Jump to content

நிதி திரும்­பிச் செல்­வ­தற்கு நாம் எது­வும் செய்ய முடி­யாது – அவைத் தலை­வர் சி.வி.கே.!!


Recommended Posts

நிதி திரும்­பிச் செல்­வ­தற்கு நாம் எது­வும் செய்ய முடி­யாது – அவைத் தலை­வர் சி.வி.கே.!!

 
 
29735536_Unknown-780x405.jpg

 

 

சங்­கி­லி­யன் தோப்பு, மந்­தி­ரி­மனை, ஐமுனா ஏரிக்­கு­ளம் போன்­றவை உலக வங்­கி­யின் தந்­தி­ரோ­பாய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தில் புரா­தனச் சின்­னங்­க­ளைப் பாது­காக்­கும் திட்­டத்­தில் உள்­வாங்­கப்­பட்­டது. இவற்­றைச் சுவீ­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யில் பல இடர்­பா­டு­கள் இருப்­ப­தால் இந்­தத் திட்­டத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி திரும்­பிச் செல்­லும் நிலமை ஏற்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் அமர்வு நேற்று இடம்­பெற்­றது. ஆளும் கட்சி உறுப்­பி­னர் இ.ஜெய­சே­க­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ர­னி­டம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

‘யாழ்ப்­பா­ணம் புரா­தன நல்­லூர் இராசதா­னி­யில் அமைந்­துள்ள சங்­கி­லி­யன் தோப்பு, மந்­தி­ரி­மனை, ஜமுனா ஏரிக்­கு­ளம் போன்ற வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இடங்­களை மறு­சீ­ர­மைத்து, அபி­வி­ருத்தி செய்து எமது புரா­தன இடங்­க­ளைப் பாது­காப்­ப­தற்கு உலக வங்­கி­யின் தந்­தி­ரோ­பாய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தில் உள்­வாங்­கப்­பட்­டன.

ஆனால் அந்­தக் காணி உரி­மம் தொடர்­பாக சர்ச்சை இருப்­ப­த­னால் அந்­தக் காணி­யைச் சுவீ­க­ரிப்­புச் செய்­வ­தற்­காக கொழும்பு அர­சின் காணி அமைச்­சுக்கு முத­ல­மைச்­சர் அமைச்­சி­னால் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக நான் அறி­கின்­றேன்.

அந்­தக் காணி சுவீ­க­ரிப்­புத் தொடர்­பான தற்­போ­தைய நிலைப்­பாடு என்ன?, முத­ல­மைச்­சர் அமைச்­சி­னால் தொடர் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதா?, அந்­தக் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­டாத பட்­சத்­தில் உலக வங்­கி­யி­னால் ஒதுக்­கப்­பட்ட நிதி­ தி­ரும்­பிச் செல்­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் ஏற்­ப­டும்.

எமது வர­லாற்­றுச் சின்­னங்­கள் அழி­வ­டை­யக் கூடிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­ப­டும். இந்த விட­யத்­தில் முத­ல­மைச்­ச­ரு­டைய அமைச்சு விரைந்து செயற்­ப­ட­வேண்­டும்’ என்று ஜெய­சே­க­ரன் கேள்வி முன்­வைத்­தி­ருந்­தார்.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி காணி சுவீ­க­ரி ப்­புக்­கான அறி­வு­றுத்­தல் கொழும்பு அர­சின் அமைச்­சுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார். தொடர் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இந்த விட­யம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், அந்­தப் பகு­தி­யில் மிகக் குறு­கிய தூரத்­தில் இருப்­ப­வன் நான். இந்த விட­யங்­களை மாந­கர சபை அதி­கா­ரி­யாக இருந்து கையாண்­டி­ருக்­கின்­றேன். இந்­தக் காணி­கள் தனி­யார் காணி­க­ளைச் சுவீ­க­ரிப்­பது போன்று சுவீ­க­ரிக்க முடி­யாது. காணி­கள் நம்­பிக்­கைப் பொறுப்­புச் சபைக்கு உரி­யது.

நம்­பிக்­கைப் பொறுப்­புச் சபை­யின் உரி­மை­யா­ளர்­கள் என்று சொல்­லிக் கொள்­ப­வர்­க­ளுக்­கும் இன்­னொரு தரப்­புக்­கும் இடை­யில் நீதி­மன்­றில் வழக்கு நிலு­வை­யில் இருக்­கின்­றது. இப்­ப­டி­யொரு சூழ­லில் இதனை இல­கு­வாக்க தீர்க்க முடி­யாது என்று கூறி­னார்.

‘இந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுக்க முன்­னர் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில், மாவட்­டச் செய­லர் தலை­மை­யில் கலந்­து­ரை­யா­டல் நடந்­தது. துறை­சார் அதி­கா­ரி­கள் கலந்து கொண்­ட­னர். அவர்­க­ளுக்கு சில­வேளை இந்த விட­யங்­கள் தெரி­யா­மல் இருந்­தி­ருக்­க­லாம்’ என்று ஜெய­சே­க­ரன் கூறி­னார்.

அவர்­க­ளுக்கு தெரி­யா­மல் இருந்­தற்கு நாங்­கள் ஒன்­றும் செய்ய முடி­யாது. அவர்­க­ளுக்கு தெரி­யாது என்­றால் ஏன் செய்­தார்­கள்? என்று அவைத் தலை­வர் கேள்வி எழுப்­பி­னார்.
நீங்­கள் சொல்­வ­தைப் பார்த்­தால் இந்­தத் திட்­டம் நடை­பெ­றாது போல் இருக்­கின்­றது என்று கேள்­வியை முன்­வைத்த உறுப்­பி­னர் ஜெய­சே­கர் கூற, அதற்கு நான் ஒன்­றும் செய்ய முடி­யாது என்று பதி­ல­ளித்­தார் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்.

https://newuthayan.com/story/09/நிதி-திரும்­பிச்-செல்­வ­தற்கு-நாம்-எது­வும்-செய்ய-முடி­யாது-அவைத்-தலை­வர்-சி-வி-கே.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.