Jump to content

கடைசியாக ஜெயராஜுக்கும் புலிகளே தேவைப்படுகிறார்கள் தனது கடையைத் தொடர்ந்தும் கொண்டு நடத்துவதற்கு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக ஜெயராஜுக்கும் புலிகளே தேவைப்படுகிறார்கள் தனது கடையைத் தொடர்ந்தும் கொண்டு நடத்துவதற்கு !

இன்று இலங்கையை மையமாகக் கொண்டியங்கும் ஆங்கில இணைய செய்திச் சேவையான டெயிலி மிரரினைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாளாந்தச் செய்திகளோடு, செய்தியாளர் கருத்துக்கள் என்கிற பகுதியொன்றும் இருக்கிறது. அதில், கனடாவிலிருந்து எழுதிவரும் எஸ். பி. எஸ். ஜெயராஜ் அவர்களுக்கென்று ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டு, அவரும் அதில் தொடர்ச்சியாக அவ்வப்போது இடம்பெறும் முக்கிய அரசியல், பாதுகாப்பு நிகழ்வுகள் பற்றி எழுதிவருகிறார்.

அவ்வாறான ஒரு கட்டுரையில், அண்மையில் ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை பொலிசார் விசாரித்தபோது பிடிபட்ட ஆயுதங்கள், புலிகளின் சீருடைகள், கொடி ஆகியன பற்றிய ஆய்வுச் செய்தியொன்றினை அவர் எழுதியிருக்கிறார்.

முன்னால்ப் புலிகளான ஈச்சாம்பரம் மற்றும் அவருடனிருந்த இன்னும் நான்கு போராளிகள் பற்றி எழுதியிருக்கும் ஜெயராஜ், பலர் நினைத்ததற்கு மாறாக, அவர்கள் புலிகளின் மீளுருவாக்கத்திற்காகத்தான் வேலை செய்கிறார்கள் என்றும், முன்னரைப் போன்று ராணுவத்துடன் நேரடியாகவோ, கெரில்ல முறையிலோ அவர்களால் மீழெழும்புவதை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது என்றும், ஆனால், கிளேமோர்களை வைத்து அரசியல்வாதிகளையும், ராணுவ அதிகாரிகளையும் கொல்ல எத்தனிக்கலாம் என்றும் எதிர்வு கூறியிருக்கிறார்.

ஏனென்றால் புலம்பெயர் தேசங்களில் இன்றும் புலிச் சார்புடன் வாழ்ந்துவரும் பல தமிழர்கள் மீண்டும் புலிகள் எழுவதை விரும்புவதால், பெருமளவு பணத்தினை மீண்டும் அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாகவும், அவ்வாறான பணம் பலமுறை ஈச்சாம்பரம் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, வங்கிகளில் வைப்பிலிடப்பட்டதாகவும் கூறும் ஜெயராஜ், ரணில் - மைத்திரி அரசின் சுதந்திரமான நடமாட்டத்திகான கதவுகள் திறந்துவிடப்பட்டதையடுத்து பெருமளவு புலிச்சார்பு புலம்பெயர் தமிழர்கள் வடக்குக் கிழக்கிற்கு வந்துபோவதாகவும், அப்படியானவர்களை ஈச்சாம்பரம் அவர்கள் சிலநாள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து சந்தித்து வந்ததாகவும் கூறியிருக்கிறார்.

மறைமுகமாக ரணில் - மைத்திரி அரசைக் குறை சொல்லும் ஜெயராஜ், புலிகளோ அல்லது அவர்களது எச்சங்களோ மீண்டும் ஒரு வன்முறைக் கலாசாரத்தை வடக்குக் கிழக்கில் உருவாக்க தமிழ் மக்கள் இடம்தரப்போவதில்லை என்றும், உடனுக்குடன் நடைபெறும் இவ்வாறான நடவடிக்கைகள் பற்றி ராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துவருவதாகப் புலகாங்கிதப்படும் ஜெயராஜ், முச்சக்கரவண்டியிலிருந்து தப்பியோடிய ஈச்சாம்பரத்தை மீளக் கைதுசெய்வதற்கு மக்களின் உதவியே காரணமாக அமைந்தது என்றும் சொல்கிறார்.

ஈச்சாம்பரம் தப்பியோடிய பேரேறுச் சந்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது, 2001 ஆம் ஆண்டு இதேவீதியில் பிக்கப் வாகனம் ஒன்றில் பயணித்தபோது ராணுவத்தின் ஆள ஊடுருவும் படையணியின் கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி சங்கர் பற்றிய செய்தியுடன் ஆரம்பிக்கும் ஜெயராஜின் கட்டுரை, முச்சக்கரவண்டியில் சென்றவர்கள் புலிகள்தான், அவர்கள் மீளுருவாக்கத்திற்காகத்தான் முனைப்புடன் செயற்படுகிறார்கள், அதற்குப் புலம்பெயர் தமிழர்கள் உதவுகிறர்கள், இவ்வாறு நடப்பதற்கு ரணில் - மைத்திரியின் அரசின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான அனுமதி உதவுகிறதென்று முடிக்கிறார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றவேளை, தமிழர்கள் பலரின் மனதில் எழுந்த சந்தேகம் ஒன்றுதான். அதாவது, மகிந்தவும் கோத்தபாயவும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக புலிகளை மீளுருவாக்கி, தற்போதைய அரசின்மீது சிங்களவரின் அதிருப்தியை ஏற்படுத்தி, மீண்டும் ஒரு கொலைக் கலாசாரத்தை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்பதுதான் அது.

ஆனால், புலிகள் இருந்த காலத்தில் அவர்களை விமர்சிப்பதன்மூலம் தன்னை வளர்த்துக்கொண்ட ஜெயராஜ், இன்று அவர்கள் இல்லாத நிலையில்க் கூட, தனது பத்திரிக்கா வியாபாரத்தை தொடர்ந்து நடத்த புலிகளை மீள உருவாக்க எத்தனிக்கிறார் என்பதுதான் உண்மை.

 

http://www.dailymirror.lk/article/Seizure-of-Tiger-arsenal-in-North-renews-fears-of-an-LTTE-revival-attempt-152031.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கனடாவில் இருந்தவாறே இலங்கையில் இருப்பது போல எழுதி, அலம்பறை பண்ணுவார்.

புலிகள் குறித்து எழுத விசயங்கள் இல்லாததால், ஜெமினி, சாவித்திரி கதை, சிங்கள சினிமா என்று எழுதுகிறார்.

என்ன, விலாவாரியா எழுதுவார்.

கனடாவில், இவரது கட்டுரை ஒன்று தொடர்பில், புலிகள் ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டதனால், புலிகள் மீது கோபம் கொண்டிருந்தார். இதனால் புலி ஆதரவு சீமான் மேல் வன்மம் இருந்தது.

கனடாவில் இருந்து டீபோர்ட் பண்ணப் படுபவர்கள் விபரம் எதுவுமே இமிகிரேஷன் வெளியே சொல்லக் கூடாது என்பது சட்டம். 

பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல, சீமான் குறித்து இவர் பதிவு இடும் போது... செபாஸ்டியன் சைமன் என்ற பெயரில் கடவுசீட்டு வைத்திருந்த இந்திய சினிமா டைரக்டர் ...... என்று இவர் விட்ட புளுகு மூட்டையை கனடா பத்திகைகளுக்கு இலங்கை தூதரக பிரசார குழு அனுப்ப....

அதை இந்திய பத்திரிகைகள் பிக் அப் பண்ணின.... இந்தியாவில் இந்த டீபோர்ட் டேஷன் தொடர்பான இமிகிரேஷன் விதிகள் இல்லாததால்.... உண்மை என நம்பி.... அதையே சுப வீரபாண்டியன் போன்ற படித்தவர்கள் கூட நம்பும் அல்லது அரசியல் காரணமாக பயன்படுத்தும் அளவில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அதை இந்திய பத்திரிகைகள் பிக் அப் பண்ணின.... இந்தியாவில் இந்த டீபோர்ட் டேஷன் தொடர்பான இமிகிரேஷன் விதிகள் இல்லாததால்.... உண்மை என நம்பி.... அதையே சுப வீரபாண்டியன் போன்ற படித்தவர்கள் கூட நம்பும் அல்லது அரசியல் காரணமாக பயன்படுத்தும் அளவில் உள்ளது.

அவர்கள் மட்டுமா எங்கடையள் ?

Link to comment
Share on other sites

சுமந்திரன் கனடா சென்றால் இவரின் வீட்டில் தான் தங்குவார் என கருத்துக்களத்தில் வாசித்த நினைவு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Athavan CH said:

சுமந்திரன் கனடா சென்றால் இவரின் வீட்டில் தான் தங்குவார் என கருத்துக்களத்தில் வாசித்த நினைவு...

 இருவரும் உறவினர் என்று வாசித்தது எங்கோ ஆதவன் சொன்னதும் கறல் தட்ட வேண்டி இருக்கு . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.