Jump to content

2020ஆம் ஆண்டுக்குப் பிறகாவது நாட்டின் தலைவிதி மாறாதா?


Recommended Posts

2020ஆம் ஆண்டுக்குப் பிறகாவது நாட்டின் தலைவிதி மாறாதா?

 
 
kotha.jpg

 

 

எதிர்­வ­ரும் 2020ஆம் ஆண்­டி­லு­ம் இந்த நாட்­டின் அர­சி­யல் குழப்­பங்­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­காதுவிட்­டால், நாட்­டின் நிலை சீர்­செய்ய முடி­யா­த­வாறு மிக மோச­மான கட்­டத்தை எட்டி­வி­டும்.

2020ஆம் ஆண்டு அரச தலை­வர் மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. இவற்­றின் முடி­வு­கள் நாட்­டின் எதிர்­கா­லத்­தையே தீர்­மா­னிக்­கப் போகின்­றன. அது மட்­டு­மல்­லாது அர­சி­யல்­வா­தி­க­ளின் இருப்­பை­யும் தீர்­மா­னிக்­கப் போகின்­றன.

மகிந்த தரப்­பில் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளரை அறி­விப்­ப­தில் நீண்ட தாம­தம் காணப்­ப­டு­கின்­றது. ஆரம்­பத்­தில் கோத்­த­பாய போட்­டி­யி­டவுள்ளதாகத் தக­வல்­கள் வெளி­யா­கின. அவ­ரும் அதைப் பகி­ரங்­க­மாக உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­த­போ­தும், மகிந்­தவை ஆத­ரிக்­கின்ற சில­ரி­ட­மி­ருந்து அதற்கு எதிர்ப்­புக் கிளம்­பி­யது. வாசு­தேவ நாண­யக்­கார போன்ற மகிந்­த­வு­டன் மிக நெருங்­கி­ய­வர்­கள்­கூட கோத்­த­பா­யவை அரச தலை­வர் வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்­குத் தமது எதிர்ப்பை வெளி­யிட்­ட­னர்.

இதே­வேளை பெளத்­த­தே­ரர் ஒரு­வர் கோத்­த­பாய ஹிட்­லர் போன்று ஆட்­சி­பு­ரிய வேண்­டு­மென வேண்­டு­கோள் விடுத்­தமை நாட்­டில் பெரும் எதிர்ப்­பு­ணர்­வு­க­ளைத் தோற்­று­வித்­து­விட்­டது. தேர­ரின் இந்த வேண்­டு­கோள் ஹிட்­ல­ரைப் போன்று ஆட்சி செய்­வ­தற்கு கோத்­த­பா­யவே பொருத்­த­மா­ன­வர் என்­ப­தைச் சொல்­லா­மல் சொல்­லி­விட்­டது. இந்­தத் தேரர் ஹிட்­ல­ரைப் பற்­றித் தெரிந்­து­கொண்­டி­ருந்­தால் அவ்­வாறு வேண்­டு­கோள் விடுத்­தி­ருக்க மாட்­டார் என்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது.

ஹிட்­லர் போன்று கோத்­த­பாய செயற்­ப­ட­வேண்­டும் என்ற கருத்­தால் எழுந்த சர்ச்சை

அது­மட்­டு­மல்ல சர்­வா­தி­கார ஆட்­சிக்கு இந்த நாட்­டில் என்ன தேவை எழுந்­துள்­ளது என்­ப­தும் தெரி­ய­வில்லை. ஹிட்­லர் செய்த கொடு­மை­க­ளைப் பல ஆண்­டு­கள் கழிந்­து­விட்ட போதி­லும் உல­கம் மறக்­க­வில்லை. ஆனால் பெளத்த தேரர் ஹிட்­லரை மறக்­கா­மல் இருப்­பது விந்­தை­தான். அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த போட்­டி­யிட முடி­யாது என்­ப­தால் வேறு எவ­ரா­வது ஒரு­வர்­தான் போட்­டி­யிட வேண்­டி­யி­ருக்­கும்.

ஐ.தே.கட்­சிக்­குள் ரணி­லின் பிடி தளர்­கி­றதா? என்று எழும் சந்­தே­கம்

மறுபக்­கத்­தில் பார்த்­தால், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அரச தலை­வர் தேர்­த­லில் கள­மி­றங்­கு­வார் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதி­லும், அவர் போட்­டி­யி­டு­வ­தில் கட்­சிக்­குள்­ளேயே எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இள மட்டத் தலை­வர்­க­ளில் ஒரு­வர் போட்­டி­யிட்­டால் வெற்றி வாய்ப்புப் பிர­கா­ச­மாக இருக்­கும் என்­பது அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த பல­ரது கருத்­தா­க­வுள்­ளது. குறிப்­பாக சஜித் பிரே­ம­தாஸ போட்­டி­யி­டு­வ­தைப் பல­ரும் விரும்­பு­வ­தா­கத் தெரி­கின்­றது. இவ­ரது தந்­தை­யார் மறைந்த அரச தலை­வ­ரான ரண­சிங்க பிரே­ம­தாஸ என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஐக்­கிய தேசி­யக்­கட்சிமேல் மட்­டத் தரப்­பி­ன­ரது கட்சி என்ற மாயையை நீக்கிக் கிரா­மப்­புற மக்­க­ளி­டத்­தி­லு­ம் அதைக் கொண்டு சென்­ற­வர் முன்­னாள் அரச தலை­வர் பிரே­ம­தாஸ என்­பதை எவ­ரு­ம் மறந்­து­விட முடி­யாது. ஏழை மக்­க­ளுக்­கான வீட்­டுத் திட்­டங்­களை நிறை­வேற்­று­வ­தில் அவர் முனைப்­பு­டன் செயற்­பட்­டார்.

மிக­வும் பின் தங்­கிய கிரா­மப்­பு­றங்­க­ளில் மாதி­ரிக் கிரா­மங்­களை அமைத்­துக் கொடுத்­தார். சஜித் பிரே­ம­தா­ஸ­வும் தந்­தை­யின் வழி­யில் செயற்­ப­டு­வ­தைக் காண முடி­கி­றது. மகிந்­த­வின் கோட்­டை­யான அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தில் ஐக்­கிய தேசி­யக் கட்சி செல்­வாக்­கு­டன் இருப்­ப­தற்கு சஜித் பிரே­ம­தா­ஸ­வின் கடு­மை­யான உழைப்பே கார­ண­மா­கும். இந்த நிலை­யில் அரச தலை­வர் தேர்­த­லில் அவர் போட்­டி­யிட்­டால் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு அனு­கூ­ல­மாக இருக்­கு­மென்­பது பல­ரது கணிப்­பா­கும்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன தரப்பு மகிந்த தரப்­பு­டன் ஒன்­றித்துப் போய்­வி­டுமா?

இதே­வேளை, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், மகிந்­த­வின் கட்­சி­யும் இணைந்து கொள்­வ­தற்­கான சாத்­தி­யக் கூறு­கள் இருப்பதை மறுத்­து­விட முடி­யாது. அரச தலை­வ­ரின் பக்­கம் பல­வீ­ன­மான நிலை காணப்­ப­டு­வ­தால், அவ­ரு­டன் உள்­ள­வர்­கள் மகிந்­த­வின் பக்­கம் தாவு­வ­தற்கே விரும்­பு­வார்­கள். அர­சி­யல்­வா­தி­கள் எப்­போ­துமே தமது நலன்­க­ளைப் பேணு­வ­தி­லேயே குறி­யாக இருப்­பார்­கள். இத­னால் காற்று வீசு­கின்ற பக்­கம் செல்­வ­தையே அவர்­கள் விரும்­பு­வார்­கள்.

இதே­வேளை மகிந்­த­வின் கால­டி­யில் இருந்து ஒரு காலத்­தில் சேவ­கம் புரிந்த முன்­னாள் பிர­தி­ய­மைச்­ச­ ரான மேர்­வின் சில்வா தெரி­வித்த சில கருத்­துக்­கள் சில­ரின் சுய­ரூ­பத்­தைத் தோலு­ரித்­துத் காட்­டி­விட்­டன. தாம் அரு­கில் இருக்­கும்­போதே ஒரு­வ­ரைச் சுட்­டுக் கொல்­லு­மாறு கோத்­த­பாய உத்­த­ரவு பிறப்­பித்­த­தாக அவர் தெரி­வித்­தமை ராஜ­பக்சாக்­க­ளைத் தெளி­வாக அடை­யா­ளம் காட்­டி­விட்­டது.

சில­வேளை கோத்­த­பாய ஆட்­சிக்கு வந்­தால் என்ன நடக்­கும் என்­ப­தை­யும் அது கோடி­காட்­டி­யுள்­ளது. மேர்­வி­னின் கருத்து ராஜபக்ச தரப்பினரது உண்மை முகத்தை எடுத்­துக் காட்­டி­விட்­டது.

வடக்கு அரசியல்

வடக்கை எடுத்­துக் கொண்­டால், விக்­னேஸ்­வ­ர­னுக்­குப் பாத­க­மான அம்­சங்­களே காணப்­ப­டு­கின்­றன. முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரனை அவர் பதவி நீக்­கம் செய்­த­மைக்கு எதி­ராக நீதி­மன்­றம் தடை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளமை அவ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில் உருப்­ப­டி­யா­ன­தான இருக்­கப்­போ­வ­தில்லை.

டெனிஸ்­வ­ர­னின் மீள் வருகை நிர்­வாக ரீதி­யில் மட்­டு­மல்­லாது, அர­சி­யல் ரீதி­யி­லு­ம் அவ­ரைப் பாதிக்­கவே செய்­யும். மாகாண சபைத் தேர்­தல் விரை­வில் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில் இவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­டு­கின்­றமை இவ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில் நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை.

தற்­போது நாட்­டில் நில­வு­கின்ற அர­சி­யல் குழப்­பம் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை மட்­டு­மல்­லாது இன ஒற்­று­மை­யை­யும் வெகு­வா­கப் பாதித்து விட்­டது. இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வும் எட்ட முடி­யாத தொலை­வுக்­குச் சென்­று­விட்­டது. 2020ஆம் ஆண்டு இடம்­பெ­றப்­போ­கும் தேர்­தல்­கள் நல்­ல­தொரு முடிவை வழங்­கும்­போ­து­தான் நாட்­டின் குழப்­பங்­க­ளுக்கு ஒரு தீர்வு கிடைக்­கும். இதில் தவறு ஏற்­ப­டு­மா­னால், நாட்­டின் பாதகமான தலை­வி­தியை எவ­ரா­லும் மாற்­றி­விட முடி­யாது.

https://newuthayan.com/story/12/2020ஆம்-ஆண்டுக்குப்-பிறகாவது-நாட்டின்-தலைவிதி-மாறாதா.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.