Jump to content

சட்டத்தரணிகளிடம் கேட்டே எனது முடிவைக் கூறுவேன்- வடக்கு முதல்வர்!!


Recommended Posts

சட்டத்தரணிகளிடம் கேட்டே எனது முடிவைக் கூறுவேன்- வடக்கு முதல்வர்!!

 
 
CM-1-600x450.jpe
 

வடக்கு மாகாண அமைச்­ச­ரவை தொடர்­பில் எழுந்­துள்ள சர்ச்­சையை எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு முன்­னர் தீர்ப்­ப­தற்­கான முயற்­சி­கள் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தப் பிரச்­சி­னையை சுமு­க­மா­கத் தீர்ப்­ப­தற்கு அவைத் தலை­வர் முன்­வைத்­துள்ள யோச­னை­யில் எழுந்­துள்ள புதிய சிக்­கல் தொடர்­பில் முத­ல­ மைச்­ச­ருக்கு நேற்று எடுத்­துக் கூறப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் தனது சட்­டத்­த­ர­ணி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி இன்று பதி­ல­ளிப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

நீதி­மன்­றத்­தின் இடைக்­கா­லக் கட்­ட­ளை­யைச் செயற்­ப­டுத்­த­வில்லை எனத் தெரி­வித்து வடக்கு முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கு மீதான விசா­ரணை எதிர்­வ­ரும் 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. அதற்கு முன்­ன­தாக, அமைச்­ச­ர­வைச் சிக்­க­லைத் தீர்த்து, வழக்கை மீளப் பெறச் செய்­யும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரை­யும், ஆளு­ந­ரை­யும் நேற்று முன்­தி­னம் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தார்.

வடக்கு அமைச்­ச­ர­வை­யி­லுள்­ள­வர்­கள் அனை­வ­ரும் பதவி வில­கு­வ­தா­கத் தெரி­வித்து ஆளு­ந­ருக்கு முத­ல­மைச்­சர் கடி­தம் அனுப்­பு­வது என்­றும் பின்­னர் புதிய அமைச்­ச­ர­வையை முத­ல­மைச்­சர் அறி­விப்­ப­தன் ஊடாக அமைச்­ச­ரவை பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யும் என்று அவைத் தலை­வர் யோசனை முன்­வைத்­தி­ருந்­தார்.

ஆனால், வழக்­குத் தாக்­கல் செய்த பா.டெனீஸ்­வ­ரன், நீதி­மன்­றம் வழங்­கிய இடைக்­கா­லக் கட்­ட­ளை­யின் அடிப்­ப­டை­யில் பத­வி­யேற்ற பின்­னரே அவரை நீக்க முடி­யும். அதற்கு மாறாக சகல அமைச்­சர்­க­ளும் பதவி வில­கு­வ­தா­கக் கொடுக்­கும் கடி­தத்­தின் ஊடாக செயற்­ப­டுத்த முடி­யாது. அவைத் தலை­வர் முன்­வைத்த யோச­னை­யில் புதி­தாக எழுந்த சிக்­கல் இது­வா­கும்.

இந்த விட­யம் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு நேற்று எடுத்­துக் கூறப்­பட்­டது. இது தொடர்­பில் தனது சட்­டத்­த­ர­ணி­க­ளு­டன் ஆராய்ந்து முடிவை பெரும்­பா­லும் நாளை (இன்று) கூறு­வ­தாக முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

https://newuthayan.com/story/10/சட்டத்தரணிகளிடம்-கேட்டே-எனது-முடிவைக்-கூறுவேன்-வடக்கு-முதல்வர்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.