Jump to content

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் பரவலாக சுவரொட்டிகள்


Recommended Posts

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் பரவலாக சுவரொட்டிகள்

 

முல்லைத்தீவில் இன்று பரவலாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சுவரொட்டிகளில் “இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்பட வேண்டிய நேரம்” என தலைப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அதில் சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

https://www.tamilwin.com/community/01/193355?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றிக்கும் தமிழகத்தை பாலோ செய்வினம் ..ஏன் பிளக்ஸ் , பேனர் மட்டும் விடுபட்டு போனது ரெல் மீ ??

Link to comment
Share on other sites

16 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எல்லாவற்றிக்கும் தமிழகத்தை பாலோ செய்வினம் ..ஏன் பிளக்ஸ் , பேனர் மட்டும் விடுபட்டு போனது ரெல் மீ ??

இதுவும் ஒரு புரட்சிதான்…! புரட்சிகர தமிழ்தேசியரே…!! ?

Link to comment
Share on other sites

சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஒட்டப்பட்டுள்ள துண்டுபிரசுரம் !: பின்னணி என்ன?

 

 
 

"இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்படவேண்டிய நேரம் "எனும் தலைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை விமர்சித்தும் தமிழ் தேசியகூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும் முல்லைத்தீவு நகரில் பரவலாக துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

viber_image.jpg

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கம் எனும் அமைப்பின் பெயரை தாங்கி குறித்த சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன.

இந்த சுவரொட்டியில் 'முதலில் நாம் ஒரு தமிழ் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் ,நாம் ஒரு இணைப்பை அல்லது கூட்டணியை உருவாக்க வேண்டும் . சிங்களவர்களால் ஏமாற்றப்பட்ட அரசியல்வாதிகள் ,தமிழர்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள் சிங்கள முகவர்கள் அனைவரும் ஓய்வு பெறவேண்டும்.

நமது அரசியல் தீர்வு அமேரிக்கா ,ஐரோப்பிய ஒன்றியம் ,இந்தியா மட்டும் தான் தீர்வு காணமுடியும் என நம்பும் தமிழர்கள் மட்டும் இந்த இணைப்பில் சேரவேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளதோடு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும் கடுமையாக விமர்சித்துள்ளது.

சுமந்திரன் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது, த. தே. கூட் டமைப்பின் பேச்சாளர் பதவியையும் இராஜிநாமா செய்ய வேண்டும்.

தமிழ் மக்களை இனவாத கலவரங்கள் மற்றும் வெகுஜன கொலைகள், சிங்கள அடக்குமுறை, தமிழ் நிலங்களை கைப்பற்றுவதை நிறுத்த ஆகியவற்லிருந்து பாதுகாப்பதற்காக சமஷ்டி தேவை என்பது பல காலமாக தமிழரின் தேவை. இதனை தந்தை செல்வா தனது கொள்கையாக போராடினார்.

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்று காலி நகரில் சிங்களவரிடம் கூறினார். யார் இவருக்கு இந்த உரிமையை கொடுத்தது. தமிழினத்தை தொடர்ந்தும் சிங்களவருக்கு இரை யாக்கும் சுமந்திரனே தமிழ் அரசியலிருந்து வெளியேறு.

காலியில் ஏன் இப்படி கூறினாய் :”சமஷ்டி ஆட்சி எங்களுக்கு தேவையில்லை, இப்போது காணப்படுகின்ற மாகாணசபை ஆட்சியே எங்களுக்கு போதும், அதில் சிறிய மாற்றறங்கள் செய்தால் சரி, அதற்கேற்ற மாதிரி எங்களால் ஆட்சி செய்ய முடியும், தமிழ் மக்கள் அதற்கேற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்வார்கள். “

இப்படி காலியில் கூறிய பின்னர் ஏன் பொய்யை தமிழர்களுக்கு சொன்னாய்:”சமஷ்டி என்ற பெயர் பலகையில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆக்கபூர்வமான அதிகாரப் பகிர்வே தேவை என்றுதான் காலியில் குறிப்பிட்டேன்.” இது ஒரு நம்பிக்கை துரோகம்.

இப்படி 310 மைல் தூரத்துக்ககுள் பெரிய பொய்யை துணிந்து சொல்லும் சுமந்திரன்; ஜெனீவா, வாஷிங்டன், நியூ டெல்லி, லண்டனில் ஒரு தமிழ் சாட்சியும் இல்லாமல் எப்படி துணிகரமாக பெரிய பொய்களை சொல்லியிருப்பார். ஒருவரையும் வெளி நாட்டு பயணத்தில் கொண்டு செல்லாத்திற்கு காரணம் தனது பொய்களை சொல்வதற்கா ? வெளிநாட்டு நாடுகளிலும் ஐ.நா.வுடனும் கையாள்வதில் இருந்து சுமந்திரனை நிறுத்துங்கள். இவர் ஒரு பொய்யன்.

த தே கூ, தமிழரை வடகிழக்கு இணைந்த சமஷ்டிக்கு உறுதியளித்து வாக்குகளை பெற்றது. இது ஒரு பெரிய பொய்யாகும். எதிர்க்கட்சித் தலைமை, ஒவ்வொரு அரசாங்கம் சார்பான வாக்குகளுக்கு தலா 2 கோடி ரூபாய் , 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசாங்கத்தில் பதவிகளும், கார்களும் பெறுவதற்காக, வடகிழக்கு இணைந்த சமஷ்டி என்று ஏன் பொய் சொன்னீர் சுமந்திரன்?

சுமந்திரனும் இவரது சகாக்களும் சமஷ்டி புதைந்திருக்குது என்பதும், சிங்களத்தில் “எக்கிய ராஜ்ஜ – ஒற்றை ஆட்சி “, தமிழில் பெயர் பலகை இல்லை என்பதும் ஒரு பம்மாத்து.

ஏன் தமிழில் பெயர் பலகை இல்லை? தமிழினம் ஒரு அடிமையா? தரம் குறைந்த இனமா? அல்லது தமிழர் பாமரர்களா? – நீர் சுமந்திரன் யார் இதனை எம்மக்கு சொல்லுவதற்கு? உங்கள் சமஷ்டி ஒரு மாட்டு சாணி மாதிரி.

சுமந்திரனுக்கு சமஷ்டி என்ன என்பது தெரியாது? நீங்கள் கனடாவுக்குப் போகும் போது, தெருவில் எந்தத் தமிழையும் கேளுங்கள், அவர்கள் சமஷ்டி பற்றி உங்களுக்கு போதிப்பார்கள். அவர்கள் ஒவொரு நாளும் சமஷ்டியின் லாபத்தை அனுபவித்து வருகிறார்கள், ஏனெனில் கனடா ஒரு சமஷ்டி நாடு.

தமிழ் இனத்துக்கு என்ன செய்தீர்? நீர் தமிழ் தியாகியா? போரில் காயாப்பட்டவரா? தமிழினத்துக்காக மறியல் சென்றிரா ? 2009இல் தமிழர்கள் கொள்ளப்பட்ட பொது போரை நிறுத்த கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்தீரா ?

மாறாக,

1. சிங்கள பௌத்தத்திற்கு முதன்மையான இடத்தை ஏன் சுமந்திரன் கொடுத்தார்? இந்த பொய்யனுக்கு யார் இந்த அனுமதி கொடுத்தது ?

2. மாகாண சபையை குழப்பியடித்தார் சுமந்திரன். நிதி மந்திரி ரவி கருணாநாயக்கவை பாவித்து வட மாகாண அபிவிருத்தியை ஏன் தடுத்தார்? புல பெயர் மக்களின் முதலமைச்சர் நிதியத்தை, நிதி மந்திரி ரவி கருணாநாயக்கவை பாவித்து ஏன் மறுத்தீர்? பல தடவை ஏன் முதல் மந்திரியை விலக்குவதற்கு முயன்றார்? ஏன் விக்னேஸ்வரன் சுமந்திரனை விட அறிவானவர் என்பதாலும் தமிழ் தேசியத்தின் பலன்களை கூறுவதாலுமா, உண்மையான சமஷ்டி மற்றும் தமிழ் சரித்திரங்களை எடுத்துரைப்பதனாலோ? இது சுமந்திரனின் சிங்கள நண்பர்களுக்கு பிடியாதா?

3. நெடுங்கேணியில் 4000 சிங்களவருக்கு சிங்களத்தினால் உண்டுபண்ணிய பொய் காணி உறுதி கொடுத்து சிங்களம் தமிழர் காணிகளை பிரித்தெடுத்த போது, சிறிசேனாவுடனும், ரணிலுடனும் மேடையிலிருந்து கைதட்டி வரவேற்ற சுமந்திரன்.

4. தமிழ் கூட்டமைப்பை உடைக்க ஆயுத குழுக்கள் என பிரித்தவர்

5. தமிழ் புலம் பெயர் அமைப்புகளை பலவீனப்படுத்தி உடைத்து எறிந்து அவர்களின் ஒற்றுமையை குழைத்தது ஏன்?

6. வட்டுகோட்டை கல்லூரியையும், உடுவில் கல்லூரியையும் சிதைத்து இப்போது அமெரிக்கன் மிஷன் பணம் கொடுப்பதை குறைத்து, இவரையும் இவர் சார்ந்தோர்களையும் விலகும்படி அமெரிக்கன் மிஷன் கோரியும் எனும் விலகிய பாடில்லை.

7. ஏன் வெளி நாட்டுக்களின் அழுத்தங்களை ஸ்ரீ லங்காவுக்கு கொடுக்க மறுத்தார் அல்லது நாடவில்லை? சிங்கள நபர் என்பதாலோ?

8. சுமந்திரன் சமீபத்தில்(2015) கூறினார் “கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதனை விட்டுக்கொடுத்திருந்தது. ” இதன் பின்னால் தர்க்கம் என்ன? ஏன் தமிழர் ஆடசியை கிழக்கில் தவித்தீர்? ஏன் தமிழருக்கு நீர் எதிரியா? இதைத்தான் கொழும்பு செய்ய சொன்னதா?

9. ஏன் திசாநாயத்திற்கு 20 வருட கடூழிய சிறை து எடுத்து கொடுத்தீர்? அவர் வாகரையில் சிங்கள ஆமி எம்மினத்தை பட்டினி போட்டு, தமிழர்களை துரத்தி, வாகரையை கைப்பற்ற முயலுகிறார்கள் என்று எழுதியதை, திசைநாயகம் தவறான தகவலை எழுதினார் என என்று சிங்களத்தை தழுவி, ஏன் கூறினீர்? புலம் பெயர் தமிழரின் தொடர்பால், ஒபாமா திசைநாயத்தை அமெரிக்கா எடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

10. யாழில் எந்த வழக்கை வெற்றி பெற்றீர் ? உதய சூரியன் சின்னத்தை த. தே. கூட்டடமைப்புக்கு எடுக்கும் வழக்கில் வெற்றி பெற்றாயா? வட மாகாண சபையின் பிரதம செயலாளர் (Chief Secretary) க்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றாயா? இரண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கொலை வழக்ககில் வெற்றி பெற்றாயா? கொன்ற இரு போலீசும் சுதந்திரமாக திரிகிறார்கள். டக்ளஸ் எதிரான உதயன் வழக்கில் வெற்றி பெற்றாயா? ஒரு போலி எண்ணம் சுமந்திரன் தான் திறமான வக்கீல் என்று. ஆனந்தசங்கரி விட சுமந்திரன் மோசமான வக்கீல்.

11. இப்போது சிங்கள நீதிபதி மூலம் விக்னேஸ்வரனுக்கு கஷ்டம் கொடுக்கிறாய். அரசியல் சாசனத்தில் ஒரு டெனிஸ்வரன் விடயத்தில் பதில் உண்டு. யார் வேலை கொடுக்கிறாரோ அவரே வேலையிலிருந்து நீக்கலாம் (Rule of Thumb, who hire can fire). இந்த ஸ்ரீலங்கா அரசியல் சாசனம் ஒரு மாட்டு சாணி போல் தான். ஒரு படிப்பு இல்லாத ஒருவரால் எழுதிய அரசியல் சாசனம்.

12. போருக்குப் பின்னர், சிங்கள உயர் நீதிமன்றத்தில் வடகிழக்கு தமிழ் மக்களை கட்டுப்படுத்த சிங்கள நீதிபதிகள் அனுப்ப வேண்டும் என்று சுமந்திரன் கோரினார் . அவர் ஒரு தமிழ் பிரதிநிதியா ?

13. முல்லைத்தீவில் ஆமியால் எடுக்கப்பட்ட வீட்டையும் காணியையும் விடுக்க நடந்த போராட் டத்தை மடக்க, சுமந்திரன் வழக்கு போட உள்ளதாய் கூறி விபரம் எடுத்து ஒருமே இதுவரை செய்ய இல்லை. இது போராட்டங்களை மடக்கும் வழிமுறை. காலம் செல்ல செல்ல சுமந்திரனின் சிங்களத்திற்கு உதவி செய்யும் வித்தைகளை உணர முடியும்.

14. காணாமல் போனோரின் பெற்றோர் இலங்கை அரசாங்கத்தால் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டனர். அரசாங்கத்தை பாதுகாக்க சுமந்திரன் அங்கு வந்தார். இதனால் பெற்றோரின் பயணம் தோல்வி அடைந்தது.

15. சுமந்திரன் ஜெனீவாவில் தமிழர்களை மறுபடியும் ஏமாற்ற முயல்வார் . நாம் அவரை தமிழ் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்னாள் தூதர் திரு. ஹுசைன் ஸ்ரீ லங்காவின் போர்க்குற்றத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு தெரிவிக்க விரும்புகிறார், ஆனால் சிங்கள ஏஜெண்டான சுமந்திரன் இன்னும் இரு ஆண்டுகள் நீடிக்கும்படி விரும்புகிறார் சுமந்திரன் தீர்வைப் பெற்றுத்தர வரவில்லை , தமிழர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் வந்தார்.

இவர் ராஜினாமா செய்யாவிடின், தாயகத்தில் தமிழர்கள் ஜனநாயக பண்பை பாவித்து தமிழ் தேசிய கூட்ட்டமைப்பிலிருந்து அகற்ற செயல்பட வேண்டும். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/40420

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழ்ச்சனத்துக்கு நான் சொல்லுற ஒரு தமிழும் விளங்குதில்லை எண்டு ஆரோடையோ கத்திக்கத்தி பேசினவராம்...... ஊரிலையிருந்து குஞ்சியப்பு சொன்னவர் :27_sunglasses:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.