Jump to content

கஜூவும் அவாவும்


Recommended Posts

கஜூவும் அவாவும்
மொஹமட் பாதுஷா /

இலங்கையின் தேசிய விமான சேவையான, ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த மரமுந்திரிகைப் பருப்பு (கஜூ) பற்றி, ஜனாதிபதி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதையடுத்து, அது தொடர்பில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் போல, முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படுவதையும் காண முடிகின்றது.   

‘கஜூ’ விடயத்திலேயே, நாட்டின் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இவ்வளவு அக்கறை செலுத்துவது பாராட்டத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதும் என்பதில் மறுகருத்தில்லை.   

ஆனால், இதே அக்கறையை, நாட்டில் இடம்பெறுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில், அரசாங்கம் வெளிப்படுத்துகின்றதா? இவ்விடத்தில் எழுகின்ற, தர்க்க ரீதியான கேள்வி இதுவாகும்.   
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு, கஜூ விநியோகம் செய்பவரை இடைநிறுத்த குறித்த விமான சேவை, தீர்மானம் எடுத்திருப்பதால், நாட்டில் உள்ள சாதாரண மக்களின் வாழ்வியலில், பெரும் சாதக நிலைமைகள் ஏற்படப் போவதில்லை.   

சாதாரண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், விலையேற்றங்கள், இனமுறுகல்கள், இனவாதம் போன்ற அன்றாடப் பிரச்சினைகள் தீர்ந்து விடப் போவதில்லை. 

அதாவது, தேசிய இனப்பிரச்சினை, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இதைவிட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய தேவையிருந்தும், அரசாங்கத்திடமிருந்து அவ்வாறான போக்குகளைக் காண முடியவில்லை.   

சில தினங்களுக்கு முன், ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற விவசாய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கன் விமான சேவையில், தனக்கு வழங்கப்பட்ட மரமுந்திரிகைப் பருப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார். “நான் நேபாளத்திலிருந்து நாடு திரும்பிக் கொண்டிருந்த போது, விமானத்தில் அவர்கள் கஜூ தந்தார்கள்; அது மனிதன் உண்ணும் தரமன்று. அதை நாய் கூடத் தின்னாது. யார் இந்தத் தரமற்ற கஜூவுக்கு ஒப்புதல் அளித்திருக்கின்றார்கள்? யார் இதற்குப் பொறுப்பு?” என்று விமர்சன ரீதியாக, ஜனாதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.   

image_89740499d0.jpg

இவ்விவகாரம் அரசியல், சமூக, வணிக அரங்கில் பேசுபொருளானதால், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அந்நிறுவனம் விரைந்து நடவடிக்கை எடுத்தது. தம்மிடம் இருந்த கஜூ இருப்புகள் அகற்றப்பட்டதாகவும் கஜூ விநியோகம் செய்யும், டுபாயைச் சேர்ந்த கொம்பனியின் விநியோக ஒப்பந்தத்தை, இடை நிறுத்தியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்திருக்கின்றது.   

2014ஆம் ஆண்டு, கொரிய விமான சேவை ஒன்றின் உரிமையாளரின் மகளான ஹெதர் சோ, அந்நிறுவனத்தின் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, தனக்கு ‘மெகடாமியா’ என்ற பருப்பைத் தட்டில் வைத்து வழங்காமல், பிரிக்கப்படாத பக்கெட்டுடன் வழங்கியதால் ஆத்திரமுற்று, அந்த விமானப் பணிப் பெண்ணை வெளியேற்றுவதற்காக, புறப்பட்ட விமானநிலைய வாயிலுக்கு, மீண்டும் விமானம் செல்ல வேண்டுமென்று உத்தரவிட்டார். இதனால் அவர், பின்னர் பல சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டார்.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தளவுக்கு ஆக்ரோஷமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. என்றாலும், ஸ்ரீ லங்கன் விமான சேவையின் கஜூ தொடர்பான அவருடைய விமர்சனமும், 2014 இல் இடம்பெற்ற மேற்குறிப்பிட்ட சம்பவத்தையே ஞாபகப்படுத்துகின்றது.   

ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு, பாவனைக்குதவாத கஜூவைக் கொடுத்துவிட்டு, இப்போது உப்புக்குச்சப்பாக விளக்கமளிப்பது பொறுப்பற்ற செயற்பாடாகும். ஜனாதிபதிக்கே பாவனைக்குதவாத பண்டத்தைக் கொடுத்தவர்கள், ஏனைய பயணிகளுக்குக் கொடுக்கும் உணவில், உரிய தரத்தைப் பேணுவார்களா? என்ற கேள்வியும் எழுகின்றது.   

எது எவ்வாறிருப்பினும், ஜனாதிபதி மைத்திரி, கஜூ விடயத்தில் (கூட) அவதானமாக இருந்து, அதை வெளியுலகுக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது, நன்றி பாராட்டுதலுக்கு உரியதும் மனமகிழ்ச்சியைத் தருவதும் ஆகும்.   

ஆனால், நாட்டில் நடைபெற்ற, இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இன்னபிற தலையாயதும் முக்கியத்துவம் மிக்கதுமான விடயங்களில், ஜனாதிபதியோ, பிரதமரோ, பொறுப்பு வாய்ந்தவர்களோ இந்தளவுக்கு அக்கறை எடுத்துச் செயற்படாதது, ஏன் என்ற கேள்வி, சாதாரண மக்களின் பெரும்பாலானோர் மனங்களில், உருவாகியிருப்பதாகச் சொல்ல முடியும்.  

 பொருட்கள், சேவைகளின் விநியோகம், அவற்றின் தரம், விலைநிர்ணயம் தொடக்கம், இனவாதம் தொட்டு தேசிய இனப்பிரச்சினை வரையான முக்கியத்துவம்மிக்க விவகாரங்களில், இதைவிடப் பன்மடங்கு அக்கறை செலுத்த வேண்டிய தேவையிருந்தும், அந்தளவுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமை, மக்கள் மனங்களில் குறிப்பாக, முஸ்லிம்களிடத்தில் மனக்கிலேசத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.   

நாட்டில் சிறியதும் பெரியதுமாக இனக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டன. இனவாதம் இன்னும் கொதிநிலையில் இருக்கின்றது. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், ஹலால், அபாயா, மாட்டிறைச்சிக் கடை போன்றவை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.  

இலங்கை முஸ்லிம்களிடத்தில் ஆயுதங்களோ, தீவிரவாதக் குழுக்களின் ஊடுருவலோ இல்லை என்று பாதுகாப்புத் தரப்பு அறிவித்திருக்க, புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்களிடம் இருப்பதாகவும் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருப்பதாகவும் ‘கரடிவிடும்’ கைங்கரியங்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

சின்னஞ்சிறு கஜூவை அவதானித்த ஜனாதிபதி, இந்த விவகாரங்களை அவதானிக்காமல் விட்டிருக்கமாட்டார். சிறுபான்மை மக்களின் வாக்குகளால், ஆட்சிபீடமேறிய அரசாங்கம் என்ற வகையில், இவ்வாறான முக்கியத்துவம் மிக்க விவகாரங்கள் தொடர்பில், காத்திரமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.   

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மேற்சொன்ன பல விடயங்களில், முஸ்லிம்கள் முழுமையாகத் திருப்திப்படும் விதத்திலான நடவடிக்கைகளை, அரசாங்கம் எடுத்ததாகக் கூற முடியாதுள்ளது.   

முன்னைய அரசாங்கம், ஊழல் புரிவதாக விமர்சித்து, மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்ட இந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகள், ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். பிணைமுறி விவகாரம் அதில் முக்கியமானது. இந்த மோசடியின் மூலம், மக்கள் பணத்தில் கைவைத்தவர்களுக்கு, உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.   

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் நிதி மோசடி, கொலை, கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பலர், இன்னும் சட்டத்தின் பிடிக்குள் இறுக்கப்படவில்லை.   

நல்லாட்சி ஆட்சிக்கு வந்ததும், பிடித்துச் சிறையில் அடைப்பார்கள் என்று ‘இலவு காத்த கிளி’ போல, மக்கள் எண்ணிக் கொண்டிருக்க, குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்குரியவர்கள் பலர், இன்னும் வெளியில்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.   

வஸீம் தாஜூடீனைக் கொன்றவர்கள், ஊடகவியலாளர்களையும் புத்திஜீவிகளையும் கடத்தியவர்கள், கொலை செய்தவர்கள் எனப்பலர், இன்னும் சட்டத்தின் பிடிக்குள் சிக்கவைத்து, தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை.   

மிக முக்கியமாக, சந்திரிகா அம்மையாரின் வலது கையாக இருந்த, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரண அறிக்கை, தற்போது சந்திரிக்காவும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நல்லாட்சியில் கூட பகிரங்கப்படுத்தப்பட்டு, அவரது மரணத்தின் பின்னால் இருக்கின்ற மர்மம் துலக்கப்படவில்லை. அதில், யாராவது தவறிழைத்திருந்தால் அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவும் இல்லை.   

தரமற்ற கஜூவை உண்பது, உடல்நலத்துக்குத் தீங்கானது. ஆனால், அதைவிடப் படுமோசமான விளைவுகளை, ஏற்படுத்தக்கூடிய மதுபான வகைகள், சிகரெட் வகைகள் நாட்டில் விற்பனையாகின்றன.   

சட்ட ரீதியாக, அரசாங்கத்தின் அங்கிகாரத்துடன் இது நடைபெறுகின்றது. இதுவெல்லாம், இலங்கைப் பிரஜைகளுக்கு எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை அரசாங்கம் நன்கறியும். ஆனால், வரி வருமானத்தின் முக்கியத்துவம் கருதி, அவை நாட்டுக்குள் தடைசெய்யப்படவில்லை.   

மாறாக, சட்ட விரோதமாக விற்றால்தான் கூடாது என்பது போலவும், ‘புகைத்தல் புற்றுநோயை உண்டுபண்ணும்’ என்று பெட்டியில் அச்சிட்டால், புகைத்தல் கட்டுப்பாட்டுக்கு வந்து விடும் என்ற நினைப்பிலும் செயற்படுவது போலவே எண்ணத் தோன்றுகின்றது.   

ஆனால், நாட்டில் சிகரெட்,  அங்கிகரிக்கப்பட்ட மதுபான வகைகளுக்குப் புறம்பாக, கேரள கஞ்சா, அபின், ஹெரோயின், கொக்கெயின் போன்ற பல வகையான போதைப் பொருட்கள் கறுப்புச் சந்தையில் விற்பனையாகின்றன.   

இவைதவிர, புதுப்புதுப் பெயர்களில் போதை மாத்திரைகளும் லேகியங்களும் டொபி வகைகளும் இளைஞர் சமூகத்துக்குள் ஊடுருவி, பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளுக்குள்ளும் சென்றுள்ளதை யாரும் மறைக்க முடியாது.   

தரமற்ற கஜூவை விட, இவையெல்லாம் படுபாதகமானவையாக இருந்தும், உடனடியாகத் தீர்வு காண, பொறுப்பு வாய்ந்தவர்களால் இயலவில்லை.   

“இவையெல்லாம் கடும் சிக்கல் நிறைந்த, சற்றே பெரிய விவகாரங்கள்” என்று அரசாங்கம் சொல்லலாம். அப்படியென்றால், நாட்டில் இருக்கின்ற பொருட்கள், சேவைகள் அதனோடு சம்பந்தப்பட்ட மக்களுக்கு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இங்கு பட்டியலிட்டுக் கூற முடியும்.   

அதாவது, நாட்டில் அத்தியாவசிய பாவனைப் பொருட்கள், உணவு வகைகளின் விலைகள், அடிக்கடி அதிகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றம் என்பது ஆட்சியையே அதிர்விக்கக் கூடியது என்பதை, அரசாங்கம் அறிந்திருந்தும் விலை நிர்ணய சூத்திரத்தைக் காரணம் காட்டி, குறுகிய காலத்துக்கு இரண்டாவது தடவையாக விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.   

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அத்துடன் மின்சாரக் கட்டணங்களும் அதிகரிக்கப்படலாம். இதேவேளை, கோதுமை மா, சீனி, சமையல் எரிவாயு, பால்மா போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டதை விடவும், அதிகரிக்கப்பட்ட தடவைகள் அதிகமாகும்.   

அத்தியாவசிய பொருட்கள், எரிபொருட்களின் விலைகள் பற்றியே, நாம்  பகிரங்கமாகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நாம் யாரும் கவனிக்காத வகையில், மிகவும் சூசகமான முறையில், அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுக் கொண்டு போகின்றன. மாதத்துக்கு ஒருமுறை கொள்வனவு செய்யும் சமையல் எரிவாயு விலையில் செலுத்தும் கவனத்தை, அன்றாடம் கொள்வனவு செய்யும் பொருட்களில் செலுத்தத் தவறி விடுகின்றோம்.   

அன்றாடம், பயன்படுத்துகின்ற குளியல் சவர்க்காரங்கள், சலவைச் சவர்க்காரங்கள், சலவைத் தூள்கள், பற்பசை உள்ளடங்கலாக, கிட்டத்தட்ட எல்லா வகையான அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகளும் ஒரு மாதத்துக்கு ஒரு தடவையாவது அதிகரிக்கப்படுகின்றது.  

இரண்டு மாதங்களுக்கு முன், 45 ரூபாய்க்கு வாங்கிய சவர்க்காரத்தை, இன்று 55 ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது. அடுத்த மாதம், இந்த விலை சற்று அதிகரிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு பல்தேசியக் கம்பனிகள், மக்களின் அன்றாட உழைப்பை, இரகசியமாகக் கொள்ளையிட்டுக் கொண்டிருக்கின்றன.   

சமகாலத்தில், தரமற்ற உணவுப் பொருட்களும் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சுவையூட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. சுகாதார அமைச்சோ, ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையோ, நுகர்வோர் அதிகார சபையோ, மக்களோ பொதுவாக அதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால், பொறுப்புள்ள ஓர் அரசாங்கம், கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.   

சேவை வழங்கும் கொம்பனிகளும் கண்ணுக்குப் புலப்படாத சுரண்டலை மேற்கொள்கின்றன. தொலைத் தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சில வங்கிகள், வட்டிக் கடைகள், நிதிக் குத்தகை நிறுவனங்கள் உள்ளிட்ட கணிசமான நிறுவனங்கள், தமக்கு வழங்கப்பட வேண்டிய சேவைக் கட்டணங்களுக்கு மேலதிகமாக, ‘அந்த வரி, இந்த வரி’, சேவைக் கட்டணம், தாமதக் கட்டணம், தண்டத் தொகை என்று பெருந்தொகைப் பணத்தை, மிகவும் நுட்பமான முறையில் சூறையாடிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.   

இவையெல்லாம், சட்டவிதிகளுக்கு அமைய நடைபெற்றாலும், ஒரு குறிப்பிட்ட சேவையைப் பெறுவதற்காக, மக்கள் அளவுக்கதிகமான கட்டணத்தை, வீணாகச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.   

அன்றாடக் காய்ச்சிகளாக வாழ்கின்ற கீழ்வர்க்க, நடுத்தர வர்க்க மக்கள், இந்த நாட்டின் தேசிய வருமானத்துக்கு உழைத்துக் கொடுத்துவிட்டு, இந்த நிலைமைகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். விலைகூடிய உணவுப் பொருட்களை (கஜூ போன்ற) வாங்குவது ஒருபுறமிருக்க, அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகின்ற நிலையிலேயே, இவர்கள் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.   

“இந்தத் தரக்குறைவான கஜூவை, விமானத்தில் வழங்க அனுமதியளித்தது யார், யார் இதற்குப் பொறுப்பு?” என்று ஜனாதிபதி கேட்டது போன்று, மேற்குறிப்பிட்ட விலை அதிகரிப்புகளுக்கும் அதிகமானதும் மேலதிகமானதுமான கட்டண அறவீடுகளுக்கும் தரம்கெட்ட உணவுப் பொருள் விற்பனைக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிப்புக்கும் யார் பொறுப்பு? என்ற கேள்வி, மக்கள் தரப்பில் இருந்து, அரசாங்கத்தை நோக்கி முன்வைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.   

ஆகவே, ஸ்ரீ லங்கன் விமான சேவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட பழமுந்திரிகை பருப்புகளின் தரம் குறித்து, அவர் விமர்சனங்களை முன்வைத்து, அது விடயத்தில் நடவடிக்கை எடுக்கச் செய்தது போலவே.... மேற்குறிப்பிடப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலை அதிகரிப்பின் ஊடாக மேற்கொள்ளப்படும் சுரண்டல், சேவை வழங்கும் நிறுவனங்களின் பகற்கொள்ளை என்பவை தொடர்பிலும் ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும்.   

கஜூ விவகாரத்தில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் விரைந்து செயற்பட்டதைப் போல, இனப்பிரச்சினைக்குத் தீர்வு, இனமேலாதிக்கம், இனவாத ஒடுக்குமுறை, இனக்கலவரங்கள், நிதிமோசடிகள், கொலைகள், கொள்ளைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், போதைப்பொருள் வியாபாரங்கள் போன்றவற்‌றிலும், அரசாங்கமும் பொறுப்பானவர்களும் அதேமுனைப்போடு, ஆக்கபூர்வமாகச் செயற்பட்டு, தமது தார்மீக பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் அவாவாகும்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கஜூவும்-அவாவும்/91-221803

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே கஜூ தான் பிரச்சனையோ அல்லது கஜூ கொடுத்த ஆள் கிழவியோ ?

Link to comment
Share on other sites

நாய்கள் கூட சாப்பிட முடியாத முந்திரியை சாப்பிட்டுக்காட்டிய நாமல்

நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் ஜனாதிபதியின் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் நாமல் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிலிருத்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் வரும் போது, முந்திரி பருப்புக்களை உண்பது போன்ற புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

அத்துடன், “அப்படி ஒன்றும் இந்த விதைகளில் இல்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேபாளத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் இந்தியா ஊடாக இலங்கை வரும் போது நாய்கள் கூட சாப்பிட முடியாத வகையிலான முந்திரி பருப்புகள் எனக்கு வழங்கப்பட்டது.

மிருகங்கள் கூட சாப்பிட முடியாத முந்திரி பருப்பை இறக்குமதி செய்ய யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதையடுத்து தமது நிறுவனத்திற்கான முந்திரி பருப்பு வழங்குனரை மாற்றுவதற்கு ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/statements/01/193369?ref=home-feed

2 hours ago, Nathamuni said:

உண்மையிலேயே கஜூ தான் பிரச்சனையோ அல்லது கஜூ கொடுத்த ஆள் கிழவியோ ?

 

??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.