Jump to content

ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது வட மாகாண சபையின் ஆயுட் காலம்


Recommended Posts

ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது வட மாகாண சபையின் ஆயுட் காலம்

 

 
 

வடமாகாண சபையின் ஆயுட் காலம் ஒக்டோபர்  25 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் மாகாணசபையின் இறுதி அமர்வு எதிர்கூரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாள் அன்று நடைபெறவுள்ளது என அவைத் தவைர் சீ,வி.கே சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

north.jpg

வடமாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக 2 அமர்வுகள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23 ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது. 

அன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளாகும். எனவே அதனை அறிந்து 23 ஆம் திகதி இறுதி அமர்வை ஒழுங்கமைத்துள்ளோம். 

மேலும் இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது. 

அது கண்ணதாசனின் பாடலுக்கமைய மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும். இறுதி அமர்வுக்கு முன் அமர்வு இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் என்றார்

வடமாகாணசபையின் 131 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

http://www.virakesari.lk/article/40226

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.