொடியை உருவிக்கொண்டு ஓடிவிட்டான்! 

ஐயோ....குய்யோ என்று குழறிய மனுசி....போலிசை அழைக்கப் போலிஸ் காரன்...அவவிடம்...அந்தக் கொடியின் பெறுமதி எவ்வளவு இருக்கும் எனக் கேட்கப் பதினைந்து பவுணுக்கு மனுசி விலை சொல்ல.....போலிஸ் காரனால்...அதை நம்பவே முடியவில்லை!

அதைக் களவெடுத்த கறுவலுக்கும் ...அந்தக் கொடியின் உண்மையான பெறுமதி...தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்!

 

இன்னொரு சம்பவம்....பாரிஸில்..எனது உறவினரது திருமணத்துக்குப் போயிருந்த போது...நடந்தது!

திருமணம் நடந்த மண்டபத்தில்....ஆண்கள்...பெண்களுக்கு...என கழிப்பறைகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன!

 

நான் கழிப்பறைக்குப் போன போது....ஒரு ஆண்...பெண்கள் கழிப்பறை வாசலில் காவலுக்கு நிண்டதை...அவதானித்தேன்!

அது வழமைக்கு மாறாக இருக்கவே...எனது உறவினரினரிடம்...விசாரிக்க...அவர் கூறிய பதில் ...கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது!

உள்ளே சென்ற அவரது மனைவியின் ...கழுத்தில் தொங்கிய தாலிக்கொடி...இருபத்தியாறு பவுணாம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.