Jump to content

கல்வியில் சாதிக்க மரபணுக்கள் உதவுகின்றனவா? ஆராய்ச்சியில் புதிய முடிவுகள்


Recommended Posts

கல்வியில் சாதிக்க மரபணுக்கள் உதவுகின்றனவா? ஆராய்ச்சியில் புதிய முடிவுகள்

காய்லி ரிம்ஃபெல்டு &மார்கெரிட்டா மலான்சினி

ஒரு குழந்தையின் மரபணுக்கள், பள்ளியில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கல்வி கற்கும் குழந்தைபடத்தின் காப்புரிமைEYE UBIQUITOUS/UIG VIA GETTY IMAGES

பள்ளிகளில் குழந்தைகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சமீப காலங்களில், குழந்தைகளின் திறமைகள் வித்தியாசப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு காரணம் அவர்களது மரபணுக்கள்தான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஆரம்பப் பள்ளியில், கட்டாயக் கல்வி முடிவுறும் தருவாயில், பலதரப்பட்ட பாடங்களில் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவதில் மரபணுக்கள் பங்கு வகிக்கின்றன.

மரபணுக்கள் மூலம் குழந்தைகளின் கற்றல் குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து எதிர்காலத்தில் தீர்வு காணலாம்” ஆய்வாளர்கள், .

ஆனால் ஒரு குழந்தை தொடர்ந்து பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மரபணுவும், சுற்றுச்சூழல் காரணியும் எப்படி பங்காற்றுகின்றன என்பது தெரியவில்லை.

இதைப் பற்றி ஆராய, இங்கிலாந்தைச் சார்ந்த 6,000 ஜோடி இரட்டையர்கள் "இரட்டையர்களின் (Twins) ஆரம்ப கால வளர்ச்சி" குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களது ஆரம்பப் பள்ளி முதல் கட்டாயக் கல்வி நிறைவு பெறும் வரையிலான தேர்வு மதிப்பெண்கள் ஆராயப்பட்டன.

இந்த புதிய ஆய்வின்படி இரட்டையர்களின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆரம்பப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் குழந்தைகள், கட்டாயக் கல்வி முடிவுறும் நேரத்தில் நடத்தப்படும் தேர்வுகளிலும் நல்ல செயல் திறனைக் காட்டுகிறார்கள்.

இரட்டை குழந்தைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரட்டையர்களை ஆய்வு செய்ததின் மூலமாக மரபணுக்கள் எந்த அளவுக்கு கல்வியில் சாதனை புரிவதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை உறுதிப் படுத்த முடிந்தது.

இரட்டையர்களைப் பயன்படுத்துவதின் மூலமாக, மரபணு காரணிகளின் வித்தியாசங்கள் குறித்த விகிதங்களைக் கணக்கிட முடிந்தது.

ஒரு குறிப்பிட்ட பண்பை எடுத்துக் கொண்டால், ஒரே மாதிரியான இரட்டையர்களின் மரபணு 100 சதவீதம் ஒத்துப் போகிற அதே வேளையில், மாறுபட்ட இரட்டையர்களின் மரபணுக்கள் தோராயாமாக 50 சதவிகிதம்தான் ஒத்துப்போகின்றன.

மரபணு பற்றிய கணிப்பு மற்றும் சுற்றுச்சூழல்களின் கணிப்பு குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகளைக் கண்டறியும் ஒரு கருவியாக அமையும்” ஆய்வாளர்கள், .

அதாவது ஏனைய உடன் பிறந்தவர்களைப் போல. 'பள்ளிக் கல்வியில் சாதனை' போன்ற குறிப்பிட்ட சில பண்புகளில், மாறுபட்ட இரட்டையர்களை விட, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒத்துப் போனால், அது மரபணுக்களால் ஏற்படுகிறது என்று நாம் யூகிக்கலாம்.

இதனை வைத்து குறிப்பிட்ட அந்தப் பண்பு எவ்வாறு பாரம்பரியமாக தொடர்கிறது அல்லது எந்த விகிதாசாரத்தில் வித்தியாசப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியும்.

70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையில், கல்விச் சாதனையின் தரம் ஒரே மாதிரியாக இருக்கையில், இந்த நிலைத் தன்மையை எந்தக் காரணிகள் நிர்ணயிக்கின்றன என்பதைப் பார்த்தோம்.

படிக்கும் சிறுவன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

70 சதவிகித நிலைத் தன்மை மரபணுவாலும், 25 சதவிகிதம் இரட்டையர்களின் ஒரே மாதிரியான சூழலாலும் - அதாவது ஒரே குடும்பத்தில் வளர்வது மற்றும் ஒரே பள்ளியில் படிப்பது போன்ற காரணிகளாலும் தீர்மானிக்கப்படுவதாகக் கண்டறிந்தோம். மீதம் உள்ள 5 சதவிகிதம், மாறுபட்ட ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற மாறுபட்ட சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.

கல்விச் சாதனைகளில் வித்தியாசம் ஏற்படுவது - அதாவது ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்விகளுக்கு இடையில், தரம் கூடவோ குறையவோ செய்வதற்கான பெரும்பான்மையான காரணம் இரட்டையர்கள் மாறுபட்ட சூழல்களில் வாழ்வதுதான் என்பதைக் கண்டறிந்தோம்.

குழந்தைகளின் திறமைகள் வித்தியாசப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு காரணம் அவர்களது மரபணுக்கள்தான்” ஆய்வாளர்கள், .

பள்ளிகளில் குழந்தைகளின் திறமையில், கணிசமான அளவிற்கு மரபணு காரணமாக இருக்கிறது என்பதை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், இரட்டையர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவங்களில், வாய்மொழியாகவும் ஏனைய வழிகளிலும் சோதனை செய்யப்பட்டதில், மரபணு என்பது கணிசமான அளவிற்கு - அதாவது 60 சதவிகித அளவிற்குக் காரணியாக இருப்பதைக் கண்டுபிடித்தோம்.

கல்வி கற்போர்படத்தின் காப்புரிமைEDUCATION IMAGES/UIG VIA GETTY IMAGES

ஒரு இரட்டையர்களின் தரம் கூடவோ குறையவோ செய்வதற்கு மாறுபட்ட ஆசிரியர்களிடம் கற்பது போன்ற சூழல்கள் காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இலங்கைஇலங்கை

இரட்டையர்கள் பற்றிய ஆய்வுகள், பெரிய குழுக்களின் குறிப்பிட்ட பண்புகள் பற்றி மதிப்பீடு செய்கின்ற வேளையில், சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் தனிப்பட்ட மனிதர்களில் மரபணுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி வெளிப்படுத்துகின்றன.

ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்விகளுக்கு இடையில், தரம் கூடவோ குறையவோ செய்வதற்கான பெரும்பான்மையான காரணம் இரட்டையர்கள் மாறுபட்ட சூழல்களில் வாழ்வதுதான்” ஆய்வாளர்கள், .

சமீபத்தில், மரபணு குறித்த ஆய்வுகளுக்கான குழு (GWAS) மேற்கொண்ட ஆய்வில், கல்விச் சாதனையில் மரபணு மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை அடையாளம் காணுவதில் குறிப்பிட்ட அளவிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இந்த ஆய்வுகள் மரபணுக்களின் குறிப்பிட்ட பண்புகள் குறித்துத் தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும், தனிப்பட்டவர்களின் பள்ளி செயல்திறனைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு மரபணுவும் மிகக் குறைந்த அளவே (0.1% க்கும் குறைவாகவே) விளக்குகிறது.

சமீபத்தில், இன்னும் சக்தி வாய்ந்த முறையில் ஆராயும் முறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தனித்தனியாக மரபணு மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கான மரபணுக் குறியீடுகளை ஒன்று திரட்டி GWAS ஆய்வு செய்திருக்கிறது.

படிப்பில் மும்முரம்படத்தின் காப்புரிமைMICHEL GILE/GAMMA-RAPHO VIA GETTY IMAGES

இந்த மதிப்பீடைப் பயன்படுத்தி, இன்னும் துல்லியமாக - ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத மனிதர்களிடையே, பள்ளிகளில் செயல்திறன் குறித்தும், அவர்களது பண்புகளில் ஏற்படும் வித்தியாசம் குறித்தும் ஆராயப்படுகிறது.

எங்களது புதிய ஆய்வின் ஒரு பகுதியாக, இதற்கு முந்தைய GWAS ஆய்வின் அடிப்படையிலான கல்வி குறித்த மரபணுக் குறியீடுகளின் தகவல்களைப் பயன்படுத்தினோம்.

நாங்கள் 6000 ஜோடி இரட்டையர்களுக்கான மதிப்பெண்ணைத் தனித் தனியாகக் (அதாவது இந்த ஆய்வில் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத வகையில்) கணக்கிட்டோம்.

அது அவர்கள் பள்ளிகளில் எவ்வாறு செயல்திறன் ஆற்றுவார்கள் என்பதைக் கணித்தது. இந்தக் கணிப்புகள்படி, ஆரம்பப் பள்ளிகளில் 4 சதவீதமும் பள்ளிக் கல்வி நிறைவுறும் தருவாயில் 10 சதவீதமும் வித்தியாசப்பட்டன.

70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது” ஆய்வாளர்கள், .

இது முன்பு நாங்கள் மேற்கொண்ட இரட்டையர்கள் பற்றிய ஆய்வின் முடிவை - அதாவது எவ்வாறு ஒரே மரபணு கொண்ட குழந்தைகள் , சாதிப்பதில் ஒவ்வொரு நிலையிலும் வித்தியாசப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.

பிறந்தவுடன் மரபணு சோதனை மேற்கொள்வதால், கற்றல் தொடர்பாக குழந்தைகளின் மரபணு மூலம் ஆபத்து ஏதும் இருப்பது கண்டறியப்பட்டால், அவைகளில் கவனம் செலுத்த இயலும்.

மரபணுக்கள் பள்ளிக் கல்வி முழுவதுமான காலக்கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு கூடுதலான ஊக்கத்தைக் கொடுப்பது குறித்து எங்கள் ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது.

இலங்கைஇலங்கை

எதிர்காலத்தில், மரபணு பற்றிய கணிப்பு மற்றும் சுற்றுச்சூழல்கள், அதாவது அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஏற்படுத்தும் தாக்கம், குடும்பச்சூழல், பள்ளியின் பண்புகள் - பற்றிய கணிப்பு ஆகியவை குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகளைக் கண்டறியும் ஒரு கருவியாக அமையும்.

அதன் மூலம் அவர்களுக்குத் தனித் தனியான கற்றல் முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி கொடுக்கலாம்.

எழுதும் குழந்தைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எதிர்காலத்தில் மரபணுக்கள் மூலம் குழந்தைகளின் கற்றல் குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உதவ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக, பிறந்தவுடன் செய்யப்படுகிற மரபணு சோதனையால், கற்றல் தொடர்பானவற்றில் குழந்தைகளின் மரபணு மூலம் ஆபத்து ஏதும் இருப்பது கண்டறியப்பட்டால், அவைகளில் கவனம் செலுத்த இயலும்.

அந்த வகையில், வரும் முன்னர் காத்துக் கொள்வது வெற்றியைத் தரும் என்பதால், பிற்கால வாழ்க்கைப் பிரச்சினைகளை முன்னரே கண்டறிந்து, குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பெரும்பாலும் தடுக்க இயலும்.

https://www.bbc.com/tamil/global-45509177

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.